Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்?

Featured Replies

  • அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்?
 
 

அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்?

அடுத்த அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லுக்கு இன்­ன­மும் 18 மாதங்­கள் கால அவ­கா­ச­முள்­ளது. ஆனால் அது குறித்த வாதப் பிர­தி­வா­தங்­கள், எதிர்வு கூறல்­கள் என அர­சி­யல் நிலமை இப்­பொ­ழுதே பர­ப­ரப்­பாகி வரு­கின்­றது.

இன்­றைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வாரா என்­பது குறித்து நிச்­ச­யப்­ப­டுத்­திக் கொள்ள இய­ல­வில்லை. கடந்த 2015அரச தலை­வர் தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது தாம் அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒழித்­துக் கட்­டி­விட்டு அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டாது ஒதுங்­கிக் கொள்­ளப் போவ­தாக அவர் தெரி­வித்து வந்­தி­ருந்­தார்.

ஆயி­னும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் துமிந்த திச­நா­யக்க போன்றே ஐ.ம.சு.கூட்­ட­ணி­யின் பொதுச் செய­லா­ளர் அமைச்­சர் மகிந்த அம­ர­வீ­ர­வும் கூட, எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே என பல சந்­தர்ப்­பங்­க­ளில் தெரி­வித்து வந்­துள்­ள­னர்.

அதே­வேளை ஐ.தே.கட்­சி­யைப் பொறுத்­த­வரை, அடுத்த அரச தலை­வர் பத­வி।க்­கான தேர்­தல் அந்­தக் கட்­சிக்கு மிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தொன்று. முன்­னைய 2010ஆம் மற்­றும் 2015ஆம் ஆண்­டு­க­ளின் அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்சி தனது சார்­பாக வேட்­பா­ளர் எவ­ரை­யும் நிறுத்­தி­ய­தில்லை.

2010ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி ஆத­ர­வ­ளித்த பொது வேட்­பா­ளர் சரத் பொன்­சேகா தோல்வி கண்­ட­து­டன், 2015ஆம் ஆண்­டுத் தேர்­த­லின் பொது வேட்­பா­ளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.தே.கட்சி­யின் ஆத­ர­வு­டன் வெற்றி பெற்­றி­ருந்­தமை சக­ல­ரும் அறிந்­த­தொன்றே.

எதிர்­வ­ர­வுள்ள அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்­சி­யின் நிலைப்­பாடு எவ்­வாறு அமை­யும்?

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­தல் குறித்து ஐ.தே.கட்சி இது­வரை எந்­த­வொரு முடி­வை­யும் மேற்­கொள்­ள­வில்லை. தற்­போது தலைமை அமைச்­ச­ரா­க­வுள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வைத்­தான் ஐ.தே.கட்சி தனது அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­த­வுள்­ளது. இது குறித்து எதிர்­கா­லத்­தில் மாற்­ற­மெ­து­வும் ஏற்­ப­டுமா என்­பது தெரி­ய­வில்லை என ஐ.தே.கட்­சி­யின் சி।ரேஷ்ட தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ஜோன் அம­ர­துங்க அண்­மை­யில் கருத்து வௌியிட்­டி­ருந்­தார்.

அதே­வேளை இது­வரை கால­மும் இடம்­பெற்ற அரச தலை­வர் பத­விக்­கான தேர்­தல்­கள் ஒவ்­வொன்­றி­லும் ஜே.வி.பி.தரப்பு வெவ்­வேறு, மாறு­பட்ட விதத்­தி­லான நிலைப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டித்து வந்­தி­ருந்­தது. அந்த வகை­யில் 1982ஆம் ஆண்­டின் அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஜே.வி.பியின் தலை­வர் ரோகண விஜே­வீர போட்­டி­யிட்­டி­ருந்­தும், அவர் அந்­தத் தேர்­த­லில் தோல்­வி­யைத் தழு­வி­யி­ருந்­தார்.

1989ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் தேர்­தலை ஜே.வி.பி முற்­று­மு­ழு­தாக புறக்­க­ணித்­தி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி, ஆயு­தப் போராட்­டம் மூலம் அதற்கு எதிர்ப்­பை­யும் வௌிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஜே.வி।.பி ஜன­நா­யக நீரோட்­டத்­தில் இணைந்து கொண்­ட­தன் பின்­னர் இடம்­பெற்ற முத­லா­வது அரச தலை­வர் தேர்­த­லான 1994ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் ஜே.வி.பி சார்­பில் நிஹால் கலப்­பத்தி போட்­டி­யிட்­ட­போ­தும், குறித்த தேர்­த­லில் போட்­டி­யிட்ட சந்­தி­ரிகா, தாம் வெற்­றி­யீட்­டி­னால் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றை­யையே ஒழித்து விடு­வ­தாக எழுத்து மூல உறுதி வழங்­கி­ய­தை­ய­டுத்து நிஹால் கலப்­பத்தி போட்­டி­யி­னின்­றும் வில­கிக் கொண்­டார்.

அதே­வேளை 1999ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் இட­து­சா­ரித் தரப்­பி­ன­ரது பொது வேட்­பா­ள­ராக நந்­தன குண­தி­லக போட்­டி­யிட்ட போதி­லும், குறித்த தேர்­த­லில் அவர் தோல்­வி­யுற நேர்ந்­தது.

2005ஆம் ஆண்­டுக்­கான அரச தலை­வர் தேர்­த­லில் தமது கட்சி சார்­பான வேட்­பா­ளர் எவ­ரை­யும் நிறுத்­தாது சுதந்­தி­ரக் கட்சி சார்­பான வேட்­பா­ளர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஜே.வி.பி ஆத­ரவு வழங்­கிச் செயற்­பட்­டது. 2010ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வு­டன் முரண்­பட்ட நிலை­யில் இருந்து வந்த ஜே.வி.பி, எதி­ர­ணி­யின் பொது வேட்­பா­ள­ரான சரத் பொன்­சே­கவுக்கு ஆத­ர­வ­ளித்த போதி­லும், குறித்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் சரத் பொன்­சேகா தோல்­வி­யைத் தழுவ நேர்ந்­தது.

மகிந்த ராஜ­பக்ச இரண்­டா­வது தட­வை­யும் நாட்­டின் அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். 2015ஆம் ஆண்­டில் இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் ஜே.வி.பி வௌிப்­ப­டை­யாக எவ­ருக்­கும் ஆத­ரவு வழங்­காத போதி­லும், மகிந்த ராஜ­பக்ச தோற்­க­டிக்­கப்­பட வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டு­டன் செயற்­பட்­டது. அந்த வகை­யில் அந்­தத் தேர்­த­லில் பொது எதி­ரணி சார்­பா­கப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்று நாட்­டின் அரச தலை­வர் பத­வி­யைக் கைப்­பற்­றிக் கொண்­டார்.

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் ஜே.வி.பியி­னர் எத்­த­கைய நிலைப்­பாட்­டைக் கைக்­கொள்­வர் என்­பது குறித்து தௌிவா­கத் ஊகிக்க இய­லாத போதி­லும் நிறை­வேற்று அதி­கார அர­ச­த­லை­வர் பத­வியை ஒழித்­தாக வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் அவர்­கள் தற்­போ­தும் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர்.

மகிந்­த­வின் தாமரை மொட்­டுத்
தரப்­பி­லும் பல்­வேறு சிக்­கல்கள்

அதே­வேளை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தரப்­பி­லும் பிரச்சினை­கள் தலை­தூக்­கி­யுள்­ளமை உண்­மையே. கடந்த பெப்­ர­வரி மாதம்10ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் போட்­டிக் களத்­தில் மகிந்­த­வின் புதிய கட்­சி­யான தாமரை மொட்டு கட்சி குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­குச் சாத­க­மான வெற்­றியை ஈட்­டி­யுள்­ளது. உண்­மை­யில் மகிந்­த­வின் ஆத­ர­வுத் தளம் பெரு­ம­ள­வில் அதி­க­ரித்­துள்ள போதி­லும், அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­ட­மை­யால் மகிந்­த­வால் மீண்­டும் ஒரு தடவை அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் போட்­டி­யிட இய­லாது போயுள்­ளது.

எனவே மகிந்த தரப்­பின் அடுத்த அரச தலை­வர் பத­விக்­கான வேட்­பா­ளர் எவ­ரென மகிந்த தரப்­பி­னர் இது­வரை எவ­ரது பெய­ரை­யும் உறு­திப்­ப­டுத்தி அறி­வித்­தி­ராத போதி­லும், பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே அவ்­வி­தம் பொது எதி­ரணி சார்­பான வேட்­பா­ள­ராக களம் இறக்­கப்­ப­டு­வார் எனப் பேசப்­பட்டு வரு­கி­றது.

அரசு மீது குற்­றம் சுமத்­தும்
விமல் வீர­வன்ச

அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் கோத்­த­பாய மகிந்த தரப்பு வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­ட­வுள்­ளமை குறித்த அச்­சத்­தா­லேயே மைத்­தி­ரி­பால அரசு அவர் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்தி சிறை­யில் அடைக்க முயல்­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச தெரி­வித்து வரு­கி­றார்.

அதே­வேளை மகிந்த தரப்­பைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் பலர், மகிந்த ராஜ­பக்ச அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட இய­லாத நிலை­யில், தற்­போ­துள்ள தமது தரப்­பி­னர்­கள் குறித்த தேர்­த­லில் போட்­டி­யி­டத் தகு­தி­யா­ன­வர் கோத்­த­பா­யவே என உறு­தி­யா­கத் தாம் நம்­பு­வ­தா­கத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

தேர்­த­லுக்கு இன்­ன­மும் போதிய கால இடைவௌி உள்­ள­தால், அது குறித்து இப்­போதே உறு­திப்­ப­டுத்­தி­னால் அரசு எவ்­வி­தத்­தி­லா­வது கோத்­த­பா­ய­வுக்கு இடை­யூறு விளை­விக்­கவே முய­லும் என்­ப­தால், உரிய வேளை­யி­லேயே அந்த முடிவு உறு­திப்­ப­டுத்­தப்­படு மென­வும் அவர்­கள் கருத்து வௌியிட்டு வரு­கின்­ற­னர்.

அதே­வேளை நாம் அறிந்த வரை­யில், ஐ.தே.கட்சி சார்­பாக ரணி­லும், சுதந்­தி­ரக் கட்சி சார்­பாக மைத்­தி­ரி­பா­ல­வும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டக் கூடும் என்­ப­தால், எமது தெரிவு கோத்­த­பா­யவே எனக் கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர் கூறிய போதி­லும், சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளது வாக்­கு­களே அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­யைத் தீர்­மா­னிப்­பவை என்ற யதார்­தத்­தைப் புற­மொ­துக்க இய­லா­துள்­ளது.

கடந்த 2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் நாட்­டின் தமிழ் முஸ்­லிம் மக்­கள் மகிந்­த­வைப் புறக்­க­ணித்­த­தா­லேயே, மகிந்த ராஜ­பக்ச தோல்­வி­யுற நேர்ந்­தது என்ற அடிப்­ப­டை­யில் எதிர்­வ­ரும் தேர்­த­லில் கோத்­த­பா­ய­வால் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளது ஆத­ரவை ஈட்ட இய­லுமா என்ற கேள்வி தலை­தூக்­கு­கி­றது.

2015ஆம் ஆண்­டில் உரு­வான கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தாம்­பெ­ரும் ஏமாற்­றத்­துக்கு உட்­ப­ட­நேர்ந்­த­தாக சிறு­பான்மை இனத்­த­வர்­கள் தற்­போது உணர்ந்து கொண்­டுள்­ள­னர். ஆத­லால் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளும் தற்­போது மகிந்­த­வின் பின்­னால் அணி­தி­ரள ஆரம்­பித்­துள்­ள­னர். அது மட்­டு­மன்றி, தமிழ்க்­கட்­சி­க­ளும் தற்­போது ஒன்­றுக்­கொன்று முரண்­பட்­டுள்­ளமை தமிழ் மக்­களை அவர்­கள் மீது அதி­ருப்­தி­ய­டைய வைத்­துள்­ளது. எனவே இன்று நாட்­டின் சகல இன மக்­க­ளும் அரச தலை­வர் தேர்­தலை எதிர்­பார்த்­துள்ள நிலையே நில­வு­கி­றது என கூட்டு எதி­ர­ணி­யின் சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­கள் அடித்­துக் கூறு­கின்­ற­னர்.

அதே­வேளை இலங்கை அர­சி­ய­லில் இட­து­சாரி கொள்கை கோட்­பா­டு­க­ளைத் தொடர்ந்து பேணி­வ­ரு­ப­வ­ரும், உழைக்­கும் தொழி­லா­ளர் வர்க்­கத்­தின் நன்­ம­திப்பை ஈட்­டி­யுள்ள இட­து­சாரி முன்­ன­ணி­யின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார இது பற்­றிக் கருத்து வௌியி­டு­கை­யில், ‘‘எமது தெரிவு ராஜ­பக்ச குடும்­பத்து உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ரான சமல் ராஜ­பக்­சவே. மென்­போக்கு அர­சி­யல்­வா­தி­யான சமல் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒரு­போ­தும் தவ­றான விதத்­தில் பயன்­ப­டுத்த விரும்­பாத போக்­கு­டை­ய­வர். என­வே­தான் சமல் ராஜ­பக்­சவே அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் இட­து­சா­ரித் தரப்­பி­ன­ரது தெரி­வா­கி­றார்.’’ எனத் தெரி­வித்­துள்­ளார்.

அதே சம­யம் அண்­மை­யில் தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து, தமது அமைச்­சுப் பத­வி­க­ளை­யும் கைவிட்டு எதிர்க்­கட்சி வரி­சை­யில் இணைந்து கொண்ட 16நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வ­ரான எஸ்.பி.திச­நா­யக இந்த விட­யம் குறித்து கருத்து வௌியி­டு­கை­யில், ‘‘நாம் அர­சி­லி­ருந்து வௌியே­றி­விட்­டா­லும் ஐ.ம.சு.முன்­ன­ணி­யின் அங்­க­மான சுதந்­தி­ரக் கட்­சி­யி­லேயே தொடர்ந்­தும் அங்­கம் வகிக்­கி­றோம். எனவே, அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான எமது தெரிவு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஆவார்’’ எனத் தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை விமல் வீர­வன்­ச­வின் தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் மொன­ரா­கலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத்ம உத­ய­சாந்த குண­சே­கர, தம­தும், தமது கட்­சி।­யி­ன­தும் அடுத்த அரச தலை­வர் வேட்­பா­ள­ருக்­கான தெரிவு கோத்­த­பாய ராஜ­பக்­ச­வே­யா­வார் எனத் தெரி­வித்­தி­ருந்­தார். ‘‘நாட்டை நேர் சீராக்கி, முப்­பது ஆண்­டு­கள் கால­மாக நாட்­டில் நிலவி வந்த பயங்­க­ர­வா­தத்­தைத் தோற்­க­டிக்க திற­மை­மிக்க பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்றி, நாட்­டைப் பாது­காத்­த­வர் கோத்­த­பா­யவே’’ என்­றார் அவர். அதே சம­யம் இலங்கை இரா­ணு­வத்­தில் சேவை­யாற்றி ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­காரி மேஜர் ஜென­ரல் கமால் குண­ரத்­ன­வும், ‘‘அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான மகிந்த தரப்பு வேட்­பா­ள­ரா­கும் தகுதி கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கே உள்­ளது’’ என்­றார்.

இவை­யா­வும் ஒரு­பு­ற­மி­ருக்க, கடந்த பெப்­ர­வரி மாதம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் இடம்­பெற்ற நாளுக்கு அடுத்த நாளன்று அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாடு திரும்­பி­யி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் தாங்­கள் தலைமை அமைச்­சர் பத­வியை ஏற்­கப் போகின்­றீர்­களா? என ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேட்­ட­போது, ‘அதெப்­படி முடி­யும்? நான் அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­றுள்ள ஒரு­வ­ரல்­லவா?’ என பதில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார் கோத்­த­பாய. அந்த வகை­யில், அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­காக அறி­விப்பு வௌிவ­ரும் வரை­யில் இந்த நாட்டு மக்­கள் எதிர்வு கூறல்­க­ளைக் கணக்­கில் எடுக்­காது, பொறுமை காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

http://newuthayan.com/story/90806.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.