Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேவலும், மொட்டும் இணைந்தது

Featured Replies

சேவலும், மொட்டும் இணைந்தது
 

image_47120bbc1b.jpgநுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன்  இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் வெற்றியின் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் சீ.பீ. ரத்னாயக்கவும் கலந்துக்கொண்டார்.

சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்  இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியமைத்து உயர்ந்த சேவையினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

தாமரை மொட்டுடன் இணைந்து 11 சபைகளில் ஆட்சியமைப்பேன் ; ஆறுமுகன் தொண்டமான்

 

 

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ar.jpg

அட்டன் நகரத்தில் இன்று மாலை இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கான மக்கள் ஒன்றுக்கூடலில் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு தெரிவித்தார்.

இவர் அட்டன் நகரத்திற்கு வருகை தந்தபோது ஆரவாரமாக மக்கள் இவரை வரவேற்றதுடன், அட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அவர் மேலும் தெரிவித்தாவது,

நுவரெலியா மாவட்டத்தில் சாதனையை உண்டுப்பண்ணுவோம். வரலாற்று மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற இலக்கினை முன்வைத்து தேர்தல் களத்தில் குதித்த நாம் 9 சபைகள் கிடைத்தால் போதும் என்று ஒரு வேளையில் எண்ணினோம். ஆனால் இன்று 11 சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சிக் கொள்ளும் என்பதில் எவ்வித அச்சமும் இன்றி மக்களிடம் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம் என்பதை அட்டனில் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம் என்றார்.

13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை கைப்பற்றியுள்ள நாம் அட்டன் மாநகரத்தில் அபிவிருத்தி ஊடாக ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக அட்டன் நகர சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் ஆட்சிக்கொள்ளும் என உறுதியாக தெரிவிக்கின்றோம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்த வண்ணம் இந்த மக்கள் மத்தியில் நாம்  எழுந்துள்ளோம். எம்மோடு கைகோர்த்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 உள்ளுராட்சி சபைகளில் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சிக்கொள்ளும் என்பதை துணிவுடன் தெரிவிக்கின்றேன்.

தலவாக்கலை நகர சபை, கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய முக்கிய பிரதேச சபைகளை வெற்றியின் பாதையின் கீழ் ஆட்சிக்கு கொண்ட வந்த நாம் ஏனைய பிரதேச சபைளையும், ஆட்சிக்கொள்வோம் வீரமாக தனது உரையில் தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் ஆறுமுகன் தொண்டமானுடன் கைகோர்த்துக் கொண்டு கலந்து செயல்பட முன்வந்த நுவரெலியா மாவட்ட முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க கருத்துரைக்கையில், தெரிவித்ததாவது,

ஆறுமுகன் தொண்டமான்  ஜனாதிபதியுடன் இணைந்து இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்தும், கூட்டு சேர்ந்தும் போட்டியிட்டு இருந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுர் அதிகார சபைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாம் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆறுமுகன் தொண்டமானின் கரத்தை பலப்படுத்தி நுவரெலியா மாநகர சபையை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றோம்.

இதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், ஆறுமுகன் தொண்டமானுடனும் கைகோர்த்து செயல்பட நாம் தயாராக இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான பொறுப்பாளராக செயல்படும் நான் உறுதியளிக்கின்றேன்.

இந்த வகையில் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் மலையக மக்களின் உயர்வுக்கான இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தியின் ஊடாக பாரிய மாற்றத்தினை முன்னெடுப்போம் என உறுதியாக தனது உரையில் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/30521

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.