Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்முறையாக எடப்பாடியைத் தவிர்த்த ஓ.பி.எஸ்! - அதிரவைத்த அ.தி.மு.க அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. 

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்த ஓ.பி.எஸ்., தன்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறி அதிரடி கிளப்பினார். இந்தநிலையில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. இதனால், சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. இதற்கிடையே, சசிகலா ஆதரவுடன் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித் துறையைக் கவனித்து வந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சிறை செல்லும் முன் தினகரனைக் கட்சியின் அ.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக ஓர் உத்தரவை சசிகலா பிறப்பித்தார். ஆனால், மன்னார்குடி குடும்பத்தை ஓரங்கட்டுவது மற்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிச்சத்துக் கொண்டு வருவது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டத்தை நடத்தினார். 

பின்னர், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை ஓரங்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி தரப்பு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் தெரிவித்தது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

இதையடுத்து, கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில், சசிகலா நீக்கம், பொதுச்செயலாளர் பதவியே இல்லை, கட்சியிலிருந்து ஒருவரை நீக்க, சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்ட விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குக் கடந்த ஏப்ரலில் அ.தி.மு.க தலைமை அனுப்பி வைத்தது.

அணிகள் இணைப்பு நடந்த காலகட்டத்திலிருந்தே இருவருக்குள்ளும் மறைமுக யுத்தம் நடந்துகொண்டுதான் வருகிறது. அரசு விழாக்களில் அவ்வப்போது இது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பாக நடந்த ஒரு விழாவில், துணை முதல்வர் பெயரைக் குறிப்பிட அமைச்சர் விஜயபாஸ்கர் மறந்துவிட்டார். இதை நினைவூட்டியதும்தான், துணை முதல்வர் பெயரைச் சொன்னார். அதேபோல், கடந்த மார்ச் மாதம் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடந்த கைவினைஞர்கள் தின விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பெயர் இடம்பெறவே இல்லை. இந்த விவகாரம் குறித்து விழாவுக்கு ஏற்பாடு செய்த ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமினை அழைத்து கடிந்துகொண்டாராம் ஓ.பி.எஸ். பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியதால், அந்த விழாவில் ஓ.பி.எஸ். பங்குபெற்றார். 

கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக வேலை பார்த்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல்களை அமைச்சர்கள் வெளிப்படையாக மறுத்தாலும், கட்சியில் பூசல்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கழகத்தின் கொள்கைக் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டு வந்த அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி என இருவரது பெயர்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. அதேபோல், அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டு வந்த வாழ்த்து மற்றும் இரங்கல் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளிலும் அவர்கள் இருவரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.   

இந்தச் சூழலில் தினகரனின் கோரிக்கைகளை நிராகரித்து அ.தி.மு.க பொதுக்குழுவின் தீர்மானங்களை, அதாவது கட்சியின் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அ.தி.மு.க சார்பில் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி அறிக்கையாக வெளியிடப்பட்டது. இரு அணிகளும் இணைந்த பின்னர் முதல்முறையாக அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தவிர்க்கப்பட்டு, அந்த அறிக்கையில் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்சியையும் ஆட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குச் செக் வைக்கும் விதமாகவே ஓ.பி.எஸ் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். கட்சி சார்பில் கடந்த 14ம் தேதியே ஓ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 15ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/tamilnadu/127890-eps-name-missing-in-admks-official-press-release.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.