Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் சிறிலங்கா அரச தலைவரின் கொடும்பாவி எரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் சிறிலங்கா அரச தலைவரின் கொடும்பாவி எரிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 17:03 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிக்கு எரியூட்டி தமது கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சுண்டிக்குளம் பாடசாலை மீது சிறிலங்கா வான்படை மிலேச்சத்தனமாக நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் மற்றும் கல்வியாளர்கள் மீதான தாக்குதல் என்பவற்றை கண்டித்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களும், கிளிநொச்சி புனித தெரேசா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை இழுத்து வந்து ஏ-9 சாலைக்கு குறுக்காக வைத்து எரித்துள்ளனர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லூரி முதல்வர் இரத்தினகுமார் கண்டன உரை ஆற்றினார்.

அக்கண்டன உரையில் அவர் தெரிவித்ததாவது:

20070320001fu9.jpg

20070320002wm7.jpg

20070320003ye6.jpg

20070320004au2.jpg

"எங்களின் மாணவர்களை சிறிலங்கா அரசாங்கம் அவலப்படுத்துகின்றது. படுகொலை செய்கின்றது. உளரீதியாக மாணவர்களை பேதலிக்கச் செய்கின்றது. தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாது தாக்குதல் நடத்துவதாக மேற்கொள்ளும் அச்சமூட்டும் விமானப் பறப்புகளும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கின்றன. இது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயற்பாடு. இத்தகைய கொடூரப்படுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அல்லாது விட்டால் மாணவர்கள் இன்னும் கோபம் கொண்டவர்களாக மாறுவார்கள்.

ஓருபுறம் தமிழினத்தை கொன்று ஒழித்துக்கொண்டு மறுபக்கம் தமிழினத்தின் அறிவுச்சொத்தாக விளங்கும் கல்விச் சமூகத்தை அழிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது" என்றார் அவர்.

20070320005mj9.jpg

20070320008bz0.jpg

puthinam.com

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:o

படுபாவி கொலையரசு நாளை இக் குருத்துகளின் தலையில் குண்டு கொட்டி புலிச் சாயம் பூசுமோ?

ஈழத்திலிருந்து

ஜானா

தமிழர் சுதந்திரமாகச் செயற்படும் பிரதேசமது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.