Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மட்டக்களப்பின் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் அரசு': 'தினக்குரல்' நாளேடு கவலை

Featured Replies

'மட்டக்களப்பின் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் அரசு': 'தினக்குரல்' நாளேடு கவலை

மட்டக்களப்பில் தோன்றியிருக்கும் மனிதப் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலான சில அறிக்கைகளை அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளிடமிருந்து கேட்கக்கூடியதாக இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது" என்று 'தினக்குரல்' நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கின்றது.

'மட்டக்களப்பின் மனிதப் பேரவலம்' எனத் தலைப்பிட்டு இன்று வியாழக்கிழமை (15.03.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

தங்களின் உடைமைகள் சகலதையும் கைவிட்டு கையில் அகப்பட்டதை மாத்திரம் எடுத்துக் கொண்டு உடுத்த உடையுடன் ஓடி வந்திருக்கும் இந்த அப்பாவிகள் பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியிருக்கிறது.

கடந்த பல மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் மோதல்கள் மூண்ட வேளைகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்ற போதிலும், மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெயர்ந்த மக்களின் தொகையே மிகப் பெரியதாகும்.

முன்னைய இடம்பெயர்வுகளினால் தோன்றியிருந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுப்பதாக இந்தப் பிந்திய இடம்பெயர்வு அவலம் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விமானக் குண்டு வீச்சுகள், செல் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காகவே வீடு வாசல்களை விட்டு வெளியேறி தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளிலேயே செல் தாக்குதல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் மக்களின் பாதுகாப்பு குறித்து பெரிதும் அஞ்ச வேண்டியிருப்பதாக அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

அவசர நிவாரண உதவிகளைக் கூட அகதிகளுக்கு வழங்க முடியாத நிலையில் தொண்டர் அமைப்புகள் பெரும் சிக்கல் நிலைக்குள்ளாகியிருக்கின்றன. அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் அளவுக்கு அதிகமாக மக்கள் தங்கியிருப்பதால் நெருக்கடி மேலும் பாரதூரமானதாகிக் கொண்டு போகின்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கான அவசர உதவிகள் கூடச் சென்றடையவில்லை என்பதை அரசாங்க அதிகாரிகள் கூட ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான மக்கள் வீதியோர மர நிழல்களில் தஞ்சமடைந்திருக்கும் பரிதாபகரமான செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன. பசியால் கதறியழும் சிறுவர்களின் குரல் முகாம்களில் கேட்டவண்ணமிருப்பதாகவும் மயங்கி விழுந்த சிறுவர்கள் சிலர் ஆஸ்பத்திரிக்கு விரையப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆயிரக்கணக்கான இந்த அப்பாவிகளின் அவலத்தைப் போக்க நிவாரண அவசர உதவிகளையும் மருத்துவ வசதிகளையும் விரைந்து அனுப்புவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்திருக்கும் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக் கூடிய சக்திகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பில் தோன்றியிருக்கும் மனிதப் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலான சில அறிக்கைகளை அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளிடமிருந்து கேட்கக் கூடியதாக இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது.

இரு தினங்களில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களை இடம்பெயர வைத்த இராணுவ நடவடிக்கைகளை மேலும் முனைப்புறுத்தும் நோக்கிலான செயற்பாடுகளை அரசாங்கப் படைகள் நிறுத்தினால் மாத்திரமே அகதிகளின் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அப்பாவிக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வழிவகைகளில் உடனடியாக நாட்டம் காட்ட வேண்டியது மோதல்களில் சம்பந்தப்பட்டவர்களின் உடனடிக் கடமை என்று நாம் நம்புகின்றோம்."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.