Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்கவைப்பாரா ஜனாதிபதி?

Featured Replies

தக்கவைப்பாரா ஜனாதிபதி?

12-c97239f52f6f698cb7c511114fe6aa896b441bf9.jpg

 

லண்­டனில் நடந்த கொமன்வெல்த் தலை­வர்­களின் உச்­சி­மா­நாட்டில் பங்­கேற்று விட்டுத் திரும்­பி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

இந்த மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­காக, புத்­தாண்­டுக்கு அடுத்த நாளே- அதா­வது ஏப்ரல் 15ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்­பட்டுச் சென்ற ஜனா­தி­பதி, 23 ஆம் திகதி தான் நாடு திரும்­பி­யி­ருந்தார்.

முன்னர் அர­சி­யல்­வா­திகள் புத்­தாண்டை இலங்­கையில் கொண்­டா­டு­வ­தற்கே விரும்­பு­வார்கள். குடும்­பத்­துடன் புத்­தாண்டைக் கொண்­டாடும் வழக்கம் சிங்­க­ள­வர்­க­ளிடம் உள்­ளது. மத மற்றும் பாரம்­ப­ரிய சடங்­குகள், விளை­யாட்டு விழாக்கள் என்று புத்­தாண்டு களை­கட்­டு­வது வழக்கம்.

ஆனால் இப்­போது, அந்த நிலைமை மாறத் தொடங்­கி­யுள்­ளது. புத்­தாண்டு காலத்தில் வெளி­நாட்டில் விடு­மு­றையை அனு­ப­விக்­கின்ற வழக்கம் சிங்­கள அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் பர­வ­லாக தோன்­றி­யி­ருக்­கி­றது.

கடந்த புத்­தாண்டு காலத்தில் பல அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாட்டில் இருக்­க­வில்லை. வெளி­நாடு பறந்து விட்­டார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, கொழும்பில், இரா.சம்­பந்தன் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் இணைந்து புத்­தாண்டைக் கொண்­டாடி விட்டு, லண்­ட­னுக்குப் புறப்­பட்டுச் சென்று விட்டார்.

புத்­தாண்­டுக்குப் பின்னர் தலைக்கு எண்ணெய் வைக்கும் சம்­பி­ர­தாய வழக்கம் பௌத்­தர்கள் மத்­தியில் உள்­ளது. அதில் கூட பங்­கேற்­காமல் லண்­ட­னுக்­கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார் ஜனா­தி­பதி.

லண்­டனில் உள்ள விகா­ரையில் தான் ஜனா­தி­ப­தியின் தலையில் எண்ணெய் வைக்கும் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

பாரம்­ப­ரிய சடங்­கு­களைப் புறக்­க­ணித்து விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு வார­காலம் லண்­டனில் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­த­மைக்கு முக்­கிய காரணம் கொமன்வெல்த் தலை­வர்­களின் உச்சி மாநாடு மற்றும் அது­சார்ந்த நிகழ்­வு­களில் பங்­கேற்­பதுத் தான்.

கொமன்வெல்த் உச்சி மாநாட்டை முன்­னிட்டு, லண்­டனில் பல்­வேறு உப நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டன, அவற்றில் சில­வற்றில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கலந்து கொண்­டி­ருந்தார்.

சில அரங்­கு­களின், மாநா­டு­களில் அவர் உரை­யாற்­றினார். எனினும், கடந்த காலங்­களில் சர்­வ­தேச அரங்­கு­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கிடைத்த முக்­கி­யத்­துவம், இந்த கொமன்வெல்த் மாநாட்டில் அவ­ருக்குக் கிடைத்­த­தாகத் தெரி­ய­வில்லை.

கொமன்வெல்த் தலை­வர்­களின் உச்சி மாநாட்டில் பங்­கேற்கும் தலை­வர்­க­ளுக்­கான வர­வேற்பு, பக்­கிங்ஹாம் அரண்­ம­னையில் நடந்து கொண்­டி­ருந்த போது, அந்த மாளி­கைக்கு சற்றுத் தொலைவில் “ஜனா­தி­பதி மைத்­தி­ரியே திரும்பிப் போ” என்ற வாச­கங்கள் எழு­தப்­பட்ட அட்­டைகள் மற்றும் பதா­கை­க­ளுடன் புலம்­பெயர் தமி­ழர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இதற்கு முன்­னரும் லண்­ட­னுக்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு புலம்­பெயர் தமி­ழர்கள் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு முன்­னரை விட இம்­முறை சற்று அதி­க­மா­கவே வெளிப்­பட்­டி­ருப்­ப­தாக பலரும் கூறு­கின்­றனர்.

முன்னர் மஹிந்த ராஜபக் ஷ லண்­ட­னுக்குப் பயணம் மேற்­கொண்ட சில சந்­தர்ப்­பங்­களில், ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்று ஓடு­கின்ற அள­வுக்கு புலம்­பெயர் தமி­ழர்கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

அந்­த­ள­வுக்கு இல்­லா­வி­டினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரான போராட்டம் இப்­போது அங்கு வலு­வ­டையத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்தப் போராட்­டங்கள் பற்றி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ விடம் கேள்வி எழுப்­பப்­பட்ட போது "கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்றா விடின் இது­போன்ற போராட்­டங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும்“ என்று, பதி­ல­ளித்­தி­ருந்தார்.

 ஏற்­க­னவே, அவரும் இது­போன்ற போராட்­டங்­களைச் சந்­தித்து அனு­ப­வப்­பட்­ட­வ­ராக அவர் அவ்­வாறு பேச­வில்லை. எந்த வாக்­கு­று­தி­யையும் நிறை­வேற்­றாத ஜனா­தி­பதி என்று- மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சாடு­வ­தற்­கா­கவே அவர் அவ்­வாறு கூறி­யி­ருந்தார். 

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட பின்னர், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆரம்­பத்தில் புலம்­பெயர் தமி­ழர்கள் மத்­தியில் அவ்­வ­ள­வாக எதிர்ப்­புகள் இருக்­க­வில்லை. எனினும், இப்­போது நிலை­மைகள் மாறத் தொடங்­கி­யுள்­ளன.

இது புலம்­பெயர் தமி­ழர்­க­ளிடம் மட்டும் ஏற்­பட்ட மாற்றம் இல்லை. சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தி­யிலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது செல்­வாக்கை இழக்கத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

நோபல் சமா­தானப் பரி­சுக்­காக பரிந்­து­ரைக்­கப்­படும் அள­வுக்கு- மதிப்­புடன் இருந்த அவ­ரது செல்­வாக்கு இப்­போது அந்த நிலையில் இல்லை என்றே தெரி­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற போது, கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவி இலங்­கை­யிடம் தான் இருந்­தது. இதை­ய­டுத்து, 2015ஆம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டில் தலைமை மோல்­டா­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது,

மோல்­டாவில் நடந்த கொமன்வெல்த் மாநாட்­டிலும் சரி, 2015ம் ஆண்டு ஐ.நா பொதுச்­சபைக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக நியூயோர்க் சென்­றி­ருந்த போதும் சரி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மிகப்­பெ­ரிய வர­வேற்பு உலகத் தலை­வர்கள் மத்­தியில் காணப்­பட்­டது.

இந்த இரண்டு நிகழ்­வு­களின் போதும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் படம் எடுத்துக் கொள்­வ­தற்கு உலகத் தலை­வர்கள் பலரும் முண்­டி­ய­டித்­தனர் என்று அமைச்­சர்கள் பலரும் கூறித் திரிந்­தனர்.

ஐ.நா பொதுச்­சபைக் கூட்­டத்தில் பங்­கேற்ற உலகத் தலை­வர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட விருந்தின் போது, மிக­முக்­கிய நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு அருகே ஒரே மேசையில் அமரும் வாய்ப்பு அவ­ருக்கு அளிக்­கப்­பட்­டது. தேடி வந்து தலை­வர்கள் சந்­திக்கும் நிலையும் காணப்­பட்­டது.

ஆனால் அந்­த­ள­வுக்கு மதிப்­பார்ந்த நிலையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது தக்­க­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றாரா என்ற கேள்வி இருக்­கி­றது.

சில தலை­வர்கள், தமது ஆட்சி முறை­யினால் உல­க­ளவில் மதிப்புப் பெற்­றி­ருக்­கி­றார்கள். தாம் ஆட்­சிக்கு வந்த பின்னர், நாட்டை அபி­வி­ருத்தி செய்­வதில், பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில், காட்­டிய அக்­க­றை­யினால் தான், அவர்­களால் மதிப்பைப் பெற முடிந்­தது.

அத்­த­கை­ய­வர்­களின் வரி­சையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இடம்­பெறக் கூடிய நிலையில் இல்லை.

ஒரு அசைக்க முடி­யாத தலைவர் என்று கருத்­தப்­பட்டு வந்த மஹிந்த ராஜபக் ஷ வை தேர்­தலில் வீழ்த்தி வெற்றி பெற்­றவர் என்­ப­தற்­கா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன கொண்­டா­டப்­பட்டார்.

அந்தப் பெருமை அவ­ருக்கு நீண்ட நாட்கள் நிலைக்­காது என்­பது உறு­தி­யாகி விட்­டது. இனிமேல் அவர், தனது ஆட்­சியின் மூலம் தான் அநதப் பெரு­மை­யையும் மதிப்­பையும் பெற முடியும்.

ஆனால், இது­வ­ரையில் அத்­த­கைய மதிப்பை அவரால் பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை என்­ப­தையே கொமன்வெல்த் மாநாடு உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

பொது­வா­கவே, சர்­வ­தேச அளவில் நடக்கும் மாநா­டு­களில், உலகத் தலை­வர்­க­ளுக்­கி­டையில் இரு­த­ரப்பு பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு ஒழுங்­குகள் செய்­யப்­ப­டு­வது வழக்கம்.

நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், எல்லா நாடு­க­ளுக்கும், எல்லாத் தலை­வர்­களும் பயணம் செய்ய முடி­யாது என்­ப­தையும் கருத்தில் கொண்டே, இத்­த­கைய இரு­த­ரப்பு சந்­திப்­புகள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும்.

ஆனால், இம்­முறை கொமன்வெல்த் மாநாட்டில், பங்­கேற்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எந்­த­வொரு நாட்டின் தலை­வ­ரையும் சந்­தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புக் கிட்­ட­வில்லை.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, பிரித்­தா­னியப் பிர­தமர் தெரெசா மே உள்­ளிட்ட தலை­வர்­களைச் சந்­தித்துப் பேச்சு நடத்தும், திட்டம் ஜனா­தி­ப­திக்கு இருந்­தது.

எனினும், எவ­ரையும் தனித்துச் சந்­தித்துப் பேச வாய்ப்­புகள் கிடைக்­க­வில்லை. வர­வேற்பின் போது கைகு­லுக்கிக் கொண்­ட­துடன் சரி.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் படம் எடுத்துக் கொள்­வ­தற்கு முண்­டி­ய­டித்த உலகத் தலை­வர்கள் இப்­போது அவரை கண்­டு­கொள்­ளாமல் விட்டு விட்­ட­னரா?

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும் வெற்­றியைப் பெற்ற பின்னர், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சர்­வ­தேச அளவில் மதிப்பு அதி­க­ரித்­தது.

அது­பற்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கூறு­கையில், ஜனா­தி­ப­தியின் செல்­வாக்கு சர்­வ­தேச அளவில் அதி­க­ரிப்­பது தமிழர் தரப்­புக்கு நல்­லது என்றும், அவ்­வாறு அவ­ருக்­கான மதிப்பு அதி­க­ரிக்கும் போது அவர் சர்­வ­தே­சத்தின் கருத்­துக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், சம்­பந்தன் எதிர்­பார்த்­தது போன்ற நிலை ஏற்­ப­ட­வில்லை.

சர்­வ­தேச சமூ­கத்தின் கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்­த­ள­வுக்கு மதிக்­கின்ற நிலையில் இருக்­கிறார் என்ற பல­மான கேள்வி உள்­ளது.

ஏனென்றால், அவர் ஆட்­சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும்­ப­டியும், போர்க்­கால மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூறும் பொறி­மு­றையை உரு­வாக்கும் படியும் சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அவர் அந்தக் கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்தால், உலகத் தலை­வர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்திருப்பார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிய இன்னும், 20 மாதங்கள் தான் இருக்கின்றன. அதற்குள்ளாக அவர், எடுக்கப்போகும் முடிவுகளும், நடவடிக்கைகளும் தான் அவர் உலகத் தலைவர்கள் மத்தியில் எந்த நிலையில் வைக்கப்படுவார் என்பதை உறுதி செய்யும்.

அதுவும், மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு அவரைப் போட்டியிட வைக்கும், முயற்சிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு சர்வதேச ஆதரவும் தேவை என்பதை, மறந்து விட முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் தங்கியிருந்த போது, பிபிசிக்கு அளித்த பேட்டியில், தான் நியமிக்கும் அமைச்சர்கள், உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டவர்களாக மாத்திரம் இருக்கக் கூடாது, சர்வதேச அளவிலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர்களாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அது தனக்கும் பொருந்தக் கூடிய கருத்து என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்.?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.