Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் இந்தியாவுக்கோ தெற்காசிய நாடுகளுக்கோ அச்சுறுத்தல் இல்லை': இராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் இந்தியாவுக்கோ அல்லது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான் வழங்கிய போர் விமானங்கள் சிறிலங்கா வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இலங்கையில் அன்றாடம் வான் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் வானூர்திகள் இருப்பது சிறிலங்காவுக்கு மட்டுமின்றி தெற்காசியப் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் என்று அலறத் தொடங்கியிருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கமும்;, சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் வானூர்திகளால் இந்தியாவுக்கோ அல்லது இதர தெற்காசிய நாடுகளுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதற்கு மாறாகப் பாகிஸ்தான் இராணுவ ஆலோசகர்களும் வானோடிகளும் அவர்கள் அளித்து போர் வானூர்திகளும் சிறிலங்காப் படை வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து.

நோர்வே நாட்டின் முன்முயற்சியுடன் நடந்து வந்த அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு சொந்த நாட்டின் ஒருபகுதி மக்கள்மீது முப்படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்திப் பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்கா அரசாங்கம் கொன்று குவித்து வருகின்றது. அத்துடன் போக்குவரத்திற்குப் பயன்படும் பிரதான சாலையை மூடிப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டு சாகடித்து வருகின்றது.

இன்னும் சில நாட்களுக்குள் அனைத்துலக சமூகம் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்காவிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்து மடிவதனைத் தவிர்க்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு அறிவித்திருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வாழ்ந்து வந்தவர்கள் என்பதனை மறந்துவிட்டு போஸ்னியா மக்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தி ஒரு இனத்து மக்களை கொன்று குவித்த சேர்பிய நாட்டின் முன்னாள் அரச தலைவர் மிலோஸ்விக்கின் கொடுங்கோன்மைக்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மிலோஸ்விக் எத்தகைய குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரோ அத்தகைய குற்றங்களை எல்லாம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புரிந்து வருகின்றார். எனவே அவரது உபதேசத்திற்கும் அலறலுக்கும் இந்திய அரசாங்கமோ, அனைத்துலக சமூகமோ செவிசாய்க்கக் கூடாது.

ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். அதற்கு இதுவரையில் அவர்கள் கொடுத்துள்ள விலை போதும். எனவே இந்தியாவும் அனைத்துலக சமூகமும் இனியும் நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் சமரசப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும் அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும். இந்த ஆபத்தைத் தடுக்க இந்திய அரசாங்கம், சமரசப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும்.

இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களைக் காக்க அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் இந்திய அரசாங்கம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் தமிழீழப் பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31284

  • கருத்துக்கள உறவுகள்

"சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் இந்தியாவுக்கோ அல்லது ஏனைய தெற்காசிய நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான் வழங்கிய போர் விமானங்கள் சிறிலங்கா வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இலங்கையில் அன்றாடம் வான் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலால் அதிர்ந்து போய் இருக்கின்றன. அச்சத்தில் மூழ்கி இருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் வானூர்திகள் இருப்பது சிறிலங்காவுக்கு மட்டுமின்றி தெற்காசியப் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் என்று அலறத் தொடங்கியிருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கமும்;, சிங்கள இயக்கங்களும் கூறி வருவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் வானூர்திகளால் இந்தியாவுக்கோ அல்லது இதர தெற்காசிய நாடுகளுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதற்கு மாறாகப் பாகிஸ்தான் இராணுவ ஆலோசகர்களும் வானோடிகளும் அவர்கள் அளித்து போர் வானூர்திகளும் சிறிலங்காப் படை வசம் இருப்பதுதான் இந்தியாவுக்கு பேராபத்து.

நோர்வே நாட்டின் முன்முயற்சியுடன் நடந்து வந்த அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு சொந்த நாட்டின் ஒருபகுதி மக்கள்மீது முப்படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்திப் பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்கா அரசாங்கம் கொன்று குவித்து வருகின்றது. அத்துடன் போக்குவரத்திற்குப் பயன்படும் பிரதான சாலையை மூடிப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டு சாகடித்து வருகின்றது.

இன்னும் சில நாட்களுக்குள் அனைத்துலக சமூகம் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்காவிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்து மடிவதனைத் தவிர்க்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு அறிவித்திருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வாழ்ந்து வந்தவர்கள் என்பதனை மறந்துவிட்டு போஸ்னியா மக்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தி ஒரு இனத்து மக்களை கொன்று குவித்த சேர்பிய நாட்டின் முன்னாள் அரச தலைவர் மிலோஸ்விக்கின் கொடுங்கோன்மைக்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மிலோஸ்விக் எத்தகைய குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரோ அத்தகைய குற்றங்களை எல்லாம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புரிந்து வருகின்றார். எனவே அவரது உபதேசத்திற்கும் அலறலுக்கும் இந்திய அரசாங்கமோ, அனைத்துலக சமூகமோ செவிசாய்க்கக் கூடாது.

ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். அதற்கு இதுவரையில் அவர்கள் கொடுத்துள்ள விலை போதும். எனவே இந்தியாவும் அனைத்துலக சமூகமும் இனியும் நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் சமரசப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளும் அடிப்படை மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும். இந்த ஆபத்தைத் தடுக்க இந்திய அரசாங்கம், சமரசப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும்.

இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களைக் காக்க அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் இந்திய அரசாங்கம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் தமிழீழப் பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31284

நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் எங்களால் அல்லது எங்களின் பலத்தினாலோ சிங்கள மக்களிற்கே ஆபத்தில்லை என்று உறுதியாக சொல்லுகிறோம், அப்படியென்றால் இந்தியாவுக்கு எங்களால் எப்படி ஆபத்து வரும்?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இராமதாஸ் என்ற மனிதர் செய்கின்ற இரண்டு உருப்படியான காரியங்கள்

1. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவது

2. ரஜினிகாந்தை எதிர்த்து குரல் கொடுப்பது

- கப்பல்பயணி

இந்த இராமதாஸ் என்ற மனிதர் செய்கின்ற இரண்டு உருப்படியான காரியங்கள்

1. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவது

2. ரஜினிகாந்தை எதிர்த்து குரல் கொடுப்பது

- கப்பல்பயணி

முதலாவதுக்கு காரணமிருக்கிறது

இரண்டாவதற்க்கு காரணம் என்ன கப்பல் மாமா..........? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவதுக்கு காரணமிருக்கிறது

இரண்டாவதற்க்கு காரணம் என்ன கப்பல் மாமா..........? :blink:

வேறென்ன..சிவாஜி படத்தில் தான் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான்...

- கப்பல்பயணி

சொல்களும் எமமவருக்கு ஆறுதல் அழிக்கும் ஆனால் உலக டமிழர் டலைவர் போல பசப்பு வார்த்தைகளையும் ஏமாற்று வார்த்தைகளையும் அவர் விடவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.