Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா வல்லரசு ஆனது எவ்வாறு?

Featured Replies

சீனா வல்லரசு ஆனது எவ்வாறு?

 

 

kapital-kreation-2A-thumb-620x413-75337.

 
 

 

 

40 ஆண்­டு­க­ளில் உல­கின் மிகச் சக்­தி­வாய்ந்த நாடாக சீனா உரு­வா­னது எப்­படி? சீனா­வில் மா சேதுங் காலத்­துக்கு பிறகு, பொரு­ளா­தா­ரப் புரட்சி ஏற்­ப­டுத்­திய புகழ் டெங் சியா­பிங் என்­ப­வ­ரையே சாரும்.

1978ஆம் ஆண்டு டெங் சியா­பிங் தொடங்­கிய பொரு­ளா­தா­ரப் புரட்சி 2018ஆம் ஆண்டு வரை, 40 ஆண்­டு­கள் பய­ணித்து இன்று சீனா உலக அள­வில் பெற்­றி­ருக்­கும் மகத்­தான இடத்தை அடைந்­தி­ருக்­கி­றது. இதை, சீனா­வின் இரண்­டா­வது புரட்சி என்று சொல்­கி­றார் டெங் சியா­பிங். இந்­தப் பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்த த்துக்­குப் பிறகே உலக அள­வில் பெரிய பொரு­ளா­தா­ரச் சக்­தி­யாக வலு­வு­டன் தலை நிமிர்ந்து நிற்­கி­றது சீனா. இன்­றைய நிலை­யில் சீனா­வி­டம் அந்­நிய செலா­வணி இருப்­பாக 3.12 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் உள்­ளன.

1978ஆம் ஆண்­டில் டெங் சியா­பிங் பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்­ட­போது உல­கப் பொரு­ளா­தா­ரத்­தில் சீனா­வின் பங்­க­ளிப்பு 1.8 வீத­மாக இருந்­தது. 2017ஆம் ஆண்­டில் உல­கப் பொரு­ளா­தா­ரத்­தில் சீனா­வின் பங்கு 18.2 வீத­மாக உயர்ந்­து­விட்­டது. சீனப் பொரு­ளா­தா­ரம் வளர்ந்­து­வ­ரும் பொரு­ளா­தா­ரம் மட்­டு­மல்ல, தனது வலி­மை­யான கடந்த காலத்தை நோக்கி மீண்­டும் முன்­னே­றிக்­கொண்டி­ ருக்­கி­றது என்­ப­தை­யும் குறிப்­பிட்­டுச் சொல்­ல­லாம். 15 மற்­றும் 16ஆம் நூற்­றாண்­டு­க­ளில் உல­கப் பொரு­ளா­தா­ரத்­தில் சீனா­வின் பங்கு கிட்­டத்­தட்ட 30 சத­வீ­த­மாக இருந்­தது.

 

சீனா­வின் சக்­தி­மி­குந்த
தலை­வ­ராக ஜின் பிங்
சீனாவை வலு­வாக மாற்­றி­ய­வர்­க­ளைப் பற்றி பேசும்­போது, மா சேதுங், டெங் சியா­பிங் மற்­றும் தற்­போ­தைய தலை­வர் ஜி ஜின்­பிங் ஆகிய மூவ­ரின் பெயர் முத­லி­டங்­க­ளைப் பிடிக்­கும். டெங் சியா­பிங்­கின் பொரு­ளா­தா­ரப் புரட்சி தொடங்­கிய 40 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, ஜி ஜின்­பிங் போன்ற ஒரு வலு­வான தலை­வ­ரின் தலை­மை­யில் சீனா மீண்­டும் முன்­னோக்கி நகர்­கி­றது.

உற்­பத்தி அடிப்­ப­டை­யில் சீனா­வின் பொரு­ளா­தா­ரத்தை வலு­வாக்க விரும்­பு­கி­றார் ஜி ஜின்­பிங். அதற்­காக அவர், டெங் சியா­பிங்­கின் கொள்­கை­களை முன்­னெ­டுத்­துச் செல்­கி­றார். அதன்­படி, பொரு­ளா­தா­ரத்தை திறந்­து­வி­டு­வது, பொரு­ளா­தார சீர்தி ­ருத்­தங்­களை மேற்­கொள்­வது உட்­பட பல முயற்­சி­களை மேற்­கொள்­கி­றார். சீனா­வின் பொரு­ளா­தார வெற்றி மற்­றும் கம்­யூ­னிச அர­சி­ய­லுக்கு இடையே மோதல் நில­வும் சூழ்­நி­லை­யும் ஏற்­பட்­டது. சீனா­வின் பொரு­ளா­தார முன்­னேற்­ற­மா­னது, அந்த நாட்­டின் கம்­யூ­னிச அர­சி­ய­லின் சித்­தாந்­தத்­தில் இருந்து மாறு­பட்­டது. சீனா­வின் முழு அர­சி­யல் அதி­கா­ர­மும் ஜின்­பிங்­கின் கைக­ளுக்­குள் அடங்­கி­யுள்­ளது. இந்த நிலை­யில் சீனா­வின் தலை­வர்­கள் பொரு­ளா­தா­ரத்தை எந்த அளவு கட்­டுப்­பாட்­டிற்­குள் வைத்­தி­ருக்க விரும்­பு­கி­றார்­கள்? என்ற கேள்வி எழு­கி­றது.

சீனப் பொரு­ளா­தா­ரத்­தின் மாற்­றம்
சீனா­வின் எழுச்­சி­யின் கதை, இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின் ஏற்­பட்ட வளர்ச்­சிக் கதை அல்ல. ஆனால் மிகுந்த கட்­டுப்­பாட்­டு­டன் இருந்த பொரு­ளா­தா­ரத்­தி­லி­ருந்து விடு­பட்டு, சந்­தைப் பொரு­ளா­தா­ரத்­திற்கு மாறிய பொரு­ளா­தா­ரப் புரட்­சி­யின் கதை. உல­கின் பல நாடு­கள் சீனா­வைப் போலவே மாற்­றங்­களை ஏற்­றுக்­கொண்­டா­லும், பல்­வேறு கோணங்­க­ளில் இந்த விட­யத்­தில் வெற்­றி­பெற்று முத­லி­டம் பிடித்­தது சீனா.

உள்­நாட்­டுப் பொரு­ளா­தா­ரத்­தில் சீரான முன்­னேற்­ றத்தை மேற்­கொண்ட சீனா, சந்­தை­யின் மீதான நம்­பிக்­கை­யை­யும் விட்­டு­வி­ட­வில்லை. சீனா­வின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, வெளி­நாட்டு முத­லீ­டு­களை எங்கு செய்­ய­லாம், எங்கு செய்­யக்­கூ­டாது என்­ப­தில் கவ­ன­மாக முன்­னு­ரிமை கொடுத்து முடி­வெ­டுத்­தது சீனா.
இதற்­காக, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. தெற்கு கரை­யோர மாகா­ணங்­கள் சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லத்­திற்க்­காக தேர்வு செய்­யப்­பட்­டன.

கம்­யூ­னிச சோச­லிச அர­சி­யல் சூழ­லில் வலு­வான மாற்­றத்­திற்­கான அடித்­த­ளத்தை அமைத்­தார் டெங் சியா­பிங். அதன் முதல் கட்­ட­மாக சோவி­யத் பொரு­ளா­தார மாதி­ரி­யின் அமைப்பை முற்­றி­லு­மாக மாற்­றி­ய­மைத்த அவர், பின்­னர் சீனா­வின் தேவை­க­ளுக்கு ஏற்ப படிப்­ப­டி­யாக, சோச­லிச அடிப்­ப­டை­யில் பொரு­ளா­தா­ரத்­தில் நவீ­ன­ம­ய­மாக்­கல் செயல்­மு­றையை தொடங்­கி­னார்.

டெங் சியா­பிங் தொடங்­கிய சமு­தாய பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தம் உலக சரித்­தி­ரத்­தில் இதற்கு முன் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 1978- – 2016 ஆண்­டு­க­ளுக்கு இடை­யில் சீனா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 3,230 வீத­மாக அதி­க­ரித்­தது. இதே கால­கட்­டத்­தில் 70 கோடி மக்­கள் வறு­மைக் கோட்­டிற்கு மேலே கொண்டு வரப்­பட்­ட­னர். 38.5 கோடி மக்­கள் நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ராக உயர்த்­தப்­பட்­ட­னர்.

சீனா­வின் வெளி­நாட்டு வர்த்­த­கம் 17 ஆயி­ரத்து 500 சத­வி­கி­தம் அதி­க­ரித்­தது, 2015ஆவது ஆண்­டு­வாக்­கில் சீனா வெளி­நாட்டு வர்த்­த­கத்­தில் உலக அள­வில் முன்­னிலை பெற்­றது. 1978ஆம் ஆண்­டில், ஆண்டு முழு­வ­தி­லும் செய்த வர்த்­த­கத்தை தற்­போது இரண்டே நாள்­க­ளில் செய்­கி­றது சீனா.
சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி (சி.சி.பி) கூட்டு தலை­மை­யின் கீழ், சீனா­வில் சமூக பொரு­ளா­தார மாற்­றத்­துக்­கான துரி­த­மான செயல்­மு­றை­யைத் தொடங்­கி­னார் டெங் சியா­பிங். 1960 மற்­றும் 70களில் வாங்­கிய பல அடி­க­ளுக்­குப் பிறகு மாவோ­வின் பாணி­யைப் பின்­பற்­று­வ­தில் எச்­ச­ரிக்­கை­யை­யும் அவர் கடை­பி­டித்­தார். பன்­னாட்டு உற­வு­கள் தொடர்­பாக சில கொள்­கை­களை வைத்­தி­ருந்த டெங், தன்னை முன்­னி­லைப்­ப­டுத்­திக் கொள்­ள­மாட்­டார். சீனப் பொரு­ளா­தா­ரத்தை துரித கதி­யில் உயர்த்­து­வ­தி­லேயே அவ­ரது கவ­னம் முழு­மை­யாக இருந்­தது.

ஜின்­பிங் மற்­றும்
புதிய சகாப்­தம்
டெங் சியா­பிங் அடிக்­கடி இரண்டு பூனை சித்­தாந்­தத்தை மேற்­கோள் காட்­டு­வார். ஓடும் எலியை பூனை பிடிக்­கும் வரை, பூனை­யின் நிறம் கறுப்பா வெள்­ளையா என்­பது முக்­கிய மில்லை என்று அவர் தெரி­விப்­பார்.

இதே வழி­யில், சீன மனோ­பா­வத்­தில் புதிய தொழில் துறை வளர்ச்­சியை முன்­மொ­ழிந்­தார் ஜின்­பிங். 2014ஆம் ஆண்­டில் 12ஆவது தேசிய காங்­கி­ர­சில் உரை­யாற்­றும் போது, ‘இரண்டு பறவை தத்­து­வம்’ என்ற ஒன்றை முன்­வைத்­தார் அவர். ‘‘கூட்­டைத் திறந்து விட வேண்­டிய அவ­சி­யம் இருக்­கி­றது, அந்­தக்­கூண்­டில் வய­தான, இறுதி காலத்தை நெருங்­கிக் கொண்­டி­ருக்­கும் பற­வை­களை அடைக்­க­வேண்­டும்’’ என்று கூறி­னார் ஜின்­பிங்.

‘‘சோச­லி­சம் மற்­றும் புதிய சகாப்­தத்­தில் சீனா­வின் பண்­பு­கள்’’ என்ற தலைப்­பில் தனது தத்­து­வத்தை கடந்த ஆண்டு அறி­மு­கம் செய்து வைத்­தார் ஜின்­பிங். அதை தொடர்ந்து, உயர் அதி­கா­ரி­க­ளும், அந்த நாட்­டின் ஊட­கங்­க­ளும் தொடர்ந்து அதை, ஜின்­பிங்­கின் கோட்­பா­டு­கள் என்றே குறிப்­பிட்­டன. இதை செயல்­ப­டுத்­தி­னால், சீனா வெற்­றி­ய­டை­யும் என்று அவர் கூறி­னார். வளர்ச்­சி­யு­டன், அடிப்­படை தொழில்­நுட்­பம் மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தார்.
சீனா­வின் அடுத்த தலை­வர் யார்? என்­பதே இப்­போது சீனா­வில் எழுப்­பப்­ப­டும் முக்­கி­ய­மான கேள்வி. கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீன நாடா­ளு­மன்­றம் (தேசிய மக்­கள் காங்­கி­ரஸ்), அதி­பர் பத­விக்­கான கால வரம்பை நீக்­கி­யது. ஜின்­பிங் கோட்­பாடு, சீனா­வில் சோச­லி­சம் பற்­றிய புதிய பார்­வையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இது சீனா­வின் ஒரு புதிய அத்­தி­யா­யத்தை அல்­லது சகாப்­தத்­தைக் குறிக்­கி­றது.

விளக்­க­மா­கக் கூறி­னால், சீனா­வின் முதல் தலை­வ­ரான மாவோ­வின் கீழ், உள்­நாட்டு போரால் பிள­வு­பட்டு இருந்த நாடு ஒன்­று­பட்­டது. இரண்­டா­வது தலை­வ­ரான டெங் சியா­பிங்­கின் கீழ், நாடு வள­ம­டைந்­தது. ஜின் பிங்­கின் இந்த புதிய சகாப்­தத்­தில், நாடு மேலும் அதிக ஒற்­றுமை மற்­றும் வளங்­களை பெறு­வ­தோடு, உள்­நாட்­டில் ஒழுக்­கத்­தை­யும், வெளி­நாட்­டில் உறு­தி­யும் பெற­வேண்­டும். இதுவே சீன அர­சி­ன­தும் ஜி ஜின்­பிங்­கி­ன­தும் தற்­போ­தைய இலக்கு.

அர­சுக்கு ஜின்­பிங் கடி­வா­ளம் போட்­டார். உதா­ர­ண­மாக, அரச நிறு­வ­னங்­களை கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் கட்­டுப்­பாட்­டில் இருந்து நீக்கி, நிர்­வா­கத்­தின் பொறுப்­பில் முழு­மை­யாக ஒப்­ப­டைத்­தார். அதே­போல், தொண்டு நிறு­வ­னங்­கள் மீதும் கிடுக்­கிப்­பிடி போட்­டார்; பல மனித உரிமை ஆர்­வ­லர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

தாரா­ள­ம­ய­மாக்­க­லின் எல்லை
தாரா­ள­ம­ய­மாக்­க­லுக்கு முழு அள­வி­லான திட்­டத்தை சீனா தயார் செய்­து­விட்­டது. சீனத் தலை­வர்­கள் மத்­திய தலை­மையை வலி­யு­றுத்­தி­னா­லும், உள்­ளூர் அர­சுக்­கும், தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்­கும், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் இடையே ஆழ­மான இணக்­கம் ஏற்­பட்­டு­விட்­டது. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சீனா அதி­கா­ரம் வழங்­கி­யி­ருக்­கி­றது. முந்­தைய தலை­வர்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், ஜின்­பிங் பொதுத்­து­றை-­­­­­­த­னி­யார் கூட்­டாண்­மையை வலி­யு­றுத்­து­ப­வ­ராக இருக்­கி­றார்.
2014க்கு பிறகு, சீனா­வில் தனி­யார் முத­லீடு துரித வளர்ச்சி கண்­டுள்­ளது. உல­கம் முழு­வ­தும் சீனா­வின் வர்த்­த­கத்தை விரி­வாக்­கி­னார் ஜின்­பிங். பட்­டு­சாலை மற்­றும் பொரு­ளா­தார வழித்­தட திட்­டத்­தின் கீழ், ஆசியா, ஐரோப்பா, மற்­றும் ஆபி­ரிக்­கக் கண்­டங்­களை கட்­ட­மைப்பு மற்­றும் வணிக வலைப்­பின்­னல் மூலம் இணைக்­கும் திட்­டத்தை அவர் முன்­னெ­டுத்தி­ ருக்­கி­றார்.

சமீ­பத்­திய நாள்­க­ளில், சீனா­வின் நோக்­கங்­கள் தொடர்­பாக கேள்­வி­கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக, சீனா­வி­டம் இருந்து வாங்­கிய கடனை இலங்கை செலுத்த தவ­றி­விட்­ட­தால், தனது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வருட குத்­த­கைக்கு ஒப்­ப­டைத்­தது இலங்கை.

இதே போன்ற பிடி­யில்­தான் ஜிபௌட்டி, பாகிஸ்­தான், கிர்­கிஸ்­தான் ஆகிய நாடு­க­ளும் சீனா­வி­டம் சிக்­கி­யுள்­ளன. உலக வர்த்­தக அமைப்­பில் 2001ஆம் ஆண்­டு­மு­தல் சீனா இடம்­பெற்­றுள்­ளது. அப்­போ­தி­லி­ருந்து வெளி­நாட்டு வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக சீனா ஏழா­யி­ரம் விதி­முறை­ களை கைவிட்­டு­விட்­டது. 2011ஆம் ஆண்­டில் இருந்து சீனா சரா­ச­ரி­யாக 10 சத­வி­கித அள­வுக்கு வரி­யைக் குறைத்து விட்­டது.

http://newuthayan.com/story/11/சீனா-வல்லரசு-ஆனது-எவ்வாறு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.