Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays

Featured Replies

`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays

 
 

கிறிஸ்தவர்களின் தவக்காலம், வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. 'சாம்பல் புதன்' அல்லது 'விபூதி புதன்' எனப்படும் நிகழ்வில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாகக் கருதுகிறார்கள். 
தவக்காலம்... இறைவனை மனிதன் அதிகமாகவும் ஆழமாகவும் தேடும் காலம். இந்த  நாள்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு ஒன்றாகத்  தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும்.

தவக்காலம்

 


கிறிஸ்தவர்களின் புனித நூலான, 'பைபிள்' எனப்படும் வேதாகமத்தை இந்த நாள்களில் அவசியம் ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டும்.; தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வழிபாடுகளில் பங்கேற்கவேண்டும்.

புனித வெள்ளி நாளில் இயேசு கிறிஸ்து பட்ட கஷ்டங்களை பைபிளில் வாசித்துத் தியானிக்க வேண்டும்; வெள்ளிக்கிழமைகளில் 'ஒரு சந்தி' எனப்படும் ஒருவேளை உணவு உண்ணாமல் இருப்பது, 'சிலுவைப் பாதை' எனப்படும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பது; இறைச்சி உணவுகள் மற்றும் மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்காமல் இருக்க வேண்டும். 
தினந்தோறும் ஜெபமாலை சொல்ல வேண்டும். 'இயேசுவே என்மேல் இரக்கமாயிரும், இயேசுவே, நான் பாவி. இயேசுவே, உம் ரத்தம் என்னை கழுவட்டும், உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்' என்று சொல்லி ஜெபிக்க வேண்டும்.

உடல்நலம் குன்றியவர்கள், மிகுந்த கஷ்டத்தில் இருப்பவர்கள் இயேசு கிறிஸ்து பட்ட கஷ்டங்களை நினைத்து, ஆறுதலும் நம்பிக்கையும் பெற வேண்டும்.  தாங்கள் செய்த பாவங்களை, இறைவனிடம்  அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டும். கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல், ஆன்மிக வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காமல், தேவையற்ற புத்தகங்களை வாசிக்காமல் மனதை இறைவன்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

தவக்காலம்

 

தங்களுக்குக் கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில், பத்தில் ஒரு பகுதியை இறைப் பணிக்குச் செலவு செய்வது மிகுதியான பலனைத் தரும். தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைத்  தவிர்ப்பது, நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்வது, சமாதானமில்லாமல் வாழும் குடும்பத்தினரிடம் சமாதானம் ஏற்படுத்த முயற்சிப்பது போன்றவற்றையும் இந்த தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும். தீய சிந்தனைகளை விட்டொழிக்க வேண்டும். இப்படியாக பல்வேறு நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக, தவக்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உணவு உண்ணாமல் இருப்பது, இறைச்சி உணவுகளை உண்ணாமல் இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். 
உண்ணா நோன்பு என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வே. பழைய ஏற்பாட்டில், இறைவன் மோயீசனை நோக்கி, தனக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையே ஏற்படவிருக்கும் உடன்படிக்கை வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளும்படி பணித்திருக்கிறார். அப்போது மோயீசன், இறைவன் குறிப்பிட்ட இடத்திலேயே 40 நாள்கள் பகலும் இரவுமாக அவருடன் தங்கி எந்த உணவையும் உண்ணாமல் எதையும் அருந்தாமல் இருந்தாராம்.

இயேசு கிறிஸ்து தனது பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன் பாலைவனத்தில் 40 நாள் பகலும் 40 நாள் இரவும் உண்ணா நோன்பு இருந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. 

இயேசு கிறிஸ்து 40 நாள்களின் முடிவில் பசியுற்றிருக்கும்போது சாத்தான் அவரை நெருங்கி, நீர் கடவுளின் மகனாக இருந்தால், 'இந்தக் கற்கள் அப்பமாக மாறும்படி கட்டளையிடும்' என்றானாம். அதற்கு இயேசு கிறிஸ்து மறுமொழியாக, 'மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று; கடவுள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லிலும் உயிர் வாழ்கிறான் என்று எழுதப்பட்டிருக்கிறதே' என்றார்.

தவக்காலம்


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பதன் காரணம் இதுவே. 'உயிர் வாழ இறைவனின் வாக்கு எவ்வளவு முக்கியம்' என்பதை தங்களுக்குத் தாங்களே நிரூபித்துக்கொள்வதற்காகவே உண்ணா நோன்பு இருப்பது அவசியமாகும். ஆனால், 'நான் நோன்பு இருக்கிறேன் என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் அர்த்தமில்லை' என்றும் சொல்லப்படுகிறது.

``நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாக இருக்கவேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டு தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர். நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு. அப்போது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல் மறைவாயுள்ள உன் தந்தைக்கு (இறைவனுக்கு) மட்டும் தெரியும். அவரும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார் (மத்தேயு:6:16)'' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

உண்ணா நோன்பு என்பது நம்மை நாமே வருத்திக்கொள்வது என்பது ஒருபுறம் இருந்தாலும், நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதாக அமைந்தால் நல்லது.

https://www.vikatan.com/news/spirituality/116069-lent-day-begins.html

  • தொடங்கியவர்

`மனிதனே... மனம் திரும்பு!’ சாம்பல் புதனின் சிறப்பு - தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்! #AshWednesday

 
 

னிதனே
மனம் திரும்பு!
கல்வாரி நோக்கி, 
கால்களைப் பதித்து
கருணைதேவனைப்
பின்தொடர
மனம்திரும்பி வா!

 

இன்று முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சில கருத்துகள் சொல்லப்படுகின்றன.  ''இப்போதாவது உண்ணாநோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்துடன் என்னிடம் திரும்பி வாருங்கள்'' என்கிறார் ஆண்டவர். 

 

சாம்பல் புதன்

நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமை உள்ளவர், பேரன்புமிக்கவர்'' - யோவேல் இரண்டாம் அதிகாரத்தில் 12 முதல் 13 வரையிலான இறைவசனங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

'சாம்பல் புதன்', 'விபூதி புதன்', 'திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள், கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் ஒரு சோகமான விழா. சாம்பல் புதனில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த தவக்காலப் பயணம் என்பது மனிதனின் சுய ஆய்வுப் பயணத்துக்கான காலமாகும். கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மன மாற்றத்துக்கான காலமாக இதை அனுசரிக்கின்றனர். 

பைபிளில், நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. `இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.' `மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார்.' `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் நோன்பிருந்தார்.' இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.

சாம்பல் புதன்


கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு வழிபாட்டின்போது கையில் ஏந்தி வந்த குருத்தோலைகளை வீடுகளில் பத்திரமாக வைத்திருப்பார்கள். அவை அனைத்தையும் எடுத்து வந்து ஆலயத்தில் எரியூட்டி சாம்பலாக்கி, கிறிஸ்தவ மதகுருக்களால் நெற்றியில் பூசி இந்த ஆண்டு தவக்காலத்தைத் தொடங்குவார்கள். அப்போது. குருவானவர் `மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லிக்கொண்டு சாம்பலை நெற்றியில் பூசுவார்கள். 

'சாம்பல்' என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மன மாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டக்கூடியது. ஏழைகள் மற்றும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு உதவுவது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துவது, வெளிவேடம் இல்லாத இறை உறவுக்கு வழிவகுக்கும். ஜெபத்தைச் சொல்வது, பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருப்பது போன்றவை இந்த தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்குமுறைகளாகும்.

சாம்பல் புதன்


பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி கடவுளின் வார்த்தையை மிகவும் கவனமாக வாசிப்பதும் வாசிக்கக் கேட்பதும் அந்த வார்த்தைக்கேற்ப வாழ்வதும் தவக்காலத்தில் பொருத்தமானது. தாம் செய்த பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்பதும் அதே மன்னிப்பை பிறருக்கு வழங்குவதும் தவக்காலத்தின் சிறப்பாகும். தவக்காலங்களில் சாம்பல் புதனன்றும் புனித வெள்ளியன்றும் கிறிஸ்தவர்கள் உண்ணாநோன்பு இருப்பார்கள். இதுதவிர தவக்காலத்தின் மற்ற நாள்களின்போதும் வழக்கமாக உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி உண்பதைத் தவிர்ப்பார்கள்.

உலகின் பல பகுதிகளில் தவக்காலத்தின்போது சிறப்புக் காணிக்கைகள் பெறப்பட்டு ஏழை நாடுகளில் அவதிப்படுவோரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக அவற்றை நன்கொடையாகக் கொடுப்பதும் உண்டு. இந்தச் செயல்கள் அனைத்துமே உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; இறைவனோடும் பிறரோடும் உறவை ஆழப்படுத்த வேண்டும் என்பதையே முன்னிறுத்துகின்றன.

https://www.vikatan.com/news/health/116351-ash-wednesday-is-the-starting-day-of-lent.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.