Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா – ஏமாற்­றமா?

Featured Replies

ஜெனீவா – ஏமாற்­றமா?

samakalamgeneva225-03-2018-b112dc2ad76e7399f5ebe73cc8dddaa52bb037bd.jpg

 

சுபத்ரா


மீண்டும் ஒரு­முறை இலங்கை பற்­றிய விவா­தங்கள், ஜெனீ­வாவில் நடந்து முடிந்­தி­ருக்­கின்­றன. கடந்த வாரத்­துடன் நிறை­வ­டைந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின், 37 ஆவது கூட்­டத்­தொ­டரில், கடந்த 19ஆம் திக­தியும், 21ஆம் திக­தியும் இலங்கை பற்­றிய இரண்டு விவா­தங்கள் இடம்­பெற்­றன.

மார்ச் 19ஆம் திகதி நடந்­தது, பூகோள கால மீளாய்வு அறிக்கை தொடர்­பா­னது. அது அவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் அற்­றது.

ஆனால், மார்ச் 21ஆம் நாள் நடந்த விவாதம் அப்­ப­டிப்­பட்­ட­தல்ல. அது ஒப்­பீட்­ட­ளவில் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அதனால் தான், வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, அமைச்­சர்கள் சரத் அமு­னு­கம, பைசர் முஸ்­தபா என்று உயர்­மட்டக் குழு­வொன்று ஜெனீவா சென்­றி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மானம், 2017இல் அதனை மீண்டும் உறு­திப்­ப­டுத்­திய, 34/1 தீர்­மானம் ஆகி­ய­வற்றை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­றது என்­பது பற்­றி­யது இந்த விவாதம்.

ஏற்­க­னவே, 2017இல் 34/1 தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போது, தீர்­மான நடை­மு­றைப்­ப­டுத்­தலின் முன்­னேற்­றங்கள் தொடர்­பாக 2018 மார்ச்சில், இடைக்­கால அறிக்­கை­யையும், 2019 மார்ச்சில் விரி­வான இறுதி அறிக்­கை­யையும் சமர்ப்­பிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர், கோரப்­பட்­டி­ருந்தார்.

அதற்­க­மை­யவே, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு, நாடு­க­ளி­னது கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. இலங்கை அரசின் பதிலும் பெறப்­பட்­டது. இதில் எந்த வாக்­கெ­டுப்பும் நடத்­தப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை.

இரண்டு ஆண்­டுகள் இலங்­கைக்கு கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டு விட்ட நிலையில், இந்த விவாதம், மிக­முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றாக இருக்­க­வில்லை.

அதா­வது, அடுத்­த­கட்டம் பற்­றிய முடி­வு­களை எடுக்கக் கூடிய சூழலைக் கொண்­ட­தாக இருக்­க­வில்லை. இது முன்­னரே தெரிந்த விடயம் தான்.

ஆனாலும், சில தமிழ்த் தரப்­புகள், இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட 2 ஆண்டு கால­அ­வ­கா­சத்தை நிறுத்தி விட்டு, இந்த விவ­கா­ரத்தை பாது­காப்புச் சபைக்குப் பாரப்­ப­டுத்தி, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரி­யி­ருந்­தன. அதற்­காக கையெ­ழுத்­து­களும் பெறப்­பட்­டன.

அது நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றது என்று முன்­னரே எதிர்வு கூறப்­பட்­டது. அத்­த­கைய கோரிக்­கையை முன்­வைத்த தரப்­பு­க­ளுக்கும் கூட, அது நடை­முறைச் சாத்­தி­ய­மற்ற விடயம் தான் என்று தெரிந்­தது.

அர­சியல் தேவை­களும், இருப்பை நிலைப்­ப­டுத்தும் முயற்­சி­களும், பல­வே­ளை­களில் அர்த்­த­மற்ற முயற்­சிகள், போராட்­டங்கள், கோரிக்­கை­க­ளுக்குத் துணை­போ­வது வழ­மையே.

ஜெனீ­வாவில் இலங்­கைக்கு இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட்டு விட்ட நிலையில், அதனை மாற்­றி­ய­மைக்­கின்ற முயற்­சி­களை சர்­வ­தேச சமூகம் அவ்­வ­ளவு இல­கு­வாக எடுத்து விடாது.

கொடுக்­கப்­பட்ட காலக்­கெ­டு­வுக்குள், முடிந்­த­ள­வுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தட்டும் என்று கால­அ­வ­கா­சத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கே முன்னுரிமை கொடுக்கும்.

பூகோள அர­சியல் பற்றி நிறை­யவே பேசத் தொடங்­கி­யுள்ள தமிழர் தரப்­புக்கு, இலங்­கை­யுடன் சுமு­க­மான உற­வு­களைக் கொண்­டுள்ள மேற்­கு­லக நாடுகள், அவ்­வாறு இடை­ந­டுவில் இந்த விவ­கா­ரத்தை பிடுங்கிக் கொண்டு போய், பாது­காப்புச் சபை­யிடம் கொடுக்­கின்ற செயலை ஒரு­போதும் செய்­யாது, என்­பதைப் புரிந்து கொள்­வது கடி­ன­மல்ல.

அது­போ­லவே, திடீ­ரென அமெ­ரிக்கா கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், வேறு கிளம்­பி­யி­ருந்­தது. அதற்­காக, சுமந்­திரன் அமெ­ரிக்­கா­வுக்குப் பறந்து போனார். பேச்­சுக்­களை நடத்­தினார்.

ஆனாலும், ஜெனீ­வாவில் அப்­படிப் பெரி­தாக ஒன்­றுமே நடந்து விடவில்லை.

கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்ட இரண்டு ஆண்­டு­களின் பாதிக்­காலம் முடிந்து விட்ட நிலையில், என்­னென்ன முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை அறிந்து கொள்­வ­தற்­கான ஒரு சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான விவா­த­மா­கவே இது நடந்து முடிந்­தி­ருக்­கி­றது.

ஜெனீவா அமர்வு ஒன்றும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தல்ல என்று புரிந்து கொள்­ளப்­பட்ட நிலை­யிலும், அதனை வைத்து தமிழ் மக்கள் மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­படும் அர­சியல் ஆபத்­தா­னது.

ஜெனீவா கூட்­டத்­தொ­டரில், வரை­ய­றுக்­கப்­பட்ட விளை­வுகள் தான் நிகழக் கூடி­யது. அது ஒரு வட்­டத்தைத் தாண்டிச் செல்லக் கூடி­ய­தல்ல. அதனைப் புரிந்து கொள்­ளாமல், அது­பற்றி அலட்டிக் கொள்ளத் தொடங்­கி­யது தான், தமிழர் தரப்பை அதி­க­ளவில் ஏமாற்றம் கொள்ள வைத்­தது.

கடந்த புதன்­கி­ழமை நடந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்­வைத்த அறிக்­கை­யிலும், அதனை முன்­நி­றுத்தி பல்­வேறு நாடு­களும் முன்­வைத்த அறிக்­கை­க­ளிலும், ஒரு விடயம் மிகத் தெளி­வாக கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

எதிர்­பார்த்­த­ளவு வேகத்தில், இந்தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே அது.

இலங்கை அர­சாங்கம் கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வதில் உறு­தி­யான, வேக­மான நடை­மு­றையைப் பின்­பற்­ற­வில்லை. மெது­வா­கவே எல்லாம் நடக்­கின்­றது என்­பது பகி­ரங்­க­மா­கவே கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இதற்­காக பல்­வேறு நாடு­களும் கவலை வெளி­யிட்­டுள்­ளன, அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன, இன்னும் வேக­மாக செயற்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

இது மாத்­திரம் போது­மா­னதா என்­ப­தை­யிட்டு பேர­வையின் உறுப்பு நாடுகள் எந்தக் கருத்­தையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

அதே­வேளை, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையில், “எந்த சட்ட வரை­வு­களும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யிலும், அதற்­கான உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாத நிலை­யிலும், நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றைகள் தொடர்­பாக, எதிர்­வரும் 2019 மார்ச் மாதத்­துக்குள் 30/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சந்­தே­கமே” என்று கூறப்­பட்­டுள்­ளது.

அதா­வது, இன்னும் எஞ்­சி­யுள்ள ஒரு வரு­டத்­துக்குள், இலங்கை அர­சாங்கம் நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்கப் போவ­தில்லை- அதற்­கான சாத்­தி­யங்கள் இல்லை என்­பதை அவர் தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இந்­த­நி­லையில் தான் மாற்று நட­வ­டிக்­கை­யாக என்ன செய்­யலாம் என்­ப­தையும் அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

“சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மானச் சட்டமீறல்­க­ளுக்கு தண்­டனை வழங்கும் திறனை நிரூ­பிக்­கவோ அல்­லது அதற்­கான விருப்­பத்­தையோ இலங்கை அதி­கா­ரிகள் இன்­னமும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

இது, மோச­மான குற்­றங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான, சிறப்பு நீதி­மன்­றத்தை சர்­வ­தேச நிபு­ணர்­களின் ஆத­ர­வுடன் நிறுவ வேண்டும் என்ற வாதத்தை பலப்­ப­டுத்­து­கி­றது.

அத்­த­கை­ய­தொரு பொறி­முறை இல்­லாத நிலையில், நாம், உல­க­ளா­விய அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு உறுப்பு நாடு­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறோம்.” என்று குறிப்­பிட்­டி­ருந்தார் ஆணை­யாளர்.

பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது தொடர்­பாக அர­சாங்கம் இன்­னமும் தெளி­வான முடிவை எடுக்­க­வில்லை.

ஜெனீ­வா­விலும் கூட வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, உள்­நாட்டுச் சட்­டங்­க­ளுக்கு அமைய, பொறுப்­புக்­கூறல் பிரச்­சி­னையை தீர்க்கும் வல்­லமை தமது நாட்­டுக்கு இருப்­ப­தாக மாத்­திரம் கூறிக் கொண்­டி­ருந்தார்.

அத்­த­கைய வல்­ல­மையைப் பெற்ற அர­சாங்கம், குறிப்­பிட்ட ஒரு வருட காலத்­துக்குள் ஏன் எதையும் செய்­ய­வில்லை என்­ப­தற்கு அவர் விளக்கம் அளிக்­க­வில்லை.

சர்­வ­தேச நிபு­ணர்­களின் ஆத­ர­வுடன் சிறப்பு நீதி­மன்­றத்தை அமைத்து மோச­மான குற்­றங்கள் குறித்து விசா­ரிக்க வேண்டும் என்ற வாதம் வலுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த நிலையில் தான் வாக்­கு­று­தியை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­காத நிலையில், உல­க­ளா­விய சட்ட அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான மாற்று வழி­களை சிந்­திக்­கு­மாறு அவர் உலக நாடு­க­ளிடம் கோரி­யி­ருக்­கிறார்.

இது, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய நகர்­வு­க­ளுக்­கான ஒரு முன்­னோட்டம் எனலாம்.

இலங்கை அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் வாக்­கு­று­தி­களை அடுத்த ஒரு ஆண்­டுக்குள் நிறை­வேற்றத் தவ­றினால், ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் இந்தப் பரிந்­துரை கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்­பட வாய்ப்­புகள் உள்­ளன.

அதற்­காக, இப்­போதே அதற்­கான நட­வ­டிக்­கை­களில் சர்­வ­தேச சமூகம் இறங்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. அடுத்த ஒரு வரு­டத்­துக்குள் நிகழக் கூடிய உள்­நாட்டு அர­சியல் சூழல் மற்றும் மாற்­றங்கள், பூகோள அர­சி­யலில் ஏற்­படக் கூடிய மாற்­றங்கள் என்­பன இதில் காத்­தி­ர­மான பங்கை வகிக்கும்.

கடந்த வார அமர்வின் போது, ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ள­ரான பப்லோ டி கிரெய்ப்பும் உரை­யாற்­றி­யி­ருந்தார், அவர், தனது உரையில், இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆர்வம் காட்டப்படாதுள்ளமைக்கு அது முக்கியமானதொரு காரணம்.

ஆனால், இலங்கையின் பொறுப்புக்கூறல் முயற்சிகள் உள்ளக மட்டத்தில் மாத்திரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்று கருத முடியாது. சர்வதேச மட்டத்திலும் அவ்வாறு தான் உள்ளது.

இலங்கையைப் பொறுப்புக்கூற வைக்கும் விவகாரத்தில், சர்வதேச சமூகம், நீதியின் பக்கம் மாத்திரம் நின்று முடிவுகளை எடுக்கவில்லை. பூகோள அரசியல் சூழமைவுகள், தமக்கான அரசியல் நலன்களின் அடிப்படையிலும் தான் இந்த விவகாரத்தைக் கையாளுகின்றன.

இத்தகையதொரு நிலை இருக்கின்ற சூழலில், ஜெனீவா பற்றிய மிகையான நம்பிக்கைகளை- அடுத்தகட்டம் பற்றிய அபரிமிதமான எதிர்பார்ப்புகளை தமிழ் மக்களிடம் வளர்த்துக் கொள்வது, நல்லதாக தோன்றவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.