Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுக்கு உலோகஉருளை கடத்தல்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கிய பிரமுகர் பிடிபட்டார்! இலங்கைக்கு உலோக உருளை கடத்தல்! நவீன படகு பறிமுதல்; டிரைவர் கைது. விடுதலைப்புலிகளுக்கு உலோக உருளை கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பல முறை கடத்தலில் ஈடுபட்ட படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நவீன படகு பறிமுதல் செய்யப்பட்டது.

படகு டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நடைபெறும் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தேசிய பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சென்னை வேப்பேரியில் ஒரு குடோனில் இருந்து உலோக உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த சிவகரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி பிரபாகரன் என்பவரை தூத்துக்குடியில் கைது செய்தனர். இரண்டு இடங்களில் இருந்தும் 7 டன் உலோக உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து பெரம்பலூரில் இருந்து திருச்சி வழியாக இலங்கைக்கு உலோக உருளைகள் கடத்திய வழக்கில் இலங்கை தமிழர்கள் பகீரதன், பிரதீபன், ராகுலன், அந்தோணி, அருள்சீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 டன் உலோக உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள ராகுலன் என்பவரை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பெரம்பலூரில் சோப்பு கம்பெனி வைத்துள்ள ரமேஷ்குமார், ஜெயராமன் ஆகியோர்தான் உலோக உருளைகள் பதுக்கி வைக்க உதவியாக இருந்ததாக தெரிவித்தார். இவர்கள் இருவருமே தமிழத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டதால் தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் ராகுலனிடம் விசாரித்தபோது, ஏற்கனவே ஒரு முறை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு உலோக உருளைகள் மற்றும் சில பொருட்களை கடத்தியதாக குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் படகு டிரைவர் கண்ணன்(39) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் இலங்கைக்கு பொருட்கள் கடத்தும்போது டிரைவராக செயல்பட்டது தெரிந்தது.

மேலும் அவர் கொடுத்த தகவல்படி மண்டபம் பகுதியைச் சேர்ந்த படகு உரிமையாளர் பாலு (எ) முனியசாமி (40) என்பவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடத்தலில் ஈடுபட்ட நவீன படகு பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களைப் போல வேறு படகு உரிமையாளர்களுக்கு கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு உதவியாக படகை கொடுத்து வந்த உரிமையாளர் பாலு கைது செய்யப்பட்டுள்ளதால் இலங்கைக்கு நடைபெறும் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டு விடும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News by TF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.