Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாம்

Featured Replies

வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாம்

 

ரொபட் அன்­டனி

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் கண்டி மாவட்டம் உள்­ளிட்ட நாட்டின் சில பகு­தி­களில் நில­விய வன்­முறை சூழல் தற்­போது முழு­மை­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்கள் வழ­மைக்கு திரும்ப ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இந்த வன்­முறை சம்­ப­வங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­ன­போது அவற்றை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு திண­றிய அர­சாங்கம் பின்னர் தன்னை சுதா­க­ரித்­துக்­கொண்டு நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது. விசே­ட­மாக அவ­ச­ர­கால நிலை ஊர­டங்கு சட்டம், படைகள் கள­மி­றக்கம், பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள், சி.ஐ. டி. கள­மி­றக்கம், சமூக வலைத்­தள முடக்கம் என பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து அர­சாங்கம் தற்­போது நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளது.

அந்த வகையில் ஆரம்­பத்தில் சற்று சறுக்­கிய அர­சாங்கம் பின்னர் சுதா­க­ரித்­துக்­கொண்டு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளது. வன்­மு­றைகள் பர­விச்­சென்­ற­போது எங்கே நிலைமை மோச­மா­கி­வி­டுமோ என்ற அச்சம் அனைவர் மத்­தி­யிலும் காணப்­பட்­டது. எனினும் நிலைமை ஓரிரு தினங்­களில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

ஆனால், இங்கு முக்­கி­ய­மாக பார்க்­க­வேண்­டிய விடயம் என்­ன­வெனில் ஏற்­க­னவே சர்­வ­தே­சத்தின் கழு­குப்­பார்வை இலங்கை மீது இருக்­கின்ற நிலையில் தற்­போது மேலும் இவ்­வா­றான வன்­முறை சம்­ப­வங்கள் சர்­வ­தேச சமூ­கத்தின் இலங்கை மீதான பார்­வையை மோச­மாக்­கி­யுள்­ளது.

ஏற்­க­னவே இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட்டில் பாரிய தாமதம் நில­வி­வ­ரு­வ­தாக சர்­வ­தேச சமூகம் அதி­ருப்­தி­யுடன் இருக்­கின்ற நிலையில் தற்­போது மேலும் இடம்­பெற்­றுள்ள சம்­பவம் சர்­வ­தேச சமூ­கத்தை கடும் அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

அதன்­படி அமெ­ரிக்கா, கனடா, சீனா, மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் இலங்­கையில் இடம்­பெற்ற இந்த வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கடும் விச­னத்தை தெரி­வித்­தி­ருந்­தன. அது­மட்­டு­மன்றி உட­ன­டி­யாக நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு சூத்­தி­ர­தா­ரிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டு­மென அந்த நாடுகள் கோரிக்கை விடுத்­தன.

அது­மட்­டு­மன்றி ஐக்­கி­ய­நா­டுகள் சபையும், ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரி­மை­பே­ர­வையும், உலக சுகா­தார ஸ்தாப­னமும் ஐக்­கி­ய­நா­டுகள் சனத் தொகை நிதி­யமும் இந்த வன்­முறை சம்­ப­வங்­களை கண்­டித்­தி­ருந்­த­துடன் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் இயல்­பு­நி­லையை வழ­மைக்கு கொண்­டு­வ­ர­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. அந்­த­வ­கையில் சர்­வ­தேச சமூகம் இந்த நிலை­மையை மிகவும் உன்­னிப்­பாக அவ­தா­னித்­தி­ருப்­பதை காண­மு­டி­கின்­றது.

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற நிலை­யிலும் இலங்கை தொடர்­பான விவா­தங்கள் 16 மற்றும் 21 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள சூழ­லிலும் உள்­நாட்டில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளமை சர்­வ­தேச சமூ­கத்தை மட்டுமன்றி அனைத்துத்தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்­கையில் அடிக்­கடி இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்ற சூழலில் சர்­வ­தேச சமூகம் தொடர்ச்­சி­யாக தனது அதி­ருப்­தியை தெரி­வித்து வந்­தி­ருக்­கி­றது. இன­வாத ரீதி­யான வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு ஒரு­போதும் எந்­த­வொரு தரப்பும் இடம்­கொ­டுக்­கக்­கூ­டாது என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. எனினும் அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் தற்­கா­லி­க­மாக தீர்வு கிடைத்­தாலும் அவ்­வப்­போது அது தலை­தூக்­கவே முயற்­சிக்­கி­றது.

எனவே, நாட்டின் அர­சியல் தலை­மைத்­து­வ­மா­னது இந்த இன­வாத செயற்­பா­டு­களை தூண்டும் சக்­தி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்­ப­துடன் தூர நோக்­குடன் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­கைள முன்­னெ­டுக்­க­வேண்டும். இலங்­கை­யா­னது கடந்த முப்­பது வரு­டங்­க­ளாக கொடிய யுத்­தத்­திற்கு முகம்­கொ­டுத்து அழி­வு­களை சந்­தித்த நாடாகும்.

முப்­பது வரு­டங்கள் இந்த நாடு யுத்தம் கார­ண­மாக பின்­ன­டை­வுக்கு சென்­றது. உயிர் அழி­வுகள், சொத்து இழப்­புக்கள் என மீள முடி­யாத வடுக்­களில் மக்கள் சிக்­கி­யுள்­ளனர். எனவே , இவ்­வா­றா­ன­தொரு கொடூ­ர­மான அனு­ப­வத்தை கொண்­டி­ருக்­கின்ற சூழ­லிலும் இந்த நாடு தொடர்ந்து வன்­முறை சம்­ப­வங்­களை எதிர்­கொள்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். ஒரு­கா­லத்தில் இலங்­கையை பார்த்து சிங்­கப்­பூரை இலங்கை போன்று உரு­வாக்கிக் காட்­டுவோம் என அந்த நாட்டு தலை­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆனால் பிற்­கா­லத்தில் சிங்­கப்பூர் அபி­வி­ருத்­தியில் உச்­சத்தை தொட்­ட­போ­திலும் இலங்­கை­யா­னது ஒரு பின்­தங்­கிய நாடா­கவே இருந்து வரு­கின்­றது. சிறந்த அர­சியல் தலை­மைத்­துவம் மற்றும் சிவில் சமூக செயற்­பா­டு­களின் ஊடா­கவே ஒரு­நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி சிறந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை உரு­வாக்க முடியும்.

இவ்­வாறு இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்த முடி­யா­விடின் அபி­வி­ருத்­தியை நோக்கி பய­ணிப்­பது மிகவும் கடி­ன­மாகும். இன்று ஆபி­ரிக்க நாடு­களில் காணப்­ப­டு­கின்ற இது­போன்ற பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே அந்த நாடு­க­ளினால் வளங்­களை உரிய முறையில் பயன்­ப­டுத்தி முன்­னேற முடி­யாமல் உள்­ளது.

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தினால் வெற்­றி­பெற முடியும் என்­ப­தற்கும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை நோக்கி பய­ணிக்க முடியும் என்­ப­தற்கும் உலகில் உதா­ர­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக தென்­னா­பி­ரிக்கா, சிங்­கப்பூர் , மலே­சியா ஆகிய நாடு­களை குறிப்­பி­ட­மு­டியும். மலே­சி­யாவில் ஒரு காலத்தில் இந்­தி­யர்­களும் சீனர்­களும் வெளி­யேற வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டன. ஆனால் மஹதீர் மொஹமட் என்ற ரூபத்தில் வந்த அந்த நாட்டின் அர­சியல் தலை­மைத்­துவம் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தி இன்று உலகில் அபி­வி­ருத்தி அடைந்த நாடாக மலேசியாவை கொண்­டு­வந்­துள்­ளது.

அதே­போன்று, தென்­னா­பி­ரிக்­கா­விலும் வெள்­ளை­யர்­க­ளுக்கும் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்­கு­மி­டையில் பாரிய பிரச்­சி­னைகள் நில­வி­ய­போது நெல்சன் மண்­டேலா என்ற பெயரில் உரு­வா­கிய தலை­மைத்­துவம் அந்­த­நாட்டில் வெள்­ளை­யர்­க­ளுக்கும் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்­கு­மி­டையில் ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் ஏற்­ப­டுத்தி அந்த நாட்டை உல­கி­லேயே ஒரு சிறந்த நாடாக உரு­வாக்­கினர்.

அது­மட்­டு­மன்றி ஒரு­சி­றிய நாடாக காணப்­படும் சிங்­கப்­பூ­ரிலும் வாழு­கின்ற அனைத்து இன மக்­க­ளுக்கும் சக­ல­வி­த­மான உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. லீ குவான்யூ என்ற அர­சியல் தலை­மைத்­துவம் அங்கு உரு­வாகி கடும் வறு­மையில் இருந்த சிங்­கப்­பூரை இன நல்­லி­ணக்­கத்தின் ஊடாக இன்று ஒரு உச்­ச­நி­லைக்கு கொண்­டு­வந்­துள்­ளார்.

எனவே, இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் புரிந்­து­ணர்­வையும் தேசிய ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­து­வதன் ஊடா­கவே நாட்டின் சகல வளங்­க­ளையும் பயன்­ப­டுத்தி அபி­வி­ருத்தி அடைய முடியும் என்­ப­தற்கு இந்த நாடுகள் உதா­ர­ண­மாக திகழ்­கின்­றன. ஆனால், எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் நாம் அவ்­வாறு புரிந்­து­ணர்­வுடன் கூடிய இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த தயா­ராக இல்­லாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இத­னால்தான் எம்மை சுற்­றி­யி­ருக்­கின்ற நாடுகள் பாரிய வளர்ச்­சியை அடைந்து செல்­கின்ற சூழ­லிலும் இலங்கை தொடர்ந்து பின்­ன­டை­வையே சந்­தித்து வரு­கின்­றது.

இது தொடர்பில் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி சந்­தி­ரபோஷ் தனது கருத்­துக்­களை இவ்­வாறு பகி­ரு­கிறார் '' அதா­வது பல்­லின மக்கள் வாழு­கின்ற இலங்கை போன்ற நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் சமூக ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­து­வதன் ஊடா­கவே அபி­வி­ருத்­தியை அடைய முடியும். சமூக ஒற்­று­மையை நல்­லி­ணக்கம் இல்­லா­விடின் ஒரு­போதும் ஏற்படுத்த முடி­யாது. இன்று லத்தீன் அமெ­ரிக்க நாடு­க­ளிலும் ஆபி­ரிக்க நாடு­க­ளி­லுமே பாரிய வளங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அந்த நாடு­களில் நிலவும் சில நெருக்­க­டிகள் கார­ண­மாக அந்த வளங்­களை பயன்­ப­டுத்த முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்ற ஒரு நிலை­மையே இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. இந்­த­நாட்டில் நில­வு­கின்ற நல்­லி­ணக்­க­மற்ற சூழல் கார­ண­மாக மனித வளங்­களை உரிய முறையில் பயன்­ப­டுத்த முடி­யாத சூழல் காணப்­ப­டு­கின்­றது. இதனால் தொடர்ந்தும் இலங்­கை­யா­னது மூன்றாம் உலக நாடா­கவே நீடித்து வரு­கின்­றது.

எனவே, இந்த நாடு இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தா­த­வ­ரையில் அபி­வி­ருத்­திக்­கான சந்­தர்ப்பம் குறை­வா­கவே காணப்­படும் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. அந்­த­வ­கையில் சிவில் சமூ­கமும் அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் சிறந்த முறை­யி­லான பங்­க­ளிப்பை வழங்க முன்­வ­ர­வேண்டும். அதே­போன்று ஊட­கங்­களும் இந்த விட­யத்தில் தலை­மைத்­து­வத்தை வழங்க முன்­வ­ர­வேண்டும். தென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா தனது முத­லா­வது உரையில் வெள்­ளை­யர்­களே எம்­முடன் இணைந்து பய­ணிக்க முன்­வா­ருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

அதன் மூலமே அந்த நாடு இன்று இந்­த­ள­வு­தூரம் முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச சமூ­கமும் அந்­த­ நாட்­டுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­கின்­றது. ஆனால் எமது நாட்டில் இவ்­வாறு இணைந்து பய­ணிப்­பதில் இனங்­க­ளுக்­கி­டையில் பாரிய தயக்கம் காணப்­ப­டு­கின்­றது. நல்­லி­ணக்­கத்­துடன் இணைந்து பய­ணிப்­ப­தற்­கான மனப்­பான்மை இல்­லா­ம­லேயே காணப்­ப­டு­கின்­றது. எனவே அர­சியல் தலை­மைத்­துவம் தூர நோக்­குடன் சிந்­தித்து மக்கள் மத்­தியில் இது­தொ­டர்பில் தெளி­வையும் விழிப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்த முன்­னிற்­க­வேண்டும். இவ்­வாறு நல்­லி­ணக்­கத்­துடன் பய­ணிப்­ப­தற்கு மக்கள் விருப்பம் இல்லை என்று அர்த்­த­மில்லை. ஆனால் இதற்­காக மக்கள் சரி­யான முறையில் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதும், தயார்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­ப­து­வுமே உண்­மை­யாகும். நல்­லி­ணக்­கத்­துடன் பய­ணித்து முன்­னேற்­ற­ம­டை­வதன் அனு­கூ­லங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இதற்­கான பிர­தான பங்­க­ளிப்பை அர­சியல் தலை­மைத்­து­வங்கள் செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அது­மட்­டு­மன்றி தென்­னா­பி­ரிக்கா தனது தவ­று­களை உணரும் நோக்கில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மித்து வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது. அத­னூ­டாக தவ­றுகள் உண­ரப்­பட்டு அந்த நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அவ்­வா­றா­ன­தொரு நிலை எமது நாட்­டிலும் இடம்­பெ­ற­வேண்டும் என்றார்.

அந்­த­வ­கையில் உண்­மை­யி­லேயே இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி சமூக ரீதி­யி­லான ஒற்­று­மை­யுடன் பய­ணிப்­பதே நாட்டின் அபி­வி­ருத்­திக்கு முக்கியமானதாக அமையும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கு இதுபோன்ற இனவாத வன்முறைகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எந்தளவு முக்கியமோ, அதேபோன்று சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகின்றது.

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும்போதே எம்மால் முன்னேற்றத்தை நோக்கி செல்ல முடியும். இல்லாவிடின் இலங்கையானது தமது வளங்களிலிருந்து பயன்பெற முடியாமல் தொடர்ந்து மூன்றாம் உலக நாடாகவே நீடிக்கும் நிலையே ஏற்படும். எனவே இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி பயணிப்பது எந்தளவு தூரம் முக்கியம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு முன்வரவேண்டும். எக்காரணம் கொண்டும் மீண்டும் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது. வன்முறைகளுக்கான தூபம் இடப்படுகின்றது என்பது தெரிந்தவுடனேயே அதனை முளையிலேயே கிள்ளியெறிவதற்கு தலைமைத்துவங்கள் முன்வரவேண்டும்.

அதனூடாகவே சர்வதேசத்தின் ஆதரவை இலங்கை பெற முடியும். அதனைவிடுத்து இலங்கையானது தொடர்ந்து வன்முறைகளை உள்நாட்டில் எதிர்கொள்ளுமாயின் சர்வதேச ரீதியில் இருக்கின்ற நெருக்கடிகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேசத்தின் கழுகுப்பார்வை இலங்கை மீது தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-10#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.