Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு இல்லை, தங்கியிருக்க இடவசதி இல்லை இடம்பெயர்ந்த 1-1/2 இலட்சம் மக்கள் பரிதவிப்பு -கொளுத்தும் வெயிலில் துடிக்கும் குழந்தைகள்

Featured Replies

உணவு இல்லை, தங்கியிருக்க இடவசதி இல்லை இடம்பெயர்ந்த 1-1/2 இலட்சம் மக்கள் பரிதவிப்பு -கொளுத்தும் வெயிலில் துடிக்கும் குழந்தைகள்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலால் இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உண்ண உணவின்றியும் தங்க இடமின்றியும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 8 ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டு வரும் உக்கிரத் தாக்குதல்களையடுத்து இரு நாட்களில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறினர்.

பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களும் செங்கலடி, கிரான் பிரதேச செயலகப் பிரிவின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்களுமே இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் வாழைச்சேனை முதல் மட்டக்களப்பு கல்லாறு வரை 88 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம் முகாம்கள் தற்காலிக கூடாரங்களாகவும், திறந்த பாடசாலைக் கட்டிடங்களாகவும் உள்ளன.

தற்காலிக கூடாரங்களில் மூன்று, நான்கு குடும்பங்களும் ஒரு முகாமில் 450 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகளில் இரண்டாயிரம் வரையான குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு கூடாரம் அமைத்துக் கொடுக்க கூடாரங்கள் இல்லாததால் அரச சார்பற்ற நிறுவனங்களை எதிர்பார்த்த வண்ணம் அரச அதிகாரிகள் உள்ளனர்.

படுவான்கரை மக்கள் விருந்தோம்பலுக்கு பெயர்போனவர்கள். எந்த நேரமும் எந்த வீட்டுக்கு எத்தனை பேர் சென்றாலும் உணவு வழங்கி ஆதரிக்கும் மக்கள், இன்று இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்து சொப்பிங் பைகளில் உணவை பெற்று உண்ணும் பரிதாப நிலை காணப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் சமைத்த உணவை வழங்கி வந்தாலும் அது நேரத்துக்கோ அல்லது போதுமான அளவிலோ இல்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

450 வரையான குடும்பங்களுக்கு ஒரே தடவையில் உணவை சமைத்து வழங்க வேண்டியுள்ளது. இம்மக்களே குழுவாகப் பிரிந்து சமைத்தும் வருகின்றனர்.

இம்மக்களுக்கு காலை உணவு இல்லை. மட்டக்களப்பில் அனைத்து மக்களுக்கும் வழங்கக் கூடிய அளவு பாண் தயாரிப்பு இல்லை. பாணை நம்பியிருப்பதால் பலர் ஏமாற்றத்துடன் காலை உணவில்லாமல் பரிதவிக்கின்றனர். காலை உணவின்றி மதிய உணவு மூன்று அல்லது நான்கு மணியளவிலேயே கிடைக்கின்றது. அதுவும் கொளுத்தும் வெயிலில் வரிசையாக நின்றே பெற்று உண்ண வேண்டியுள்ளது.

இதேவேளை, சிறுவர்கள், குழந்தைகள் நிலையோ மிக மோசமாக உள்ளது. சிறுவர்களுக்கு ஏற்ற உணவுகள் வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் அவியாத அரிசிச் சோற்றையே வழங்க வேண்டியுள்ளது. தாய்மாருக்கு சரியான உணவில்லாத நிலையில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வழங்க முடியாதுள்ளது.

தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு தற்காலிக முகாம்களுக்கு சில நிறுவனங்கள் சிமிளி விளக்கை வழங்கியுள்ளன. மண்ணெண்ணெய் வழங்கவில்லை. இதனால் இவர்கள் இருட்டில் வாழ்கின்றனர்.

அதேவேளை, பாடசாலைகளில் உள்ள மக்கள் இருட்டிலே வாழ்ந்து வருகின்றனர். நூறு மீற்றர் நீளமுடைய பாடசாலை திறந்த கட்டிடத்தில் ஒரு மின்குமிழே பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அந்த வெளிச்சத்தில் இருக்க முடியாது இருட்டிலே இரவுப்பொழுதைக் கழிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் தோன்றியுள்ளது. கண்நோய், தோல் நோய், வயிற்றோட்டம் என்பனவும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இம்மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடாத்தப்படவில்லை.

இவை அனைத்திற்கும் மத்தியில் பகலில் கொளுத்தும் வெயிலில் தற்காலிக கூடாரங்களில் இருக்கும் மக்கள் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் மரநிழல்களைத் தேடி ஓடும் நிலையுள்ளனர்.

குழந்தைகள் வெப்பம் தாங்க முடியாமல் அழுது தவிக்கின்றனர். மறுபுறம் இரவு நேரத்தில் இடைஇடையே பெய்து வரும் மழை பகலில் ஆறுதல் இன்றித் தவிக்கும் மக்களை நிம்மதியாக உறங்க விடுவதில்லை. இவ்வாறு மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இம்மக்களுக்கு போதியளவு கழிப்பறைகளோ, குளிப்பதற்கான வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மக்கள் தங்களது வீடுகளில் விட்டு வந்த கால்நடைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஷெல் ஓய்ந்த நேரங்களில் சென்று எடுத்து வந்து மிகவும் குறைந்த விலைக்கு விற்று தங்களது செலவுகளை ஈடுசெய்து வருகின்றனர்.

மூலம்

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.