Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்­கு­று­தி­களை மறக்­கின்­ற­னரா அரசியல் தலை­வர்கள்?

Featured Replies

வாக்­கு­று­தி­களை மறக்­கின்­ற­னரா அரசியல் தலை­வர்கள்?

 

பிர­த­மரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள சூழ­லிலும் தேசிய அர­சியல் நெருக்­க­டிகள் தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மிகப் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் 16 உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை ஆத­ரித்து வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து தேசிய அர­சி­யலில் இந்த நெருக்­கடி தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. காரணம் இவ்­வாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உட­ன­டி­யாக அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­க­வேண்டும். அல்­லது அமைச்சர் பத­வியில் இருந்து அவர்கள் விலக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்­கைகள் எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

விசே­ட­மாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் முக்­கிய அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­நி­திகள் இந்தக் கோரிக்­கையை மிகவும் தீவி­ர­மான முறையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். அந்­த­வ­கையில் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வு ஏற்­படும் வரை தென்­னி­லங்கை தேசிய அர­சியல் கள­மா­னது பர­ப­ரப்­பா­கவே இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இரண்டு பிர­தான கட்­சி­களின் தலை­வர்கள் என்ற வகையில் இந்த தேசிய அர­சி­யலில் நிலவும் நெருக்­கடி நிலை­மைக்கு தீர்வைக் காணும் நோக்கில் அர­சியல் காய்­களை நகர்த்தி வரு­கின்­றனர். அந்­த­வ­கையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தேசிய அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிக்கு தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­துடன் தமது கட்­சி­களின் அதி­கா­ரங்­களை தக்க வைப்­ப­தற்கும் அர­சியல் இரா­ஜ­தந்­திர ரீதியில் செயற்­பட்டு வரும் சூழலில் எங்கே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது இந்த நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை மறந்து விட்­ட­னரா என்ற கேள்வி மக்கள் மத்­தியில் எழு­வதை தவிர்க்க முடி­யாமல் இருக்­கின்­றது. மக்­க­ளுக்கு அந்­த­ளவு தூரத்­திற்கு சந்­தே­கங்கள் ஏற்­படும் வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி அதி­கா­ரத்­திற்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்­பினர் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தமது அர­சியல் இருப்பை தக்­க­வைக்­கவும் தமது கட்­சி­களின் செல்­வாக்கை மக்கள் மத்­தியில் அதி­க­ரிப்­ப­தற்கும் மிகத் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­ற­னரே தவிர மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­டு­வ­தாக இல்லை.

எனவே தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெ­று­கின்ற இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னதும் தலை­வர்­க­ளான பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் தாம் ஆட்­சிக்கு வரும்­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நினை­வு­ப­டுத்தி பார்ப்­பது பொருத்­த­மாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணுதல், யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து மக்­க­ளுக்கு நீதி வழங்­குதல், இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­துதல், பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்றி நம்­பிக்­கையை கட்­டி ­யெ­ழுப்­புதல், புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ருதல், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குதல், தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைத்தல், மலை­ய­கத்தின் வீட்டுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுதல், வடக்கு, கிழக்கில் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தல், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை வழங்­குதல், காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணுதல், நீதித்­து­றையின் சுயா­தீ­னத்தைப் பாது­காத்தல் உள்­ளிட்ட ஏரா­ள­மான வாக்­கு­று­தி­களை வழங்­கியே இரண்டு தலை­வர்­களும் ஆட்­சிக்கு வந்­தனர்.

அதே­போன்று இலங்கை அர­சியல் வர­லாற்றில் முக்­கிய திருப்­பு­மு­னை­யாக இரு­பெரும் துரு­வங்­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. இது புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வைக் காண்­ப­தற்கும் இனங்­க­ளுக்­கி­டையில் நிலை­யான நல்­லி­ணக்­கத்­தையும் புரிந்­து­ணர்­வையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு துணை­யாக அமையும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. இதன்­கா­ர­ண­மாக எதிர்க்­கட்சி அந்­தஸ்தைப் பெற்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்­பி­டித்­தது. வடக்கு, கிழக்கில் ஏனைய தமிழ் பேசும் கட்­சி­களின் கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொண்ட வண்­ணமே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது.

குறிப்­பாக இரண்டு பிர­தான கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய தேசிய அர­சாங்கம் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தரத் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்கும் என்ற ஒரே­யொரு நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றனர். இன்­னொரு வழியில் கூறு­வ­தென்றால் தேசிய அர­சாங்கம் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுத்­தரும் என்ற நம்­பிக்­கையை தமிழ்த் ­தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்று கூறலாம். நடந்து முடிந்த பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் கூட தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

இந்­நி­லையில் இவ்­வாறு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன் ஆத­ரவைப் பெற்­றி­ருக்­கின்ற இரண்டு பிர­தான கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய தேசிய அர­சாங்­க­மா­னது தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக அளித்த வாக்­கு­று­திகள் காற்றில் பறக்கத் தொடங்­கி­விட்­ட­தா­கவே மக்கள் எண்­ணு­கின்­றனர். அந்­த­ள­விற்கு அர­சாங்­கத்தின் பக்­கத்தில் நம்­பிக்­கை­யற்ற தன்மை வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

தேசிய அர­சாங்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டதும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சிகள் கடு­கதி வேகத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அத்­துடன் புதி­தாக உரு­வாக்­கப்­படும் அர­சியல் அமைப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்வும் உள்­ள­டக்­கப்­படும் வகையில் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எவ்­வ­கை­யான தீர்­வுத்­திட்டம் வரப்­போ­கின்­றது என்­பதில் குழப்­பங்கள் காணப்­பட்­ட­போ­திலும் ஒரு நிரந்­தரத் தீர்வைக் காண்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பு அப்­போது அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் மத்­தியில் காணப்­பட்­டதை மக்கள் உணர்ந்­தனர். ஆனால் தென்­னி­லங்­கையில் கடும்­போக்­கு­வாத சக்­திகள் வெளிக்­காட்டத் தொடங்­கிய எதிர்ப்­பினை அடுத்து புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மந்­த­கதி நிலைக்கு சென்­ற­துடன் அது தொடர்பில் பேசு­வ­தற்கு தலை­வர்கள் தயங்கும் நிலை உரு­வா­கி­யது.

இதன் பின்­ன­ணி­யி­லேயே தற்­போது அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்­குமா என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் வலு­வ­டைய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. எனவே அர­சாங்­க­மா­னது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் தொடர்பில் அவ­தானம் செலுத்­த­வேண்­டி­யது கட்­டா­ய­மா­கின்­றது. தமது கட்­சி­க­ளுக்குள் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­களைத் தீர்ப்­ப­தற்கு வெளிக்­காட்டும் அக்­க­றையில் ஒரு குறிப்­பி­டத்­தக்க அள­வா­வது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் ஒன்றரை வருடகாலமே எஞ்சியுள்ள நிலையில் அதற்குள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கிறது. எந்தவகையிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டு செயற்படும் நிலைமைக்கு தலைவர்கள் சென்று விடக்கூடாது.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்துகின்ற சூழலில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கடினமான தடைகள் ஏற்படாது என்பதே யதார்த்தமாகும். காரணம் நாட்டின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்பாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு புரிந்துணர்வுடன் இருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. அந்த புரிந்துணர்வு வலுவடைந்து மக்களின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு துணைநிற்க வேண்டியது அவசியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-07#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.