Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா

Featured Replies

மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா

Mike Pompeo - Kim Jong-unபடத்தின் காப்புரிமைTHE WHITE HOUSE Image captionஅமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ- வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வடகொரியச் சிறையில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமது டிவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். வட கொரியா சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ அந்த விடுவிக்கப்பட்ட மூவருடன் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்தது நல்ல சந்திப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சந்திப்புக்கான இடமும் நேரமும் குறிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் ஆண்டுரூஸ் விமானப் படைத் தளத்தில் வந்து சேரும்போது தாம் நேரில் சென்று அவர்களை வரவேற்க இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

டிரம்ப் - கிம் சந்திப்புக்கான தயாரிப்புகளில் இந்தக் கைதிகளின் நிலைமை என்பது முக்கியப் பேசுபொருளாக இருந்தது. இம்மாதத் தொடக்கத்தில் அவர்கள் சிறையில் இருந்து வடகொரியத் தலைநகர் பியாங்கயாங்கில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இதன் மூலம் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது.

யார் அந்த மூவர்?

டோனி கிம்படத்தின் காப்புரிமைREUTERS Image captionடோனி கிம் - 2016ல் கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்ட படம்.
  • கிம் ஹேக் சாங்: விரோதச் செயல்களில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் 2017 மே மாதம் கைது செய்யப்பட்டார் இவர். முன்னதாக தம்மை கிறிஸ்துவ மிஷனரி என்று கூறிக்கொண்ட இவர், பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பகல்கலைக் கழகத்தில் ஒரு பரிசோதனைப் பண்ணை தொடங்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.
  • டோனி கிம்: கிம் சேங்-டக் என்றும் அறியப்படும் இவரும் பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவரே. உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2017ம் ஆண்டு ஏபரல் மாதத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் வட கொரியாவில் மனிதாபிமானப் பணிகளை செய்துவந்ததாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • கிம் டாங்-சுல்: 60 வயதுக்கு மேற்பட்ட மத போதகரான இவர் 2015ல் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவருக்கு 10 ஆண்டுகள் கடும் ஊழியத் தண்டனை விதிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-44055466

  • தொடங்கியவர்

"டிரம்புக்கும், கடவுளுக்கும் நன்றி"- வடகொரியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள்

வடகொரிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள்படத்தின் காப்புரிமைREUTERS/AFP

வட கொரிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 3 அமெரிக்கர்கள், அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஆண்டுரூஸ் விமானப் படைத்தளத்தில் வந்து சேரும்போது, அதிபர் டிரம்ப் அவர்களை நேரில் சென்று வரவேற்கிறார்.

டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அதிபர் டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் சந்திப்புக்கான இடமும் நேரமும் "மூன்று நாட்களுக்குள் அறிவிக்கப்படும்" என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

"அமெரிக்கர்களை விடுதலை செய்த கிம்முக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோபடத்தின் காப்புரிமைREUTERS

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

யார் அந்த மூவர்?

  • கிம் ஹேக் சாங்: விரோதச் செயல்களில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் 2017 மே மாதம் கைது செய்யப்பட்டார் இவர். முன்னதாக தம்மை கிறிஸ்துவ மிஷனரி என்று கூறிக்கொண்ட இவர், பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பகல்கலைக் கழகத்தில் ஒரு பரிசோதனைப் பண்ணை தொடங்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.
  • டோனி கிம்: கிம் சேங்-டக் என்றும் அறியப்படும் இவரும் பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவரே. உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2017ம் ஆண்டு ஏபரல் மாதத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் வட கொரியாவில் மனிதாபிமானப் பணிகளை செய்து வந்ததாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • கிம் டாங்-சுல்: 60 வயதுக்கு மேற்பட்ட மத போதகரான இவர் 2015ல் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவருக்கு 10 ஆண்டுகள் கடும் ஊழியத் தண்டனை விதிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-44065357

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.