Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை?

Featured Replies

  • சம்பந்தன், சுமந்திரனா  ரணில், மைத்திரியா  யார் கூறுவது உண்மை?
imageproxy.jpg

சம்பந்தன், சுமந்திரனா  ரணில், மைத்திரியா  யார் கூறுவது உண்மை?

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக மக்­கள் மத்­தி­யில் சுமந்­தி­ரன், சம்­பந்­தன் கூறி­வ­ரு­வது பொய்யா? அல்­லது இலங்கை அர­சின் ரணில், மைத்­திரி கூறி வரு­வது பொய்யா? என்­பதை மக்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்­தார் ஈ.பி.ஆர்.எல். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன்.

தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளு­ராட்சி சபைத் தேர்­தல் அறிக்­கை வெளி­யீடு நேற்று யாழ்ப்­பா­ணம் இளங்கலை­ஞர் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. அந்த நிகழ்­வில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்த­தாவது-:

புதிய அர­ச­மைப்­பில் வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்த மதத்­துக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­பட்­டுள்­ளது, ஒற்­றை­யாட்சி முறை­தான் என இலங்­கை­யின் அரச தலை­வர் மைத்­திரிபால­வும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் தென்­னி­லங்கை மக்­கள் மத்­தி­யில் தெட்­டத்­தெ­ளி­வாகக் கூறு­கின்­ற­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை சேர்ந்த எமது பிர­தி­நி­தி­கள் புதிய அர­ச­மைப்­பில் சமஷ்டி, வடக்கு – கிழக்கு இணைப்பு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது என்று மக்­கள் மத்­தி­யில் கூறு­கின்­ற­ னர். மைத்­திரி ரணில் கூறி வரு­வது பொய்யா?அல்­லது சம்­பந்­தன் சுமந்­தி­ரன் தமிழ் மக்­கள் மத்­தி­யில் கூறி வரு­வது பொய்யா? என மக்­களே புரிந்து கொள்ள வேண்­டும்.

 

தமிழ் மக்­க­ளுக்குப் படிப்­ப­றி­வில்லை, பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரி­யர்­க­ளுக்கு படிப்­ப­றி­வில்லை, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்குப் படிப்­ப­றி­வில்லை, நீதி­ய­ர­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்குப் படிப்­ப­றிவி ல்லை, நான் மட்­டுமே படித்­த­வன் மேதை என்­னும் தோர­ணை­யில் நாடா­ளு­மன்ற உறுப்பி னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்கை பற்­றிப் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்.

இலங்கை அர­சின் அண்­மைய வரவு – செலவு திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்க மாவை. சேனா­தி­ரா­சா­வின் மக­னுக்கு நிதி அமைச்­சில் பதவி கேட்கப்­பட்­டது என்­றும், அதற்கு இணக்­கம் காணப்­பட்ட நிலை­யில் ஆத­ரவு வழங்­கப்­பட்­டது என்­றும் ஊட­கங்­க­ளில் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ. சுமந்­தி­ர­னுக்கு 3 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான பங்­களா இலக்­கம் 22 கிரான் வீதி கொழும்பு 7 என்ற முக­வ­ரி­யில் வழங்­கப்­பட்­டது உண்மை என எனக்கு நம்­ப­க­ர­மான தக­வல்­கள் கூறி­யுள்­ளன.அந்த பங்­க­ளாவை அவர் யாரு­டைய பினா­மி­யில் வை த்திருக்­கின்­றார் என்று தெரி­ய­வில்லை.

தமி­ழ­ர­சுக் கட்­சியை சேர்ந்­த­வர்­கள் நாம் புதிய அர­சு­டன் கைகோர்த்­த­தால் எமது இலட்­சி­யத்­தில் பாதிப் பய­ணத்தை அடைந்து விட்­டார்­க­ளாம். இரண்டு வரு­ட­மும் சுக­போக வாழ்க்கை, சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரின் பாது­காப்பு, வாக­னங்­கள் போன்­ற­வற்­றையே அவர்­கள் அடைந்த பயன்­கள். மக்­க­ளுக்கு வழங்­கிய ஆணையை நிறை­வேற்­ற­வில்லை.-என்­றார்.

https://newuthayan.com/story/60327.html

  • தொடங்கியவர்

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சொல்­வது பொய்யா? சுமந்­தி­ரனும் சம்­பந்­தனும் சொல்­வது பொய்யா?

7-de13d4ba5d22684bc087f28a99c624f7e63bd7e7.jpg

 

(எம்.நியூட்டன்)

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சொல்­வது பொய்யா? சுமந்­தி­ரனும் சம்­பந்­தனும் சொல்­வது பொய்யா? ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சிங்­கள மக்­க­ளுக்கு தமது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கி­றார்கள். ஆனால் எங்­க­ளு­டைய தலை­வர்கள் தமிழ் மக்­களை கேலிக்­குள்­ளாக்கி ஏமாற்­று­கின்­றனர் என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீடு நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­ போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.அவர் மேலும் கூறு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் வட கிழக்கில் மாத்­தி­ர­மல்ல தென் பகு­தி­யிலும் முக்­கி­யத்­துவம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தென்­ப­கு­தியை பொறுத்­த­வ­ரையில் இத்­தேர்­த­லுக்கு பிற்­பாடு மைத்­திரி தொடர்ந்து ஆட்­சியில் இருப்­பதா? மைத்தி­ரியும் மஹிந்­தவும் கூட்டுச் சேர்­வதா அல்­லது மைத்திரி ரணில் கூட்டு தொடர்­வதா? போன்ற பல விட­யங்­களை தீர்­மா­னிக்­கக் ­கூ­டிய ஒரு தேர்­த­லாக தென்­ப­கு­தியில் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மைத்திரி மஹிந்­த­விற்கு ஏற்­பட்ட இடை­வெளி கார­ண­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வு­பட்­டுள்ள நிலையில் அது ஒன்­றா­வதா அல்­லது புதிய கட்­சியில் பரி­ண­மிப்­பதா போன்ற பல விட­யங்ளைத் தீர்­மா­னிக்­கக்­ கூ­டிய தேர்­த­லாக உள்­ளது.

இதே­போன்றே வட­கி­ழக்­கிலும் இது­வரை நாங்கள் தான் ஏக பிரதிநிதிகள் அவர்கள் என்றும் ஏக பிர­தி­நி­தி­க­ளாக இல்­லா­விட்­டாலும் கூட இந்தத் தேர்தல் அதனை தீர்­மா­னிக்­க­போ­கின்­றது.

இந்தத் தேர்தல் இது­வ­ரை­ கா­லமும் இருந்­ததை விட வட கிழக்­கிலும் தமிழ் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்டு தமிழ் மக்­க­ளு­டைய ஆணையைப் பெற்று தமிழ்­ மக்­க­ளு­டைய உரி­மை­களை மீட்­டெ­டுப்போம் என்று போன­வர்கள் இதற்­காக என்ன விட­யங்­களைச் செய்­தார்கள் மக்­களை எவ்­வாறு ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதை தீர்­மா­னிக்கக் கூடிய தேர்­த­லாக இது இருக்­கின்­றது. ஆகவே இந்தத் தேர்தல் வட­கி­ழக்­கிலும் சரி தென்­னி­லங்­கை­யிலும் சரி முக்­கி­ய­மா­க­வுள்­ளது.

அர­சியல் ரீதி­யாக தமிழ் மக்கள் எவ்­வ­ளவு தூரம் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள் மக்­க­ளிடம் ஆணை பெற்று சகல உரி­மை­க­ளையும் பெற்­று ­த­ருவோம் எனக்­கூறி வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்டும். இறை­யாண்மை சுய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிலையில் ஒரு சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக வாக்­க­ளி­யுங்கள் என கேட்டு அதற்­காக வாக்கைப் பெற்று இன்று பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் சபை­யாக மாற்றி அந்த அர­சியல் சாசன சபையில் ஆறு ஏழு உப குழுக்கள் நிய­மித்து அத­னுடன் சேர்த்து ஒரு வழி­காட்டல் குழு பிர­தம மந்­திரி தலை­மையில் உரு­வாக்கி தமிழ் மக்கள் சார்பில் சுமந்­திரன் சம்­பந்தன் இரு­வரும் இருந்­தார்கள்.

அந்த வழி­காட்டல் குழுவின் இடைக்­கால அறிக்கை தற்­போது வெளி­வந்­துள்­ளது. அந்த அறிக்­கையில் தமிழ் மக்­க­ளுக்குத் தேவை­யான அத்­த­னையும் இருப்­ப­தாக அடித்துக் கூறு­கின்­றார்கள். முத­ல­மைச்­சரே இதைப் பற்றி பேசு­கின்ற என்­போன்­ற­வர்­களோ அல்­லது பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யர்­களோ இதனை சரி­யான முறையில் படிக்­க­வில்லை வாசிக்­க­வில்லை எனக் கூறு­கின்­றார்கள். அவர் ஒருவர் மாத்­திரம் தான் அதனை வாசித்­தி­ருக்­கின்றார். யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்கள் எல்­லோரும் முட்­டாள்கள். அவர்­க­ளுக்கு அது விளங்­க­வில்லை. சிவில் சமூ­கத்தில் இருப்­ப­வர்­க­ளுக்கும் விளங்­க­வில்லை. அர­சியல் கட்­சியைச் சார்ந்த நாங்கள் எல்­லோரும் முட்­டாள்கள். எங்­க­ளுக்கும் அது விளங்­க­வில்லை. தனிய சுமந்­தி­ர­னுக்கு மாத்­திரம் விளங்­கு­கின்­றது. இந்த இடைக்­கால அறிக்கை சமஷ்டி அர­சியல் அமைப்பு அது ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.

எவ்­வ­ளவு தூரம் தமிழ் மக்­களை ஏமாற்ற முடி­யுமோ அந்­த­ளவில் ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்ற இந்த சூழல் என்­பது தமிழ் மக்­களை கேவ­லப்­ப­டுத்­து­வது வட கிழக்கு இணைப்பு வட கிழக்கு இணை­ப்பு தொடர்­பாக இடைக்­கால அறிக்­கையின் இணைப்பில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்­பாக கூறி­யுள்­ள­தாக கூறி­யுள்­ளார்கள். ஆனால் இணைப்புக் கிடை­யவே கிடை­யாது என ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெளி­வாகக் கூறு­கி­றார்கள் 73 தட­வைகள் கூடிப் பேசிய வழி­காட்டல் குழுவில் இதைப் பற்றி பேசவே இல்லை என பிர­தம மந்­திரி தலை­மை­யி­லான குழு­வினர் எடுத்துக் கூறி­யுள்­ளனர் என்றார்.

இதனை விட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுவில் கூட வட கிழக்கு இணைப்பை ஏன் பேச­வில்லை எனக் கேட்­ட­போது முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­றார்கள் என்­கின்­றனர். அவ்­வா­றாயின் மாற்­று­ந­ட­வ­டிக்­கைகள் என்ன. அதற்கு அவர்­க­ளிடம் பதில் ஏதும் இல்லை.

இவ்­வா­றான நிலையில் நாங்கள் இரண்டு ஆலோ­ச­னை­களை முன்­வைத்தோம். வட கிழக்கு இணைப்பு என்­பது இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் பெறப்­பட்­டது. 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றீர்கள். இந்­தியா சென்று வட கிழக்கு இணைப்பு தொடர்­பாக தெளிவு படுத்­து­வதன் மூலம் இத­னைத்­தீர்த்துக் கொள்ள முடியும் இந்­தி­யாவின் நிலைப்­பாட்டை அறிந்து கொள்­ள­மு­டியும். அது மட்­டு­மன்றி இந்­திய ஊட­கங்­களும் இதனை வெளிப்­ப­டுத்­து­வதன் மூலம் இதனை இந்­தியா உணர முடியும். அவ்­வாறு இந்­தியா பதில் வழங்­கு­கின்­ற­போது அது கொழும்­பிற்கும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கும். இவ்­வாறு நாம் கேட்­ட­போது சம்­பந்தன் சிங்­கள மக்­களை பகைத்­துக்­கொண்டு இந்­தியா செல்ல விரும்­ப­வில்லை என்­கிறார். அவ்­வா­றாயின் எவ்­வாறு வட­கி­ழக்­ககை இணைப்­பீர்கள் எனக் கேட்­ட­தற்கு அவர்­க­ளிடம் பதில் இல்லை.

மக்­க­ளுக்கு ஒன்றும் தெரி­யாது என்ற அடிப்­ப­டையில் இவர்கள் கதை­களை கூறி வரு­கின்­றார்கள். இவ்­வா­றா­ன­வர்­க­ளுடன் நாங்கள் இணங்கிப் போனால் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்­க­வேண்­டிய உரி­மைகள் கிடைக்­குமா? சமஷ்­டியைப் பற்றி பேசினால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இது ஒற்­றை­யாட்­சிதான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றுதெரிவித்தார். ஆனால் சம்பந்தனும் சுமந்திரனும் சமஷ்டிதான் என்கிறார்கள். அவ்வாறாயின் ஜனாதிபதி பிரதமர் சொல்வது பொய்யா? சுமந்திரனும் சம்பந்தனும் சொல்வது பொய்யா? யார் பொய் செல்கிறார்கள் ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்களுக்க தமது நிலைப்பாட்டை தெ ளிவுபடுத்துகிறார்கள். ஆனால் எங்களுடையவர்கள் மக்களை கேலிக்குள்ளாக்கி ஏமாத்துகின்றார்கள். இவ்வாறான சூழலில் இவர்கள் பாராளுமன்றத்தில் எங்களுக்காகவா? ஐக்கிய தேசியக் கட்சிக்கா? அரசாங்கத்திற்காகவா? பேசுவார்கள் யாருடைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் யாருக்காக பேசுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-04#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.