Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்''

Featured Replies

''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்''

-ச.சங்கரன்-

சம்பூர்- வாகரையில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு சிறு வெற்றியினைப் பெற்றுக்கொண்டு அதனை இமாலய வெற்றியாகவும்,; மட்டக்களப்பு திருகோணமலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் இராணுவ வெற்றியைவிட பலபத்து மடங்கு ஊடாகவெற்றியை மகிந்தர் அரசு பெற்றுக் கொண்டது. அல்லது காட்டிக் கொண்டது.

" வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்" என்கிறார் ஜேர்மனியின் கேணல் அடம்ஸ் மாக்கர்

அதே போல் அரசுக்கு கிழக்கில் வாகரையை பிடித்த வெற்றியைவிட உலகின் பிரதான இராஜதந்திரிகள் மத்மியில் வீழ்ந்து வெடித்த புலிகளின் நான்கு எறிகணைகள் புலிகளின் போரியல் ஆற்றலையும், போர் திறனையும் உலகறியச் செய்து விட்டது. இது புலிகளின் மேலாதிக்கத்தினை வெளிப்படுத்தி விட்டது.

மட்டக்களப்பில் புலிகளின் கதை முடிந்துவிட்டதாக அரசு மார்பு தட்டிக் கொண்டிருக்க மட்டக்களப்பில் யாருக்கும் படைகளினால் பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்பதனை புலிகள் நிருபித்துவிட்டனர் அங்கு புலிகள் எதையும் செய்து முடிக்கும் வல்லமையுடன் இருக்கின்றார்கள் என்பது ராஜதந்திரிகள் மூலம் உலகம் அறிந்த விடயமாகிவிட்டது.

இன்று மட்டக்களப்பில், போர் முனை யதார்த்தத்தின்படி புலிகளினால் எங்கும் எப்போதும் பாதுகாப்பு படைகளைத் தாக்க முடியும், எந்த இடத்திலும் புலிகளின் வலு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொப்பிக்கல காட்டைத் தவிர மீதி அனைத்து இடங்களும் மட்டக்களப்பில் படையினரின் வசம் என பிரச்சாரம் செய்த இனவாத பிரச்சார பீரங்கி கேகலிய ரம்புக்வெலவுக்கு நான்கு எறிகணைகள் விழிபிதுங்க வைத்துவிட்டன. அவரின் பிரச்சாரங்கள் எல்லாம் பொய்த்துப் பொடியாகி விட்டது.

சிறிலங்கா அரசால் மட்டக்களப்பு வெற்றி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை எறிகணைத் தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் முறியடித்து விட்டனர் என சண்டே ரைம் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறுகின்றார்.

விடுதலைப்புலிகள் வாகரையில் இருந்து பின் வாங்கியதை மட்டும் அரசு தனது இராணுவ வெற்றியாக கருதுகின்றது. இது புலிகளின் இராணுவ தந்திரோபாய பின்வாங்கல் படைகளை பரவவிட்டு புலிகள் அவர்களை தாக்குவார்கள் அல்லது வேறு எங்கோ தாக்குவார்கள்.

வாகரையில் படையினரை எதிர்த்து புலிகள் போரிடவில்லை தற்காப்புத் தாக்குதலை மட்டும் மேற்கொண்டு பின்வாங்கினர். அங்கு புலிகளின் போர்ப் படையணிகள் களமிறங்கவில்லை. படையினரை எதிர்த்து போரிடவில்லை.

ஆனால், அங்கு புலிகளுடன் பெரும் சமர் பரிந்து இராணுவ வெற்றியை ஈட்டியதாக அரசு மார்பு தட்டியது. இராணுவ வெற்றியாக கொண்டாடியது. அந்தளவுக்கு அங்கு சமர் நடக்கவும் இல்லை, அரச படைகளை எதிர்த்து புலிகள் போரிடவும் இல்லை. வுhகரை என்பது அரசு -புலிகளின் பலப்பரீட்சை கள முனையும் அல்ல.

ஆனால், வாகரையினை ஆக்கிரமித்து ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு பெருமை தேடிக் கொண்ட மாதிரி அங்கு ஏதும் நடக்கவில்லை.

" நான் அங்குள்ள உண்மை நிலையினை அறிந்துள்ளேன் அரசின் ஊடகத்துறையினர் வெளியிட்ட வெற்றிகளுக்கும் இராணுவ வெற்றிகளுக்கும் உண்மை நிலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன் " என பெயரைக் குறிப்பிட விரும்பாத இராஜ தந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். (சன்டே ரைம்ஸ் - இத்தால் அப்பாஸ்)

புலம் பெயர்ந்து வாழ்ந்த மக்கள் சிலர் மட்டக்களப்பு வாகரை வீழ்ச்சி பற்றி பெரிதும் மனம் கலங்கியது உண்டு. ஆனால் தமிழர்கள் கவலைப்படக்கூடியவாறு புலிகள் அங்கு தோல்வி காணவில்லை. புலிகளின் பலம் மட்டக்களப்பில் சீர்குலையவில்லை.

இன்றைய போரில் மட்டக்களப்பில் பலிகளின் ஓங்கியுள்ளது என்பதையும் புலிகள் பலவீனப் படவில்லை என்பதனையும் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. சில வாரங்களாக புலிகளின் பலம் சிதைந்து விட்டதாக நம்பிய உலகநாடுகள் மீண்டும் கண்ணை விழித்து புலியின் ஆற்றலைக் கண்டு கொண்டது.

மட்டக்களப்பில் இராஜதந்திரிகள் காமடைந்த சம்பவத்தினால் மகிந்தர் பெரும் அவமானத்தினையும் பின்னடைவுகளையும் கண்டுள்ளதோடு மேற்குலகின் நம்பகத் தன்மையினையும் இழந்துவிட்டார்.

மகிந்த அரசாங்கம் தனது இராணுவ வெற்றிகள் பற்றி இனி எதனைக் சொன்னாலும் சர்வதேச சமூகம் நம்புவதற்குத் தயாராக இல்லை.

சிறிலங்கா அரசின் பொய்யான, புனைந்துருவாக்கப்பட்ட, கற்பனையான இராணுவ வெற்றிகளின் மாயைத் தன்மையியை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்து கொண்டது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மீது வெளியுலகம் நம்பகத் தன்மையினை இழந்துவிட்டது சிங்கள அரசுப்படைகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையினையும் சர்வதேசம் இழந்துவிட்டது புலிகள் பலவீனம் அடைகிறார்களா? என்று யோசித்த சர்வதேச சமூகத்திற்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டது.

புலிகள் புலிகளாகவேயுள்ளனர்.புலிகள் பதுங்குகின்றமை பயந்து அல்ல. பாய்வதற்கு தயாராவதற்கே. தமிழீழ விடுதலைப் போராட்டம் காலத்திற்குக் காலம் ஏராளமான பின்னடைவுகளை கண்டு, வீழ்ந்து எழுந்து வெற்றிப்படிகளைத் தாண்டி வந்தது. மணலாறு காட்டில் இந்தியப்படைச்சமரும் ஜெயசிக்குரு சமரும் யாழ் பின்வாங்கலும் இதற்கு நல்ல ஆதாரம். அப்போது புலிகள் பலவீனப்பட்ட போதும் புலிகள் வீழ்ந்துவிடவில்லை அதைவிட உத்வேகத்துடன் மீண்டும் எழுந்து பல இராணுவ சாதனைகளை நிலை நாட்டி சிங்கள அரசையும் சர்வதேச சமூகத்தினையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்

அதனுடன் ஒப்பிடும் போது வாகரை, மூதூர், சம்பூர் பிரதேசங்களை படையினர் ஆக்கிரமித்தமையினைக் கொண்டு புலிகள் பலவீனப்பட்டுப் போனார்கள் என்று ஆய்வு செய்தவர்களும் கணிப்பீடு செய்தவர்களும் கடந்தகால வரலாற்றினைப் புரியாதவர்களே

புலிகள் மட்டக்களப்பில் தோல்வி அடையவில்லை. திருகோணமலையில் Nதூல்வி அடையவில்லை. புலி புலியாகவே உள்ளது. வாகரை மீட்கப்படும். சம்பூர் மீட்கப்படும். மூதூர் மீட்கப்படும். தமிழர் தாயகம் முழுவதும் மீட்கப்படும்.

நன்றி

ஈழமுரசு

''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்''

-ச.சங்கரன்-

சம்பூர்- வாகரையில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு சிறு வெற்றியினைப் பெற்றுக்கொண்டு அதனை இமாலய வெற்றியாகவும்,; மட்டக்களப்பு திருகோணமலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் இராணுவ வெற்றியைவிட பலபத்து மடங்கு ஊடாகவெற்றியை மகிந்தர் அரசு பெற்றுக் கொண்டது. அல்லது காட்டிக் கொண்டது.

" வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்" என்கிறார் ஜேர்மனியின் கேணல் அடம்ஸ் மாக்கர்

அதே போல் அரசுக்கு கிழக்கில் வாகரையை பிடித்த வெற்றியைவிட உலகின் பிரதான இராஜதந்திரிகள் மத்மியில் வீழ்ந்து வெடித்த புலிகளின் நான்கு எறிகணைகள் புலிகளின் போரியல் ஆற்றலையும், போர் திறனையும் உலகறியச் செய்து விட்டது. இது புலிகளின் மேலாதிக்கத்தினை வெளிப்படுத்தி விட்டது.

மட்டக்களப்பில் புலிகளின் கதை முடிந்துவிட்டதாக அரசு மார்பு தட்டிக் கொண்டிருக்க மட்டக்களப்பில் யாருக்கும் படைகளினால் பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்பதனை புலிகள் நிருபித்துவிட்டனர் அங்கு புலிகள் எதையும் செய்து முடிக்கும் வல்லமையுடன் இருக்கின்றார்கள் என்பது ராஜதந்திரிகள் மூலம் உலகம் அறிந்த விடயமாகிவிட்டது.

இன்று மட்டக்களப்பில், போர் முனை யதார்த்தத்தின்படி புலிகளினால் எங்கும் எப்போதும் பாதுகாப்பு படைகளைத் தாக்க முடியும், எந்த இடத்திலும் புலிகளின் வலு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொப்பிக்கல காட்டைத் தவிர மீதி அனைத்து இடங்களும் மட்டக்களப்பில் படையினரின் வசம் என பிரச்சாரம் செய்த இனவாத பிரச்சார பீரங்கி கேகலிய ரம்புக்வெலவுக்கு நான்கு எறிகணைகள் விழிபிதுங்க வைத்துவிட்டன. அவரின் பிரச்சாரங்கள் எல்லாம் பொய்த்துப் பொடியாகி விட்டது.

சிறிலங்கா அரசால் மட்டக்களப்பு வெற்றி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை எறிகணைத் தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் முறியடித்து விட்டனர் என சண்டே ரைம் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறுகின்றார்.

விடுதலைப்புலிகள் வாகரையில் இருந்து பின் வாங்கியதை மட்டும் அரசு தனது இராணுவ வெற்றியாக கருதுகின்றது. இது புலிகளின் இராணுவ தந்திரோபாய பின்வாங்கல் படைகளை பரவவிட்டு புலிகள் அவர்களை தாக்குவார்கள் அல்லது வேறு எங்கோ தாக்குவார்கள்.

வாகரையில் படையினரை எதிர்த்து புலிகள் போரிடவில்லை தற்காப்புத் தாக்குதலை மட்டும் மேற்கொண்டு பின்வாங்கினர். அங்கு புலிகளின் போர்ப் படையணிகள் களமிறங்கவில்லை. படையினரை எதிர்த்து போரிடவில்லை.

ஆனால், அங்கு புலிகளுடன் பெரும் சமர் பரிந்து இராணுவ வெற்றியை ஈட்டியதாக அரசு மார்பு தட்டியது. இராணுவ வெற்றியாக கொண்டாடியது. அந்தளவுக்கு அங்கு சமர் நடக்கவும் இல்லை, அரச படைகளை எதிர்த்து புலிகள் போரிடவும் இல்லை. வுhகரை என்பது அரசு -புலிகளின் பலப்பரீட்சை கள முனையும் அல்ல.

ஆனால், வாகரையினை ஆக்கிரமித்து ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு பெருமை தேடிக் கொண்ட மாதிரி அங்கு ஏதும் நடக்கவில்லை.

" நான் அங்குள்ள உண்மை நிலையினை அறிந்துள்ளேன் அரசின் ஊடகத்துறையினர் வெளியிட்ட வெற்றிகளுக்கும் இராணுவ வெற்றிகளுக்கும் உண்மை நிலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன் " என பெயரைக் குறிப்பிட விரும்பாத இராஜ தந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். (சன்டே ரைம்ஸ் - இத்தால் அப்பாஸ்)

புலம் பெயர்ந்து வாழ்ந்த மக்கள் சிலர் மட்டக்களப்பு வாகரை வீழ்ச்சி பற்றி பெரிதும் மனம் கலங்கியது உண்டு. ஆனால் தமிழர்கள் கவலைப்படக்கூடியவாறு புலிகள் அங்கு தோல்வி காணவில்லை. புலிகளின் பலம் மட்டக்களப்பில் சீர்குலையவில்லை.

இன்றைய போரில் மட்டக்களப்பில் பலிகளின் ஓங்கியுள்ளது என்பதையும் புலிகள் பலவீனப் படவில்லை என்பதனையும் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. சில வாரங்களாக புலிகளின் பலம் சிதைந்து விட்டதாக நம்பிய உலகநாடுகள் மீண்டும் கண்ணை விழித்து புலியின் ஆற்றலைக் கண்டு கொண்டது.

மட்டக்களப்பில் இராஜதந்திரிகள் காமடைந்த சம்பவத்தினால் மகிந்தர் பெரும் அவமானத்தினையும் பின்னடைவுகளையும் கண்டுள்ளதோடு மேற்குலகின் நம்பகத் தன்மையினையும் இழந்துவிட்டார்.

மகிந்த அரசாங்கம் தனது இராணுவ வெற்றிகள் பற்றி இனி எதனைக் சொன்னாலும் சர்வதேச சமூகம் நம்புவதற்குத் தயாராக இல்லை.

சிறிலங்கா அரசின் பொய்யான, புனைந்துருவாக்கப்பட்ட, கற்பனையான இராணுவ வெற்றிகளின் மாயைத் தன்மையியை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்து கொண்டது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மீது வெளியுலகம் நம்பகத் தன்மையினை இழந்துவிட்டது சிங்கள அரசுப்படைகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையினையும் சர்வதேசம் இழந்துவிட்டது புலிகள் பலவீனம் அடைகிறார்களா? என்று யோசித்த சர்வதேச சமூகத்திற்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டது.

புலிகள் புலிகளாகவேயுள்ளனர்.புலிகள் பதுங்குகின்றமை பயந்து அல்ல. பாய்வதற்கு தயாராவதற்கே. தமிழீழ விடுதலைப் போராட்டம் காலத்திற்குக் காலம் ஏராளமான பின்னடைவுகளை கண்டு, வீழ்ந்து எழுந்து வெற்றிப்படிகளைத் தாண்டி வந்தது. மணலாறு காட்டில் இந்தியப்படைச்சமரும் ஜெயசிக்குரு சமரும் யாழ் பின்வாங்கலும் இதற்கு நல்ல ஆதாரம். அப்போது புலிகள் பலவீனப்பட்ட போதும் புலிகள் வீழ்ந்துவிடவில்லை அதைவிட உத்வேகத்துடன் மீண்டும் எழுந்து பல இராணுவ சாதனைகளை நிலை நாட்டி சிங்கள அரசையும் சர்வதேச சமூகத்தினையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்

அதனுடன் ஒப்பிடும் போது வாகரை, மூதூர், சம்பூர் பிரதேசங்களை படையினர் ஆக்கிரமித்தமையினைக் கொண்டு புலிகள் பலவீனப்பட்டுப் போனார்கள் என்று ஆய்வு செய்தவர்களும் கணிப்பீடு செய்தவர்களும் கடந்தகால வரலாற்றினைப் புரியாதவர்களே

புலிகள் மட்டக்களப்பில் தோல்வி அடையவில்லை. திருகோணமலையில் Nதூல்வி அடையவில்லை. புலி புலியாகவே உள்ளது. வாகரை மீட்கப்படும். சம்பூர் மீட்கப்படும். மூதூர் மீட்கப்படும். தமிழர் தாயகம் முழுவதும் மீட்கப்படும்.

நன்றி

ஈழமுரசு

கருத்துக்களை தகுந்த நேரத்தில் தந்த ஈழமுரசு க்கு நன்றி! அத்தோடு இத்த கருத்தை பலர் அதாவது இந்த இணையத்தளத்தில் கருத்துக்களை வைத்த விற்பண்ணர்கள் கூட தமிழர் படை பலம் இழந்து விட்டது இனி தமிழர் படை காட்டுக்குள் செல்ல வேண்டியது தான் இதையும் மிஞ்சி வீர கேசரி பத்திரிகை ஆசிரியர் தமிழர் சாதியை சாடி நாதி அற்ற சாதியா என்று விணா எழுப்பிய விடையம் எமது மனதை மிகவும் துன்பப்படுத்தியது அதாவது ஒரு பத்திரிக்கை ஆசிரியன் மக்களுக்கு உள்ளதை உள்ளபடி ஆய்ந்து ஆராய்ந்து அறிந்து எழுத வேண்டியவன் இப்படி எழுதியது என்னையும் எனது குடும்பத்தையும் மட்டும் அல்ல பல தமிழர்களை துன்பத்தில் விழுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஆதலாம் உமது கருத்துக்களுக்கு நன்றி!

நாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.