Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல்

Featured Replies

வடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல்

டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Kim Jong-un Donald Trumpபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக அவரைச் சந்தித்த தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய்-யங், "வரும் மே மாதவாக்கில் டிரம்ப் வடகொரிய அதிபரை நேரில் சந்திப்பார்," என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் பியாங்யாங்கில் கிம் ஜாங்-உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரிய குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

"வடகொரியா அதிபர் உடனான சந்திப்பு குறித்து நாங்கள் டிரம்ப் இடம் விவரித்தோம். கிம் அணு ஆயுத நீக்கம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதையும் தெரிவித்தோம்," என்று சங் தெரிவித்தார்.

Trump North Koreaபடத்தின் காப்புரிமைREUTERS Image captionசங் உய்-யங் இந்த வாரம் வடகொரியா அதிபரை சந்தித்த குழுவில் இருந்தார்

"இனிமேல் வடகொரியா அணு ஆயுத சோதனை எதிலும் ஈடுபடாது என்று எங்களிடம் கிம் உறுதியளித்தார்," என்று கூறிய சங் "நிரந்தர அணு ஆயுத நீக்கம் செய்வதற்காக வரும் மே மாதம் கிம் ஜாங்-உன் உடன் நேரடிச் சந்திப்பு நடத்தவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்," என்று கூறினார்.

பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொண்டபின் இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ளது.

எனினும் வடகொரியாவின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

டிரம்ப் டிவிட்டர் பதிவு

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 

Kim Jong Un talked about denuclearization with the South Korean Representatives, not just a freeze. Also, no missile testing by North Korea during this period of time. Great progress being made but sanctions will remain until an agreement is reached. Meeting being planned!

 

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவிலும், "அணு ஆயுத நீக்கம் பற்றி தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்த காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளைக்கூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் எட்டப்படும் வரை தடைகள் நீடிக்கும். சந்திப்பு திட்டமிடப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.bbc.com/tamil/global-43340192

  • தொடங்கியவர்

டிரம்ப்-கிம் சந்திப்பு நம்பிக்கை: உற்சாகத்தில் ஆசிய பங்குச் சந்தைகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதால், அந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறையக்கூடும் எனும் நம்பிக்கையில் ஆசியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏறுமுகம் கண்டுள்ளன.

Kim Jong-un and Donald Trumpபடத்தின் காப்புரிமைAFP

டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் இடையேயான சந்திப்பு நடைபெறும் என்ற அறிவிப்பு தொழில்துறையின் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய பங்குச் சந்தைகளின் குறியீடான கோஸ்பி கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1.5% வளர்ச்சி கண்டுள்ளது.

ஜப்பானின் நிக்கி-225 குறியீடு தொடக்கத்தில் 2.5% வளர்ச்சி கண்டாலும் பின்னர் சிறிய அளவில் சரிந்தது.

ஹாங் காங்-இன் ஹாங் செங் பங்குச் சந்தைக்கு குறியீடு 0.9% வளர்ச்சியும், ஆஸ்திரேலியாவின் ஆல் ஆர்டினேட்ஸ் குறியீடு 0.4% வளர்ச்சியும் கண்டுள்ளது மட்டுமல்லாது சீனாவின் பங்குச் சந்தைகளும் அந்த அறிவிப்புக்குப் பின் சிறிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

ஆசிய பிராந்தியத்தில் உள்ள முதலீட்டாளர்கள் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நிலவும் பிரச்சனையைக் கண்காணித்து வருகின்றன. எனவே, வரும் மே மாதம் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது தங்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

Trump and North Koreaபடத்தின் காப்புரிமைREUTERS Image captionஇன்று தன்னைச் சந்தித்த தென்கொரிய அதிகாரிகளிடம் கிம் ஜாங்-உன் உடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்டார் டிரம்ப்

இதனிடையே தென்கொரிய நாணயமான தென் கொரிய யுவானின் மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் ஸ்திரமான பொருளாதார சூழ்நிலையால், அதிக லாபம் தர வாய்ப்புள்ள சொத்துகளில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளதால் ஜப்பான் நாணயமான யென் அமெரிக்க டாலருக்கு எதிராக சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை உடையவர்களாக கருதப்படும் இரு உலகத் தலைவர்களான டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் ஆகியோரால் கொரிய தீபகற்பத்தில் பிரச்சனை உண்டாவதை தொழில் துறையினர் விரும்பவில்லை.

கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால் கொரிய தீபகற்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அது அந்த நாடுகள் அனைத்தையும் பாதிக்கும்.

சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில் உற்பத்தியின் முக்கிய மையங்களில் ஒன்றாகத் திகழும் அந்தப் பிராந்தியத்தில், தற்போது நிலவுவம் பதற்றமான சூழல் வலுவடைந்தால் அது கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.

http://www.bbc.com/tamil/global-43340642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.