Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி

Featured Replies

மலேசிய தேர்தல்: 92 வயது குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர்

 

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர்

மலேசியபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்று (புதன்கிழமை) நடக்க உள்ள மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் பல மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தனது முன்னாள் அரசியல் குருவான 92 வயதான எதிர்க்கட்சி தலைவர் மகாதிர் முகமதை எதிர்கொள்கிறார். மலேசியா சுதந்திரமடைந்தது முதல் நடந்த தேர்தல்களில் இத்தேர்தல் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

வட கொரியா சென்றுள்ள அமெரிக்க செயலர்

மைக் பாம்பியோபடத்தின் காப்புரிமைGOOGLE Image captionமைக் பாம்பியோ

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையினான சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ வட கொரியா சென்றுள்ளார். சந்திப்புக்கான இடமும், நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தனது நோக்கம் என மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் அச்சுறுத்தல்

எபோலா வைரஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தங்கள் நாட்டின் வடமேற்கு பகுதியில் மீண்டும் ஒரு எபோலா வைரஸ் பாதிப்பு பரவல் ஏற்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயக குடியரசு அரசு அறிவித்துள்ளது. பிகாரோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள 17 உயிரிழப்புகள் தொடர்பாக நடந்த மருத்துவ பரிசோதனைகளில் இரண்டு மரணங்கள் எபோலா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவை நோக்கி பாய்ந்த இஸ்ரேல் ஏவுகணைகள்

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் அருகே உள்ள கிஸ்வேயை நோக்கி ஏவப்பட்ட இரண்டு இஸ்ரேல் ஏவுகணைகளை சிரியாவின் வான்வழி படை இடைமறித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் அரசு ஆதரவு போராளிகள் 9 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44049559

  • தொடங்கியவர்

மலேசியா: 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி

மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாடீர் மொஹமத் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார்.

மஹாடீர் முகமத்படத்தின் காப்புரிமைAFP

92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட தனது அரசியல் ஓய்வை விலக்கி கொண்டு மஹாடீர் முகமத் தேர்தல் களமிறங்கினார்.

மஹாடீர் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைAFP Image captionமஹாடீர் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

மஹாடீர் மொஹமதின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.

தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹாடீர் மொஹமத், ''நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்'' என்று கூறினார்.

வியாழக்கிழமையன்று தனது பதவியேற்பு நடக்கும் என்று மஹாடீர் மொஹமத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் மஹாடீர் மொஹமத் பெறுகிறார்.

முன்னதாக, மலேசியா சுதந்திரமடைந்தது முதல் நடந்த தேர்தல்களில் இத்தேர்தல் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என கருதப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-44063886

  • தொடங்கியவர்

மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்ன?

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலை சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

Malaysiaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதலைநகர் கோலாலம்பூரில் வெற்றியைக் கொண்டாடும் மகாதீரின் ஆதரவாளர்கள்

கடந்த 2003இல் பதவியில் இருந்து விலகிய மகாதீர் மொஹமத், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். தற்போது 92 வயதாகும் மகாதீர்தான் உலக நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களிலேயே அதிக வயதுடையவர் ஆகிறார்.

பிரிட்டனிடம் இருந்து மலேசியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி முதல் முறையாக இந்தத் தேர்தலில் அதிகாரத்தை இழந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான நம்பிக்கை கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

மலேசிய அரசின் தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சுமார் 8%. அந்த 8% பேரில் சுமார் 95% பேர் தமிழர்கள்.

பிரிட்டன் காலனியாக இந்தியா, இலங்கை, மலாயா (மலேசியா) ஆகிய நாடுகள் இருந்தபோது தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்களால் மலாயா அழைத்துச் செல்லப்பட்டவர்கள், இந்திய விடுதலைக்கு முன்னரும் பின்னருமாக வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்கள் என தமிழர்கள் மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்கின்றனர்.

மகாதீர் மொஹமத் Malaysiaபடத்தின் காப்புரிமைREUTERS Image captionமகாதீர் மொஹமத்

இந்தத் தேர்தல் முடிவுகள் பிபிசி தமிழிடம் பேசிய மலேசியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் மக்கள் ஓசை இதழின் ஆசிரியருமான மோகனன் பெருமாள், இந்தத் தேர்தலில் இன, மத எல்லைகளைக் கடந்து மலேசிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் இது ஓர் ஆரோக்கியமான சூழல் என்றும் கூறினார்.

"இதுவரை இந்தியர்களின் பிரச்சனைகளுக்காக இந்தியக் கட்சி, சீனர்களின் பிரச்சனைகளுக்கான சீனக் கட்சி, மலாய்காரர்களின் பிரச்சனைகளுக்காக மலாய் கட்சி எனும் நிலை இருந்தது. இனிமேல் இவர்களில் யாருக்கு பிரச்சனை என்றாலும் அது ஒட்டுமொத்த மலேசிய மக்களின் பிரச்சனையாகப் பார்க்கப்படும்," என்றார்.

"சில தமிழ் வேட்பாளர்கள் 40 ஆயிரம், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால், ஒரு தொகுதியில் தமிழர்களின் எண்ணிக்கையே அவ்வளவு இருக்காது. சராசரியாக ஒரு தொகுதியில் 2,000 முதல் 5,000 தமிழர்களே இருப்பார்கள். அதிகபட்சமாக 10,000 பேர் இருப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது," என்று மோகனன் பெருமாள்.

மோகனன் பெருமாள் Image captionமோகனன் பெருமாள்

வழக்கமாக அரசியலில் அதிக ஆர்வம் இல்லாத மலேசிய-இந்திய இளைஞர்கள் இந்தத் தேர்தலில் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள் என்று கூறும் அவர் அவர்களுக்கு அடிப்படை வரலாற்றுப் புரிதல் இல்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.

மலேசிய வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 22 வயது இளைஞரான பிரபாகரன் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் முடிவு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி, "10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த அரசியல் சுனாமி தற்போது வீசியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 6-7 என்ற அளவில்தான் இருக்கும். அந்த எண்ணிக்கை இப்போது இரண்டு மடங்காகியுள்ளது," என்று கூறினார்.

மலேசியாவில் 61 ஆண்டுகளாக இன, மத அடிப்படையில் நடந்த ஆட்சியால் தமிழர்களுக்கு பாதிப்பு உண்டாகியுள்ளதாகக் கூறும் அவர், "புதிய அரசு தமிழர்களுக்கு சமய மற்றும் கலாசார பாதுகாப்பை உண்டாக்கும்," என்று தெரிவித்தார்.

பினாங்கு ராமசாமி Malaysia Image captionபினாங்கு ராமசாமி

"இதுவரை மலேசியா இனம், சமயம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆளப்பட்டு வந்தது. அதனால் சிறுபான்மையினருக்கு இயல்பாகவே போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வணிக வாய்ப்புகள், உயர்கல்வி ஆகியவற்றில் தமிழர்களுக்கு குறைந்த அளவே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இனிமேல் அவற்றில் தமிழர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்க புதிய அரசு பரிசீலனை செய்யும்," என்று இந்தத் தேர்தலுக்கு பிந்தைய மாற்றங்கள் குறித்து ராமசாமி கூறினார்.

பெரும்பான்மை மக்கள் வாக்குகளுக்காக சிறுபான்மையினர் நலனில் சமரசம் செய்துகொள்ளும் கட்டாயம் புதிய அரசுக்கு உண்டாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய மற்றும் சீன வம்சாவளியினர் மலேசியாவின் மக்கள்தொகையில் சுமார் 40% இருப்பதாகவும் அவர்களும் சேர்ந்து வாக்களித்துதான் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டது என்றும் கூறினார்

https://www.bbc.com/tamil/global-44086564

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.