Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராம­ராஜ்ய ரத யாத்­திரை தமி­ழ­கத்­துக்கு அவ­சி­யமா?

Featured Replies

ராம­ராஜ்ய ரத யாத்­திரை தமி­ழ­கத்­துக்கு அவ­சி­யமா? நல்­ல­தம்பி நெடுஞ்­செ­ழியன்

samakalamramaraja25-03-2018-2a8afb9c8dd208c748eec17b5dbb9a260e550b54.jpg

 

நல்­ல­தம்பி நெடுஞ்­செ­ழியன்

 

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 'ராம ராஜ்ய ரத யாத்­திரை' தமி­ழ­கத்தில் பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்த ரதம் தமி­ழ­கத்­துக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு எதிர்­க்கட்­சி­களும், சிறு­பான்மை அமைப்­பு­களும், பொது அமைப்­பு­களும் கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­ட­துடன் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தின.

பல்­வேறு மதங்­களைச் சேர்ந்­த­வர்­களும், சிறு­பான்மை மக்­களும் அன்பு, சகோ­த­ரத்­துவம், சமா­தா­னத்­துடன் தமி­ழ­கத்தில் வாழ்ந்து வரு­கின்­றனர். அமைதி பூங்­கா­வாகத் திகழும் தமி­ழ­கத்­துக்கு விஸ்வ ஹிந்து பரி­ஷத்தின் ராம ராஜ்ய ரதம் வரு­வதால் மதக் கல­வ­ரங்கள், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்கள் ஏற்­படும் என்­பதே எதிர்க்­கட்­சி­களின் கோரிக்­கை­யாக இருந்­தது.

எனவே, வகுப்­பு­வாத சக்­திகள் சந்­தர்ப்­பத்தை பயன்படுத்திக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கக்கூ­டாது என்று தமி­ழக எதிர்க்­கட்­சி­களும் சிறு­பான்மை மத அமைப்­பு­களும் சிறு­பான்மை இனத்­த­வர்­களும் தங்­க­ளது ஆட்­சே­ப­னை­களை தெரி­வித்து வந்­தனர். எனினும் அவர்­க­ளது ஆட்­சே­ப­னை­களை தமி­ழக மாநில அரசு கவ­னத்தில் எடுத்­துக் ­கொள்­ள­வில்லை. அனு­மதி வழங்­கி­யது அத்­துடன் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளையும் செய்து கொடுத்­தது.

 கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (20 ஆம் திகதி) கேரள மாநி­லத்­தி­லி­ருந்து தமி­ழக எல்­லைக்குள் பிர­வே­சித்த ரதம், பூனலூர் ஊடாக தனது பவ­னியை ஆரம்­பித்­தது. 20 ஆம் திகதி ஆரம்­ப­மான ரத பவனி 23 ஆம் திகதி வரை தமி­ழ­கத்தில் இடம்­பெ­று­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலையில் எதிர்க்­கட்­சிகள் இதற்கு தமது பலத்த ஆட்­சே­ப­னையை தெரி­வித்­த­துடன் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தின.

 இத­னை­ய­டுத்து மார்ச் 19 முதல் 23 ஆம் திகதி வரை திரு­நெல்­வேலி மாவட்­டத்தில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த தடைச் சட்­டத்தின் கீழ் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­து­வது , போராட்­டங்­களை நடத்­து­வது, கூட்டம் கூடு­வது உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அதையும் மீறி பல இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன.

செங்­கோட்­டையில் 144 தடை­யுத்­த­ர­வையும் மீறி சீமான் தலை­மையில் நாம் தமிழர் கட்­சி­யினர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்­டனர்.

அங்கு கருத்து தெரி­வித்த சீமான், மத நல்­லி­ணக்­கத்­துக்கு ஊறு விளை­விக்கும் வகையில் தமிழ்­நாட்­டுக்கு ராம ராஜ்ய ரத யாத்­திரை மேற்­கொள்­வதன் மூலம் அமை­தி­யாக இருக்கும் தமிழ்­நாட்டில் கல­வ­ரத்தை தூண்டி அதன்­மூலம் அர­சி­யலில் இலாபம் ஈட்­டு­வதே மத­வாத சக்­தி­களின் நோக்கம் என்று குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தனர்.

 இதே­வேளை தி.மு.க செயல்­த­லை­வரும், தமி­ழக சட்­டப்­பே­ரவை எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான மு.க.ஸ்டாலின், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்­புக்கும் அதற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்ள மத்­திய பா.ஜ.க. அரசின் எடு­பி­டி­யான ஆளும் அ.தி.மு.க. அர­சுக்கும் கடும் கண்­ட­னங்­களை தெரித்­துள்­ளனர். கோவில் விவ­காரம் உச்­ச­நீ­தி­மன்ற விசா­ர­ணையில் இருக்கும் நிலையில் சட்­டத்­திற்கு புறம்­பாக இது­போன்ற ரத யாத்­தி­ரை­களை நடத்­து­வது முறை­யல்ல. இவை தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும் என்று தி.மு.க செயல்­த­லைவர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்­துள்ளார்.

மு.க. கனி­மொழி இது­பற்றி குறிப்­பி­டு­கையில், அமைதிப் பூங்­கா­வான தமி­ழ­கத்தில் வகுப்­பு­வாத சக்­திகள் காலூன்­று­வதை தடுக்க வேண்­டி­யது தமி­ழக தலை­வர்கள் மற்றும் அதி­கா­ரி­களின் கடமை என்று குறிப்­பிட்டுள்ளார்.

பா.ஜ.க. வின் தேசிய செய­லா­ள­ரான எச்.ராஜா, ராம ராஜ்ய ரத யாத்­தி­ரையை எதிர்ப்­பது இந்து விரோத செய­லாகும் என்றார்.

இத­னி­டையே நடி­கரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை­வ­ரு­மான கமல்­ஹாசன் கருத்துத் தெரி­விக்­கையில், மத நல்­லி­ணக்­கத்­துக்கு நியா­ய­மான குரல்­க­ளுக்கு எதி­ராக 144 தடைச்­சட்டம் அமுல்­ப­டுத்தி போராட்டம் செய்­த­வர்­களை கைது செய்­வது அர­சி­யலில் உள்­நோக்கம் கொண்ட செயற்­பா­டாகும். இது யாருக்கோ சாமரம் வீசும் செயற்­பா­டாகும் என தெரி­வித்­துள்ளார்.

அயோத்­தியில் ராமர் கோயிலைக் கட்­டுதல், ராம ராஜ்­யத்தை மறு­நிர்­மாணம் செய்தல் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்­பினர் ராம ராஜ்ய ரத யாத்­தி­ரையை கடந்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்­பித்­தனர். இந்த யாத்­தி­ரையை உத்­தர பிர­தேச முத­ல­மைச்சர் யோகி ஆதித்­யநாத் ஆரம்­பித்து வைத்தார்.

உத்­தர பிர­தேசம், மத்­திய பிர­தேசம், மக­ராஷ்­டிரா, கர்­நா­டகா, கேரளா மற்றும் தமிழ்­நாடு வழி­யாக திரு­வ­னந்­தப்­பு­ரத்தில் நிறைவு பெறும் வகையில் இந்த ரத யாத்­திரை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இது­போன்று ரத யாத்­திரை கடந்த சில வரு­டங்­க­ளாக வட­மா­நி­லங்­களில் குறிப்­பாக ஹிந்தி மொழி­பேசும் மாநி­லங்­களில் இடம்­பெற்று வந்­துள்ள போதிலும் தென்­னிந்­திய மாநி­லங்­களில் இதற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அதே­வேளை முன்னர் மத்­தியில் காங்­கிரஸ் கட்சி ஆட்சி நடை­பெற்று வந்­த­போது இது­போன்ற செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­தியே வந்­துள்­ளது. அத்­துடன் மத­வாத ஹிந்­துத்­துவா மோலா­திக்க ஜாதி­வாத சக்­தி­களை அடக்­கியே வைத்­தி­ருந்­தது. எவ்­வா­றா­யினும் மத­வாத, வகுப்­பு­வாத இந்து அடிப்­ப­டை­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் தற்­போது வட மாநி­லங்­க­ளி­லேயே அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கி­ன்றன.

காங்­கிரஸ் ஆட்சி மாறி ஹிந்­துத்துவா தீவிர நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள பா.ஜ.க. மத்­தியில் ஆட்­சிக்கு வந்­த­தைத் தொடர்ந்து மேலா­திக்க சக்­திகள் மென்­மேலும் வளர்ச்­சி­ய­டையத் தொடங்­கின. மத ரீதியில் சிறு­பான்மை மதங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள், தாக்­கு­தல்கள், மாடு­களை இறைச்­சிக்­காக வெட்­டு­வ­தற்­கான தடை, பிற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வு­களை சேர்ந்த மக்கள் மீதான தாக்­குதல் என்­பன அதி­க­ளவில் இடம்­பெற்­றன. இது­போன்றே செயற்­பா­டுகள் தென்­னிந்­திய மாநி­லங்­களில் விரி­வுப்­ப­டுத்த முடி­யா­த­தொரு நிலையே காணப்­ப­டு­கி­றது.

ஆந்­தி­ராவில் தெலுங்கு தேசம் ஆட்சி, கர்­நா­ட­காவில் காங்­கிரஸ் கட்சி, கேர­ளத்தில் கம்­யூனிஸ கட்சி, தமி­ழ­கத்தில் அ.தி.மு.கட்சி ஆட்சி நடை­பெ­று­கின்­றது. ஏற்­க­னவே, தமி­ழ­கத்தில் காலூன்ற பா.ஜ.க. எடுத்த முயற்­சிகள் வெற்­றி­பெ­ற­வில்லை.

ஜெயா மறை­வுக்கு பின்னர் பல­வீ­ன­ம­டைந்த அ.தி.மு.க. ஆட்­சியை தமக்­கேற்­ற­வாறு பயன்­ப­டுத்திக் கொண்டு ஹிந்­துத்துவா அடிப்­படைவாதத்தை தமி­ழ­கத்தில் விதைப்­ப­தற்­கான முயற்சி இடம்­பெற்று வரு­கி­றது. போதிய பெரும்­பான்மை பல­மின்றி மத்­திய அரசின் ஆத­ரவில் இயங்கும் அ.தி.மு.க அரசு, பா.ஜ.க. வின் திட்­டங்­களை எதிர்க்­க­ மு­டி­யாமல் இணைந்து போகும் போக்­கி­னையே செயற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

 திரா­விட பாரம்­ப­ரி­யத்தில் அதிக ஈடு­பாடு கொண்­டுள்ள பெரும்­பா­லான தமி­ழக மக்­களால் ஜாதி மேலா­திக்கம், வகுப்பு வாதம், அடிப்­படை வாதம், ஹிந்­துத்துவா ஆதிக்கம் என்­ப­வற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தொரு நிலையே காணப்­ப­டு­கி­றது.

அதே­வேளை தமி­ழ­கத்தில் செயற்­படும் பா.ஜ.க தலை­வர்­களும், இந்து அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களும் திரா­விடக் கொள்­கை­களை விமர்­சனம் செய்­வ­தையும் திரா­விடத் தலை­வர்­களை தாக்கிப் பேசு­வ­தையும் வழக்­க­மாக கொண்­டி­ருக்­கின்­றனர்.

மக­ளான தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன் பா.ஜ.க தமி­ழக மாநில தலை­வ­ராக செயற்­பட்டு வரு­கிறார். அப்­பாவின் கொள்­கைக்கு நேர்­மா­றா­கவும் காந்­தியின் கொள்­கைக்கு எதிர்­மா­றா­கவும் கருத்­து­களை வெளி­யி­டு­வதும் பேசு­வதும் ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கி­றது.

 ‘தமி­ழ­கத்தில் தமிழை வளர்த்­தது அண்ணா அல்ல ஆண்டாள்’ என்று வாதிடும் தமி­ழி­சையின் தந்தை குமரி அனந்தன் தனது 85 ஆவது பிறந்த தினத்­தை­யொட்டி அண்­ணாவின் தம்­பி­களில் ஒரு­வரும் திரா­விட முன்­னோ­டியும் முன்னாள் முதல்­வ­ரு­மான மு.கரு­ணா­நி­தியை சந்­தித்து ஆசி வாங்­கு­கிறார். இதுதான் தமி­ழ­கமும் அங்கு நடை­பெறும் அர­சி­யலும் தமி­ழ­கத்­துக்கு ஹிந்­துத்வா மேலா­திக்­கத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்கு என்­னென்ன செய்­ய­மு­டி­யுமோ அவை­ய­னைத்தும் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. திரா­விடத் தந்தை ஈவேரா பெரி­யாரின் சிலைகள் உடைக்­கப்­ப­டு­கின்­றன. பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் சிறு­பான்மை மதங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள், திரைப்­ப­டங்­களில் முற்­போக்கு கருத்­து­களை தெரி­வித்தால் நடி­கர்­க­ளுக்கு எதி­ராக போராட்டம் நடத்­தப்­ப­டு­வ­தோடு படத்தை திரை­யிட முடி­யாமல் தடை­வி­திக்­கின்­றனர். கவி­ஞர்கள் சுதந்­தி­ர­மாக கருத்து தெரி­விக்­க­மு­டி­வ­தில்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டமும், உண்­ணா­வி­ர­தமும், பகிஷ்­க­ரிப்பும் இடம்­பெ­று­கின்­றன. 

 எங்கே போய்க்­கொண்­டி­ருக்­கி­றது தமி­ழகம்? மீண்டும் அந்த பழைய யுகத்­துக்கு திரும்­பு­கி­றதா? மத­வாதம், ஒடுக்­கு­முறை, ஜாதி அடக்­கு­முறை, குலத்­தொழில், தீண்­டாமை நோக்கி செல்­லப்­போ­கி­றதா? அந்த இரு­ளி­லி­ருந்து விடு­தலைப் பெற்றுக் கொடுத்த சுய­ம­ரி­யாதை இப்­பக்கம் பெரியார், அண்­ணா­துரை, திரா­விட இயக்­கங்கள், திரா­விடக் கொள்கை அனைத்தும் மறைந்து போகப்­போ­கின்­றதா?

தற்­போது தமி­ழ­கத்தை ஆட்சி செய்யும் திரா­விட இயக்­க­மான (?) அ.தி.மு.க என்ன செய்­கி­றது? இது போன்ற பல கேள்­விகள் தமி­ழக மக்­க­ளி­டையே வியா­பித்­தி­ருக்­கின்­றன. ஆனால் அதற்­கான பதில்தான் அவர்­க­ளுக்கு கேள்­விக்­கு­ரி­யாக இருக்­கின்­றது.

எதிரி என்­றாலும் மர­ண­மான பின்னர் அந்த எதி­ரியின் பூத உட­லுக்கு இறுதி மரி­யாதை செலுத்­து­வது தான் பண்­பாடு. இது சாதா­ர­ண­தொரு மனி­த­னுக்கும் தெரிந்த விடயம் ஆனால் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்கும் முதல்­வ­ருக்கும் துணை முதல்­வ­ருக்கும் இது புரி­யா­தது வியப்­பா­க­வி­ருக்­கின்­றது.

 சசி­க­லாவின் கணவர் நடராஜ் மர­ண­மா­னதன் பின்னர் அவ­ரது உட­லுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு தமி­ழக முதல்வர் எடப்­பா­டியும், துணை முதல்வர் பன்­னீரும் செல்­லா­ததைப் பற்றி சகல தரப்­பி­னரும் விமர்­சனம் செய்து வரு­கின்­றனர். தாங்கள் போகா­தது மட்­டு­மன்றி தமது அமைச்­ச­ர­வையில் உள்­ள­வர்­களும் கட்சி முக்­கி­யஸ்­தர்­களும் போகக் கூடா­தென்று கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து யாரும் போக­வில்லை.

 இன்று எடப்­பாடி பழ­னிச்­சாமி தமி­ழக முதல்­வ­ராக பதவி வகிப்­பது யாரால்? பத்துடன் பதினொன்றாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் கதிரையில் அமர்த்தியவர் சசிகலா தான் அந்த நன்றிக்காகக்கூட சசிகலாவின் கணவர் நடராஜனின் உடலுக்கு மரியாதை செலுத்த எடப்பாடி போகவில்லை. ஒரு அனுதாபச் செய்தியைக் கூட வெளியிடவில்லை. அதேபோன்று துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நன்றி இல்லாதவராகவே நடந்து கொண்டுள்ளார் என்பது பொதுவான குற்றச்சாட்டாகும்.

 எவ்வாறாயினும் நடராஜனின் பூதவுடலுக்கு எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் குறிப்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மறைந்த நடராஜன் ஒரு காலத்தில் தமிழக அரசியலில் பலமிக்க மனிதராகத் திகழ்ந்தவர். ஜெயலலிதா அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டுவதற்கு பின்புலமாக இருந்தவர் எனினும் பின்னர் ஜெயலலிதாவினால் ஓரங்கட்டப்பட்டார். இலங்கைத் தமிழர் மீது பெரும் அனுதாபம் கொண்டவர். அதற்காக தீவிரமாக செயற்பட்டார். விளார் கிராமத்தில் ‘முள்ளிவாய்க்கால் முற்ற’ நினைவிடத்தை உருவாக்கி தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியவர். அங்குதான் தற்போது அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.            

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.