Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு அகதிகள் நகரம் ஆகிவிட்டது

Featured Replies

மட்டக்களப்பு அகதிகள் நகரம் ஆகிவிட்டது எங்கு பார்த்தாலும் மக்களின் அவலக்குரல்கள் உண்மையை வெளிப்படுத்த முடியாத நிலை ஆயர் சுவாம்பிள்ளை கவலை [Friday March 16

மட்டக்களப்பு மாவட்டம் இடம்பெய ரும் அகதிகளால் நிரம்பிவழிகின்றது. இந்த மாவட்டத்தை அகதிகள் நகரம் என்றே கூறவேண்டியுள்ளது. மக்கள் படும் அவ லம் பெரும்துயரைத் தருகின்றது. இவ்வாறு தமது கவலையை வெளி யிட்டார் திருமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி ஜோஸப் சுவாம்பிள்ளை ஆண்டகை.

கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூ ரியின் (தேசியப் பாடசாலை) எஹெட் கரித்தாஸ் நிறுவனம் 62லட்சம் ரூபா செலவில் அமைத்துள்ள எஹெட் கரித்தாஸ் வகுப் பறைக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திறப்புவிழா வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற் றுகையிலேயே மறைமாவட்ட ஆயர் கலா நிதி சுவாம்பிள்ளை மேற்கண்டவாறு கூறி னார்.

கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்ரீபன் மெத்தியூ தலைøமையில் நடைபெற்ற வைபவத்தில் எஹெட் நிறுவனப் பணிப் பாளர் அருட் தந்தை சில்வஸ்டர் சிறீதரன் கௌரவ அதிதிதியாகக் கலந்துகொண்டார்.

திறப்புவிழா வைபவம் தொடர்பான பொதுக்கூட்டத்தில் ஆயர் கலாநிதி சுவாம் பிள்ளை உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது

இன்று நாம் வாழும் நிலை இக்கட்டான சூழ்நிலையாகவுள்ளது. அனர்த்தங்கள் மாறி, அனர்த்தங்களே எமக்குச் சொத்தாக வுள்ளன.

இதற்குப்பிறகும் எமக்கு, எமது மக்க ளுக்கு வேறு என்ன அனர்த்தம் நடக்கப் போகின்றது என்பதே தெரியாது அச்சம் கொள்ளவேண்டியுள்ளது.

இன்று நாம் அச்ச சூழ்நிலையிலும் நிச்சயமற்ற சூழ்நிலைகளிலும் வாழ்ந்துவரு வது எமக்கு உரித்தாகவுள்ளது.அதிலும் மட்டக்களப்பு மாவட்டம் இன்னும் மோசமாகத் தற்பொழுது திகழ் கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் அகதி கள் நகரம் என்றே இன்று கூறவேண்டியுள்ளது.

ஷெல்லடிபட்டுச் சாவதிலிருந்து தப்பு வதற்காக அல்லல்பட்டு தமது வதிவிடங் களை விட்டு அகதிகளாக ஒவ்வொரு நாளும் மக்கள் இடம்பெயர்ந்து வந்த வண்ணமேயுள்ளனர்.

படுவான்கரைப் பகுதியிருந்து கடந்த ஒருவார காலமாக இடம்பெயர்ந்துவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ண மேயுள்ளது.

ஒன்றைரை லட்சம் பேர் இடம்பெயர்வு என்பது உண்மையான தகவல்

அங்கிருந்து செல்லடிபட்டு சாவதை விட இடம்பெயர்ந்து இக்கட்டான சூழ் நிலையில் அவர்கள் வாழ்கின்றனர்.

இன்று ஒன்றரை லட்சம் அகதிகளுக்கு மேல் வந்துள்ளனர் என்பது உண்மையான தகவலாகும். முன்னர் மூதூர் சம்பூர் பகுதிகளிலி ருந்து இடம்பெயர்ந்து வந்தனர். பின்னர் மட்டக்களப்பு வாவிக்கு மேற்கேயிருந்து 90வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்துள் ளனர்.

இந்த உண்மையைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தினால், சிலருக்கு உள்ளத் தில் அதிருப்தி தோன்றுகின்றது.

அரச பேச்சாளர் இந்த உண்மை நிலையை மறுத்துரைத்தாலும் ஆச்சரியமில்லை.

எல்லாமே சுமுகமாகவே உள்ளது என அவர்கள் கூறும் சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உண்மையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில்....

உண்மையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கின்றோம்.

உண்மையைக் கூறினாலும் அது இன்று உத்தியோகபூர்வமாக மறுக்கப்படுகின்றது.

ஆனால் இங்கு அல்லல்படுபவர்களுக் குத்தான் தெரியும் அவர்களது கஷ்டத்தின் தாக்கம்.

கல்முனை, பாண்டிருப்பு, காரைதீவு பிரதேச மக்களும் முன்னர் ஒரு காலகட் டத்தில் இப்படியான சூழ்நிலையில் வாழ்ந்ததுடன் இப்பிரதேசங்கள் அகதிகள் வாழ்ந்த பிரதேசங்களாகவே இருந்தன.

இத்தகைய சூழ்நிலை துரதிஷ்டமா னது. இனியாவது இந்த அகதிகள் நிலை யிலிருந்து மீண்டு நம்மக்கள் புதிய வாழ்வு வாழவேண்டும். இதற்காக இறைவனைப் பார்த்து நாம் மன்றாட வேண்டும். நிம்மதியான வாழ்வு நம் எதிர்கால சந்த தியினருக்கு அமையவேண்டும். என்றார் ஆயர்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.