Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்­பாறை, கண்டி போன்று திரு­ம­லை­யிலும் அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது

Featured Replies

அம்­பாறை, கண்டி போன்று திரு­ம­லை­யிலும் அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது

06-d61ba4d93655409bc330e34491eab544547d7d38.jpg

 

திரு­மலை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்­டத்தில் சம்­பந்தன்
(மூதூர்­நி­ருபர்)

அம்­பா­றை­யிலும் கண்டி மாவட்­டத்­திலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் அசம்­பா­வி­தங்கள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது. இவ்­வி­டயத்தில் பொலி­சாரும் பாது­காப்புத்

தரப்­பி­னரும் விழிப்­பாக இருக்க வேண்டும். அத்­துடன் மக்கள் பிர­தி­நி­தி­க­ளான நாமும் சம­யோ­சி­த­மாக செயற்­பட வேண்டும். அதற்­கான கட­மை­யையும் பொறுப்­ப­பையும் கொண்­டி­ருக்­கிறோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார்.

அம்­பாறை, கண்டி மாவட்­டங்­க­ளளில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். சம்­ப­வங்கள் அறி­விக்­கப்­பட்­டதும் அவ­ச­ர­மா­கவும் உட­ன­டி­யா­கவும் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்தால் நிலை­மைகள் மோச­மா­கி­யி­ருக்க வாய்ப்­பில்லை என்றும் குற்றம் சாட்­டினார்.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் முத­லா­வது அபி­வி­ருத்­திக்­கு­ழுக்­கூட்டம் இணைத்­த­லை­வர்­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­துல்லா மஹ்ரூப், பிரதி அமைச்சர் புஞ்­சி­நி­லமே ஆகி­யோரின் பங்­கு­பற்­ற­லுடன் இடம்­பெற்­றது.

இங்கு துறைசார் அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இவர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய எதிர் கட்­சித்­த­லைவர் இரா சம்­பந்தன் மேலும் குறிப்­பி­டு­கையில், அண்­மையில் நடந்த துர­திஸ்­ர­வ­ச­மான நில­மையை துரி­த­மாக செயற்­பட்டு சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கையை எடுத்­தி­ருந்தால் வேக­மாக கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும்.  

நாம் இவ்­வா­றான சம்­ப­வங்­களை எமது மாவட்­டத்தில் அனு­திக்­க­மு­டி­யாது. இதற்­கான பொறுப்பை விஷே­ட­மாக பொலிசார் எடுக்­க­வேண்டும். இந்த மாவட்­டத்தில் மூவின மக்­களும் வாழ்­கி­றார்கள். அவர்கள் அமை­தி­யான முறையில் வாழ்­வ­தனை நாம் உறுதி செய்ய வேண்­டும.் இந்த நாட்டில் உள்ள அனை­வ­ருக்கும் அவ்­வா­றான அமை­தி­யான வாழ்வை வழங்­கு­வ­தற்­கான கடமை நாம் அனை­வ­ருக்கும் உள்­ளது.

அண்­மையில் நாங்கள் இந்த நாட்டில் துர­திஸ்­ட­வ­ச­மான பல சம்­பங்கள் நிகழ்ந்­ததை அறி்வோம். எமது சில மக்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இதனை நாங்கள் அனு­ம­திக்க முடி­யாது. ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதிஸ்­ட­வ­ச­மாக எமது மாவட்­டத்தில் இந்த வன்­மு­றைகள் இடம்­பெ­ற­வில்லை. எங்­க­ளு­டைய மாவட்­டத்தில் இவ்­வா­றான வன்­மு­றை­க­ளுக்கு நாம் இடம்­கொ­டுக்க முடி­யாது. அதனைத் தடுக்க வேண்­டிய கடமை நம் எல்­லோ­ருக்கும் உண்டு.

நான் நினைக்­கின்றேன் மாவட்­டத்தில் உள்ள எல்லா மக்­களும் வன்­மு­றையில் ஈடு­ப­டு­வ­தில்லை.

அதி­க­மான மக்கள் இந்த வன்­மு­றை­களில் விரும்பம் கொண்­டி­ருப்­பார்கள் என நான் நினைக்க வில்லை. இந்த நாட்டில் உள்ள அனே­க­மான மக்கள் அமை­தி­யான வாழ்வை வாழவே விரும்­பு­கி­றார்கள். ஏனைய சகல இன மக்­க­ளி­னது உரி­மை­களை மதித்து நல்ல முறையில் வளவே அனே­க­மான மக்கள் விரும்­பு­கின்­றனர்.

மிகக் குறைந்­த­ள­வி­லான சிலரே இந்த வன்­மு­றையை ஏற்­ப­டுத்­து­வதில் விருப்பம் கொண்­டுள்­ளனர்.

அவர்­களே வன்­மு­றை­களை தூண்­டி­வ­ரு­கின்­றனர்.

இந்த விட­யத்தை நாம் மிகவும் அவ­தா­ன­மாக ஆய்­வு­செய்ய வேண்டும். இவ்­வா­றான வன்­மு­றை­யா­ளர்­களை இனம் காண­வேண்டும். அடிக்­கடி இவ்­வா­றான வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் தொடர்­பா­கவும் அதனைத் தூண்­டு­ப­வர்கள் தொடர்­பா­கவும் கவ­னம்­செ­லுத்த வேண்டும்.

இவ்­வா­றா­ன­வர்­களால் வன்­மு­றைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்­போது சட்­டத்­தையும் நீதி­யையும் நிலை­நாட்­டு­வதில் பொலி­சாரும் படை­யி­னரும் விரைந்து உட­ன­டி­யாக செயற்­ப­ட­வேண்டும்.

உள்­ளு­ராட்சி தேர்­தல்கள் அண்­மையில் முடி­வுக்கு வந்­தன. அந்த முடி­வுகள் நமக்கு பல படிப்­பி­னை­களை தந்­துள்­ளன.

அதன் விளை­வுகள் மிகவும் பதற்­ற­மான சூழலை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. இந்த தேர்தல் முடி­வுகள் பல கட்­சி­க­ளுக்கும் பல வித­மான அதிர்­சி­யான பல அனு­ப­வங்­களை முடி­வு­களை தந்­தன. அது­பற்றி நாம் பல்­வேறு வகையில் கவலையடையும் நிலமையும் காணப்பட்டன. அவற்றை நாம் எதிர்காலத்தில் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்திற்கான பாரிய அபிவிருத்திட்டமிடல் ஒரளவு முடிவுக்கு கொண்ட வரப்பட்டுள்ளது. இதனை சிங்கப்பூரின் கம்பனியொன்று தயாரித்து வந்தது. அந்த உத்தேச திட்டம் அண்மையில் பாராளுமன்றத்திலும் தௌிவுபடுத்தப்பட்டது. திருகோணமலை ஒரு பாரிய அபிவிருத்திக்குள் செல்ல விருக்கின்றது. மிக விரைவில் அது நடைமுறைக்கு வரவுள்ளது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-21#page-1

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

சட்­டத்­தையும் நீதி­யையும் நிலை­நாட்­டு­வதில் பொலி­சாரும் படை­யி­னரும் விரைந்து உட­ன­டி­யாக செயற்­ப­ட­வேண்டும்.

 

உலகத்தில் எதிர்க் கட்சித்தலைவரின் கட்டளைக்குப் பணிந்து நடக்கும் பொலீசாரையும், படையினரையும் கொண்ட ஒரே நாடு சிறீலங்கா மட்டுமே.

எதிர்க்­ கட்சித் தலைவர் இரா சம்­பந்தன் 

Bildergebnis für இராணுவம்

Bildergebnis für இராணுவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.