Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுத்தடிக்கப்படும் நீதி

Featured Replies

இழுத்தடிக்கப்படும் நீதி

02-48028caa2cf66524e81d3a4e19ffba4c798db9ae.jpg

 

என்.கண்ணன்

 

குரு­நா­க­லையில் அமைக்­கப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரின் நினைவுத் தூபியை திறந்து வைத்து உரை­யாற்­றிய போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்டும் தனது நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அதா­வது, போருடன் தொடர்­பு­டைய சம்­ப­வங்கள் தொடர்­பாக உள்­நாட்டில் நடத்­தப்­படும் விசா­ரணைப் பொறி­மு­றை­களில், வெளி­நாட்டு நீதி­ப­திகள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதே அவ­ரது அந்த நிலைப்­பாடு.

இதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளிப்­ப­டுத்­து­வது இதுதான் முதல் தட­வை­யல்ல. ஏற்­க­னவே அவர் பல­முறை இதனை கூறி­யி­ருக்­கிறார்.

வெளி­நாட்டு நீதி­ப­திகள் மாத்­தி­ர­மன்றி, வெளி­நாட்டு சட்­ட­வா­ளர்கள், வழக்­குத்­தொ­டுநர்கள், விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கு­மாறு, வலி­யு­றுத்தும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை, இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டி­ருந்­தது. ஆனாலும், வெளி­நாட்டு நீதி­ப­தி­களை விசா­ர­ணை­க­ளுக்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை என்றே அர­சாங்கம் கூறி வரு­கி­றது.

உள்­நாட்டு விசா­ரணை தான் நடக்கும் என்றும், அதற்­கான தகை­மையும் தகு­தியும் உள்­நாட்டு நீதித்­து­றைக்கு உள்­ளது என்றும் ஜனா­தி­ப­தியும் அமைச்­சர்­களும் கூறி வரு­கின்­றனர். இருந்­தாலும், அர­சாங்கம் பத­விக்கு வந்து மூன்று ஆண்­டு­க­ளா­கியும் உள்­நாட்டு விசா­ர­ணை­யையும் கூட ஆரம்­பிக்­க­வில்லை. உள்­நாட்டு விசா­ர­ணையை நடத்தும் வச­திகள் இலங்கை அர­சாங்­கத்­திடம் இருப்­பது உறு­தி­யானால், அதனை இந்­த­ள­வுக்கும் ஆரம்­பித்­தி­ருக்க வேண்டும். எனினும், உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பிப்­ப­தற்­கான எந்த முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. உள்­நாட்டு விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தானால், அதற்கு முக்­கி­ய­மான இரண்டு தடைகள் உள்­ளன.

முத­லா­வது, போர்க்­குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கான சிறப்பு நீதி­மன்­றங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.  இரண்­டா­வது, போர்க்­குற்­றங்­களை விசா­ரித்து, அதற்­கான தீர்ப்­பு­களை வழங்கும் வகையில், சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். 

இந்த இரண்டு விட­யங்­க­ளையும் நிறை­வேற்­றாமல், உள்­நாட்டு போர்க்­குற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடி­யாது.

இது உள்­நாட்டு விசா­ரணை தான் நடக்கும், வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை என்று கூறும் அர­சாங்­கத்­துக்கும் தெரியும், அர­சாங்­கத்தின் பேச்சைக் கேட்­டுக்­கொண்டு அமை­தி­யாக இருக்­கின்ற சர்­வ­தே­சத்­துக்கும் தெரியும்.

போர்க்­குற்­றங்கள் சார்ந்த விட­யங்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல்கள், மோச­டிகள், குற்­றங்­க­ளுக்கு நீதியை வழங்கும் நட­வ­டிக்­கை­களும் கூட இழு­ப­றி­யா­கவே இருக்­கின்­றன.

இதற்­காக சிறப்பு மேல் நீதி­மன்­றங்­களை அமைப்­ப­தற்­கான சட்­டத்­தி­ருத்­தங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. ஆனாலும் இந்த விட­யத்தில் எந்த முன்­னேற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை. சிறப்பு மேல் நீதி­மன்­றங்­களை அமைக்க இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் இட­மில்லை என்று முன்னர் நீதி­ய­மைச்­ச­ராக இருந்த, விஜே­தாச ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். ஆனாலும், சிறப்பு மேல் நீதி­மன்­றங்­களை அமைப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் போர்க்­குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கான சிறப்பு மேல் நீதி­மன்­றங்­களை அமைப்­ப­தற்கும், சட்­டங்­களைக் கொண்டு வர முடி­யாது என்­றில்லை. ஆனால் அதற்­கான முயற்­சி­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வு­மில்லை. முன்­னெ­டுப்­ப­தற்­கான அறி­கு­றி­க­ளையும் காண­வில்லை. முன்­னைய ஆட்­சிக்­கால மோச­டிகள், குற்­றங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் ஏற்­பட்­டுள்ள தாம­தங்கள் தொடர்­பாக அர­சாங்கம் கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றது. ராஜபக் ஷக்­களைக் காப்­பாற்ற இந்த அர­சாங்­கத்தில் உள்­ள­வர்கள் முயற்­சிக்­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நிலையில் நீதித்­து­றையில் தாம­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான சில கார­ணங்­களை அமைச்சர் அஜித் பெரேரா அண்­மையில் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நடந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போது வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதில் முத­லா­வது, போதிய மேல் நீதி­மன்­றங்கள் மற்றும் மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் இல்­லாமை.  இரண்­டா­வது, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் போதிய சட்­டத்­த­ர­ணிகள் இல்­லாமை.  இந்த இரண்­டையும் வலுப்­ப­டுத்­தாமல் நீதித்­து­றையில் உள்ள தாம­தங்­களைக் களைய முடி­யாது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

இலங்­கையில் தற்­போது உள்ள மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களின் எண்­ணிக்கை 75 மட்டும் தான். போதிய மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் இல்­லா­ததால், வழக்­கு­களை விசா­ரித்துத் தீர்ப்­ப­ளிக்க கால

­தா­மதம் ஏற்­ப­டு­கி­றது.

சரா­ச­ரி­யாக ஒரு வழக்கை விசா­ரித்துத் தீர்ப்­ப­ளிக்க மேல் நீதி­மன்­றத்தில் 17 ஆண்­டுகள் செல்­கின்­றன. வழக்­கு­களை விசா­ரித்துத் தீர்ப்­ப­ளிக்க அதி­க­பட்சம் 25 ஆண்­டு­களும், குறைந்­த­பட்சம் 10 ஆண்­டு­களும் செல்­வ­தாக அமைச்சர் அஜித் பெரே­ராவே கூறி­யி­ருக்­கிறார்.

இந்­த­ளவு நீண்­ட­கா­லத்­துக்கு வழக்­குகள் இழுத்­த­டிக்­கப்­படும் போது, பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மன உளைச்­ச­லி­னாலும், பணச் செலவு மற்றும் ஏனைய வழி­க­ளி­லான அலைச்­சல்­க­ளி­னாலும் சோர்­வ­டைந்து போய்­விட வாய்ப்­புகள் உள்­ளன.

பல சம­யங்­களில் வழக்கை விசா­ரித்துத் தீர்ப்­ப­ளிக்கும் போது குற்­ற­வா­ளி­களோ, அல்­லது வழக்­குத்­தொ­டுத்­த­வர்­களோ மர­ண­மாகி விடவும் வாய்ப்­புகள் உள்­ளன. நீண்­ட­காலம் நீதிக்­காகப் போராடி அந்த நீதி கிடைக்­கா­ம­லேயே மர­ண­ம­டை­ப­வர்கள் வாழ்நாள் முழு­வதும் அதற்­காக ஏங்­கி­ய­ப­டியே உயிரை விட்­டி­ருப்­பார்கள்.

அது­போ­லவே, குற்­ற­மி­ழைக்­கா­த­வர்­க­ளுக்கும் கூட, அதில் இருந்து தப்­பிக்க நீண்ட இழு­ப­றி­களைச் சந்­திக்கும் போதும் பெரும் பாதிப்­பு­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும். அதற்­காக அவர்கள் கொடுக்கும் விலை மிக­அ­தி­க­மாக இருக்கும். அதற்குள் குற்­ற­வாளி அல்­லது சந்­தேக நபர் என்ற அவப்­ப­ழி­யு­ட­னேயே சாவைத் தழுவும் நிலையும் ஏற்­ப­டலாம். சரா­ச­ரி­யாக 17 ஆண்­டுகள் மேல் நீதி­மன்­றங்­களில் தீர்ப்­புக்­காக காத்­தி­ருப்­பது என்­பது, இலங்­கையின் நீதித்­து­றையில் உள்ள மிகப்­பெ­ரிய குறை­பாடு.

இலங்­கையில் போர்க்­குற்­றங்­களும், மனித உரிமை மீறல்­களும் நிகழ்ந்து கிட்­டத்­தட்ட 9 ஆண்­டு­க­ளாகி விட்­டன. இன்­னமும் நீதி கிடைக்­காமல் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அலைந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு நீதியைக் கோரி அலைந்து திரி­கின்­ற­வர்­களில் தாய்­மார்கள் தான் அதிகம். அவர்கள், பெரும்­பாலும், 50, 60 வயதைக் கடந்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். வயது முதிர்ச்சி, நீதிக்­கான அவர்­களின் ஏக்கம், பிரிவுத் துயர் என்­பன, அவர்­களின் ஆயுள்­கா­லத்­துக்கு பெரும் சவா­லாக இருக்­கி­றது. இதனால், அவர்­களில் பலரும், தமது வாழ்­நாளில் நீதியைப் பெற்றுக் கொள்­ளாத ஏக்­கத்­து­ட­னேயே உயிர் துறக்கும் நிலையே ஏற்­படக் கூடும்.

அர­சாங்கம் போர்க்­குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கான சட்­டங்­களை இயற்றி, அதற்­கான சிறப்பு நீதி­மன்­றங்­களைக் கூட இன்னும் அமைக்­காத நிலையில், இவை­யெல்­லா­வற்­றையும் நிறை­வேற்றிக் கொண்டு உள்­ளக விசா­ர­ணையை ஆரம்­பிக்கும் போது, நீதிக்­கான ஏக்­கத்­துடன் இருக்கும் குடும்ப உறுப்­பி­னர்கள் எத்­தனை பேர் உயி­ரோடு இருப்­பார்கள் என்­பது கேள்­விக்­கு­ரி­யது.

உள்­நாட்டு விசா­ரணை தான் நடத்­தப்­படும், அதற்­கான தகு­தியும், ஆற்­றலும் இலங்­கையின் நீதித்­து­றைக்கு உள்­ளது என்று கூறும் ஜனா­தி­பதி, விரை­வாக நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதில் எந்­த­ள­வுக்கு அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கிறார்?

ஏனென்றால், மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களின் எண்­ணிக்­கையை 75 இல் இருந்து 110 ஆக அதி­க­ரிப்­ப­தற்கு வழி செய்யும், சட்­டத்­தி­ருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு ஐந்து மாதங்­க­ளா­கியும் மேல­திக நீதி­ப­தி­களை நிய­மிக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று அமைச்சர் அஜித் பெரேரா கூறி­யி­ருக்­கிறார்.

சாதா­ர­ண­மாக மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களின் நிய­ம­னத்­துக்கே இந்­த­ளவு இழு­ப­றி­களைக் காண்­பிக்கும் ஜனா­தி­பதி, போர்க்­குற்ற நீதி­மன்­றங்­களை அமைப்­பதில் எந்­த­ள­வுக்கு அக்­கறை கொள்­வார் என்று சந்­தேகம் கொள்­வதில் நியாயம் இருக்­கி­றது.

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில், 17 ஆயிரம் வழக்­குகள் இருக்கும் நிலையில் 113 சட்­டத்­த­ர­ணிகள் மாத்­திரம் பணி­யாற்­று­வது மற்­றொரு பிரச்­சி­னை­யாகக் கூறப்­ப­டு­கி­றது.

 சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துடன் இணைந்து பணி­யாற்ற சட்­டத்­த­ர­ணிகள் விரும்­பு­வ­தில்லை. போதிய ஊதியம் வழங்­கப்­ப­டா­த­மையே அதற்குக் காரணம். ஆனாலும் கூடுதல் ஊதி­யத்­துடன், மேல­தி­க­மாக 100 சட்­டத்­த­ர­ணி­களை ஆட்­சேர்ப்பு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் ஒப்­புதல் பெறப்­பட்டு 3 மாதங்­க­ளா­கியும், இன்­னமும் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் கூறப்­பட்­டுள்­ளது.

ஆக, அரச நிர்­வாகம் நீதித்­துறை சார் விவ­கா­ரங்­களை முன்­ன­கர்த்­து­வதில் விருப்­ப­மற்று, ஆர்­வ­மற்று இருக்­கி­றது. நீதியைப் பெற்றுக் கொடுப்­பதில் அக்­க­றை­யற்ற போக்கு, அர­சாங்­கத்­திலும், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திலும் காணப்­ப­டு­கி­றது. சாதா­ரண குற்­றங்கள் தொடர்­பான விவ­கா­ரத்தில் தான் இந்த நிலை.

போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் சார்ந்து, சிறப்பு நீதி­மன்­றங்­களை அமைக்­கின்ற விட­யத்தை முன்­னெ­டுக்க முனை­கின்ற போது, இதை­விட மோச­மான தடை­க­ளையும், தடங்­கல்­க­ளையும் எதிர்­கொள்ள நேரிடும்.

சிறப்பு நீதி­மன்­றங்­களை உரு­வாக்­கு­வ­தற்கும், மேல­திக நீதி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆளணியை வலுப்படுத்துவதற்கும் சட்டரீதியாக இருந்த தடைகள் நீக்கப்பட்டாலும், கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்காதது போன்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாதாரண விடயங்களுக்குக் கூட இலங்கையின் நீதிமன்றங்கள் உரிய காலத்தில் நீதியை வழங்காத நிலையில், உள்நாட்டு விசாரணையின் மீது ஒருபோதும், போர்க்குற்றங்கள் போன்ற பாரதூரமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.

உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புகளும் போதாமல் உள்ளன.வெளிநாட்டு உதவிகளையும் பெற முடியாது என்ற அழுங்குப் பிடியில் இருக்கின்ற அரசாங்கம் மக்களுக்கான நீதியைப் பற்றிப் பேசுகின்ற அருகதையைக் கூட இழந்து நிற்கிறது.

கால இழுத்தடிப்பு என்பது நியாயம் கோரும் நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தும் ஓர் யுத்தி. நீதியைக் கோருபவர்களின் ஆயுள் சுருங்கச் சுருங்க, அவர்களின் அழுத்தங்களும் குறையத் தொடங்கும். அதனைத் தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  சர்வதேச சமூகத்துக்கும் இது தெரியாததல்ல. ஆனால் அவர்களும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.