Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்க்கொல்லி நீட்: தமிழக மாணவரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Father dies after he sent his son to write Neet in Ernakulam

உயிர்க்கொல்லி நீட்: எர்ணாகுளத்தில் துயரம்.. தமிழக மாணவரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்.

நீட் தேர்வை எழுத எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமிக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). அரசு ஊழியராவார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். இவர் பிளஸ் 2 முடித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தும் அந்த மாணவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் நேற்று எர்ணாகுளம் சென்றடைந்தார்.

அங்கு ஹோட்டல்களில் தங்கும் அறை கிடைக்காமல் அவர்கள் நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக விடுதி கிடைத்தும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் சரியானது.

இந் நிலையில் இன்று காலையும் எர்ணாகுளத்தில் சம்மணத்தில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தை தேடி அலைந்து திரிந்தனர். பின்னர் ஒரு வழியாக தேர்வு மையத்துக்கு வந்து தனது மகனை உள்ளே அனுப்பிவிட்டு அங்கு ஒரு இடத்தில் கிருஷ்ணசாமி அமர்ந்திருந்தார்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வேறு யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவரம் தெரியாமல் மகன் தேர்வு எழுதுவதை அறிந்த மற்ற பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இது முழுக்க முழுக்க அலைக்கழிப்பு, மனவேதனையால் ஏற்பட்ட மாரடைப்பு என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/father-dies-after-he-sent-his-son-write-neet-ernakulam-318940.html

 

################################## ####################################### #############################################

 

NEET MURDER : Father of a student died after completing exam in Madurai

தொடரும் கொடூரம்.. மதுரையில் நீட் எழுதிவிட்டு வரும் வழியில் மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் மரணம்

மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அவரது தந்தை கண்ணன் சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும்போது நெஞ்சுவலியால் மரணடமடைந்துள்ளார்.

இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இன்னும் சில மணிநேரத்தில் அவரது உடல் சொந்த ஊரில் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டஉள்ளது. இந்த நிலையில் தற்போது இதேபோல் இன்னொரு மோசமான சம்பவமும் நடந்துள்ளது.

மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அவரது தந்தை கண்ணன் சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும்போது நெஞ்சுவலியால் மரணமடைந்துள்ளார். வரும்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக இவர் மரணம் அடைந்தார்.

இவரது உடல் இப்போது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் அடுத்ததடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-murder-father-a-student-died-after-completing-exam-madurai-318999.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Another Girl Father Dies of NEET Exam

நீட்டுக்கு 3வது பலி.. புதுச்சேரிக்கு தேர்வு எழுத சென்ற, பண்ருட்டி மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் மரணம்!

புதுவை: பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை மகள் நீட் தேர்வு எழுதச் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள உயிர்பலி மூன்றாக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதில் ஏற்பட்ட அதீத மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்பின் காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அதேபோல, சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரு மரணங்களும் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இன்று புதுவையில் உயிரிழந்துள்ளார். நேற்று மகள் சுவாதியை புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத அழைத்து வந்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம் ,தமிழகத்தின் நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் இந்த ஆண்டு மூன்றாக அதிகரித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/another-girl-father-dies-neet-exam-319049.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.