Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப்

Featured Replies

தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் அதில் இருக்கும் "தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும்" டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 

I authorized Zero access to White House (actually turned him down many times) for author of phony book! I never spoke to him for book. Full of lies, misrepresentations and sources that don’t exist. Look at this guy’s past and watch what happens to him and Sloppy Steve!

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் தகவல்களை உள்ளடக்கிய புத்தகத்திற்கு டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தடை விதிக்க முயற்சித்ததையடுத்து, முன்கூட்டியே அப்புத்தகத்தை வெளியிட உள்ளதாக அதன் ஆசிரியர் தெரிவித்திருந்தார்.

`Fire and Fury: Inside the Trump White House` என்ற புத்தகம், அடுத்த செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமையன்றே வெளியிடப்படும் என்று அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் கூறினார்.

டிரம்ப் குறித்த பல தவறான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இருப்பதாக டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

டிரம்பின் மகன் ரஷ்யர்களை சந்தித்தது "தேசத்துரோகம்" என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பேனன் கூறியிருக்கும் பல அதிரடி கருத்துகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்டீவ் பேனன், புத்தியிழந்துவிட்டதாக டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

டிரம்ப் பிரசார அதிகாரிகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உறவுகள் இருந்ததா என்பது குறித்து ஆலோசகர் ராபர்ட் முல்லர் விசாரணையை மேற்கொண்டுள்ளார். அதில் ஒரு பகுதியாக டிரம்பின் மூத்த மகனுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

புத்தகம்படத்தின் காப்புரிமைAMAZON

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

முன்னதாக, எழுத்தாளர் மைக்கேல் வோல்ஃப் மற்றும் புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் "புத்தகங்களை வெளியிடக்கூடாது, அவற்றை மேலும் அச்சிடுவது, விநியோகிப்பது ஆகியவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.

டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்குவதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியிருப்பதை அடுத்து, டிரம்புக்கும் ஸ்டீவுக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வழக்கறிஞர்களின் கருத்து என்ன?

அவதூறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஸ்டீவ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்பின் வழக்கறிஞர்கள், கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

"இந்தப் புத்தகத்தில் டிரம்ப்பைப் பற்றிய அவதூறான கருத்துகளை கூறியிருக்கும் ஸ்டீவ் பேனன், அதற்கான எவ்வித அடிப்படை ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை" என்று ஏபிசி நியூஸ் கூறுகிறது.

புத்தகத்தை எழுதியுள்ள வோல்ஃப் அல்லது புத்தக வெளியீட்டாளர், ஹென்றி ஹோல்ட் ( Henry Holt and Co Inc) இந்த விவகாரம் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?

பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வோல்ஃப்பின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய தகவல்கள்:

•தேர்தலில் டிரம்ப் பெற்ற வெற்றி அவரது குழுவினருக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது

•தேர்தல் நாள் இரவில் டிரம்பின் மனைவி மெலனியா கண்ணீர் வடித்தார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

•அதிபர் பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் கலந்து கொள்ளாதது டிரம்ப்புக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது.

•"வெள்ளை மாளிகை சோகமாகவும், சற்று அச்சத்துடன் இருப்பதாக" புதிய அதிபர் கருதுகிறார்.

•டிரம்பின் மகள் இவாங்காவும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் இவாங்காதான் அமெரிக்காவின் "முதல் பெண் அதிபர்" என்ற திட்டத்துடன் இருந்தார்கள்.

•தனது தந்தையின் சிகை அலங்காரத்தை கேலி செய்யும் இவாங்கா டிரம்ப், அதற்கு தந்தையின் நண்பர்களே காரணம் என்று அடிக்கடி கூறுவார்.

இந்த புத்தகத்தில் 200க்கும் அதிகமான பேட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

http://www.bbc.com/tamil/global-42575513

  • தொடங்கியவர்

டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டொனால்டு டிரம்ப் குழம்பி போனார் என்றும், பதவியேற்றபோது அவர் உற்சாகமாக இல்லை என்றும், வெள்ளை மாளிகை குறித்து அவருக்கு அச்ச உணர்வே இருந்தது என்றும் ஊடகவியலாளர் மைக்கேல் வோல்ஃப் புதிதாக எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெள்ளை மாளிகையில் டிரம்ப்

"Fire and Fury: Inside the Trump White House" எனும் அந்தப் புத்தகத்தில் இவான்கா டிரம்ப்பிற்கு அதிபர் ஆவதற்காக ரகசிய ஆசை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் தரப்பில் தடை கோரப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள் இதோ.

1. டிரம்ப் மகன் செய்தது தேச துரோகம்

வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பேனன், டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜுனியர் ரஷ்ய நாட்டவர்களை சந்தித்தது ஒரு தேச துரோகம் என்று கருதினார். ஹிலாரி கிளிண்டன் குறித்த தகவல்களை அளிக்க ஜூன் 2016-இல் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் ரஷ்ய தரப்பினர் முன்வந்தனர்.

2. வெற்றியால் குழம்பிப்போன டிரம்ப்

தேர்தல் முடிவு வந்த நாளன்று, டிரம்ப் வெற்றி பெறுவது உறுதியானபின், தனது தந்தை ஒரு பேயைப் பார்த்ததை போல அமர்ந்திருந்தார் என்று டிரம்பின் மகன் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார். மெலானியா டிரம்ப் கண்ணீரில் இருந்தார். நடந்ததை நம்ப முடியாமல் குழப்பத்துடன் இருந்த டிரம்ப், அமெரிக்காவின் அதிபராக தாம் முழு தகுதியுள்ளவர் என்று நம்பத் தொடங்கியதை ஸ்டீவ் பேனன் கண்டார். ஆனால், டிரம்ப் குழப்பம் அடைந்து காணப்பட்டதை பேனன் யாரிடமும் கூறவில்லை.

மனைவி மெலானியாவுடன் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமனைவி மெலானியாவுடன் டிரம்ப்

3. பதவியேற்பின்போது டிரம்ப் மகிழ்ச்சியாக இல்லை

முன்னணி நட்சத்திரங்கள் தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்த மறுத்துவிட்டதால், டிரம்ப் மிகவும் கோபமாக இருந்தார். தனது மனைவி மெலானியாவுடன் அவர் சண்டை போட்டதுபோல அன்று தோன்றியது, மெலானியா அழும் நிலைக்கே சென்றுவிட்டார்.

4. நண்பர்களின் மனைவிகளை இழுக்க முயல்வார் டிரம்ப்

தனது நண்பர்களின் மனைவிகளை வசீகரிக்க, நீங்கள் விரும்பிய வகையில் ஒரு வேளை உங்கள் கணவர் இல்லாமல் இருக்கலாம் என்று டிரம்ப் தனது நண்பர் ஒருவரின் மனைவியிடம் கூறினார் என்று இப்புத்தகத்தை எழுதிய மைக்கேல் வோல்ஃபிடம் டிரம்பின் இன்னொரு நண்பர் கூறியுள்ளார்.

"உங்கள் மனைவியுடன் பாலுறவு கொள்வதை இன்னும் நீங்கள் விரும்புகிறீர்களா," என்பது போன்ற கேள்விகளை தன் நண்பர்களிடம் கேட்கும் டிரம்ப், அந்த உரையாடலைப் பதிவு செய்து அவர் மனைவிகளிடம் போட்டுக்காட்டுவார்.

5. டிரம்ப்க்கு வெள்ளை மாளிகை அச்சம் தந்தது

வெள்ளை மாளிகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெள்ளை மாளிகை

டிரம்ப் வெள்ளை மாளிகை சலிப்பையும் சில நேரங்களில் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் உணர்ந்தார். ஜான் கென்னடிக்கு பிறகு முதல் முறையாக அதிபரும் அவரது மனைவியும் தனித்தனி அறைகளில் தங்கினர். தனது வாழ்வின் பெரும் பகுதியை தனது சொந்த விருப்பத்தின்பேரில் வாழ்ந்த டிரம்புக்கு, வெள்ளை மாளிகையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வது சற்று அதிர்ச்சியாக இருந்தது, என்கிறார் பிபிசியின் ஆண்டனி சர்ச்சர்.

6. இவான்காதான் அதிபராகலாம் என்று நம்புகிறார்

தங்களுக்குத் தெரிந்த பலரது ஆலோசனைகளையும் மீறி, டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் தனது கணவர் ஜாரெட் உடன் வெள்ளை மாளிகையில் குடியேறினார். அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஹிலாரி கிளிண்டன் அல்ல, தாம்தான் என்று அவர் நம்புகிறார் .

7. தந்தையின் தலைமுடியை கேலி செய்த இவான்கா

தந்தையின் தேர்தல் பிரசாரத்தில் இவான்கா முக்கிய பங்காற்றினார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதந்தையின் தேர்தல் பிரசாரத்தில் இவான்கா முக்கிய பங்காற்றினார்

ஒரு அந்நிய உணர்வுடனேயே தனது தந்தையை அணுகினார் இவான்கா டிரம்ப். முன்னும், பக்கவாட்டிலும் முடியால் சூழப்பட்ட ஒரு காலித் தட்டு என்று இவான்கா தனது தந்தையின் கேசம் குறித்து தனது நண்பர்களிடம் கேலியாகக் கூறியுள்ளார். முடி உதிர்வைக் குறைப்பதற்கான சிகிச்சைக்குப் பிறகு, டிரம்பின் தலையை ஒரு 'சூழப்பட்ட தீவு' என்று இவான்கா கூறியுள்ளார். ஆனால், டிரம்ப் எப்போதும் தனது கேசம் குறித்து பெருமைப்படுபவர் என்றும் அது அவரது அடையாளங்களில் ஒன்று என்றும் கூறுகிறார் ஆண்டனி சர்ச்சர்.

8. தனது முன்னுரிமைகளை அறியாமல் இருந்தார்

அவர் அதிபராகப் பொறுப்பேற்று ஆறு வாரங்கள் ஆனபின்பு, வெள்ளை மாளிகையின் துணை தலைமை அதிகாரி கேட்டி வால்ஷ், ஒரு முறை டிரம்பின் ஆலோசகரும், மருமகனுமான குஷ்னரிடம், அதிபராக அவரது முதல் மூன்று முன்னுரிமைகள் என்ன என்று கேட்டபோது அதைப்பற்றி பேசித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று குஷ்னர் கூறியுள்ளார்.

9. ரூபர்ட் முர்டாக் மீது டிரம்ப் மதிப்பு கொண்டிருந்தார்

டிரம்ப் தேர்வு செய்யப்பட்டபின் தன்னுடனான சந்திப்புக்கு ஊடக தொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் தாமதமாக வந்தபோது, "அவர் மிகச் சிறந்தவர்களில் ஒருவர். கடைசியாக இருக்கும் சிறந்தவர்களில் ஒருவர். அவரைப் பார்க்க நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்," என்று அங்கு வந்திருந்த விருந்தினர்களிடம் கூறியுள்ளார்.

தொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் உடன் அடிக்கடி தொலைபேசியில் டிரம்ப் உரையாடுவார் என்று கூறப்படுகிறதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் உடன் அடிக்கடி தொலைபேசியில் டிரம்ப் உரையாடுவார் என்று கூறப்படுகிறது

தனது தேர்தல் பிரசாரத்தின்போது ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியுடன் சில நேரங்களில் சச்சரவில் ஈடுபட்டிருந்தார் டிரம்ப். ஒரு முறை அந்த தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியை புறக்கணித்தார். எனினும், அவரது வெற்றிக்கு பின் ஃபாக்ஸ் நியூஸ், அவருக்கு ஆதரவான தொலைக்காட்சிகளில் ஒன்றானது என்கிறார் ஆண்டனி.

10. முர்டாக் டிரம்ப்-ஐ ஒருமுறை 'முட்டாள்' என்றார்

சிலிகான் பள்ளத்தாக்கின் தகவல் தொழில்நுட்ப நிறுவங்களின் அதிகாரிகள் குறித்து ஒரு முறை டிரம்ப் முர்டாக்கிடம் பேசும்போது, "அவர்களுக்கு எனது உதவி இப்போது தேவை. ஒபாமா அதிபராக இருந்தபோது, தங்கள் சட்டைப் பையில் அவரை வைத்திருந்தனர். இப்போது எச்1-பி விசா விவகாரத்தில் நான் அவர்களுக்கு தேவைப்படுகிறேன்," என்று கூறினார்.

வெளிநாட்டில் இருந்து குடியேறுவோர் குறித்த கொஞ்சம் தாராளமான அணுகுமுறையுடன் இருக்குமாறு முர்டாக் கூறினார். அதற்கு 'பார்ப்போம்,' என்று டிரம்ப் கூற, "முட்டாள்" என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

11. ரஷ்ய உறவுகள் சிக்கலைத் தரும் என முன்னரே அறிந்திருந்த ஃபிளின்

மைக் ஃபிளின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரஷ்ய தொடர்பு குறித்து விசாரித்த நீதிமன்றத்தில் மைக் ஃபிளின்

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக் ஃபிளின் ரஷ்யாவுடனான உறவு அச்சுறுத்தும் வகையில் இருக்கும் என்று முன்னரே அறிந்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியதற்காக ரஷ்யர்களிடம் இருந்து 45,000 டாலர் பணம் வாங்குவது நல்லதல்ல என்று தங்கள் நண்பர்கள் எச்சரித்தபோது, "நாம் வெற்றிபெற்றால்தான் அது ஒரு பிரச்சனை," என்று அவர் அப்போது கூறியுள்ளார்.

அமெரிக்க நீதித் துறை நடத்திய விசாரணையில் ஃபிளின் செய்தது குற்றம் என்று பின்னர் கூறப்பட்டது.

http://www.bbc.com/tamil/global-42570897

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் ட்ரம்ப் பற்றி சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியீடு: நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற மக்கள்

 

 
TRUMPBANNONBOOKjpg

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றி பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ஃப் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிடப்பட்டது. கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.

அமெரிக்க பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ப், அதிபர் ட்ரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘நெருப்பும் சீற்றமும் - ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள்’ என்ற அந்த புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் "அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்கும் முன்பாக, 2016-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க ஐடித்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், ட்ரம்பை சந்தித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, எச்1பி விசாவுக்கு எதிராக பேசிய நிலையில் அத்தகைய நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எச்1பி விசாவுக்கு எதிராக எதையும் செய்யப் போவதில்லை என ட்ரம்ப் அவர்களுக்கு உறுதியளித்தார்" என அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்1பி விசாவுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி ட்ரம்ப் தற்போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோலவே ட்ரம்ப் பற்றிய வேறு பல தகவல்களும் இந்தப் புத்தகத்தில இடம் பெற்றுள்ளன.

பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்றுள்ள இந்த புத்தகம் அமெரிக்காவில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை வெளியிடாமல் தடுக்கும் பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வந்தனர். எனினும் இது வெற்றி பெறவில்லை.

திட்டமிட்டபடி, அந்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு புத்தக கடைகளில் இந்த புத்தகம் அதிகஅளவு விற்பனையானது. வாஷிங்டனில் பல கடைகளிலும் நள்ளிரவு வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.

இதனிடையே அந்த புத்தகத்தில் இடம்பெற்றள்ள அனைத்தும் உண்மைக்கு மாறானவை என, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/article22383692.ece

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபராக இருப்பதற்கான மனநலம் டிரம்புக்கு உள்ளதா? சர்ச்சை நூலால் பரபரப்பான விவாதம்

டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அவரது மன நலம் குறித்த கேள்வியை எழுப்பும் புத்தகங்கள் வந்துள்ளன. அவரிடம் காண்பதாக சொல்லப்படும் உளவியல் அறிகுறிகள் குறித்து பல உளவியல் வல்லுநர்கள் முன்பே சந்தேகங்களை கிளப்பியுள்ளனர்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைBRENDAN SMIALOWSKI/AFP/GETTY IMAGES

ஆனால், தற்போது அமெரிக்காவில் அரசியல் சர்ச்சையை கிளப்பி இருக்கும், மைக்கேல் வோல்ஃப் எழுதிய 'ஃபைர் அன்ட் ஃப்யூரி' என்ற நூல், டிரம்பின் உளவியல் பற்றி கிளப்பியுள்ள பிரச்சினைகள் அவர் அமெரிக்க அதிபராகத் தொடர்வதற்குத் தேவையான உளவியல் தகுதி உடையவரா என்ற விவாதத்தை எழுப்பிவிட்டது. சமூக வலைத்தளங்களிலும், செய்தித் தளங்களிலும் இந்த விவாதம் நிரம்பி இருக்கிறது.

தமது புத்தகத்தை சந்தைப்படுத்துவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்ட வோல்ஃப், 71 வயதான டிரம்ப், கூறிய விஷயத்தையே மீண்டும் மீண்டும் கூறுவதாகத் தெரிவித்தார். கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது குறுகிய கால நினைவாற்றல் உள்ளிட்ட காரணங்களால் நிகழலாம்.

இது டெமன்ஷியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட ஆள்களில் 5 முதல் 8 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

"முன்பெல்லாம் கூறியதையே, வார்த்தை மாறாமல் வெளிப்பாடும் மாறாமல் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கூறிவந்த டிரம்ப், தற்போது அதை 10 நிமிடங்களுக்குள் செய்கிறார்," என்கிறார் வோல்ஃப். அவர் கூறுவது போல எந்தத் தருணத்தில் டிரம்ப் பேசினார் என்று எந்த விளக்கத்தையும் அவர் கூறவில்லை.

இந்தப் புத்தகத்தை மோசடி என்றும் பொய்களால் நிரம்பியது என்றும் விமர்சித்துள்ளார் டிரம்ப். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறுவதுபோல வெள்ளை மாளியை அணுகி உரையாடி தகவல்களைத் தெரிந்துகொள்ள அவருக்கு தாம் அனுமதி ஏதும் தரவில்லை என்கிறார் அவர்.

பேண்டி எக்ஸ் லீ என்ற உளவியல் பேராசிரியர் 'டேஞ்சரஸ் கேஸ் ஆஃப் டொனால்டு டிரம்ப்' என்ற பெயரிலும், அல்லென் ஃப்ரான்செஸ் என்பவர் 'ட்விலைட் ஆஃப் அமெரிக்கன் சேனிடி' என்ற பெயரிலும், கர்ட் ஆண்டர்சன் என்பவர் 'ஃபேன்டசிலேண்ட்' என்ற தலைப்பில் தலைப்பிலும் டிரம்பின் உளவியல் தொடர்பாக புத்தகங்கள் எழுதியுள்ளனர்.

ஒரு நிகழ்வில் பேசும்போது இரண்டு கைகளாலும் விநோதமான முறையில் தண்ணீர் கிளாசை எடுக்கும் டிரம்ப்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒரு நிகழ்வில் பேசும்போது இரண்டு கைகளாலும் விநோதமான முறையில் தண்ணீர் கிளாசை எடுக்கும் டிரம்ப்.

பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடங்கிய ஒரு செனடர்களிடம் பேசிய பேராசிரியர் லீ, 'டிரம்பிடம் அறிகுறிகள் தெரிகின்றன. அவர் விரைவில் அவற்றை வெளியிடுவார்' என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த நூல்களை எழுதிய எவரும் டிரம்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அல்லர். அப்படியே அளித்திருந்தாலும் மருத்துவ நியதிப்படியும், அமெரிக்கச் சட்டத்தின்படியும், டிரம்பின் உடல் நலன் குறித்த தகவல்களை அவர்கள் வெளியிட முடியாது.

பதவிக்கு என்ன ஆகும்?

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25வது திருத்தத்தின்படி, தமது பணிகளையும், அதிகாரத்தையும் செயல்படுத்த அதிபரால் முடியாதபோது துணை அதிபர் பொறுப்புகளை எடுத்துக்கொள்வார். அதிபரின் அமைச்சரவையும், துணை அதிபரும் இதற்கான நடைமுறைகளைத் தொடக்கவேண்டும். தற்போதுள்ள நிலையில் அமெரிக்காவில் இது நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றபோதும், இதைச் செய்யவேண்டும் என்று பலர் குரல் கொடுக்கின்றனர்.

முந்தைய அதிபர்களில் யாருக்கு?

அமெரிக்க அதிபர்களில் சிலர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரஹாம் லிங்கனின் மன அழுத்த நோயால் பல சிக்கல்கள் எழுந்தன. மிக அண்மைக் காலத்தில், 1981 முதல் 1989 வரை அதிபராக இருந்த ரொனால்டு ரீகனுக்கு அடிக்கடி குழப்பமும், சமயத்தில் அவர் எங்கே இருக்கிறார் என்ற சந்தேகமும் வருவதுண்டு. அவர் பதவிக்காலம் முடிந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 'அல்சைமர்ஸ் டிசீஸ்' இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், 25-வது திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எந்த அதிபரும் இதுவரை அமெரிக்காவில் பதவி நீக்கப்பட்டதில்லை.

டிரம்புக்கு என்னதான் பிரச்சினை?

ஃபைர் அன்ட் ஃப்யூரி புத்தகம்படத்தின் காப்புரிமைANDREW CABALLERO-REYNOLDS/AFP/GETTY IMAGES Image captionசர்ச்சையை கிளப்பியுள்ள ஃபைர் அன்ட் ஃப்யூரி புத்தகம்.

இதுவரை அவரது உடலைப் பரிசோத்ததாகக் கூறி மருத்துவர் எவரும் பேசியதில்லை, எனவே அவரது மன நலனைப் பற்றிப் பேசுவதற்கு உண்மையான ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆனாலும், டிரம்புக்கு 'நார்சிஸ்டிக் பெர்சனாலிட்டி டிசார்டர்' என்ற பிரச்சினை இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினை இருப்பவருக்கு மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. டாம்பீகம் இருக்கும். மற்றவர்களைவிட தம்மை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது.

இது தவிர, வோல்ஃபின் புத்தகம் வெளியானதை அடுத்து காக்னிடிவ் டிசார்டர் எனப்படும் புரிந்துகொள்ளல் குறைபாடு அவருக்கு உள்ளதா என்றும் சிலர் கேட்கின்றனர்.

அவர் முன்பு பேசுகிற முறையிலிருந்து இப்போது பேசுகிற தொனி பெரிதும் மாறுபட்டிருப்பதாக நரம்பியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றம் அவருக்கு 'அல்செய்மர்ஸ் டிசீஸ்' போன்ற ஏதேனும் ஒரு நரம்பியல் பிரச்சினையால் இருக்கலாம் அல்லது வெறும் வயோதிகக் கோளாறாகவும் இருக்கலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த விவாதம் நியாயமானதா?

இந்த விவாதம் வெட்கக்கேடானது, நகைக்கத்தக்கது என்கிறார் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா ஹக்கபீ சான்டெர்ஸ். அவர் உளவியல் தகுதி இல்லாதவராக இருந்தால், தகுதிவாய்ந்த பல வேட்பாளர்களைத் தோற்கடித்து இன்று இந்த இடத்தில் உட்கார்ந்திருக்க மாட்டார் என்பது அவரது வாதம். டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இது பாரபட்சமான தாக்குதல் என்கிறார்கள்.

உளவியலாளர்கள் தாங்கள் பரிசோதித்துப் பார்க்காத ஒருவருக்கு குறிப்பிட்ட நோய் இருக்கலாம் என்று கூறுவதை அவர்கள் தொழில் சார்ந்த அறம் அனுமதிக்கவில்லை என்றும், இப்படி செய்வதன் மூலம் கோல்ட்வாட்டர் ரூல் என்கிற விதியை அவர்கள் மீறுவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நான் மேதாவி: டிரம்ப்

இதனிடையே தமது மன நலன் கேள்விகளை நிராகரித்த டிரம்ப் தம்மை உறுதியான மனம் கொண்ட மேதாவி என்று வருணித்துக் கொண்டுள்ளார். முதல் முயற்சியிலேயே அமெரிக்க அதிபராவதற்கு அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது. மேதாவியாக இருந்தால்தான் முடியும் என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 2 இவரது @realDonaldTrump
 

....Actually, throughout my life, my two greatest assets have been mental stability and being, like, really smart. Crooked Hillary Clinton also played these cards very hard and, as everyone knows, went down in flames. I went from VERY successful businessman, to top T.V. Star.....

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @realDonaldTrump

'எனது வாழ்நாள் முழுவதிலும் என் இரண்டு பெரிய சொத்துகளாக இருப்பவை மன உறுதித் தன்மையும், அறிவோடு இருப்பதும்தான். குறுக்குப் புத்தியுள்ள ஹிலரி கிளிண்டன் இந்த வாதத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால், எல்லோருக்கும் தெரியும், அவர் பொசுங்கிப் போனார். நான் வெற்றிகரமான வியாபாரியாக இருந்து உச்சநிலை டி.வி. நட்சத்திரமாக உயர்ந்தவன்' என்று அவர் இன்னொரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42589159

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பொய் இவர்தான் இப்போதைய அரிச்சந்திரன் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.