Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இருப்­ப­தா­னது ஒட்­டு­மொத்த சமூ­­கத்­துக்கும் பாதிப்பு

Featured Replies

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இருப்­ப­தா­னது ஒட்­டு­மொத்த சமூ­­கத்­துக்கும் பாதிப்பு

 

 

இலங்­கையில் புதிய அர­சியல் நாக­ரிகத்­தினை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் சமூக பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் சிறந்த சட்ட கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­திய இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் தொடர்ச்­சி­யாக காணப்­ப­டு­வ­தா­னது ஒட்­டு­மொத்த சமூ­கத்­திற்கும் பாதிப்­பினை ஏற்­ப­டு­த்­து­வ­தாக உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

PTA.jpg

அதே­நேரம் மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்­பாக 5614 முறைப்­பா­டுகள் கடந்த ஆண்டு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வா­னது அவற்றுள் 1174முறைப்­பா­டுகள் பொலி­ஸா­ருக்கு எதி­ரா­ன­வை­யாக காணப்­ப­டு­வ­தோடு சட்­ட­வி­ரோ­த­மான கைதுகள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் அதி­க­ளவு முறைப்­பா­டுகள் உள்­ள­தா­கவும் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் கலா­நிதி தீபிகா உட­க­மவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று வியா­ழக்­கி­ழமை பொர­ளையில் உள்ள ஆணைக்­கு­ழுவின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரை­யா­ற்று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

எமக்கு கடந்த ஆண்டு மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்­பாக 5614முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவற்றுள் 1174 முறைப்­பா­டுகள் பொலி­ஸா­ருக்கு எதி­ரா­ன­வை­யாக காணப்­ப­டு­கின்­றன. அவற்றில்  சட்­ட­வி­ரோ­த­மான கைதுகள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் அதி­க­ளவு முறைப்­பா­டுகள் உள்­ளன. 

நிர்­வாக பொறுப்­புக்­களை மீறுதல் தொடர்பில் 770முறைப்­பா­டு­களும் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ரான அநீ­திகள் 1002முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. மேலும் கடந்த ஆண்டில் 396முறைப்­பா­டுகள் மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளன 83முறைப்­பா­டு­க­ளுக்கு பரிந்­து­ரைகள் செய்­யப்­பட்­டுள்­ளன 145முறைப்­பா­டுகள் தொடர்பில் வழக்கு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

சட்­ட­வி­ரோத கைதுகள் மற்றும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ராக கூடிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. சித்­தி­ர­வ­தை­களைத் தடுப்­ப­தற்கு பொது­மக்­களின் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மாகும். ஆசி­ரியர்கள் மற்றும் அதி­பர்கள் மாண­வர்கள் எதி­ராக முன்­னெ­டுத்த உரி­மை­மீ­றல்கள் தொடர்­பா­கவும் முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. எவ்­வா­றா­யினும் போதிய வளங்கள் காணப்­ப­டா­மை­யினால் முறைப்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் தாம தம் ஏற்­ப­டு­கின்­றன. 

அதே­போன்று கடற்­படைத் தள­பதி ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை தாக்­கிய சம்­பவம் குறித்த முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் உயர்நீதி­மன்­றத்தில் வழக்கு காணப்­ப­டு­கின்­றது. அதன் கார­ண­மாக அச்­சம்­பவம் குறித்த விசா­ர­ணையை நாம் மேற்­கொள்­ள­வில்லை. கொட்­ட­தெ­னி­யாவ பகு­தியில் சித்­தி­ர­வதைக் கூட­மொன்று காணப்­ப­டு­வ­தாக சத்­தி­யக்­க­ட­தா­சி­யு­டனான முறைப்­பா­டொன்று எமக்கு கிடைக்­கப்­பெற்­றது. அது­கு­றித்தும் எமது அவ­தா­னத்­தினைச் செலுத்­தி­யுள்ளோம். 

அதே­நேரம் தற்­போதும் இலங்­கையில் பயங்­க­ர­வாத தடைச் சட்­ட­மா­னது அமுலில் நீடிக்­கின்­ற­மை­யா­னது பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­கான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது.  அத்­துடன் அச்­சட்­ட­மா­னது ஒட்­டு­மொத்த சமூ­கத்­திற்கும்  அமைந்­தி­ருக்­கின்ற இந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மனித உரி­மை­களை நிலை­நி­றுத்­து­கின்ற பாது­காப்பு சட்­ட­மாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாம் உள்ளோம். நாம் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் நிலைப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்தும் வகையில்  அறிக்­கை­யொன்றை உத்­தி­யோகபூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம்.  எனினும் பல மாதங்கள் கடந்­துள்ள போதும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வில்லை. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்­பட பல தூதுக்­கு­ழுக்­களும் மனித உரிமைச் செயற்­பாட்டு நிறு­வ­னங்­களும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட்ட வேண்டும் என்று வலி­யு­றுத்­தியே வந்­துள்­ளன. 

கடந்த இரண்டு ஆண்டு காலப்­ப­கு­தியில் நாம் ஆணைக்­குழுவின்  கொள்­கை­க­ளுடன் தொடர்­பு­டைய பல பரிந்­து­ரை­களை வழங்­கி­யி­ருக்­கின்றோம். முன்­ன­தாக  நாம் சமர்ப்­பித்த பரிந்­து­ரைகள் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் பற்­றி­ய­தாகும். நாம் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் பற்றி முன்னர் தெரி­வித்த கருத்­துக்­க­ளையே தற்­போதும் மீண்டும் வலி­யு­றுத்தி நிற்­கின்றோம். ஒப்­புதல் வாக்­கு­மூலம் பெற்றுக் கொள்­ளுதல், நீண்டகாலமாக ஒருவரை தடுப்பில் வைத்திருத்தல் போன்ற மனித உரிமைகளை மீறுகின்ற வகையிலான ஏற்பாடுகளை தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதச் சட்டம் அமுலில் இருப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படும் என்ற விடயத்துடன் நாம் இணங்கவில்லை. அந்த அடிப்படையிலேயே அந்தச் சட்டத் தினை நீக்கி மனித உரிமைகளுடன்  இண ங்கிச் செல்கின்றதான பாதுகாப்பு சட்ட த்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்ப தற்கான சமிக்ஞையையும் நாம் வெளிப் படுத்தியிருக்கின்றோம் அதற்காக நாம் தொட ர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/28988

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.