Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!!

Featured Replies

 
 

அன்றைய ஜே.ஆர்.- ராஜிவ் ஒப்பந்தமும் இன்றைய ரணில்- சம்பந்தன் ஒப்பந்தமும்!!

கர­லி­யத்தை கிரா­மத்­தைச் சேர்ந்த சாலிஸ் முத­லாளி அந்­தக் கிரா­மத்­துக்கே தலை­வர் போன்­ற­வர். பாதிக் கிரா­மத்­துக் குச் சொந்­தக்­கா­ரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்­னந்­தோட்­டங்களுக்­கும், பல ஏக்­கர் வயல்­நி­லத்­துக்­கும் சொந்­தக்­கா­ரர். இவை­கள் அனைத்­தை­யும் தனித்து பாது­காப்­பது சிர­ம­மென உணர்ந்த சாலிஸ் முத­லாளி, அண்­டைக் கிரா­மங்­கள் சில­வற்­றி­லி­ருந்து தொழி­லா­ளர்­க­ளைக் குறைந்த சம்­ப­ளத்­துக்கு வேலைக்­க­மர்த்தி தமது தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரிப்­பித்து வந்­தார்.

தமது தோட்­டங்­க­ளி­லேயே அந்தத் தொழிலாளர்கள் தங்கி வாழ்­வ­தற்கு வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். அவர்­க­ளது வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக அமைந்­தது. சாலிஸ் முத­லாளி முது­மை­ய­டைந்த வேளை, அந்­தத் தொழி­லா­ளர்­க­ளது பிள்­ளை­களே அவ­ரது தோட்­டங்க­ளில் வேலை செய்து வந்­த­னர்.

அது மட்­டு­மன்றி, சாலிஸ் முத­லா­ளி­யால் ஆரம்­பத்­தில் வேலைக்கு அமர்த்­தப்­பட்ட தொழி­லா­ளர்­க­ளது பேரப்­பிள்­ளை­க­ளும் கூட அந்த வேளை­யில் தோட்­டங் க­ளில் வேலை­க­ளில் ஈடு­பட்டு வந்­த­னர். அதிக காலம் கழி­வ­தற்கு முன்­னர் அந்­தத் தொழி­லா­ளர்­கள் வாழ்ந்த இடங்­கள், வீடு­கள், அவர்­கள் வேலை­செய்த முத­லா­ளி­யின் தோட்­டங்­கள் அந்­தத் தொழி­லா­ளர்­க­ளுக்­குச் சொந்­த­மா­கின.

அவற்­றுக்­கான உறு­தி­க­ளை­யும் அந்­தந்­தத் தொழி­லா­ளர்­க­ளால் பெற முடிந்­தது. அந்­தத் தொழி­லா­ளர்­க­ளது பூர்­வீக கிரா­மங்­க­ளது உற­வி­னர்­கள், குறித்த தொழி­லா­ளர் தரப்­புக்­காக உரிமை கோரி சாலிஸ் முத­லா­ளி­யு­டன் மோதல்­க­ளில் ஈடு­பட்­ட­னர். சாலிஸ் முத­லா­ளி­ யின் பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­கள்கூட அந்த இடங்­க­ளுக்கு உரிமை கோர இய­லாது போயிற்று.

சாலிஸ் முத­லா­ளி­ யால் மெள­னம் காப்­ப­தை­விட வேறெ­த­னை­யும் செய்ய இய­லாது போயிற்று. மிகப் பெறு­மதி வாய்ந்த தமது பெரும் சொத்­துக்­களை இழக்க நேர்ந்த கர­லி­யத்த கிரா­மத்து சாலிஸ் முத­லா­ளி­யின் கதை­யின் ஆரம்ப,மத்திய, முடிவுகள் இவை!.

கீழே குறிப்­பி­டப்­ப­ட­வுள்ள கதை­யின் ஆரம்­பத்தை இலங்கையின் பழைய அர­சி­யல் வர­லாற்றை அறிந்­தோர் நன்கறி­வர். நடுப்­ப­குதி குறித்து விளக்­கிக் கூறக் கூடி­ய­தா­யி­ருக் கும். முடிவு எவ்­வா­றி­ருக்­கும் என்­பது குறித்து இப்­போது எது­வும் உறு­தி­யா­கக் கூற இய­லாது.

ஜே.ஆரின் கடை­சிக் கால அர­சி­யல் வாழ்க்கை
பரி­தா­ப­க­ர­மா­னது

1980துகள், அவ்வேளையில் 80 வய­தைத் தாண்­டிய ஜே. ஆரது அரச தலை­வர் பத­வி­யின் முடி­வுக்­கா­லம். 1987ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் ஜே. ஆர் அர­சி­ய­லில் கழுத்தில் கயிறு இறு­கிய நிலை­யில் செயற்­பட நேர்ந்­தது. இலங்­கைத் தமிழ் மக்­கள் தொடர்­பில் இந்­தியா பார­தூ­ர­மான விதத்­தில் தலை­யீட்டை ஆரம்­பித்­தி­ருந்­தது. பிர­பா­க­ரன் உட்­பட விடு­த­லைப் புலிப் போரா­ளி­கள் தமிழ் நாட்­டைக் கைவிட்டு இலங்­கைக்­குத் திரும்­பி­வி­டத் தீர்­மா­னித்­தி­ருந்­த ­னர்.

ஜே. ஆர், யாழ்ப்­பா­ணத்­துக்கு இரா­ணு­வத்தை அனுப்பி விடு­த­லைப் புலி­களை நலி­வு­ப­டுத்­து­வதை தமிழ் நாட்டு மக்­கள் பொறுத்­துக் கொள்ள மாட்­டார்­க­ளெ­னக் கரு­திய இந்­திய அரசு, யாழ் குடா­நாட்­டில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை நிறுத்­திக் கொள்­ளு­மாறு இலங்கை அரசை வற்­பு­றுத்தி வந்­தது. இதற்­காக இந்­திய மத்­திய அர­சின் அமைச்­ச­ரான தினேஸ் சிங் இலங்­கைக்கு நேரில் வந்து ஜே. ஆரைச் சந்­தித்­தி­ருந்­தார்.

நல்­லெண்­ணத்தை இந்­தி­யா­வுக்கு வௌிப்­ப­டுத்­தும் விதத்­தில் பிரி­வி­னை­வா­தப் போரா­ளி­க­ளு­டன் எட்டு நாள்­க­ளுக்­குப் போர் நிறுத்­த­மொன்றை ஜே. ஆர் அறி­வித்­தார். அந்­தப் போர் நிறுத்­தம் நடை­மு­றை­யி­லி­ருந்த நாள்­க­ளில், திரு­கோ­ண­ம­லை­யி­லி­ ருந்து கொழும்­புக்கு பஸ்­ஸில் பய­ணித்த 130 பய­ணி­களை விடு­த­லைப்­பு­லி­கள் சுட்­டுப் படு­கொலை செய்­தி­ருந்­த­னர்.

கொழும்பு மத்­திய பஸ் நிலை­யத்­தில் விடு­த­லைப் புலி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட வெடிகுண்­டுத் தாக்­கு­த­லில் 150 பொது­மக்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

ஜே.ஆரின் வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்கை
இந்­தி­யா­வின் தலை­யீட்­டுக்கு வழி­வ­குத்­தது

தாம் கடும் அர­சி­யல் அநா­தை நிலைக்கு உட்­ப­டு­வ­தாக உணர்ந்த ஜே. ஆர், விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ராக வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தார். 1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட அந்த இரா­ணுவ நட­வ­டிக்கை, 10 நாள்­க­ளா­கத் தொடர்ந்து இடம் பெற்­றது.

இரா­ணு­வத்­தி­ன­ரில் 29 பேரும், விடு­த­லைப் புலி­க­ளில் நூறு பேர் வரை­யா­ன­வர்­க­ளும் அந்த நட­வ­டிக்­கை­யில் உயி­ரி­ழக்க நேர்ந்­தது. விடு­த­லைப் புலிப் போரா­ளி­கள் பின்­வாங்­கிச் சென்­ற­து­டன், தமிழ் நாட்­டி­லி­ருந்து போரா­ளி­கள் மற்­றும் பேரா­யு­தங்­களை வட­ப­கு­திக்­குக் கொண்­டு­வர விடு­த­லைப்­பு­லி­கள் பயன்­ப­டுத்­திய வட­கி­ழக்கு கடற்­பி­ராந்­தி­யத்தை இலங்கை இரா­ணு­வத் தரப்பு தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தது.

‘‘அந்த வேளை­ யில் இந்­திய அரசு தலை­யிட்­டி­ருக்­காதுவிட்­டால், விடு­த­லைப் பு­லி­களை எம்­மால் முற்­றா­கத் தோற்­க­டித்­தி­ருக்க முடிந்­தி­ருக் கும்.’’ என வட­ம­ராட்சி இரா­ணுவ நட­வ­டிக்­கைக்­குத் தலைமை தாங்­கிய பிரி­கே­டி­யர் விஜய விம­ல­வர்­தன பின்ன ரொரு சமயம் தெரி­வித்­தி­ருந்­தார்.

‘‘யாழ்ப்­பா­ணத்­தைக் கைப்­பற்ற இலங்கை இரா­ணு­வம் முய­லு­மா­னால், அதை இந்­திய அரசு பார்த்­துக் கொண்டு சும்மா இருக்­காது’’ என அந்த வேளை­யில் இந்­தி­யத் தூது­வ­ராக இங்கு கட­மை­யாற்­றிய ஜே. என். டிக்­சிற், அந்த வேளைய இலங்கை பாது­காப்பு அமைச்­சர் லலித் அது­லத்­மு­த­லிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.

உண­வுப் பொருள்­கள் தட்­டுப்­பாட்­டால் வாடிய பொது­மக்­க­ளுக்கு உத­வ­வென தமிழ்­நாடு அர­சின் அழுத்­தம் கார­ண­மாக இந்­திய அரசு 20 மீன்பிடி வள்­ளங்­க­ளில் உண­வுப் பொருள்­கள் மற்­றும் எரி­பொ­ருள்­களை வட­ப­கு­தித் தமி­ழர்­க­ளுக்­கென அனுப்பி வைத்­தது.

ஆயி­னும் இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் அந்­தப் பட­கு­கள் வட­ப­கு­திக்­குச் செல்­லத் தடை­வி­தித்து, அவற்றை மீண்­டும் இந்­தி­யா­வுக்கே திருப்பி அனுப்பி வைத்­தி­ருந்­த­னர். இத­னால் ஆத்­தி­ர­முற்ற இந்­திய மத்­திய அரசு, பன்­னாட்டு சட்­ட­ந­டை­மு­றை­களை மீறும் வகை­யில், ஆகாய மார்க்­க­மாக உணவு மற்­றும் மருந்து வகை­கள் அடங்­கிய 22 தொன் பொருள்­களை வட­ப­குதி மக்­க­ளுக்கு விநி­யோ­கித்­தது. அது இந்­திய மத்­திய அரசு தமிழ்ப் பிரி­வி­னை­ வா­தி­க­ளுக்­குப் பகி­ரங்­க­மாக உத­விய நிகழ்­வாக அமைந்­தது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில் அர­சி­யல் ரீதி­யி­லான பிறநாடுகளது உத­வி­கள் ஜே. ஆரை­விட்­டுத் தூர வில­கத் தொடங்கின. நாடு அர­சி­யல் ரீதி­யில் அரா­ஜக நிலைக்­குத் தள்­ளப்­பட்டு வந்­தது. இந்­திய தலைமை அமைச்­சர் ராஜீவ் காந்­தி­யு­டன் இலங்கை அரசு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொள்­வது குறித்து பல்­வேறு தரப்­புக்­க­ளி­னின்­றும் விமர்­ச­னங்­கள் தலை­தூக்­கின.

ஜே.ஆர் அத்­த­கைய அழுத்­தங்­க­ளால் குழுப்­ப­முற்ற போதி­லும், கடை­சி­யில் ராஜீவ்­காந்­தி­யு­டன் ஒப்­பந்த மொன்றை மேற் கொள்ள இணங்கினார். வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தற்­கா­லி­க­மாக ஒன்­றி­ணைத்து, நடை­மு­றை­யில் இருந்­து­வந்த அவ­ச­ர­கா­லச் சட்­டத்தை நீக்கி, பொது­சன அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­தும் இந்­தி­யத் தரப்­பின் யோச­னைக்கு ஜே.ஆர் இணங்க வேண்­டி­ய­தா­யிற்று.

நாடு பெரும் பர­ப­ரப்­பான நிலை­யில் இருந்த வேளை, 1987 ஆம் ஆண்­டின் ஜீலை மாதம் 29 ஆம் திகதியன்று இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் இந்­திய த ைலமை அமைச்­சர் ராஜீவ் காந்தி மற்­றும் இலங்கை அரச தலை­வர் ஜே. ஆர் ஆகி­யோ­ரால் கொழும்­பில் வைத்­துக் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

ஜே.ஆர்.ராஜீவ் இடையேயான
இலங்கை –இந்திய ஒப்பந்தம்

குறித்த இலங்கை இந்திய ஒப்­பந்­தத்­தில் பல முக்­கி­ய­மான அம்­சங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. இலங்­கை­யின் இறைமை, சுயா­தீ­ னம், மற்­றும் ஒருமைப்பாட்டைப் பேணும் வகை­யி­லும், நாட்­டில் பல்­லின,மற்­றும் பல்­வேறு மொழி­கள் பேசும் இனக்­கு­ழுமங்க­ளைப் பேணும் வகை­யி­லும், வெவ்­வேறு கலாசார மற்­றும் மொழி தனித்­து­வங்களைக் கொண்ட இனக் குழு­மங்­க­ளுக்கான பகு­தி­கள் நாட்­டில் உள்­ளன என்­பதை ஏற்­கும் வகை­யி­லும் நிர்­வா­கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டிருந் தது.

தமிழ் பேசும் மக்­கள் ஏனைய இனக் குழு­மங்­க­ளு­டன் இணைந்து வாழ்ந்து வந்த நாட்­டின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­கள், தமிழ் மக்­க­ளது பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­க­ளென எற்­றுக் கொள்­ளும் வகை­யி­லும், தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­ப­டும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், மற்­றும் ஏனைய மாகா­ணங்­க­ளிலும் தேர்­தல் மூலம் மாகா­ண­ ச­பை­களை உரு­வாக்­க­வும் ஒப்­பந்­தம் வழி வகுத்­தி­ருந்­தது.

அவை மட்­டு­மன்றி மாகா­ண­ச­பை­களை எவ்­வி­தம் உரு­வாக்கி, செயற்­பட வைப்­பிப்­பது என்­பவை தொடர்­பா­க­வும், இலங்கை அர­சுக்­கு­ எ­தி­ரான தமிழ்ப் போரா­ளி­கள் தரப்­புக்­களை எவ்­வி­தம் கட்­டுப்­ப­டுத்­து­வ­தெ­ன­வும், இந்­தி­யா­வி­லுள்ள இலங்­கைத் தமிழ் அக­தி­களை இலங்­கைக்­குக் கூட்­டி­வ­ரு­வது தொடர்­பா­க­வும், இலங்­கை­யி­லுள்ள குடி­யுரிமைக்­குத் தகு­தி­யற்ற இந்­தி­யத் தமி­ழர்­களை இந்­தி­யா­வுக்­குத் திருப்பி அழைப்­ப­து­பற்­றி­யும் இரு நாடு­க­ளும் குறித்த ஒப்­பந்­தத்­தின் மூலம் இணங்­கிக் கொண்­டன.

சிங்­க­ளம் இலங்­கை­யின் அர­ச­ க­ரும மொழி என்­ப­து­டன் தமி­ழும் ஆங்­கி­ல­மும் அரச மொழி­க­ளா­கப் பேணப்­ப­டு­மெ­ன­வும் இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது.

அர­சி­யல் சிக்­கல் முடிச்சை அவிழ்க்க வழி தெரி­யாது
தடு­மா­றிய ரணில்

ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறவு முறை­யில் ஜே. ஆரின் மரு­ம­கன். கடை­சி­யாக நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்ற கொஞ்­சக் காலத்­துக்­குள்­ளேயே, ரணில் கடும் அர­சி­யல் சிக்­கல் க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. கழுத்­துக்­கு அண்மையாக கத்தி வந்த நிலை. அர­சி­யல் ரீதி­யில் குழப்­பத்­துக்கு உள்­ளாக வேண்டி ஏற்­பட்­டது. ஒரே­யொரு ஆபத்­பாந்­தவ தரப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பது, இந்­தி­யா­வின் கைப்­பொம்­மையே. இந்­திய அர­சின் வழி­காட்­ட­லின் படியே அவர்­கள் செயற்­ப­டு­கின்­ற­னர். முக்­கிய பிரச்­சி­னை­கள் தலை­ தூக்­கும்போது கூட்­ட­மைப்­பின் தலை­வர் இந்­தி­யா­வுக்கு ஓடு­வ­தற்­கான இர­க­சி­யம் இதுவே.

கடந்த ஏப்­ரல் 4ஆம் நாள் ரணி­லின் தலை­விதி நிர்­ண­யிக்­கப்­ப­டும் நாளாக அமைந்­தது. தம்­மீ­தான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் தைத் தோற்­க­டிக்க வேண்­டு­மா­னால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு ரணி­லுக்கு அவ­சி­ய­மா­கி­யி­ருந்­தது. வழக்­கம்­போன்று பல்­வேறு நிபந்­த­னை­கள் ரணி­லின் முன்­னி­லை­யில் முன்­வைக்­கப்­பட்­டன.

கூட்­ட­மைப்­பால் முன்­வைக்­கப்­பட்ட பத்து நிபந்­த­னை­களை ஏற்­ற­தன் மூலமே ரணில் தமது தலைமை அமைச்­சர் பத­வி­யைத் தக்க வைத்­துக் கொள்ள முடி­யும் என்ற இக்­கட்டு நிலை. ரணி­லுக்கு வேறு வழி­யே­தும் இருக்­கி­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பத்து நிபந்­த­னை­க­ளும் ரணி­லால் ஏற்­கப்­ப­டு­கின்­றன. தலைக்கு வந்­தது தலைப்­பா­கை­யோடு போயிற்று என்ற விதத்­தில் ரணி­லுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட நம்்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்­டது.

ரணில் – சம்­பந்­தன் உடன்­பாடு

வடக்கு– கிழக்­குப் பிரச்­சி­னைக்கு உட­னடி அர­சி­யல் தீர்வு, அடுத்த தேர்­த­லுக்கு முன்­னர் புதிய அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­று­தல், படை­யி­னர் வச­முள்ள தமிழ் மக்­க­ளது காணி­களை விடு­வித்­தல், விசா­ர­ணை­ க­ளின்­றித் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­தல், காணா­மல் போனோர் தொடர்­பாக நட­ வ­டிக்கை மேற்­கொள்­ளல், வடக்­குக் கிழக்கு பகுதி மக்­க­ளது உரி­மை­க­ளைப் பாது­காத்­தல், தமிழ்ப் பகு­தி­க­ளின் இளை­ஞர் யுவ­தி­க­ளது வேலை­யில்­லாப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு, வேறு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு வடக்கு– கிழக்கு பகு­தி­க­ளில் நிய­ம­னங்­கள் வழங்­கா­தி­ருத்­தல், வடக்கு –கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளுக்கு மாவட்­டச் செய­லா­ளர்­களை நிய­மிக்­கும்போது, தமி­ழர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளித்­தல். வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளில் அந்­தந்த மாகாண சபை நிர்­வா­கங்­க­ளது கருத்­துக்­களை உள்­வாங்­கிச் செயற்­ப­டு­தல் என்­ப­வையே அந்த பத்து நிபந்­த­னை­ க­ளு­மா­கும்.

மேற்­கண்ட நிபந்­த­னை­கள் செயல்­வ­டி­வம் பெறுமா? என்­பது குறித்து எது­வும் சொல்­வ­தற்­கில்லை. 1987ஆம் ஆண்­டில் ரணி­லின் மாம­னா­ரான ஜே. ஆர் விடு­த­லைப் புலி­க­ளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்­கிய போதி­லும், அவர்­கள் அதற்கு எது­வித மதிப்­பும் கொடுக்­க­வில்லை. 2002ஆம் ஆண்­டில் ஜே. ஆரின் மரு­ம­கன் ரணில் விடு­த­லைப் புலி­க­ளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்கி­ய­வே­ளை­யி­லும் அவர்­கள் அதற்­கும் கூட எது­வித மதிப்­பும் கொடுக்­காது போரை முன்­னெ­டுத்­த­னர்.

அந்த வகை­யில் பார்க்­கும்­போது, பாம்­பென்று நினைத்­து பிடித்திருந்த கைப்பிடி யைக் கைவிடவோ, இல்லை யேல் அது பழு­தை­தான் ( வைக்­கோல்­புரி ) என்று நம்பி கைப்­பி­டியை இறுகப் பற்றிக்கொள்­ளவோ இய­லாத நிலை­யில் ரணில் குழும்­பிப் போக நேர்ந்­துள்­ளது.

http://newuthayan.com/story/86780.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.