Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பீச் போய்ஸ் மாபியா

Featured Replies

பீச் போய்ஸ் மாபியா

 

சுற்­றுலா பய­ணி­க­ளுக்கும் ஹோட்டல் உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி தென் பிராந்­தி­யத்தில் வளர்ந்து வரும் மாபியா குழுக்­களின் அட்­ட­கா­சத் தால் சுற்­றுலாத்துறை பாரிய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. தென் பிராந்­திய கடற்­க­ரை­க­ளுக்குள் புதைந்து கிடந்த இந்த இடை­யூ­றுகள் இம்­மாதம் அடுத்­த­டுத்து இடம்­பெற்ற இரு வெறுக்­கத்­தக்க சம்­ப­வங்களூடாக வெளியில் வந்­தது. அதனைத் தொடர்ந்து தற்­போது இலங்­கையின் சுற்­றுலாத்துறை மற்றும் சுற்­றுலாப் பய­ணி­களின் பாது­காப்பு தொடர்பில் பர­வ­லா­க பேச­ப்ப­டு­கின்­றது. 

கடந்த ஒரு வருட காலத்­துக்குள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கடற்கரை­களில் "பீச் பார்ட்டி" என்னும் புதிய கலா­சாரம் ஆரம்­பிக்­கப்பட்­டுள்ள நிலையில் அத­னுடன் சேர்ந்து சட்ட விரோத மது, போதைப் பாவ­னைகள் அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வா­றான "பீச் பார்ட்­டி­"களின் போது நன்கு உணவு உண்டு, மது அருந்தி சிலர் நிர்­வாண­மாக நட­ன­மா­டு­ம­ள­வுக்கு நிலை­மைகள் மோச­மா­வ­துடன் அதன்போது அங்கு பெண்கள் பாலியல் பலாத்­கா­ரங்களுக்கும் இடை­யூ­று­க­ளுக்கும் உள்­ள­ாகின்றனர். இவ்­வா­றான "பீச் பார்ட்­டிகள்" தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்கும் நிலையில் இன்று வரை அவற்றை கட்­டுப்­ப­டுத்­தவோ அது தொடர்­பான பாது­க­ாப்பு வழிமுறை­களை அமுல் செய்­யவோ அர­சாங்கம் என்ற ரீதியில் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் தான் இப் புதிய கலா­சா ரங்கள், இலங்­கையின் வரு­மா­னத்தில் மிக  முக்­கிய இடம் வகிக்கும் சுற்­றுலாத் துறையே பாதிக்குமள­வுக்கு நிலை­மை­களை  மோச­மாக்­கி­யுள்­ளன. இக் கட்­டு­ரைைய வரை­வ­தற்கு அடிப்­ப­டை­யாக அமைந்த சம்­பவம் கூட இந்த "பீச் பார்ட்­டி­"களை ஒத்த நட­வ­டிக்­கை­களிலி ருந்து தான் பிறந்­தது. ஆம்... அது கடந்த 8 ஆம் திகதி... இவ்­வா­றான ஒரு "பீச் பார்ட்டி" மிரிஸ்ஸ கடற்­க­ரையிலுள்ள ஒரு சுற்­றுலா ஹோட்­டலில் இடம்­பெற்­றி­ருந்­தது. 

 அந்த "பார்ட்­டி"க்கு அல்­லது விருந்­துக்கு பல அர­சியல்வாதிகள், வர்த்­த­கர்­க­ளுடன் உள்நாட்டு – வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பலரும் சென்­றுள்­ளனர். உள் நுழைவுக் கட்­டணம் 3000 ரூபாவாகும். உள் நுழைந்த பின்னர் உணவு, மது­பானம் மற்றும் விநோ­தங்கள் தொடர்­பிலும் செலுத்த வேண்­டிய கட்­டணப் பட்­டியல் வேறு. சாதா­ர­ண­மாக இவ்­வா­றான ஒரு விருந்தினூடாக பெறக் கூடிய இலாபம் மட்டும் 50 இலட்சம் ரூபா வரை இருக்கும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந் நிலையில் குறித்த விருந்து நிறை வுற்ற பின்னர் அங்கு வந்­த­வர்கள் அங்­கி­ருந்து செல்ல ஆரம்­பித்­துள்­ளனர். இதன் போது சிலர் போதையில், பாதையில் செல்­கின்ற­வர்­களை வைத்த கண் வாங்­காமல் பார்த்­துக்­கொண்டும் ரசித்­துக்­கொண்டும் கேலி செய்­து­கொண்டும் இருந்­துள்­ளனர்.

இதன்­போது தான் அப்­ப­கு­தி­யூ­டாக நெதர்லாந்து இளைஞன் ஒரு­வரும் அவ­ருடன் மேலும் சில பிரித்­த­னியா உள்­ளிட்ட நாடு­களைச் சேர்ந்த யுவ­தி­களும் வருகை தந்­துள்­ளனர். இதன்­போது அங்­கி­ருந்­த­வர்கள் அந்த யுவ­தி­களை கேலி செய்­துள்­ளனர்.

 அத்­துடன் குறித்த நபர்கள், "பீச் பார்ட்டி" ­களின் போது தமது பாலியல் ஆசை­களை பூர்த்தி செய்­து­கொள்­வதை ஒத்­த­தாக அந்த யுவ­தி­களை தமது ஆசைக்கு இணங்க வைக்­கவும் ஒரு கட்­டத்தில் பலாத்­கா­ர­மா­கவே அவர்­களை தமது பாலியல் தேவை­க­ளுக்குட்­ப­டுத்­தவும் முயன்­றுள்­ளனர். இதன்­போது அங்கு வாய்த்­தர்க்கம் ஏற்­பட்டு அது முற்­றவே வெளி­நாட்டு யுவ­தி­க­ளுடன் இருந்த நெதர்­லாந்து இைள­ஞனை குறித்த சந்­தேக நபர்களான இைள­ஞர்­கள் தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து சென்­றுள்­ளனர்.

தாக்­கு­தல்­க­ளுக்கு முகம் கொடுத்த மறு­நாளே குறித்த இளை­ஞனும் அவ­ரது தோழி­க­ளான வெளி­நாட்டு யுவ­தி­களும் மிரிஸ்ஸ பகு­தியிலிருந்து வெளி­யேறி அவரவர் நாட்டுக்கே சென்­றுள்­ளனர்.

இந் நிலையில் இச் சம்­பவம் தொடர்பில் எவ்­வித முறைப்­பா­டு­களும் இல்­லாத நிலையில் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகியிருந்­தது. இதன்­போது சுற்­றுலாத் துறை தொடர்­பான பொலிஸ் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிர­பாத்­துக்கு இவ் விடயம் குறித்து தெரியவந்த நிலையில் சம்­ப­வத்தை நேரில் கண்ட சாட்­சி­யாளர் ஒரு­வரை மைய­ப்ப­டுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளார். அத­னூடாக பாலியல் துன்­பு­றுத்­த­லுக்குள்­ளான குழுவிலிருந்த பிரித்­தா­னிய யுவ­தி­யான ரபி என்­ப­வரின் வட்ஸ் அப் இலக்­கத்தை அந்த சாட்­சி­யா­ள­ரூ­டாக பெற்­றுக்கொண்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரபாத் அத­னூ­டாக குறித்த யுவ­திக்கு தகவல் அளித்து அவ­ரிடமிருந்து மின்­னஞ்சலூடாக முறைப்­பா­டொன்­றினைப் பெற்­றுள்ளார்.

பின்­ன­ரே அந்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி வெலி­கம பொலி­ஸா­ருக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க உத்­தரவி­டப்பட்ட நிலை­யி­லேயே அச் சம்­பவம் குறித்து மாத்­தறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் மாரப்­ப­னவின் நேரடி கட்­டுப்­பா­ட்டில் வெலி­கம பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். அதன்­படி இச் சம்­பவம் தொ­டர்பில் இது­வரை 9 பேர் கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர். இந்த ஒன்­பது பேரும் "பீச் போய்ஸ்" எனப்­படும் உலாவித் திரியும் இளை­ஞர்களாவர்.

 இவர்­களை அடை­யாள அணி­வ­குப்­புக்குட்­ப­டுத்த மாத்­தறை நீதி­மன்றம் உத்­த­ர­விட்ட நிலையில் கண்கண்ட உள்நாட்டு சாட்­சி­யா­ளர்­களால் சந்­தேக நபர்­களை அடை­யாளம் காண முடி­யாமல் போனது.இந் நிலையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அரசாங்க செலவில் இலங்­கைக்கு பூரண பாது­காப்­புடன் அழைத்து வந்து வழக்கில் சாட்­சி­யாக முற்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்­கை எடுத்­தனர்.

 இது தொடர்பில் ரபியின் மின்­னஞ்சல் முகவ­ரிக்கு அது தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி தகவல் அனுப்­பிய போதும் அவர்கள் மீண்டும் இலங்­கைக்கு வரு­வதை நிரா­க­ரித்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர எம்­மிடம் தெரி­வித்தார்.

"உண்­மையில் அந்த இளை­ஞர்கள் எம்­ம­ருகே வந்து எம்­முடன் நட­ன­மாட முற்­பட்­டனர். பின்னர் எம்மை பலாத்­காரம் செய்ய முற்­பட்­டனர்", என பாதிக்­கப்­பட்ட பிரித்­தா­னிய யுவதி ஒருவர் அந் நாட்டு ஊடகம் ஒன்­றிடம் தெரி­வித்­துள்ளார்.

"நாம் அவர்­க­ளது நட­வ­டிக்கை தொடர் பில் அங்கிருந்த ஹோட்டல் சேவை­யா­ளர்­க­ளிடம் முறை­யிட்ட போது அவர்கள் சிரித்­தனர். ஒன்றும் செய்­ய­வில்லை. பின்னர் எம்­முடன் இருந்த ஒரு யுவ­தியை பலாத்­காரம் செய்ய முற்­பட்­டனர். இதன்­போது தலையிட்ட நெதர்­லாந்து இளை­ஞனை அவர்கள் 8 பேர் ­வ­ரையில் ஒன்­றி­ணைந்து தாக்கினர். இச் சம்­ப­வங்கள் 10 நிமி­டங்கள் வரை நீடித்­தன என பிரித்­தானிய ஊடகம் ஒன்­றிடம் பாதிக்­கப்­பட்ட யுவதி ஒருவர் விளக்கியுள்ளார்.

இச் சம்­பவம் இவ்­வா­றி­ருக்க வெலி­கம பொலிஸ் பிரிவின் மெதி­கம பகு­தியில் செர்பின் விளை­யாட்டில் (கடல் சறுக்கு விளை­யாட்டு) ஈடு­பட்­டி­ருந்த 5 இஸ்­ரே­லி­யர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்பட்­டி­ருந்­தன.

கடல் சறுக்கில் ஈடு­பட்­டி­ருந்த இஸ்­ரே­லியர் ஒரு­வரின் சறுக்கல் பலகை அங்­கி­ருந்த இளைஞன் ஒரு­வரின் கையில் தவ­று­த­லாக மோதி­ய­மையை மைய­ப்ப­டுத்தி இத் தாக்குதல் இடம்பெற்றிருந்­தது.

இவ்­வாறு அப் பலகை மோதி­யதை அடுத்து மருத்­துவச்செலவு எனக் கூறிஇஸ்­ரே­லி­யர்­க­ளிடமிருந்து அந்த இைள ஞன் பணம் பெற முற்­பட்­டுள்ளார். இதன்­போது அங்கு ஏனைய இஸ்­ரே­லி­யர்­களும் ஒன்று சேரவே வாய்த்­தர்க்கம் முற்றி கைக­லப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­போது குறித்த உள்நாட்டு இளை­ஞனை தலைமயிர் பகு­தியால் பிடித்­துள்ள இஸ்­ரே­லிய பிரஜை ஒருவர் அவரை கடல் நீருக்குள் ' வன், டூ, த்ரீ, போர் ' என எண்­ணிக்­கொண்டே நீரில் மூழ்­க­டித்து எடுத்­துள்ளார். இதனைக் கண்ட அங்­கி­ருந்த அவ­ரது நண்­பர்கள் உள்­ளிட்ட ஏனையோர் உட­ன­டி­யாக அங்கு ஒன்று சேர்ந்து அந்த இஸ்­ரே­லிய பிர­ஜைகள் ஐவ­ரையும் தடி, பொல்­லு­களைக் கொண்டு ஓட ஓட விரட்­டி­ய­டித்­துள்­ளனர்.

இந்த நிலையில் இது குறித்து இஸ்­ரே­லி­யர்கள் ஐவரும் வெலி­கம பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்ட நிலையில் அந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டு தாக்குதல் தொடர்பில் நால்வர் இது­வரை கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த இரு சம்­ப­வங்கள் தொடர்­பிலும் அப்­ப­கு­தி­களிலிருந்து பெறப்­பட்ட சி.சி.டி.வி.காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. குறிப்­பாக முதல் சம்­ப­வ­மான பாலியல் துன்­­பு­றுத்தல் சம்­பவம் பதி­வான ஹோட்­டலில் நடந்த "பீச் பார்ட்­டி"யில் பிர­பல அர­சியல்வாதி ஒருவர் பங்­கேற்­ற­தா­கவும் அதனால் அந்த ஹோட்­டலின் சி.சி.டி.வி. கமரா பதி­வு­களை பொலிஸ் விசா­ர­ணை­க­ளுக்கு ஒப்­படைப்­பதில் ஹோட்டல் நிர்­வாகம் பின் நிற்­ப­தாக அறிய முடி­கின்­றது.

எவ்­வா­றா­யினும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­க­ரவின் கருத்தின் படி, இவ்விசா­ர­ணைகள் வெலி­கம பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக சுற்­றுலாத்துறை பொலிஸ் பிரி­வி­ன­ராலும் முன்­னெ­டுக்­கப்படும் நிலையில், சம்­பவம் பதி­வான ஹோட்டல் தற்­போது மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

இந்த இரு சம்­ப­வங்­களை மைய­ப்ப­டுத்­தியே தற்­போது சுற்­றுலா பய­ணி­களின் பாது­க­ாப்பு உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றன.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு 4.5 மில்­லியன் சுற்றுலா பய­ணி­களை இலங்­கைக்கு வர­வ­ழைப்­பது என்னும் நோக்­குடன் பய­ணிக்கும் இலங்கையின் சுற்­றுலாத்துறைக்கு இவ்­வா­றான சம்­ப­வங்கள் முட்­டுக்­கட்­டை­களை ஏற்­ப­டுத்தும். கடந்த 2017 ஆம் ஆண்டு 21,16,407 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ள­தாக சுற்­றுலா அதி­கார சபை கூறு­கின்­றது. இதில் 53 வீத­மான சுற்­றுலாப் பய­ணிகள் ஐரோப்­பி­யர்­க­ளாவர்.

இந் நிலையில் சுற்­றுலாப் பய­ணி­களின் பாது­காப்பை உறுதி செய்ய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தரவின் உத்­தர­வுக்கமைய சுற்­றுலாத்துறை பொலிஸ் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிர­பாத்தின் கீழ் விசேட திட்­டங்கள் வகுக்­கப்பட்­டுள்­ளன.

பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட் சகர் ருவன் குண­சே­க­ரவின் அறி­விப்பின் பிர­காரம் தற்­போதும் அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, கண்டி, சிகி­ரியா, ஹிக்­க­டுவை, மொர­கொல்ைல, குரு­ணாகல், பொத்­துவில், பாசிக்­குடா, பின்­ன­வலை, அரு­கம்பே பகு­தி­களில் விசேட சுற்­றுலா பொலிஸ் பிரி­வுகள் சேவையிலுள்ள நிலையில் தற்­போது அடை­யாளம் காணப்­பட்­டுள்ள பாணந்­துறை, களுத்­துறை, பெந்

­தோட்டை, உன­வட்­டுன, மிரிஸ்ஸ, மாத்­தறை, தங்­காலை, நுவ­ரெ­லியா, யால, ஹோர்ட்டன், வில்­பத்து, எல்ல ஆகிய பகு­தி­களில் விசேட சுற்­றுலா பொலிஸ் பிரி­வு­களை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதாம். அதிலும் பொலிஸ் சுற்­றுலாத்துறை பொறுப்­ப­தி­கா­ரியின் அறி­வித்­தலின் பிர­காரம் மிக விரைவில் மிரிஸ்ஸ மற்றும் எல்ல பகு­தி­களில் இந்த பொலிஸ் பிரிவு உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

 உண்­மையில் அண்­மைக்­கால சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை நோக்கும் போது பாலியல் பலாத்­காரம் உள்­ளிட்­டவை எல்ல மற்றும் மிரிஸ்ஸ சார்ந்த சுற்றுலா வல­யங்கள் மற்றும் அதிலுள்ள விடுதிகளிலேயே பதிவாகி யிருந்தன. இந் நிலையில் உடனடியாகவே அப்பகுதிகளுக்கு சுற்றுலா பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

 எவ்வாறாயினும் தற்போது மிரிஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளில் "பீச் போய்ஸ்" என்னும் இளைஞர்களின் மாபியாவால் தோன்றியுள்ள அசாதாரண நிலைமைகளை முற்றாக கட்டுப்படுத்த உடனடியாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

தற்போது பொலிஸ் சுற்றுலாத்துறையில் 300 வரையிலான உத்தியோகத்தர்களே உள்ளனர். அவர்களுக்கான வசதிகளும் மிகக் குறைவானது என்பதும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டியதே.

எது எப்படியிருப்பினும் இந் நாட்டின் பிரதான வருமான மார்க்கங்களில் ஒன் றான சுற்றுலாத்துறைக்கு மேலும் பாதிப்  புக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை களை அவசியம் மேற்கொள்ள வேண் டும். இதற்காக அரசியல்வாதிகளை தாண்டி தேசிய மட்டத்தில் நாட்டின் அவசியம்  கருதி விசேட திட்டங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். அத்துடன் அது தொடர் பிலான பொலிஸாருக்கு உரிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.