Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் கொள்ளையர்?

Featured Replies

  •  
  • யார் கொள்ளையர்?
Mahinda-Rajapaksa-Ranil-Wickremesinghe-a

யார் கொள்ளையர்?

 

நாளுக்கு நாள் சூடு­பி­டித்து வரும் நாட்­டின் அர­சி­யல் சூழ்­நிலை, கூட்டு அரசினது வசந்­த­கா­லம் முடி­வுற்று கொதி­நிலை உரு­வா­கி­யுள்­ள­தைப் புலப்­ப­டுத்தி வரு­கின்­றது. அந்த வகை­யில் இனி­வ­ரும் நாள்­கள் அர­சி­ய­லின் இருள் மற்­றும் கடுங்­கு­ளிர் நிலை எம்மை சிர­மத்­தில் ஆழ்த்­தக்­கூ­டும்.

வௌியில் தெரி­ய­வ­ராது, தம்­மைச் சுற்­றிச்­சூழ்ந் துள்ள அர­சி­யல் சிர­மங்­களே அரச தலை­வர் மைத்­தி­ரியை தமது அர­ச­த­லை­வர் பத­விக்­கா­லம் 5 ஆண்­டு­கள் தானா,அல்­லது ஆறு ஆண்­டு­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­குமா என்­ப­தைத் தௌிவு­ப­டுத்­து­மாறு உயர் நீதி­மன்­றத்தை கோரச் செய்­தி­ருக்­கு­மெ­னக் கரு­த­மு­டி­கி­றது. அது­வும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்ள பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­திக்கு முன்­னர் அது குறித்­துத் தெரிந்து கொள்ள அவர் முயன்­றி­ருப்­பது, இன்­றைய அர­சி­யல் சூழ்­நி­லை யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கி­றது. அவ்­வா­றில்­லாது விடில், அத்­த­கைய சிக்­கல்­மூ­லம் தமது பிர­தி­ பிம்­பத்­துக்கு ஏற்­ப­டத்­தக்க பாதிப்பை நன்­கு­ணர்ந்­துள்ள, மனச்­சாட்­சி­யுள்ள, அர­சி­யல் வாதி­யொ­ரு­வ­ரான மைத்­தி­ரி­பால அவ்­வி­தம் இந்த விட­யத்­தில் தலையிட்டிருக்கமாட்டார்.

பதவிக்காலம் குறித்து
மைத்திரி குழம்புவதேன்?

தமது பத­விக்­கா­லம் முடி­வ­டைய மேலும் இரண்­டாண்­டு­கள் மீத­மி­ருக்­கை­யில் தமது பத­வி­யைத் தாமா­கக் கைவிட்டு மீண்­டும் அரச தலை­வர் தேர்­தலை நடத்­தி­னார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த. அதன்­படி அர­ச­த­லை­வர் பத­விக்­கான அதி­கா­ரங்­க­ளில் பல­வற்றை பத­விக்கு வந்து நூறு நாள்­க­ளுக்­குள் நீக்­கு­வேன் என நாட்டு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்கி பத­விக்கு வந்த அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால, தமது பத­வி­யின் ஐந்து ஆண்­டு­கள் முடி­வில் தமது பத­வி­யி­லி­ருந்து உண்­மை­யில் வில­கிக் கொள்­ளும் விருப்பு உடை­ய­வ­ராக இருந்­தி­ருப்­பின், இவ்­வி­தம் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் தமது பத­விக்­கால நிறைவு குறித்து விளக்­கம் கோர வேண்­டிய தேவை எழ வாய்ப்­பில்லை என்­பது அர­சி­யல் குறித்து ஆர்­வம் காட்­டும் எவ­ரும் அறிந்த தொன்றே.

 

மகிந்த காலத்து பிணைமுறி
விவகாரம் குறித்து விசாரிக்க
ரவிகருணாநாயக்க கோரிக்கை

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது கவ­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்ள முன்­னாள் நிதி அமைச்­சர் ரவிகரு­ணா­நா­யக்க, எவரோ சில அதி­கா­ரி­கள் அரச தலை­வ­ருக்கு தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­வ­தாக கருதுவதாகத் தோன்றுகிறது. மத்­தி­ய­வங்கி பிணை­முறி ஊழல் விட­யத்­தில் குறித்த ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கை­யில் தாமொரு குற்றவாளியென குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என­வும், கடந்த மூன்­றாம் திகதி அரச தல­வைர் வௌியிட்ட விசேட அறிக்­கை­யில் தம்­மைப்­பற்­றித் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­கள் இத்­த­கைய தவ­றான தக­வல்­களை வழங்­கும் அதி­கா­ரி­க­ளது கப­டத்­த­னத்­தின் விளைவே என­வும் ரவி கரு­ணா­நா­யக மீண்­டும் மீண்­டும் தெரி­வித்து வரு­கின்­றார்.

உரிய சந்­தர்ப்­பத்­தில் இத குறித்து அரச தலை­வ­ருக்கு அவர் விளக்­க­ம­ளிப்­பார் என பொது மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.
தாக்­கு­த­லொன்­றுக்கு உட்­ப­டு­மொரு பிர­மு­கர், தமது பாது­காப்­புக்­காக நாலா­பு­ற­மும் எதிர்த்­தாக்­கு­தலை மேற்­கொள்­வது இயல்­பான தொன்றே. 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் முதல் கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தின் கீழ் இடம்­பெற்ற மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் தொடர்­பான அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் விசாரணை அறிக்கை தொடர் பான கவ­னத்­தைத் திசை திருப்­பும் நோக்­கி­லேயே, 2008 ஆம் ஆண்­டு­மு­தல் 2015 ஆம் ஆண்டு வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் மத்­திய வங்கி பிணை­முறி வழங்­க­லில் பெரும்­மோ­ச­டி­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐ.தே.கட்­சி­யின் தலை­வர் உள்­ளிட்ட கட்­சிப்­பி­ர­மு­கர்­கள் குற்­றச் சாட்டை முன்­வைக்க ஆரம்­பித்­த­னர்.

இத­னி­டையே குறித்த காலப்­ப­கு­தி­யில் மத்­திய வங்­கி­யின் ஆளு­ந­ராகப் பத­வி­வ­கித்த நிவாட்­கப்­ரால் குறித்த குற்­றச்­சாட்­டுக் குறித்த எந்­த­வொரு விசா­ர­ணைக்­கும் உத­வத் தாம் த­யா­ரெ­னத் தைரி­வித்­துள்­ளார்.

இவற்­றின் மத்­தி­யில், அண்­மை­யில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டம் கருத்து வௌியிட்ட முன்­னாள் நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக, மேற்­கு­றிப்­பிட்ட காலப்­ப­கு­தி­யில் இலங்கை மத்­திய வங்­கி­யின் பிணை­முறி வழங்­கல் செயற்­பா­டு­கள் தொடர்­பாக மட்­டு­மன்றி, ‘ஹெஜின்’ கொடுக்­கல் வாங்­கல் தொடர்­பில் அர­சுக்கு ஏற்­பட்ட நட்­டம் மற்­றும் கிறீக் பிணை­மு­றி­களை மத்­திய வங்கி கொள்­வ­னவு செய்­த­வேளை ஏற்­பட்ட நட்­டம் என்­பவை குறித்து விசா­ரிக்­கப்­ப­ட­ வேண்­டு­ மெ­னத் தெரி­வித்­தி­ருந்­தார்.

‘ஹெஜின்’ ஒப்பந்தம்
என்றால் என்ன?

மகிந்­த­வின் தலை­மை­யி­லான அர­சால் மேற்­கொள்­ளப்­பட்ட பெரும் ஊழல் மிகக் கொடுக்­கல் வாங்­க­லாக அந்த வேளை­யில் எதிர்க்­கட்­சி­யி­ன­ரால் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ‘ஹெஜின்’ கொடுக்­கல் வாங்­க­லின் பின்­னணி குறித்­துத் தெரிந்து கொள்­ளல் இவ்­வே­ளை­யில் பயன்­மிக்­கது.

‘ஹெஜின்’ என்­பது எந்­த­வோர் பொருள் அல்­லது சேவை­யின் விலை எதிர்­பா­ராத வகை­யில், கூடி­யும், குறைந்­தும் போகும் ஆபத்­தைத் தவிர்த்­துக் கொள்­வ­தற்­கா­கக் கைக்­கொள்­ளப்­ப­டும், ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட தோர் நிதிக் கையாள்கைச் செயற்­பா­டா­கும். அது ஒரு அள­வுக்கு காப்­பு­று­திக்கு ஒப்­பா­னது. சாதா­ரண கொடுக்­கல் வாங்­க­லொன்­றின்­போது விருப்­ப­ மில்­லாத செயற்­பாடு இடம்­பெ­று­மா­னால் அதன்­மூ­லமான நட்­டத்­தைத் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கா­கவே ஹெஜின் நடைமுறை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அதன்­படி, உலக பெற்றோலிய எரிபொருள் விலை எதிர்­பா­ராத விதத்­தில் உயர்­வ­டை­யு­மா­னால் அதன் மூல­மான நட்­டத்­தைத் தவிர்த்­துக் கொள்­வ­தற்­காக சில வங்­கி­க­ளு­டன் ‘ஹெஜின்’ ஒப்­பந்­தத்தை மேற்­கொண்­டி­ருந்த பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னம், உலக எரிபொருள் விலை உயர்­வ­டை­வ­தற்­குப் பதி­லாக 2008 ஆம் ஆண்­டின் நடுப்­ப­கு­தி­யில் எதிர்­பா­ராத விலை­வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக சிக்கலில் விழ நேர்ந்தது.

இத்தகையதொரு நிலை ஏற்­ப­ட­வும் இட­முண்­டென ஒப்­பந்­தம் தயா­ரிக்­கப்­பட்­ட­போது பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்­த­ரப்பு அனு­மா­னித்திருக்கவில்லை. 2008 ஆம் ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட ‘ஹெஜின்’ ஒப்­பந்த விதி­கள் பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத் துக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தின. உண்­மை­யில் கூட்டுத்தாபனத்தின் நிறை­வேற்று த­ரப்­பின் தீர்­மா­னம் தவ­றா­கிப் போனமை மட்­டுமே அத்­த­கைய பின்­ன­டை­ வுக்­குக் கா­ர­ணமேயொழிய, அது மத்­திய வங்கி பிணை­மு­றி ஊழல் சம்­ப­வம் போன்று திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட களவு அல்ல.

பெற்றோலிய எரிபொருள் விலை வீழ்ச்சியில் ஏற்பட்ட நட்டமேயொழிய அது ஊழலோ மோசடியோ அல்ல.

உண்­மை­யில் 2007 ஆம் ஆண்டு முதல் இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்டுத்­தா­ப­னம், இலங்­கைக்­குத் தேவை­யான பெற்றோலிய எரிபொருள் வகை­க­ளின் ஒரு பகு­தி­யைக் கொள்­வ­னவு செய்­த­போது சர்­வ­தேச வங்­கி­கள் சில­வற்­றி­னூ­டாக, முழு­உ­ல­க­முமே ஏற்­றுக்­கொண்ட ‘ஹெஜின்’ நடை­முறை­யைக் கைக்­கொண்டு வந்­தது.

இதன் மூலம் ஆரம்ப ஒன்­றரை வரு­டங்­க­ளில் கூட்­டுத் தா­ப­னம் குறிப்­பி ­டத்­தக்க அளவு இலா­பம் ஈட்­டி­யது. ஆனால் 2008 ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் எதிர்­பா­ராத வித­மாக உலக பெற்றோலிய எரிபொருள் விலை வீழ்ச்­சி­ய­ டைய ஆரம்­பித்­த­தை­ய­டுத்து அப்­போ­தைய ‘ஹெஜின்’­­­ஒப்­பந்­தம் இலங்­கைக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்தி வைத்­தது.

அந்த வேளை­யில் மூன்­று­பன்­னாட்டு வங்­கி­கள், கூட்­டுத்­தா­ப­னத்­தி­டம் நட்ட ஈடு கோரி வழக்­குத் தொடுத்­தன. பெருந்­தொகை நட்­ட­ஈட்­டைக்­கோ­ரிய அமெ­ரிக்க வங்­கி­யின் கோரிக்கை நீதி­மன்­றால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. அதே வேளை பிரித்­தா­னிய மற்­றும் ஜேர்­மனி நாடு­க­ளது வங்­கி­க­ளின் நட்ட ஈட்­டுக்­கோ­ரிக்­கை­க­ளுக்­கான தீர்ப்­புக்­கள் வங்­கி­க­ளுக்­குச் சார்­பா­கவே அமைந்­தன. ஆயி­னும் குறித்த வங்­கி­க­ளு­டன் அரசு மற்­றும் பெற்­றோ­லி­யக்­கூட்­டுத்­தா­ப­னம்­மேற்­கொண்ட பேச்­சுக்­க­ளை­ய­டுத்து கோரப்­பட்ட நட்ட ஈட்­டுத்­தொகை குறைக்­கப்­பட்டு மொத்­த­மாக 89 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­களே நட்ட ஈடா­கச் செலுத்­தப்­பட்­டன.

இது அந்த வேளையை இலங்­கைப் பெறு­ம­தி­யில் 12.5 பில்­லி­யன் ரூபாய்­க­ளா­கும். அந்த வகை­யில் முன்­னர் குறிப்­பிட்­டமை போன்று, இது வர்த்­தக ரீதி­யி­லான நட்­ட­மே­யொ­ழிய, ஊழலோ, திருட்டோ அல்ல. இது விட­யத்­தில் ஊழல் இடம் பெற்­றி­ருத்­தால் இன்­றைய கூட்­டாட்சி அரசு அதற்­கான சட்ட நட­வ­டிக்கை எடுக்­காது தவிர்த்­தி­ருக்­குமா? மத்­தி­ய­வங்­கி­யின் கிறீக் பிணை­முறி கொள்­வ­னவு விட­யத்­தில் ஏற்­பட்ட நட்­டம் குறித்த குற்­றச்­சாட்டும் இத­னை­யொத்த தொன்றே.

மத்­திய வங்­கி­யால் நிர்­வ­கிக்­கப்­ப­டும் சில நிதி­யங்­கள் மற்­றும் அற­வீ­டு­களைத் திரட்டி, பொருத்­த­மான விதத்­தில் முத­லீ­டு­ மேற்­கொண்டு அவற்­றின் பெரு­ம­தி­யைக்­கூட்­டு­வது மத்­திய வங்­கி­யின் பொறுப்­புக்­க­ளி­லொன்று. மத்­திய வங்­கி­யின் நிதிச்­ச­பை­யில் உயர் கல்­வித்­த­ரா­த­ரங்­கள் மற்­றும் அனு­ப­வங்­க­ளைக் கொண்­டுள்ள அதி­கா­ரி­களே பணி புரி­கின்­ற­னர்.

திறமை வாய்ந்த முத­லீட்­டா­ளர்­கள் இத்­த­கைய நிதி­யம் மற்­றும் அற­வீடு மூலம் கிட்­டும் நிதி­யைப் பொருத்­த­மான முத­லீ­டு­க­ளில் முத­லிட்டு அதன்­மூ­லம் கிட்­டும் இலா­பத்தை அந்த முத­லீ­டு­க­ளு­டன் சேர்த்­துப் பெருக்­கிக் கொள்­வர். அவ்­வி­தம் மேற்­கொள்­ளப்­ப­டும் பல முத­லீ­டு­க­ளில் ஒன்றிரண்டு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னா­லும், ஏனை­யவை பெரும் இலா­ப­மீட்­டி­னால் மொத்­தத்­தில் அந்த முத­லீட்­டுத் தரப்பு இலாப மீட்­டிய தரப்­பாகக் கொள்­ளப்­ப­டும்.

கிறீக் பிணை­மு­றிக் கொள்­வ­னவு இலங்கை மத்­திய வங்­கி­யின் முத­லீட்­டுத்­த­ரப்­புக்கு தவ­றான தொன்­றாக அமைந்து விட்­டது. எதிர்­பா­ராத வகை­யில் கிறீஸ் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வீழ்ச்சி கண்­ட­தால் எதிர்­பார்த்த இலா­பத்­துக்­குப் பதி­லாக மத்­திய வங்கி நட்­டத்­தைச் சந்­திக்­க­ நேர்ந்­தது.

இந்த கிறீஸ் பிணை­முறி கொள்­வ­னவு, மத்­திய வங்கி மேற்­கொண்ட பெரும் குற்­ற­மாக எதிர்த்­த­ரப்­பு­க­ளால் விமர்­சிக்­கப்­பட்டு வந்­தது. அது தொடர்­பாக மத்­திய வங்கி ஆளு­நர் உட்­பட வங்­கி­யின் நிதிச்­ச­பைக்கு எதி­ராக ராஜாங்க அமைச்சர் சுஜீவ் சேனசிங்­கா­வால் உயர்­நீ­தி­மன்­றில் வழக்­குக்­கூ­டத் தொடுக்­கப்­பட்­டது. ஆயி­னும் உயர்­நீ­தி­மன்­றமோ, குறிப்­பிட்ட முத­லீட்டை மேற்­கொள்ள மத்­திய வங்­கி­யின் நிதிச் ச­பைக்கு பூரண, சட்­டப்­ப­டி­யான உரிமை உள்­ள­தெ­னத் தெரி­வித்து, அந்த விட­யத்­தில் தவ­றே­தும் நிக­ழ­வில்­லை­யெ­னத் தீர்ப் ப­ளித்­தி­ருந்­தது.
உண்­மை­யில் அத்­த­கைய முத­லீ­டு­கள் ஒன்­றால் நட்­டம் ஏற்­பட்­ட­து­டன் அது அமெ­ரிக்க டொலர் 6.6 மில்­லி­யன் அள­வா­ன­தா­கும்.

அது முன்­னாள் மத்­திய ஆளு­நர் அஜித் கப்­ரால் மற்­றும் நிதிச்­ச­பை­யின் செயற்­பட்­டால் ஏற்­பட்ட பெரும் குற்­றம் என எவ­ரா­வது கூறு­வார்­க­ளா­யின், கீழ்க்­கா­ணும் தர­வு­கள் குறித்து அவர்­க­ளால் எத்­த­கைய விமர்­ச­னத்தை முன்­வைக்க இய­லும்? 2011 ஆம் ஆண்­டில் இலங்கை மத்­திய வங்கி மேற்­கொண்ட முத­லீ­டு­கள் கார­ண­மாக 430 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் இலா­ப­மீட்­டப்­பட்­டி­ருந்­தது. அது 6.6 வீத இலா­பம் என்­ப­து­டன் மத்­திய வங்­கி­யால் ஒரு­போ­தும் ஈட்­டப்­ப­டாத உயர் இலா­ப­மாக அமைந்­தி­ருந்­தது.

உயர் நீதி­மன்ற வழக்­குத் தீர்ப்­பில் குறிப் பிடப்­பட்­ட­படி, அந்த வேளை­யில் கிறீஸ் பிணை­முறி முத­லீட்­டில் முத­லி­டப்­பட்ட தொகை, மத்­திய வங்­கி­யால் முத­லீடு செய்யப்ப­டத்­தக்க முழுத்­தொ­கை­யின் தசம் 6 (0.6%) வீதம் மட்­டு­மே­யா­கும்.அன்று இந்த விட­யம் குறித்து எதிர்க்­கட்­சி­யி­னர் மேற்­கொண்ட பரப்­புரை, மத்­திய வங்கி முற்று முழு­தாக வங்­கு­ரோத்து நிலைக்கு உட்­பட்டு விட்­ட­தென நாட்டு மக்­கள் நம்­பும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் இன்றோ, நாட்டு மக்­கள் முன்­ன­ரை­விட அர­சி­யல், பொரு­ளா­தார ரீதி­யில் அறி­வும் அனு­ப­வ­மும் மிக்­க­வர்­க­ளாக ஆகி­யுள்­ள­னர்.

அந்த வகை­யில் முன்­னைய மகிந்த அர­சின் காலத்­தில் மத்­திய வங்­கி­யின் செயற்­பா­டு­க­ளால் ஏற்­பட்ட நட்­டத்­தை­விட, இன்­றைய கூட்டு அர­சுக்கு முண்டு கொடுக்­கும் தரப்­பி­ன­ரால் மத்­திய வங்­கிக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாதிப்பு பல மடங்­கா­கும் என்­பதை நாட்­டு­மக்­கள் தௌ்ளத்­தௌி­வா­கத் தெரிந்து கொண்­டுள்­ள­னர் என்­பதே உண்­மை­யா­கும்.

http://newuthayan.com/story/63311.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.