Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரி நகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு!!

Featured Replies

  • சாவகச்சேரி மேயர் பதவிக்கு மும்முனைப் போட்டி!!
 

சாவகச்சேரி மேயர் பதவிக்கு மும்முனைப் போட்டி!!

 

சாவகச்சேரி நகர சபைக்கான மேயர் தெரிவு இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு மும்முனைப் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ள அந்தச் சபையின் மேயர் பதவிப் போட்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் போட்டியிடவுள்ளன.

அதனால் அங்கு மும்முனைப் போட்டி நடக்கும் என்று தெரிகின்றது.

http://newuthayan.com/story/78791.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
 
 

சாவகச்சேரி நகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு!!

 

சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதித் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பில் போட்டியிட்ட  யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகள் பெற்றுக் கொண்டார்.

வாக்குகளின் அடிப்படையில் சாவகச்சேரி் நகர சபையும் கூட்டமைப்பு வசமானது. அதே வேளை யாழ்.மாநகர சபையும் கூட்டமைப்பு வசமானது குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com/story/78859.html

  • தொடங்கியவர்

சாவகச்சேரி நகர சபை கூட்டமைப்பு வசம்…

savagaseri.jpg?resize=600%2C300

 

சாவகச்சேரி நகர தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவமங்கை இராமநாதன் தெரிவானார்.  சாவகச்சேரி நகரசபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று மதியம் ஆரம்பமானது. அதன் போது , தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமாரின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குக்களை பெற்று சாவகச்சேரி நகர சபை தவிசாளராக பொறுப்பேற்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டார்.  சாவகச்சேரி நகர சபைக்கு தமிழரசு கட்சி 05  உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  06 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி 01 உறுப்பினரும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  02 உறுப்பினர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி  01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/72421/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.