Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சிங்கள நபருக்கு விளக்கமறியல்

Featured Replies

தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சிங்கள நபருக்கு விளக்கமறியல்

வவுனியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பமாக பத்து இலட்சம் ரூபா பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள பமுனுகம என்ற இடத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

தொலைபேசி மூலம் மிரட்டல், உயிர்அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக சந்தேக நபர் கோரிய பத்து இலட்சம் ரூபா பணத்தை, சந்தேக நபரின் பெயரில் சம்பத் வங்கியின் அனுராதபுரக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு, சம்பத் வங்கியின் வவுனியா கிளை மூலமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வைப்பிலிட்டதாக பாதிக்கப்பட்ட தமிழரான வர்த்தகர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் உரிய ஆவணத்துடன் முறைப்பாடு செய்திருந்தார். இதுதொடர்பாக சம்பத் வங்கி அதிகாரிகளிடம் பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணைளின் மூலம், கப்பம் பெற்றவர் சிங்களவர் என்றும், அவர் பமுனுகம என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பதும்

தெரியவந்துள்ளது. இதனையடுத்து வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் பிடிவிறாந்து உத்தரவின்பேரில், பமுனுகம அலுபோமுல்ல என்ற இடத்தைச்சேர்ந்த எம்.ரீ.ருவான் பிரிய பீரிஸ் என்பவரை வவுனியா பொலிஸார் அவருடைய வீட்டில் வைத்து ஞாயிறன்று கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் சம்பத் வங்கியின் அனுராதபுரம் கிளையில் உள்ள அவருடைய வங்கிக் கணக்கிற்கு, வவுனியாவைச் சேர்ந்த தமிழர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து வவுனியா சம்பத் வங்கியின் ஊடாக பத்து இலட்சம் ரொக்கப் பணத்தை அச்சுறுத்தி கப்பமாகப் பெற்றார் என பொலிஸாரினால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறன்றே வவுனியா மாவட்ட நீதிபதியின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விசேட பாதுகாப்பில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்குத் தவணையன்று விசேட பாதுகாப்புடன் சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். சம்பத் வங்கியின் அனுராதபுரம் கிளையில் ஆர்.எம்.ரீ.பி.பீரிஸ் என்ற பெயரில் கணக்கு வைத்துள்ள இவருடைய வங்கிக் கணக்கிற்கு அனுராதபுரத்திலோ, சம்பத் வங்கியின் வவுனியா கிளையிலோ அல்லது வேறு எந்த வங்கிக் கிளையிலுமோ, எவரேனும், அச்சுறுத்தல் காரணமாக பணம் செலுத்தியிருந்தால், பணம் வைப்புச் செய்வதற்கான ரசீதுடன் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிபதி, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் வங்கிக்கணக்கு தொடர்பான சகல ஆவணங்களையும் நீதிமன்றத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நேரடியாக மேல் விசாரணைகளுக்காக சமர்ப்பிக்குமாறு சம்பத் வங்கியின் அனுராதபுரம் கிளை முகாமையாளருக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

பத்து இலட்சம் ரூபா ரொக்கப்பணத்தை, வேறு கிளையில், உள்ள சிங்களவர், ஒருவரின் கணக்கில் வைப்பிலிட வந்த தமிழர் மீது வங்கியில் பணத்தைப் பெற்ற வங்கி உத்தியோகத்தரும், காமையாளரும் ஏன் சந்தேகப் பார்வையைத் திருப்பவில்லை என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பெõலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியாவில் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடப்பட்டுகின்றது என்பது நாடு முழுவதிலும் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த நிலையில் பணத்தைக் கையாளும் சம்பத் வங்கி அதிகாரிகள், பத்து இலட்சம் ரூபா போன்ற பெரும் தொகைப்பணம் ரொக்கமாக வேறு ஒரு கிளையின் கணக்கிற்கு ஏன் வைப்புச் செய்யப்படுகின்றது என்பது குறித்து ஏன் விசாரணை செய்யவில்லை என்பது தொடர்பாகவும், இதுகுறித்து ஏன் உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்பது தொடர்பாகவும் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.