Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நாடாளுமன்றத்தின் மீதும் வான் தாக்குதல்கள் நடக்கலாம்': ஊகிக்கிறார் அனுரா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'நாடாளுமன்றத்தின் மீதும் வான் தாக்குதல்கள் நடக்கலாம்': ஊகிக்கிறார் அனுரா

ஜவெள்ளிக்கிழமைஇ 30 மார்ச் 2007இ 05:26 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

"நாடாளுமன்ற அமர்வுகளின் போதோ அல்லது வாக்கெடுப்பின் போதோ தமிழீழ விடுதலைப் புலிகளால் வான் தாக்குதல் நடத்தப்பட்டால் பேரழிவு ஏற்பட்டுவிடும். எனவே சபாநாயகர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டாராவுக்கு அனுரா பண்டாரநாயக்க எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

"நான் நான்கு நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயங்கரமானஇ எதிர்பாராத வான்தாக்குதல் தொடர்பாக உங்களுக்கு எழுதுகிறேன்.

அவசரகாலச் சட்டவிதிகளின் விவாதங்களின் போது சேறடிக்கும் வேலைகளில் நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டுஇ அரச தலைவர்இ முப்படைத் தளபதிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.

எனது கருத்துக்கள் யாரையும் தூண்டிவிடுபவை அல்லஇ ஆனால் உண்மையான நிலைமைகளை ஆராய வேண்டும். மீண்டும் இது இடம்பெறாது தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உலகில் வான்படையுள்ளன ஒரே ஒரு தீவிரவாத இயக்கம் விடுதலைப் புலிகளேஇ எனவே அவர்களின் விருப்பப்படி அவர்கள் அதனை பயன்படுத்தலாம். விடுதலைப் புலிகள் சிறப்பு இலக்குகளையே தெரிவு செய்வதுண்டு. நாடாளுமன்றமும் அவர்களின் இலக்குகளில் ஒன்று. எனவே மோசமான விளைவுகளை சந்திக்க முன்னர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

சிறிய பாதுகாப்பு பலவீனமும் பாரிய சேதங்களை விளைவித்து விடலாம்இ வாக்கெடுப்பு நேரத்தில் அல்லது நாடாளுமன்ற அமர்வின் போது அதிகளவு உறுப்பினர்கள் சமூகமளிப்பது வழமை. அந்த சமயத்தில் சக்தியுள்ள குண்டு வீசப்படுமாக இருந்தால் நிலைமையை எண்ணிப்பார்க்க முடியாது.

இது பல வருடங்களாக கவலை தரும் விடயமாக இருந்தது. ஆனால் தற்போது உண்மையாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் கோரப்பட்ட நாடாளுமன்ற விவாதம் ஒரு சேறடிக்கும் முயற்சி. அது பயனற்றது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர வேறு நன்மைகள் அதில் இல்லை.

நீங்கள் அரச தலைவர்இ முப்படைத் தளபதிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை நாடாளுமன்றம் கூடும் வேளைகளில் அதிகரிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் என நான் கருதுகிறேன். எனவே எல்லா கட்சிகளையும் அழைத்து உங்களால் எடுக்கப்படும் திட்டங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் முக்கிய பிரதிநிதி நீங்கள். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ அதிகாரிகள்இ ஏன் உங்களின் உயிர்களுக்கு கூட நீங்களே பொறுப்பு. முழு நேரமும் நாம் வாகனக் குண்டுகளையே எதிர்பார்த்தோம்.

எனவே கார்களில் தீவிர சோதனைகளும் தியவன்ன ஓயாவில் கடற்படையின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தாக்குதல்கள் வானில் இருந்து வந்துள்ளது. எனவே நீங்கள் உடனடியான நடவடிக்கையை எடுப்பீர்கள் என நம்புகிறேன்."

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ வான் படையை அவதானிப்பவர்கள் தகவல் கூற புதிய தொலைபேசி சேவை

தமிழீழ வான் படையை அவதானிப்பவர்கள் தகவல் கூற புதிய தொலைபேசி சேவை

தமிழீழ வான் படையின் விமானங்களின் நடமாட்டத்தை அவதானிப்பவர்கள் தகவல் தெரிவிப்பதற்கு என புதிய 24 மணிநேர தொலைபேசி சேவையொன்றை சிறீலங்கா வான் படையினர் ஆரம்பித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் மீது தமிழீழ வான் படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான விபரங்களை இந்த தொலைபெசி இலக்கத்தின் ஊடாக வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க வான் படைத் தளம் மீது கடந்த 26ஆம் திகதி வான் புலிகள் நடத்திய தாக்குதலால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காப் படையினர்இ எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாது தடுப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்

அண்ணாச்சி பாராள மன்றத்துக்கு கட் அடிக்க காரணம் கண்டு பிடிச்சிட்டார்

அநுராவைப் பாராளுமன்றத்தினுள் எடுப்பதில்லை. அதனால் புரளிகளைக் கிளப்பிவிட்டால் அங்கு போவதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் எல்லாரையும் தடுப்பதற்கு கண்டுபிடிக்கப்பட்ட புது வழி.

அண்ணாச்சி பாராள மன்றத்துக்கு கட் அடிக்க காரணம் கண்டு பிடிச்சிட்டார்

:blink::(:rolleyes::mellow::unsure::blink::lol::o

எல்லோரும் ஆளாளுக்கு அறிக்கை விடிகினம் இப்படியே போண என்கிட்ட கதிரை இல்லாமல் இருக்கிற அமைச்சு பதவியயும் மகிந்து பறிச்சும் போடும், அதுதான் நான் அறிக்கை விடுறேன்

இப்படிக்கு சூடு சுற்னையற்ற அனுரா

:blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.