Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுமா தமிழ்க்கட்சிகள்!

Featured Replies

இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுமா தமிழ்க்கட்சிகள்!

pix-2-bccdd6bb2587f685ebd980f25a69c67d17c8a536.jpg

 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக, கூட்டு எதி­ர­ணி­யி­னரால் கொண்டு வரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது எதிர்­வரும் புதன்­கி­ழமை 12 மணி நேர விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த விவாதம், இரவு 9.30 மணி­வரை நீடிக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் என்றும் பாரா­ளு­மன்றத் தக­வல்கள் கூறு­கின்­றன.

இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடக்­குமா - பகி­ரங்க வாக்­கெ­டுப்பு நடக்­குமா என்று இன்­னமும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை.

இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வெற்­றி­க­ர­மாகத் தோற்­க­டித்து விடுவோம் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு பகுதி தலை­வர்கள் கூறு­கின்­றனர்.

ஆனாலும், கட்­சிக்குள் மறு­சீ­ர­மைப்பை வலி­யு­றுத்தும் இன்­னொரு தரப்­பி­னரோ, சொந்தக் கட்­சியின் தலைவர் என்றும் கூடப் பார்க்­காமல், இதனைத் தமது பேரம் பேசும் பலத்­துக்­காக பயன்­ப­டுத்த முனை­கின்­றனர்.

தாம் எதிர்­பார்க்கும் மாற்­றங்­களைச் செய்­யாது போனால், ஐ.தே.கவின் 27 உறுப்­பி­னர்கள், நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக இருக்­கி­றார்கள் என்று அமைச்சர் பாலித ரங்க பண்­டார கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்க்க வேண்­டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு கிடை­யாது என்று அமைச்சர் எஸ்.பி.திச­நா­யக்க போன்­ற­வர்கள் கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஸ்ரீலங்கா சுத­தந்­திரக் கட்­சிக்குள் இன்­னமும் மஹிந்த விசு­வா­சிகள் இருக்­கி­றார்கள். கட்சித் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன எத்­த­கைய முடிவை எடுத்­தாலும், அவர்கள் மஹிந்த ராஜபக் ஷவின் சொற்­படி தான் கேட்­பார்கள்.

எனவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இல­கு­வாக காப்­பாற்­றப்­பட்டு விடுவார் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது கட்­சி­யி­னரை சமா­தா­னப்­ப­டுத்­தி­னாலும் கூட அவரால் தனது நீக்­கத்தை தடுக்க முடி­யாது. ஏனைய கட்­சி­களின் கைகளில் தான் அந்த அதி­காரம் இருக்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி காப்­பாற்றப் போகி­றதா- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு காப்­பாற்றப் போகி­றதா- அல்­லது இரண்­டுமே எதிர்க்கப் போகின்­ற­னவா என்­பது, அடுத்து வரும் நாட்­களில் தான் தெரி­ய­வரும்.

எது எவ்­வா­றா­யினும், தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், எதிர்­கொள்­கின்ற மிகப்­பெ­ரிய நெருக்­க­டி­யாக இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை அமைந்­தி­ருக்­கி­றது.

இதற்கு முன்னர் நிதி­ய­மைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தோல்வி கண்­டது. ஆனால் அப்­போது இருந்த சூழ­லுக்கும் இப்­போது இருக்­கின்ற சூழ­லுக்கும் இடையில் பெரிய வேறு­பா­டுகள் உள்­ளன. அப்­போது கூட்டு அர­சாங்­கத்தைப் பாது­காக்க வேண்டும் என்ற விருப்பு இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­டமும் இருந்­தது.

ஆனால் இப்­போது, அப்­ப­டி­யில்லை. கூட்டு அர­சாங்­கத்தை உடைத்துக் கொண்டு வெளி­யேற வேண்டும் என்ற விருப்பே இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­டமும் இருக்­கி­றது.

எஸ்.பி.திச­நா­யக்க போன்­ற­வர்­க­ளிடம், ரணிலை வெளி­யேற்றி விட்டு பரந்­து­பட்ட கூட்டு அர­சாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டம் கூட இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

எனவே, இப்­போ­துள்ள நிலையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பாத­க­மான சூழ்­நி­லை­களே உள்­ளேயும் வெளி­யேயும் காணப்­ப­டு­கின்­றன.

சபையில் சமு­க­ம­ளித்­தி­ருக்கும் உறுப்­பி­னர்­களின் சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன், நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை நிறை­வேற்றி விட முடியும் என்று பாரா­ளு­மன்ற அதி­கா­ரிகள் கூறி­யுள்ள நிலையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க காப்­பாற்­றப்­ப­டு­வாரா என்ற கேள்வி உள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்டால், அடுத்து யார் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார் என்ற கேள்வி இங்கு முக்­கி­யத்­து­வ­மா­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒருவர், பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார் எனின், அதனை ஆத­ரிக்கத் தாம் தயார் என்று மஹிந்த ராஜபக் ஷ சில நாட்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார்.

ஆனால், கூட்டு எதி­ர­ணியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மாத்­திரம் அதனைத் தீர்­மா­னித்து விட முடி­யாது.

இரண்டு கட்­சி­க­ளையும் சேர்த்தால், 96 உறுப்­பி­னர்கள் தான் உள்­ளனர். ஆனால் நாடா­ளு­மன்­றத்தில் அறுதிப் பெரும்­பான்­மைக்கு 113 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு தேவை.

உட்­கட்சி முரண்­பா­டு­களால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு ஆத­ரவு அளிக்க முன்­வரும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒருவர் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டு­வதை ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை. அதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த இன்­னொ­ருவர் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் எந்­த­ள­வுக்கு ஆத­ரவு இருக்கும் என்­பதும் கேள்­விக்­கு­ரிய விடயம்.

ஆனால் ஒரு­போதும், அத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி ஆத­ரவு அளிக்­காது. 

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் பத­விக்குக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களில் கூட்டு எதி­ரணி இறங்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த பின்னர், மஹிந்த ராஜபக் ஷ பிர­தமர் பத­வியைக் கைப்­பற்­று­வ­தற்கு பல்­வேறு வித­மான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால் அவை எது­வுமே இது­வ­ரையில் வெற்றி பெற­வில்லை.

பிர­தமர் பத­வியைக் கைப்­பற்­றினால், ஜனா­தி­ப­தியைத் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்­பது கூட்டு எதி­ர­ணியின் கணக்கு.

பிர­தமர் பத­வியை மஹிந்­த­வுக்குப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக உள்ளும் வெளி­யு­மாக பல்­வேறு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. பேச்­சுக்கள், பேரங்கள் நடத்­தப்­பட்­டன.

இருந்­தாலும், அதனை முறி­ய­டிப்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இது­வரை வெற்றி பெற்று வந்­தி­ருக்­கி­றார்கள்.

பிர­தமர் பத­வியில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க நீக்­கப்­பட்டால், அதற்குப் பின்னர் மஹிந்­தவைப் பிர­த­ம­ராக்கும் முயற்­சி­களைத் தடுப்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இல­கு­வான காரி­ய­மாக இருக்­காது.

ஜனா­தி­ப­தியே பிர­த­மரை நிய­மிக்க வேண்டும் என்­றாலும், பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலத்தைக் கொண்­டி­ருந்தால் அவரைத் தட்டிக் கழிக்க முடி­யாமல் போகும்.

சில வேளை­களில் மஹிந்த ராஜபக் ஷ பிர­தமர் பத­விக்கு நிய­மிக்­கப்­படக் கூடிய சூழல் ஏற்­பட்டால், இப்­போது அர­சாங்­கத்­துடன் இருக்­கின்ற சில கட்­சிகள் அவர் பக்கம் சாயவும் வாய்ப்­புகள் உள்­ளன.

அதை­விட, உள்­ளூ­ராட்சி சபை­களின் ஆட்­சியைப் பிடிப்­ப­தற்கே, உறுப்­பி­னர்­க­ளுக்கே 10 இலட்சம் ரூபா தொடக்கம் 1 கோடி ரூபா வரை பேரம் பேசப்­படும் இந்தக் கால­கட்­டத்தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கோடிக்­க­ணக்கில் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்­சிகள் நடக்­கவும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருக்கும் வரையில் தான் கூட்டு எதி­ர­ணி­யினால் எதையும் செய்ய முடி­யாமல் இருக்­கி­றதே தவிர, அவர் அந்தப் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டால், அந்தச் சூழ்­நி­லையை தமக்குச் சாத­க­மாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்­புகள் அவர்­க­ளுக்கு அதிகம் ஏற்­பட்டு விடும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்டு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரோ, கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரோ பிர­த­ம­ராக பத­வி­யேற்கும் சூழல் ஏற்­பட்டால், அது தற்­போ­துள்ள நிலையை விடவும் மோச­மா­ன­தொரு நிலைக்கே நாட்டைத் தள்ளிச் செல்லும்.

புதி­தாக அமையக் கூடிய அர­சாங்­கத்தின் கொள்கை இழு­ப­றி­க­ளுக்­குட்­பட்­ட­தாக இருக்கும். அதனால் குழப்ப நிலைகள் தான் மேலோங்கும்.

அதை­விட நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் சார்ந்த விட­யங்­களில் இது­வரை எட்­டப்­பட்ட அனைத்து, அடை­வு­க­ளையும் அது ஒரே கதியில் பின்­நோக்கித் தள்ளிச் சென்று விடும் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை.

ஏனென்றால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும், அவர் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் சற்­றேனும் இறங்கி வரத் தயா­ராக இருக்­க­வில்லை. கூட்டு எதி­ரணி பொறுப்­புக்­கூ­ற­லையே தேவை­யற்­ற­தாக ஒதுக்­கு­கின்ற தரப்பு.

இத்­த­கைய கட்­டத்தில், அந்த இரண்டு தரப்­பு­களின் இணைவு, பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம் சார்ந்த அத்­தனை முயற்­சி­க­ளையும், இல்­லாமல் செய்து விடக். கூடிய சூழல் உள்­ளது.

அதற்­காக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம், இந்த விட­யங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது என்றோ, இந்த அர­சாங்கம் பத­வியில் நீடிப்­பது சாதகம் என்றோ கூற முடி­யாது.

ஒப்­பீட்­ட­ளவில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தின் போக்கு சாத­க­மா­ன­தாக இருக்கும். மெதுவாக என்றாலும், சிறியளவில் என்றாலும், சர்வதேசத்துக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை இந்த அரசாங்கம் பேணுகிறது.

ஆனால் கூட்டு எதிரணியின் ஆதரவுடன் அமையக்கூடிய அரசாங்கம் ஒருபோதும், அத்தகைய கடப்பாட்டை வெளிப்படுத்தாது.

இந்தக் கட்டத்தில் சட்டிக்குள் இருப்பதா - நெருப்புக்குள் விழுவதா என்று தீர்மானிக்க வேண்டிய நிலையில் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன.

இதில் பங்காளிகளாக வேண்டியதில்லை என்று ஒதுங்கிக் கொள்ளும் முடிவையும் எடுக்கலாம் அல்லது ஏதாவது ஒரு தரப்பை குளிர்விக்கின்ற முடிவையும் தமிழ் கட்சிகள் எடுக்கலாம்.

எது எவ்வாறாயினும், அந்த முடிவு தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற – சற்றேனும் ஆறுதலாக இருக்கின்ற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும் என்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்தக் கூடும்.

இருக்கிறதை விட்டு விட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்பட தமிழ் கட்சிகள் விரும்பாது என்றே தெரிகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.