Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவுக்கு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது

Featured Replies

சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவுக்கு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது

சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் நேற்று நியூயோர்க்கில், ஐ.நாவில் வைத்து வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

சிறுபான்மையினர் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பே உலகில் சிறுபான்மையினர் நிலைமை பற்றிய தனது வருடாந்த ஆய்வறிக்கையை நேற்று வெளி யிட்டது.

அதன்படி கடந்த ஆண்டில் சிறுபான்மை யினரின் நிலைமை மிகமிக மோசமாக சீர்கெட்டுப்போன உலக நாடுகளின் பட்டி யலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன முன்னணி இடம் வகிக்கின்றன.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மக் களின் நிலை பற்றிய கணிப்பில் இந்த இரு நாடுகளும் முன்னணிக்கு வந்துள்ளன.

முன்னர் இலங்கை இவ்விடயத்தில் இவ்வளவு மோசமான நிலையில் இருந்த தில்லை. ஆனால் இந்த ஓராண்டுக்குள் சிறு பான்மையினருக்கு எதிரான தீங்கிழைக்கப் படும் நாடுகளின் பட்டியலில் ஒரேயடியாக 47 இடங்கள் முன்னேறி முதல் இருபது இடங் களுக்குள் ஒன்றாக இலங்கையும் வந்திருக் கின்றது.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் சீர்கெட்டுப் போனதை அடுத்தே இந்தச் சீரழிவு நிலைமை. அண் மைக்காலத்தில் யுத்தம் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் வீடு, வாசல்களை இழந்து, அகதிகளாகி, நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள னர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை இனத்தவரே (தமிழர்களே).

அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெறும் யுத்தத்தில் சிறு பான்மையினரான தமிழர்களும் முஸ்லிம் களும் இடையில் சிக்கி அல்லற்படுகின்ற னர். அதுமட்டுமல்லாமல் கடத்தப்படுதல், காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல் கொடூரங்களுக்கும் அவர்களே இலக் காகின்றனர். சிறுபான்மையினர் என்ற நிலைமை காரணமாகவே இத்தகைய நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. கொலைகள், காணாமற்போதல், கடத்தப்படுதல் போன்றவை குறித்துத் தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. அதுவும் இக் கொடூரங்கள் பெரும்பாலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலேயே அதிகம் இழைக்கப்படுகின்றன.

இவ்வாறு அந்த சர்வதேச ஆய்வறிக்கை மேலும் தெரிவித்தது.

அச்சமும், பீதியும், பாதுகாப்பின்மையும் நிலவும் இலங்கை சமூகத்தின் மத்தியில் பல்வேறு குற்றவாளிக் கும்பல்கள் இயங்குகின்றன என்பதே கவலையளிக்கும் விடயமாகும். இந்த மோச நிலையைக்கட்டுப்படுத்தி ஒழுங்குக்குள் கொண்டுவரும் விடயத்தில் அரசு உரியளவு செயற்படவில்லை என்றே கருத வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

சிறுபான்மையினருக்கு அதிகளவில் தீங்கிழைக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இருபதுக்குள் இடத்தைப் பெறும் ஆசிய நாடுகளில் இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றை அடுத்தது மியன்மார், பிலிப்பீன்ஸ், நேபாளம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்பட்டது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

இப்பெருமைக்கு காரணமான இலங்கையின் அதிபருக்கும் அவர் சகோதரருக்கும் வாழ்த்துக்கள்

இப்படியான இலங்கைக்கு எதிரான அறிக்கைகள் வரும் போது அறிந்தோம்,மறந்தோம்

என்று இருக்காமல். எதிரான அறிக்கைகளை சேர்த்து இலங்கை அரசு எந்த நாடுகளுக்கு பிரச்சாரங்களுக்கு போகிறதோ அந்த நாடுகளின் ஊடகங்களுக்கு,மனித உரிமை அமைப்புகளுக்கு முதலே அனுப்பி அவர்கள் கேள்விகள் கேட்டே ஒடவைக்கலாம்...... இதன் பலனாக அந்த நாடுகளுக்கு அடுத்த முறை தலைவைக்கவேமாட்டுது...... இவையெல்லாம் ஒரு பிரச்சார தந்திரங்கள்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.