Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீபதி சூரியாராச்சியும் ஜனாதிபதி தேர்தல் ஒப்பந்தமும்

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கும் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் சனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஒரு இரகசிய உடன்படிக்கை இருந்ததாகவும் அதன்படியே சனாதிபதி விடுதலைப் புலிகளின் கேந்திர மையத்தைத் தாக்கி அழிப்பதைத் தவிர்த்து வந்துள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சொல்லி வருகிறார். ஒரு மர்மக் கதைக்கு விளம்பரம் செய்வது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஒவ்வொரு தகவலையும் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டுகிற விதமாக, எதையெதையோ எல்லாம் சொல்லுகிறார். சில விடயங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் தோன்றுகின்றன. ஜெனீவா பேச்சுவார்த்தைகளைக் குழப்பியடித்தது முதலாகக் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வரையிலானவர்களை இடம்பெயரச் செய்த குண்டுவீச்சுக்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேறச் செய்ததும் அந்தவிதமான இரகசிய உடன்படிக்கையின் ஒரு பகுதியா? முகமாலையிலும் பின்னர் தம்புள்ளைக்கு அருகிலும் அரச படையினர் பெருந்தொகையிற் கொல்லப்பட்டதும் அந்த இரகசிய உடன்படிக்கைக்கு உட்பட்டதா? சாதாரண தமிழ், சிங்கள மக்களைப் பெருந்தொகையில் படுகொலை செய்த பல்வேறு நடவடிக்கைகளும் அவ்வாறே உடன்படிக்கைக்கு உட்பட்ட விடயங்களா?

உடன்படிக்கையின் விபரங்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவது பற்றி யூ.என்.பி. மிகவும் ஆவலாகவே உள்ளது. விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்பதில் யூ.என்.பி.யின் ஆர்வம் விளங்கிக் கொள்ளக் கூடியது தான். எனினும் விசாரணைக் குழுக்கள் உண்மைகளைக் கண்டறிந்து சொல்லுவது அருமை. சொன்னாலும் அவை உரிய நேரத்திற் சொல்லப்படுவது அதனினும் அருமை. பதவியிலிருக்கிற போது, தேசப்பற்று சில விடயங்களைக் காண விடாமல் தடுக்கிறது. பதவி விலகிய பின்பு, அதே தேசப்பற்று முன்பு காணாத எத்தனையோ விடயங்களைக் காணச் செய்கிறது. ஸ்ரீபதி சூரியாராச்சியும் மங்கள சமவீரவும் தங்களுக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்களும் சதிகளும் பற்றி இப்போது சொல்கிற விடயங்கள் நாட்டில் நடந்து வந்த விடயங்கள் பலவற்றுடன் ஒப்பிட்டால் ஒன்றும் பெரிய விடயங்கள் அல்ல. அமைச்சர்கள் பதவி விலக்கப்படுவதற்கு முன்னமே நிலைமைகள் மிகவும் மோசமாகிவிட்டன. அமைச்சர் மங்கள சமரவீர அண்மையிற் சொன்ன எதுவும் யாரும் எதிர்பாராதளவுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்களல்ல. வேண்டுமானால், அதிர்ச்சி அரசாங்கத் தரப்பிற் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அது தகவல்கள் தந்த அதிர்ச்சியை விட அவை சொல்லப்பட்டுவிட்டதால் வந்த அதிர்ச்சியென்றே கூறவேண்டும்.

ஸ்ரீபதி சூரியராச்சி கூறுகிறவை தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குட்படுத்தக் கூடியன. அவருக்கு எதிரான பல்வேறு மிரட்டல்கள் உள்ளன. ஆட்கடத்தல், கொலை என்பன பற்றியும் அவர் அஞ்ச நியாயம் இருக்கிறதாகத் தெரிகிறது. விசாரணை எதுவும் நடந்து முடியுமுன்பே விபரீதமாக எதுவும் நிகழ வாய்ப்புண்டு. எனவே தான் அவர் சொல்லுகிற இரகசிய உடன்படிக்கையின் விபரங்களைத் தாமதமின்றி அவர் வெளியிட வேண்டும். தனது கூற்றுக்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டால் ஒருவேளை தடயங்கள் யாவும் அழித்துவிடப்படும் என்ற அச்சம் முற்றிலும் நியாயமானதல்ல. ஏனெனில் அவர் வாய்திறந்த போதிலிருந்தே அவ்வாறான தடயங்கள் எவையேனும் இருந்தால் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும். காலங் கழியக் கழிய எல்லாத் தடயங்களையுமே அழித்துவிட வாய்ப்பு அதிகம். எனவே, ஸ்ரீபதி சூரியாராச்சி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சிறுபிள்ளை விளையாட்டு விளையாடுவதை நிறுத்தி தனது தகவல்களை மக்கள் முன்பு வைக்க வேண்டும். உண்மை, பொய்களை ஊடகங்களின் திரிப்பிற்கு நடுவிலும் மக்கள் அறிந்து கொள்ள இயலும் என்றே நம்புகிறேன்.

இரகசிய உடன்படிக்கைகளும் எழுதாத ஒப்பந்தங்களும் இந்த நாட்டின் அரசியலுக்குப் புதியனவல்ல. ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கும் தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைமைக்கும் இ.தொ.கா. தலைவர் தொண்டமானுக்கும் 1977 தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு இரகசிய உடன்படிக்கை இருந்த கதையைத் தொண்டமான் 1983 வன்முறைக்குச் சிறிது பின்பே தான் அவிழ்த்துவிட்டார் என நினைவு. அதை மறுக்க ஜயவர்தன முயலவில்லை. தமிழ்த் தலைவர்களை முட்டாளாக்கிய தனது ஆற்றலைச் சிங்கள மக்களும் அறியச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அவர் அதனைக் கருதியிருப்பாரோ தெரியாது.

1965 தேர்தலுக்கு முன்பு தமிழரசுக் கட்சிக்கும் யூ.என்.பி.க்குமிடையே ஒரு இரகசிய உடன்பாடு இருந்ததாக சொல்லப்பட்டது. அதன் பின்பு யூ.என்.பி. தேர்தலில் வெற்றிபெற்று ஏழு கட்சிக் கூட்டணி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி சார்பாக செல்வநாயகமும் யூ.என்.பி. சார்பாக டட்லி சேனாநாயக்கவும் செய்து கொண்ட உடன்படிக்கையை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இரண்டு பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் கூடச் சென்று நடத்திய பேரினவாத ஊர்வலம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.அதில் பங்கு பற்றிய விஜேவீர மீது சீன சார்பு கம்யூனிஸ்ற் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது.

1960 மார்ச் தேர்தலின் பின் அறுதிப்பெரும்பான்மையில்லாம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.