Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி கலாம் உருவப்படம்: 127 மணி நேரத்தில் வரைந்து சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கலாம் உருவப்படம்: 127 மணி நேரத்தில் வரைந்து சாதனை

pt02ap5.jpg

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது நாவினால் துõரிகைப் பிடித்து 127 மணி நேரத்தில் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவப் படத்தை வரைந்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஆர்.ராஜேந்திரன் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கு சின்ன வயதிலிருந்து ஓவியம் வரையும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. துõரிகையை கையினால் பிடித்து ஓவியம் வரைந்தவர்கள் நிறைய சாதனைகளை செய்திருப்பதால், வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து சாதனை படைக்க ராஜேந்திரன் விரும்பினார். தனது நாவினால் துõரிகையை பிடித்து ஆயில் பெயின்டிங் ஓவியம் வரையும் முயற்சியில் இறங்கினார். கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். தொடர்ந்து, தனது நாவினால் துõரிகையை பிடித்து 127 மணி நேரத்தில், 10 அடி உயரம் ஏழடி அகலத்தில் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவப்படத்தை, சென்னை கோல்டன் பீச்சில் பொதுமக்கள் முன்பு வரைந்து சாதனை படைத்தார். இச்சாதனை இந்த ஆண்டின் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து சென்னையில் நேற்று ராஜேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: திரையுலகில் துணை ஆர்ட் டைரக்டராக பணியாற்றினேன். நாவில் துõரிகை வைத்து ஆயில் பெயின்டிங் மூலம் கறுப்பு வெள்ளை நிறத்தில் படம் வரைந்துள்ளேன். ஓவியத்தில் வித்தியாசம் தெரியும் வகையில் சிறிய அளவில் எனது முகத்தில் துõரிகை இருப்பது போல வரைந்துள்ளேன். கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக 20 அடி உயரம், 30 அடி அகலத்தில் உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற தெரசாவின் படத்தை வரைவதற்கு அனுமதி கேட்டுள்ளேன். கவர்னர் சுர்ஜித் சிங்கிடம் வாழ்த்து பெற்றுள்ளேன். கடந்த 2002ம் ஆண்டில் சிறிய அளவில் படங்களை வரைந்து அப்துல்கலாமிற்கு அனுப்பி அவரது பாராட்டை பெற்றுள்ளேன். விரைவில் அப்துல்கலாமை சந்தித்து வாழ்த்து பெறவும் அனுமதி கேட்டுள்ளேன். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

http://www.dinamalar.com/

கேட்பதாக குறைவிளங்கக் கூடாது? ஆப்பிள் கலாமால் ஈழத் தமிழருக்கு/ ஏழைத் தமிழருக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா?

ஏன் எல்லோரும் ஆப்பிளை தோளில் தூக்கி சுமக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

எனி ஸ்பெசல் ரீசன்ஸ் போர் தட்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிளை தோளில் சுமக்கவில்லைங்கோ.

நாவினால் தூரிகை பிடித்து ஒவியம் வரைந்த மனிதரின் சாதனையை பார்க்கிறேன்

என்னங்க 127 மணித்தியாளம் வாயால கீறுவது என்பது அதுவும் ஒயில் பெயிண்ட் எண்டா அது ஒரு இமாலய சாதனை தான். நான் இலங்கையில் படிக்கும் காலங்களில் சோக் ஆட் மகாவலி கொம்பரிசனில் இலங்கையில் 3 ஆவதாக வந்தேன். அனா அதன் பின்பு நேரம் இன்மையால் அதில் நேரம் செலுத்தமுடியவிலை. 25 வருடங்களின் பின்பு இருந்தாப்போல ரமணமகரிசியின் படம் ஒன்று வரைய சந்தர்ப்பம் கிடைத்தது. அப்ப நான் ஒயில் பெயிண்டிங்கில் பாலர் வகுப்பு. 3 நாட்களில் முடித்து இந்திய ரமண ஆச்சிரம ஆசிகளைப் பெற்றேன். இதோ அந்தப்படம்.

post-3802-1174726184_thumb.jpg

மாப்பு

எமக்கு பிரியோசனமில்லாவிட்டால் ஒரு சிறந்த மனிதரை நாம் ஒதுக்கி விட முடியாது.அவரின் விடா முயற்சி எம்மெல்லோருக்கும் எடுத்துக்காட்டு.ஒரு தமிழன் இந்தியரசின் அணுவாயிதத்தை கண்டு பிடிக்க அரும்பாடு பட்டார் என்பதில் நான் தமிழனாக பெருமைபடுகின்றேன் .இப்படி தமிழர்களை நாட்டுக்கு நாடாக பிரித்து பார்ப்பது வரவேற்கதக்கது அல்ல என்பது என் கருத்து.அவரின் சுயசரிதை புத்தகத்தை வாசித்திருகிறேன் அவரின் முயற்சி அசரவைக்கும்.அப்படிப்பட்ட ஒரு சிறந்த தமிழனை ஏன் இப்படி பிரிகிறீங்கள்.அவரால் எமக்கு எந்த பிரியோசனமும் இல்லை என்றாலும் அவரால் எமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உண்மை.உலக தமிழர் தலைவர் எமது போராட்டத்துக்கு நடத்த நினைக்கும் சேதாரங்கள் நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

அத்துடன் நீங்கள் சொன்னீர்கள் ஏழைதமிழனுக்கு ஏதேனும் பிரியோசனம் அவரால் உண்டென.எழ்மையின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர்தான் அவர்.இன்னும் எழிமை வாழ்க்கையை கடைப்பிடிப்பவரும் அவரே.தான் இறங்கவேண்டிய ஹெலிகப்ப்டர் பாட் காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 2 மடங்கு மரங்களை நடச்சொன்னதும்.பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு போடப்பட்ட விசேட இருக்கையை மறுத்து அனைவருக்கும் போல தனக்கும் இருக்கை வேண்டும் என கூறியது அவரின் எளிமைக்கு எடுத்துக்காட்டு

ஆக விசாரிக்காமல் எதுவும் தெரியாமல் ஒருவரை பற்றி தவறான எண்ணங்களையும் அவரால் நமக்கு பிரியோசனமா என கேள்வி கேட்டு சுயநலவாதம் என்னும் ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்து கேள்வி கேட்டு ஒரு நல்ல மனிதனை அசிங்கப்படுத்தாதீர்கள்.இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.ஒட்டு மொத்த இந்தியரும் அவரை தம் அற்புத குடிமகனாகவே காண்கின்றார்கள் அப்படி ஒரு நிலையை ஒரு தமிழன் பெற்று விட்டான் என்பதை நான் சுயநலத்தையும் தாண்டி வசிக்கும் அல்லது சார்ந்த நாட்டையும் தாண்டி தமிழனாக பெருமையடைகின்றேன்

அன்புடன்

ஈழவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க 127 மணித்தியாளம் வாயால கீறுவது என்பது அதுவும் ஒயில் பெயிண்ட் எண்டா அது ஒரு இமாலய சாதனை தான். நான் இலங்கையில் படிக்கும் காலங்களில் சோக் ஆட் மகாவலி கொம்பரிசனில் இலங்கையில் 3 ஆவதாக வந்தேன். அனா அதன் பின்பு நேரம் இன்மையால் அதில் நேரம் செலுத்தமுடியவிலை. 25 வருடங்களின் பின்பு இருந்தாப்போல ரமணமகரிசியின் படம் ஒன்று வரைய சந்தர்ப்பம் கிடைத்தது. அப்ப நான் ஒயில் பெயிண்டிங்கில் பாலர் வகுப்பு. 3 நாட்களில் முடித்து இந்திய ரமண ஆச்சிரம ஆசிகளைப் பெற்றேன். இதோ அந்தப்படம்.

post-3802-1174726184_thumb.jpg

நீங்க வரைஞ்ச படம் உண்மையில் அற்புதம். அந்த காலகட்டத்தில் திறமையிருந்தும் வெளிகொணரபடுவதும் இல்லை. ஊக்குவிக்கப்படுவதும் இல்லை.

நீங்கள் வரைந்த படங்கள் மேலும் இருந்தால் அவற்றை யாழ் களத்தில் போடலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்,

உங்களுடைய கருத்துக்களை நான் மிகவும் வரவேற்கிறேன்.

அப்துல் கலாமைப் பொறுத்தவரை, அவர் தமிழையும் தமிழரையும் ரொம்பவே மதிப்பவர்.

தன்னுடைய பதவியின் காரணமாக வெளிப்படையாக தன் கருத்தைக் கூற முடியாத நிலையில் இருந்தாலும், அவரது இதயத்திலே ஈழத்தமிழருக்கு எப்போதும் இடமுண்டு.

தனித் தமிழீழம் அமையும் போது, அவர் தன்னாலான தொழில் நுட்ப அறிவை ஈழ அரசுடன் பகிர்ந்து கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு

- கப்பல் பயணி

APJ_Abdul_Kalams_Family.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு

எமக்கு பிரியோசனமில்லாவிட்டால் ஒரு சிறந்த மனிதரை நாம் ஒதுக்கி விட முடியாது.அவரின் விடா முயற்சி எம்மெல்லோருக்கும் எடுத்துக்காட்டு.ஒரு தமிழன் இந்தியரசின் அணுவாயிதத்தை கண்டு பிடிக்க அரும்பாடு பட்டார் என்பதில் நான் தமிழனாக பெருமைபடுகின்றேன் .இப்படி தமிழர்களை நாட்டுக்கு நாடாக பிரித்து பார்ப்பது வரவேற்கதக்கது அல்ல என்பது என் கருத்து.அவரின் சுயசரிதை புத்தகத்தை வாசித்திருகிறேன் அவரின் முயற்சி அசரவைக்கும்.அப்படிப்பட்ட ஒரு சிறந்த தமிழனை ஏன் இப்படி பிரிகிறீங்கள்.அவரால் எமக்கு எந்த பிரியோசனமும் இல்லை என்றாலும் அவரால் எமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உண்மை.உலக தமிழர் தலைவர் எமது போராட்டத்துக்கு நடத்த நினைக்கும் சேதாரங்கள் நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

அத்துடன் நீங்கள் சொன்னீர்கள் ஏழைதமிழனுக்கு ஏதேனும் பிரியோசனம் அவரால் உண்டென.எழ்மையின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர்தான் அவர்.இன்னும் எழிமை வாழ்க்கையை கடைப்பிடிப்பவரும் அவரே.தான் இறங்கவேண்டிய ஹெலிகப்ப்டர் பாட் காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 2 மடங்கு மரங்களை நடச்சொன்னதும்.பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு போடப்பட்ட விசேட இருக்கையை மறுத்து அனைவருக்கும் போல தனக்கும் இருக்கை வேண்டும் என கூறியது அவரின் எளிமைக்கு எடுத்துக்காட்டு

ஆக விசாரிக்காமல் எதுவும் தெரியாமல் ஒருவரை பற்றி தவறான எண்ணங்களையும் அவரால் நமக்கு பிரியோசனமா என கேள்வி கேட்டு சுயநலவாதம் என்னும் ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்து கேள்வி கேட்டு ஒரு நல்ல மனிதனை அசிங்கப்படுத்தாதீர்கள்.இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.ஒட்டு மொத்த இந்தியரும் அவரை தம் அற்புத குடிமகனாகவே காண்கின்றார்கள் அப்படி ஒரு நிலையை ஒரு தமிழன் பெற்று விட்டான் என்பதை நான் சுயநலத்தையும் தாண்டி வசிக்கும் அல்லது சார்ந்த நாட்டையும் தாண்டி தமிழனாக பெருமையடைகின்றேன்

அன்புடன்

ஈழவன்

அருமை, அருமை. ஈழவனே உங்களின் வாதத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.