Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன

Featured Replies

சசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள்... 'பளிச்!'

சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன.

 

சசி குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள்... 'பளிச்!'




ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, திவாகரனுக்கு பிடிக்கவில்லை. குடும்பத்திலும், அரசியலிலும், தன்னை முன்னிலைப்படுத்த, திவாகரன் விரும்புகிறார். இதனால் யார் பெரியவர் என்பதில், அவருக்கும், தினகரனுக்கும் இடையே, அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது, கடும் மோதலாக வெடித்துள்ளது.இதை அம்பலப்படுத்தும்விதமாக, திவாகரனுக்கு ஆதரவாக, அவரது மகன் ஜெயானந்த், நேற்று முன்தினம் மதியம் 2:07 மணிக்கு தன் பேஸ்புக் பக்கத்தில் 'மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால், அந்த அமைப்பு, விரைவில் சமைக்கப்படும்' என பதிவிட்டார்.மீண்டும் மாலை 6:56 மணிக்கு 'என்னால் முடிந்த நல்லதை, போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்யப் போகிறேன். அரசியலில் செயல்படப் போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப் போவதில்லை. என்னை சீண்டி, அரசியலில் இழுத்து விட்டால் தான் உண்டு' என்ற கருத்தை பதிவிட்டார்.அதன் தொடர்ச்சியாக, நேற்று மதியம் 'என் நேற்றைய பதிவில், நான், அ.ம.மு.க., என்று, எங்கும் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமலே, நான் அதைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என, சில நிர்வாகிகள், ஏன் நினைக்கின்றனர்?

எப்போது பிரச்னை வரும் என சிலர், நம் கூட்டத்திலேயே காத்திருப்பதாக அறிந்தேன். நம் தலைமை, இதை கண்டறியும் என நம்புகிறேன்' என, பதிவிட்டார்.அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, தினகரன் தரப்பில், அவரது ஆதரவாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் தன் முகநுால் பக்கத்தில், நீண்ட விளக்கத்தை பதிவு செய்தார். அதன் விபரம்:ஜெ., மறைவுக்கு பின், கட்சியின் ஆணிவேராக சசிகலாவும், கட்சியின் முகமாக,தினகரனும் செயல்பட்டு வருகின்றனர். மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும், சசிகலா சிறைக்கு சென்ற பின், பல்வேறு அடக்கு முறைகள், அத்துமீறல்களுக்கு மத்தியில், கட்சியை வலிமையோடு முன்னெடுக்கும் பணியில், தினகரன் செயலாற்றி வருகிறார்.அவருக்கு பக்க துணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை, இன்முகத்தோடு ஏற்று, சசிகலா பின்னால், நான் உட்பட 21 எம்.எல்.ஏ.,க்களும், தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம். ஆனால், எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனும், ஜெயானந்தும் செயல்படுவது, வேதனை அளிக்கிறது.சசிகலா மீது சுமத்தப்பட்ட, பொய்யான வீண் பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும், தினகரன், கட்சியை தலைமையேற்று நடத்திய, இந்த காலகட்டத்தில் தான், முறியடிக்க முடிந்தது என்பதை, நினைவில் கொள்ளுங்கள்.கடந்த ஆண்டு மறைந்த, மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்று, துக்கம் விசாரித்த, சில அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும், மூளைச் சலவை செய்து அவர்களை நிரந்தரமாக பழனிசாமி அணியில் இருக்குமாறு பார்த்துக் கொண்டது யாரென்பதும், எங்களுக்கு தெரியும்.மதவாத சக்திகளுக்கு, ஒருபோதும் அடிபணியக் கூடாது என்ற, காரணத்தால் தான், சசிகலா, நெஞ்சம் நிமிர்த்தி, சிறைக்கு சென்றார். ஆனால், ஏதோ தங்கள் பின்னால் தான் 18 எம்.எல்.ஏ.,க்களும் இருக்கின்றனர் என்பது

 

போல், தோற்றத்தை உருவாக்கி, முதல்வர் பழனிசாமியோடு தொடர்பு வைத்து, 'சசிகலாவை மீட்கப் போகிறேன்' என்ற ரீதியில், திவாகரன் செயல்படுவது, உண்மைக்கு புறம்பானது.

இதை, முதலில் சசிகலா ஏற்றுக் கொள்வாரா... தங்களின் சுய லாபத்திற்காக, கட்சியையும், எங்களின் தியாகத்தையும் பலிகடாவாக்க முனையாதீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்.முதல்வர் பழனிசாமி அணி நிர்வாகியான, சிவகிரி என்பவர், '18 எம்.எல்.ஏ.,க்களும், திவாகரன் பின்னால் இருக்கின்றனர்' என்பதைப் போன்ற, ஒரு பொய் பரப்புரையை செய்கிறார். இவர், யார் துாண்டுதலில் செயல்படுகிறார் என்பது, எங்களுக்கு தெரியும்.எங்கள் தலைமை சசிகலாவும், தினகரனும் தான். இவர்களைத் தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும், எங்கள் சிரம் அசையாது. எவருக்காகவும், எங்கள் தரம் மாறாது. எங்கள் பயணம், தினகரனுடன் தான் என்பதில், மலையளவு உறுதியோடு இருக்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்
 

விரோதிகள் முயற்சி!



சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, தினகரன், நேற்று வெளியிட்ட அறிக்கை:நம் மீதான பொய் பிரசாரங்களை முறியடித்து, தமிழக மக்களின் பேரன்பை பெற்ற இயக்கமாக, அ.ம.மு.க.,வை நிலைநாட்டி உள்ளோம். நம் கட்சியின் முன்னேற்றத்தை முடக்கும் எண்ணத்தோடு, அனைத்து வழிகளிலும், நம் விரோதிகள் முயன்று வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளம் வழியாக, நம் லட்சிய பயணத்தின் பாதையை, திசை திருப்ப முயலும், கட்சி விரோத சிந்தனை கொண்டோரின் திட்டத்திற்கு, ஒருபோதும் நாம் இடமளிக்கக் கூடாது.சமூக ஊடகங்களில், கட்சிக்கு விரோதமாக வௌியிடப்படும், பல சித்தரிக்கப்பட்ட பதிவுகளை பார்த்த உடனே, கருத்து தெரிவிப்பதை தவிர்த்து, அதன் உண்மைத் தன்மையை, ஊர்ஜிதம் செய்ய வேண்டும். பிரிவினையை, ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நம் சிந்தனையையும், கவனத்தையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டிய தருணமிது. எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல், அவற்றை வென்று காட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். .- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=2006106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.