Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சாங்கத்தின் மீதான சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்­க­வேண்டும்

Featured Replies

அர­சாங்கத்தின் மீதான சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்­க­வேண்டும்

 

இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிப்­பதன் மூலமே தமிழ் மக்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக்­கொள்ள முடியும். இந்த விட­யத்தில் சர்­வ­தே­சமும் ஐக்­கிய நாடுகள் சபையும் ஆழ­மான முறையில் செயற்­ப­ட­வேண்டும். இலங்கை விவ­கா­ரத்தில் ஐக்­கிய நாடுகள் சபை இலங்­கை­யுடன் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வேண்டும் என்று சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்­படும் அமைப்­புக்கள் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் நேற்­று­முன்­தினம் ஜெனீ­வாவில் வலி­யு­றுத்­தினர்.    

இலங்­கைக்­கான கால அவ­காசம் இன்னும் ஒரு வரு­டத்தில் முடி­வ­டை­யப்­போ­கின்­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்கம் எதுவும் செய்­யாது என்­பது நிரூ­ப­ண­மா­கி­விட்­டது. எனவே சர்­வ­தேச சமூகம் இது தொடர்பில் அவ­தானம் செலுத்­த­வேண்டும் என்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்­படும் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டனர்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தில் நேற்று முன்­தினம் பசுமை தாயகம் மற்றும் பிரிட்டிஷ் தமிழர் பேரவை ஆகி­ய­வற்­றினால் நடத்­தப்­பட்ட இலங்கை குறித்த விசேட உப­குழுக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இந்த பிர­தி­நி­திகள் இவ்­வாறு குறிப்­பிட்­டனர்.

இலங்­கையின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களின் முன்­னேற்றம் குறித்து ஆராயும் அமைப்பின் பிர­தி­நிதி ரிச்சர்ட் கவிங்க் குறிப்­பி­டு­கையில்

இலங்கை அர­சாங்கம் இது­வரை வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. எனவே சர்­வ­தேச அழுத்தம் என்­பது இங்கு முக்­கி­ய­மாகும். இல்­லா­விடின் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியைப் பெற முடி­யாமல் போய்­விடும். எனவே இங்கு அனைத்து தரப்­பி­னரும் சர்­வ­தேச அழுத்­தத்தை பிர­யோ­கிக்க முன்­வ­ர­வேண்டும். மேலும் இலங்கை விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் சபை இலங்கை அர­சாங்­கத்­துடன் புரிந்­து­ணர்­வுடன் உடன்­ப­டிக்­கையை செய்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்றார்.

பெனின் நாட்­டுக்­கான ஐக்­கிய நாடு­களின் முன்னாள் தூது­வரும் இலங்கை விவ­கா­ரங்­க­ளுக்­கான தற்­போ­தைய ஜெனீவா இணைப்­பா­ள­ரு­மான டேவிட் வெல்லி உரை­யாற்­று­கையில்

இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் 220 பரிந்­து­ரைகள் உள்­ளன. இது­வரை 30 பரிந்­து­ரை­களும் உரிய முறையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மேலும் 160 க்கும் மேற்­பட்ட பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­து­விட்­டது. சர்­வ­தேச அழுத்­தங்­களை முறை­யாக முன்­னெ­டுக்­கா­விடின் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் போய்­விடும். எனவே சர்­வ­தேச ரீதியில் அதி­க­ள­வான அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார்.

இலங்­கையின் வடக்கு- கிழக்கில் இரா­ணுவ மயப்­ப­டுத்தல் தொடர்­பாக ஆராயும் அமைப்பின் பிர­தி­நி­தி­யான மரியோ அருள்தாஸ் உரை­யாற்­று­கையில்

நான் புதிய அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னர் ஐந்­தா­வது தட­வை­யாக ஜெனீ­வா­வுக்கு வருகை தந்­தி­ருக்­கின்றேன். ஒவ்­வொரு முறையும் இங்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால் இலங்­கையில் எவ்­வி­த­மான மாற்­றமும் இடம்­பெ­ற­வில்லை. பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­ப­ட­வில்லை. இரா­ணுவம் சிவில் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றது. அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. கண்­டியில் கல­வ­ரங்கள் நாட்­க­ணக்கில் நீடிக்­கின்­றன.

இவ்­வாறு இலங்­கையில் நிலைமை மோச­மா­கவே நீடிக்­கின்­றது. அத்­துடன் ஜனா­தி­பதி ஜப்­பா­னுக்கு செல்­லும்­போது ஞான­சார தேரரும் செல்­கின்றார். தன்­னுடன் ஞான­சாரர் ஜப்பான் வர­வில்லை என்று ஜனா­தி­பதி செய­லகம் மறுத்­தாலும் அதனை நாங்கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஜெனீவா பிரே­ர­ணையில் கைச்­சாத்­திட்­ட­மை­யி­னால்தான் மங்­கள சம­ர­வீர வெ ளிவி­வ­கார அமைச்சுப் பத­வியை இழந்­த­தாக ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். இந்­நி­லையில் சர்­வ­தேசம் இது தொடர்பில் சிந்­திக்­க­வேண்டும். சர்­வ­தேச அழுத்­தங்­களை அதி­க­ரிப்­பதன் மூலமே நீதியைப் பெற முடியும் என்றார்.

நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யான மணிவண்ணன் உரையாற்றுகையில்

2019 ஆம் ஆண்டுவரையே இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் 2019 ஆம் ஆண்டாகும்போது அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செ ய்யாவிடின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்ன செய்யும்? அடுத்த கட்டமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்ன செய்யப்போகின்றது? இதற்கு பதிலளிக்கப்படவேண்டும். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தீர்மானம் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றார்.   

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-03-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.