Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2018 இல் ஸ்ரீலங்கா சு. கட்சி எதிர்கொள்ளும் ஆபத்துக்கள்

Featured Replies

2018 இல் ஸ்ரீலங்கா சு. கட்சி எதிர்கொள்ளும் ஆபத்துக்கள்

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் அரசியல் பாதையில் முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவில்லாப் பிரச்சினை இலங்கையின் ஜனநாயகத்திலும் தாக்கத்தை செலுத்துகிறது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தவறுகள் மற்றும் தோல்விகளுக்கு மத்தியில் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிறுவியதுடன் நாட்டில் அரசியல் கட்சி முறையையும் வலுப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆயுட்கால பிரச்சினையை எதிர்கொள்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அண்மைய நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதன் உள்ளார்ந்த பிரச்சினைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூறவேண்டும். மஹிந்த மற் றும் பஷில் ஆகிய இரண்டு ராஜபக் ஷ சகோதரர்கள் எழுதிய எழுத்துக்களுக்கு இயைபாகவே நம்பிக்கையில்லா தீர்மான விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் குழுவும் நடந்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி மஹிந்த நடந்துகொண்டதுடன் பஷில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்க்கப்படாத பிரச்சினைகளால் இவ்விரு ராஜபக் ஷகளுமே நன்மை அடைந்துள்ளனர்.

 தொடரும் பிளவு

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் உடனடி விளைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய பிளவுக்கான அறிகுறியை காட்டத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி சிறிசேனவின் முகாமில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக போட்டியிடுகின்றன. ராஜபக் ஷக்களுடன் இணையும் போக்கில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமென ஒரு குழு உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அமைச்சர்கள் என இரண்டாவது குழு உள்ளது. முதலாவது குழு நம்பிக்கையில்லா தீர்மான விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிராக வாக்களித்தது. அமைச்சர்களை உள்ளடக்கிய இரண்டாவது குழு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது மறைமுகமாக, தந்திரமாக நம்பிக்கை யில்லா தீர்மானம் தோல்வி அடைய உதவியது. அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவராக செயற்படும் மஹிந்த ராஜபக் ஷவுடன் தக்க தருணத்தின்போது இணைய பல ராஜபக் ஷ சார்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். அடுத்து வரவுள்ள மாகாண சபை, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தேர்தல் தொகுதி ரீதியாக பாதிக்கும் போக்கே தற்போது இடம்பெற்று வருகிறது. மாகாண சபைத் தேர்தல் இவ்வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ளது.

கடந்த சில மாதங்களில் ஸ்ரீல.சு.க. வின் இரண்டு குழுக்களையும் ஒருங்கிணைக்கும் ஜனாதிபதி சிறிசேனவின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைவதை காணக்கூடியதாகவுள்ளது. ஜனவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைத்து தனது தலைமைத்துவத்தின் கீழ் வைத்திருக்க ராஜபக் ஷகளுடன் பேச வேண்டிய நிலை ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஏற்பட்டது. ராஜபக் ஷகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒன்று ஜனாதிபதி சிறிசேனவின் கட்சி தலைமை பதவியை நீக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்தல், இரண்டு இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த ஏற்றுக் கொண்டு அதனை வலுப்படுத்தி கட்டியெழுப்புதல் ஆகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான சந்தர்ப்பம் அல்லது அதன் தேர்தல் தொகுதி வெற்றி வாய்ப்பை தக்கவைத்தல் என்பது ஜனாதிபதி சிறிசேனவுக்கு மிகவும் நலிவாகவே காணப்படுகிறது. சிலவேளை மஹிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளும் கட்சியாக உருவெடுத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அது மீளமுடியாத பின்னடைவாகவே அமையும்.

கட்சி முறைமை

மேற்குறிப்பிட்ட தோற்றப்பாடுகள் இலங்கையின் அரசியல் கட்சி முறைமையின் ஒரு முக்கிய கருத்தை தெளிவுபடுத்துகிறது. 1951 இல் அதிகாரப்பூர்வமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உலகில் ஒரு தனித்துவமான ஆட்சி முறைமை இலங்கையில் வார்த்தெடுக்கப்பட்டது.

இது ஒரு முக்கியமான இரண்டு கட்சி ஆட்சி முறை பல சிறிய கட்சிகளுடன் இணைந்தது என்று கூறலாம். இது விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் தொடர்ந்து வந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாற்று கட்சி என்ற வகையில் தோற்றப்பாடும் இலங்கையில் இருகட்சி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருமா? இக் கேள்விக்கென விடை பொதுவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்திலேயே தங்கியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது வலுவான கட்சியாக இடம் பிடிக்கும். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்குப் பின் தள்ளிவிடும்.மாறாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால் வலுவான இரண்டாவது இடத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது அல்லது நான்காவது இடத்துக்குப் பின் தள்ளிவிடும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்த நிலைமையை தவிர்க்க ஒரு வழியுண்டு. ஸ்ரீ.ல.சு.க., ஐ.தே.க.வுடனோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனோ ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும். ஐ.தே.க., ஸ்ரீல.சு.கட்சி தேர்தல் கூட்டு உருவாக வேண்டும் என்றால் தற்போதைய கூட்டு அரசாங்கம் வலுவாக மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். 2019– 2020 இல் ஐ.தே.க.– ஸ்ரீல.சு. கட்சி கூட்டுக்கு தற்போது எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை. மாறாக ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீல.சு.க.வுடன் கூட்டு வைத்துக்கொள்ள விரும்புவது போல் தோன்றுகின்றது. இதன்படி ஜுனியர் எனும் பதத்திலேயே ஸ்ரீல.சு.க. ஐ.தே.க.வுடன் இணையும் சாத்தியம் உள்ளது.

 

முறையான விளக்கம்

பாரிய ஒரு கட்சியாக இடம்பிடித்த ஸ்ரீல.சு.கட்சிக்கு ஏன் இந்த நிலை? இதற்கான விளக்கம் இரண்டு உள்ளடக்கங்களுடன் பின்வருமாறு அமையும். இலங்கையில் ஒரு கடுமையான முக்கியமான இரு கட்சி முறைமையில் ஒரு மூன்றாம் கட்சிக்கு ஒரு அரசியல் வெற்றிடம் தோன்றுவது வரையறுக்கப்பட்டது அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பெரிய கட்சியை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு மூன்றாவது கட்சி தோற்றம் பெறுவது எனலாம்.

மூன்றாவது சக்தி

1970 தொடக்கம் அதனது இரண்டாவது தோற்றப்பாடு வரை ஜே.வி.பி. இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக தன்னை உருவகப்படுத்தி வருகிறது. மூன்றாவது சக்தி எனும்போது ஐ.தே.க., ஸ்ரீல.சு.க.வுக்கு அடுத்த ஸ்தானம் என்று பொருள் அல்ல. 1980 மற்றும் 1990 களில் மூன்றாவது சக்தியாக ஜே.வி.பி. வெற்றிபெற முடியவில்லை. பல தேர்தல்களில் ஜே.வி.பி. 6 சதவீத வாக்குகளையே பெற்றுகொண்டு வந்துள்ளது. ஜே.வி.பி. 2004 இல் ஸ்ரீல.சு.கட்சியுடன் கூட்டு வைத்து தேர்தலை சந்தித்தமையும் அதன் மூன்றாவது சக்தியை உறுதிப்படுத்தவில்லை.

உள்ளார்ந்த பிரச்சினை

அன்று முதல் ஜே.வி.பி.க்கு வெளியில் இருந்தே பிரச்சினை தோன்றியது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது உருவாகும் பிரச்சினை உள்ளிருந்தே உருவாகிறது. இதனை ஒரு உட்கட்சி பூசல் என்று கூறமுடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைவடைந்து வருகிறது. இலங்கையின் இருகட்சி முறைக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனையே வாய்ப்பாக கருதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கருத்து வேறுபாடு கொண்டவர்களை உள்ளடக்கியது. அதேவேளை அவர்கள் இன்னும் பிரிந்து செல்லவில்லை. கடந்த சில மாதங்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவனமாகவும் புத்திசாதூரியமாகவும் இனத்துவம் சார்பான கருத்துக்களை கையாண்டு வருகிறது. ஜனாதிபதி சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கருத்து வேறுபாடு கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிதைவு ஆரம்பமானது. அதேவேளை, ஒரு விடயத்தையிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சற்று ஆறுதல் அடையலாம். அதாவது ஐக்கிய தேசியக்

கட்சிக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் புதிதாக பிரச்சினைகள் முளைத்துள்ளன. சிறிய கட்சிகளான ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கும் மினி பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினை உட்கட்சி பூசல் ஆகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உண்மையில் சிறிய கட்சி எனும் நிலையை அடையும் ஆபத்தை தற்போது எதிர்நோக்கி வருகிறது.

பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-05#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.