Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு

Featured Replies

கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு

08-67c64ccf20289e969b73b6ebdd8b4a039e114ca7.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட போது, அக்­க­டத்தல் தொடர்பில் அப்­போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தக­வல்­களை அறிந்­தி­ருந்­த­தாக சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நேற்று கல்­கிசை நீதி­மன்றில் தெரி­வித்தார்.  

கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டமை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணைகள் தொடர்­பி­லான வழக்கு நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

'கடந்த 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன் நேஷன் பத்­தி­ரிகை உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு வந்­தனர். கீத் நொயாரைக் கண்­டு­பி­டிக்­கா­விட்டால் சர்­வ­தேச அளவில் சிக்­கல்­களை சந்­திக்க வேண்­டி­வரும் என அவர்கள் கூறி­யுள்­ளனர்.

 இதன்­போது கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கீத் நொயார் பெண்­ணொ­ருவர் தொடர்­பி­லான விவ­கா­ரத்­தி­னா­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக உட­ன­டி­யா­கவே பதி­ல­ளித்­துள்ளார். பின்னர் தற்­போது கைதா­கி­யுள்ள அப்­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிர­தா­னி­யாக செயற்­பட்ட அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து அவரை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­பி­ர­கா­ரமே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்டார். இல்­லை­யெனில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததைப் போன்று அவரும் கொல்­லப்­பட்­டி­ருந்­தி­ருப்பார்.' என இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

நேற்­றைய தினம் கீத் நொயார் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஏற்­க­னவே கைதாகி பிணையில் உள்ள இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்­ளியூ.புளத்­வத்த, எஸ்.ஏ.ஹேம­சந்­திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விம­ல­வீர, எச்.எம். நிசாந்த ஜய­தி­லக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு மன்றில் ஆஜ­ராக வேறு திகதி கொடுக்­கப்­பட்­டுள்­ளதால் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை.

எனினும் 8 ஆவது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னியும் முன்னாள் இரா­ணுவ படைப் பிரி­வு­களின் பிர­தா­னி­யு­மான முன்னாள் பதில் இரா­ணுவ தள­பதி அமல் கரு­ணா­சே­கர சிறைச்­சாலை அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் மன்றில் ஆஜர்ச் செய்­யப்­பட்டார். அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் இருந்து அவர் சக்­கர நாட்­கா­லி­யி­லேயே கல்­கிசை மேல­திக நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார். இந் நிலை­யி­லேயே வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

 இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் குமார ஆகி­யோ­ருடன் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம ஆஜ­ரானார்.

  8 ஆம் சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரால் அமல் கரு­ணா­சே­கர சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மேஜர் அஜித் பிர­சன்ன, நலின் இந்­தி­ர­திஸ்ஸ ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

 மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த அரச சட்­ட­வாதி லக்­மினி,

 ' 8 ஆவது சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரால் அமல் கரு­ணா­சே­கர, துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் 44 (அ) அத்­தி­யா­யத்தின் கீழும், தண்­டனை சட்டக் கோவையின் 32,102,113 (அ),140 ஆம் அத்­தி­யா­யங்­க­ளுடன் இணைத்து கூறப்­பட்­டுள்ள 314,315,316,317,300,332,333,355, 380 ஆம் அத்­தி­யா­யங்­களின் பிர­கா­ரமும் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்­தி­ர­வதை மற்றும் பிற கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது சீர­ழிக்கும் நட­வ­டிக்­கைகள் அல்­லது தண்­ட­னை­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 2 ஆம் உப அத்­தி­யா­யத்தின் அ,ஏ ஆகிய பிரி­வு­களின் கீழும் தண்­டனைக் குரிய குற்­றங்­களைப் புரிந்­துள்ளார்.

 இந்த சந்­தேக நப­ரிடம் நாம் கைது செய்­தது முதல் இன்னும் வாக்கு மூலம் பெற­வில்லை. அவ­ரிடம் வாக்கு மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. எனவே சிறையில் அவ­ரிடம் வாக்கு மூலம் பெற அனு­மதி கோரு­கின்றோம். உண்­மையில் இவ்­வ­ழக்கின் பிர­தான சந்­தேக நபர் இந்த 8 ஆவது சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வே­யாவார். அவ­ரது கட்­ட­ளையின் பிர­கா­ரமே அனைத்தும் நடந்­துள்­ளன.

 கீத் நொயார் கடத்­தப்­பட்டு வெள்ளை வேனொன்றில் நிர்­வா­ண­மாக்­கப்­பட்டு கட்டி தலை கீழாக தொங்­க­வி­டப்­பட்டு கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு தாக்­கப்­பட்­டுள்ளார். சுயா­தீ­ன­மாக தனது பேனையை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ரான அவர் இவ்­வ­ளவு கொடூ­ர­மாக நடத்­தப்­பட்­டுள்ளார். இன்று அந்த ஊட­க­வி­ய­லாளர் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழும் அள­வுக்கு அந்த கொடூரம் அவரை பாதித்­துள்­ளது.

இவ்­வாறு கடத்­தப்­பட்­டவர் தொம்பை - பதி­வத்தை பாது­காப்பு வீட்­டி­லேயே தடுத்து வைக்­கப்­பட்டு தாக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான சாட்­சி­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பது­வத்தை தொலை­பேசி கோபுரத் தக­வல்கள் இதனை உறுதி செய்­கின்­றன.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன் நேஷன் பத்­தி­ரிகை உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு வந்­தனர். கீத் நொயாரைக் கண்­டு­பி­டிக்­கா­விட்டால் சர்­வ­தேச அளவில் சிக்­கல்­களை சந்­திக்க வேண்­டி­வரும் என அவர்கள் கூறி­யுள்­ளனர்.

 இதன்­போது கோத்­தா­பய ராஜ­பக்ஷ, கீத் நொயார் பெண்­ணொ­ருவர் தொடர்­பி­லான விவ­கா­ரத்­தி­னா­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக உட­ன­டி­யா­கவே பதி­ல­ளித்­துள்ளார். பின்னர் தற்­போது கைதா­கி­யுள்ள அப்­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிர­தா­னி­யாக செயற்­பட்ட அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து அவரை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­பி­ர­கா­ரமே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்டார். இல்­லை­யெனில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததைப் போன்று அவரும் கொல்­லப்­பட்­டி­ருந்­தி­ருப்பார்.

 அன்று இருந்த ஆட்சி தொடர்பில் நாம் அனை­வரும் அறிந்­துள்ளோம். அந்த ஆட்சி மாற்­றப்­பட்­ட­மைக்­கான கார­ணத்­தையும் நாம் அறிவோம். சுயா­தீ­ன­மாக பேனையைப் பயன்­ப­டுத்­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு நடந்த இந்த கொடு­மை­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது இந்த நீதி­மன்றின் கடமை. இல்­லா­விட்டால் இந்த நீதி­மன்றில் எந்த பெறு­ம­தியும் இல்லை என்றார்.

 இதன்­போது ஏற்­க­னவே பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்க போதிய சான்­றுகள் இல்லை என கல்­கிசை மேல­திக நீதிவான் தீர்­மா­னித்­தமை தொடர்பில் வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன.

 இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி, கட­மைக்­காக வழங்க்­கப்­பட்ட துப்­பாக்­கி­யாக இருப்­பினும் அர­சியல் வாதி­களின் குறு­கிய நோக்­கங்­களை நிறை­வேற்ற பயன்­ப­டுத்­தப்­படும் போது அது சட்ட விரோ­த­மே­யாகும். அது துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடி­யு­மா­னதே என்றார்.

 எனினும் சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி நலின் இந்­த­ர­திஸ்ஸ, ஏற்­க­னவே கொழும்பு மேல் நீதி­மன்றம் பிணை வழங்­கிய முதல் 6 சந்­தேக நபர்கள் மற்றும் கல்­கிசை நீதி­மன்றம் பிணை வழங்­கிய 7 ஆம் சந்­தேக நபர்­களின் பிணை உத்­த­ர­வினை சுட்­டிக்­கா­டடி துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்டம் உள்­ள­டங்­காது எனவும், நீதிவான் நீதி­மன்றில் பிணை வழங்­கு­வதை தடுக்கும் முக­மாக துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்டம் 8 ஆம் சந்­தேக நப­ருக்கு போடப்­பட்­டுள்­ள­தா­கவும் வாதிட்டார்.

துப்­ப­க­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் 8 ஆவது சந்­தேக நப­ருக்கு குற்றம் சுமத்த சான்­றுகள் இல்லை என நீதிவான் லோச்­சன அபே­விக்­ரம தீர்­மா­னிக்­கவே, மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு பிணை கோரி வாதப் பிர­தி­வா­தங்கள் அரம்­ப­மா­கின.

 இதன்­போது முதலில் வாதிட்ட சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி நலின் இந்­தி­ர­திஸ்ஸ,

 பினை சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யா­யத்தின் பிர­காரம் பிணையை மறுப்­ப­தற்­கான எந்த கார­ணி­களும் மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு எதி­ராக இல்லை என்றார்.

 எனினும் அதனை மறுத்த அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி, சந்­தேக நப­ரா­னவர் நாட்டின் தற்­போ­தைய பாது­கா­பபு செயலர் கபில வைத்­திய ரத்ன மற்றும் இந்த நீதி­மன்­ருக்கு தவ­றான தக­வல்­களை அளித்து வெளி­நாடு செல்ல முற்­பட்டார். அத்­துடன் இவ்­வ­ழக்கில் சாட்சி வழங்கவுள்ளவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள இராணுவத்தின் நேர்மையான உறுப்பினர்கள். இவரோ மேல் நிலை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றுள்ளதுடன் தற்போது பாதுகாப்பு கல்லுரியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். எனவே அவரால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும்

 அதே போன்று கீத் நொயார் தடுத்து வைக்கப்பட்ட வீடு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் இவரால் மறைக்கப்பட்டுள்ளன. அதனை தேட வேண்டிய பொறுப்பு சி.ஐ.டி. க்கு உள்ளது. இவர் வெளியில் இருந்தால் விசாரணைகளுக்கு பாதிப்பு. என்றார்.

 இவற்றை ஆராய்ந்த நீதிவான் அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினியின் வாதத்தை ஏற்று சந்தேக நபரான மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை எதிர்வரும் மே 2 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்கவும் அன்ரைய தினம் விசாரணை அரிக்கையை மன்றில் தாக்கல்ச் செய்யவும் உத்தரவிட்டார்.

 நேற்றைய தினம் இந்த வழக்கானது சுமார் மூன்றரை மணி நேரம் வரை விசாரணைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.