Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜ­ய­கலாவுக்கு எதி­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்கை என்ன?

Featured Replies

விஜ­ய­கலாவுக்கு எதி­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்கை என்ன?

City-news-01-colorPage1Image0011-bcc0b48a9671d59368ae86580a961122898fc55e.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வதென்பது குறித்த பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யப்­போ­வ­தில்லை. அந்த விவ­கா­ரத்தை மூடி மறைப்ப­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே இரா­ஜி­னாமா கலா­சா­ரத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கி­றது. 

 எனினும் அவ­ருக்கு எதி­ராக ஜனா­தி­பதி சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக அவ்­வெ­தி­ர­ணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லா­ளரர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வத்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்­சியில் அரச கொள்­கைத்­திட்டம் மற்றும் அரச நிறு­வ­னங்கள் அனைத்தும் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதுவே சகல சிக்­கல்­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளன. அத­னாலே நாட்டின் கலா­சாரம், பொரு­ள­தாரம், சமூகம் உள்­ளிட்ட சக­லதும் சீர்­கு­லைந்­துள்­ளன.

அத்­துடன் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ள கருத்தை நாம் முழு அளவில் நிரா­க­ரிப்­ப­துடன் அதற்­கெ­தி­ராக ஜனா­தி­பதி சட்ட நட­வ­டிக்கை எடுக்­கி­றாரா என்­பது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். முன்னாள் அர­சாங்கம் இன­வா­தத்தை தலை­தூக்கும் வகையில் செயற்­பா­டு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்சி குற்­ற­றம்­சாட்டி வந்­தது. எனினும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரா­ஜாங்க அமைச்சர் ஒருவர் இன­வாதம் மாத்­தி­ர­மல்­லாது மீண்டும் பயங்­க­ர­வதம் தலை­தூக்க வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ளார். எனவே அதற்­கெ­தி­ராக எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை எதிர்­பார்த்­துள்ளோம்.

 விஜ­ய­க­லாவின் உரையின் பின்­ன­ணியில் உள்ள விடயம் என்ன? 1948 ஆண்டின் பின்னர் தமிழ் மக்­க­ளுக்கு கூடு­த­லான வாக்­கு­று­தி­களை நல்­லாட்சி அர­சாங்­கமே வழங்­கி­யது. முன்னாள் ஜனா­தி­ப­தியை தோற்­க­டிப்­ப­தற்­காக அவ்­வா­றான அர­சி­யல்­வா­திகள் கேட்ட அனைத்­தையும் வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தனர். எனினும் அவை எத­னையும் தற்­போ­தைக்கு நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­மல்­போ­யுள்­ளது.

அத­னால்தான் நல்­லாட்சி அர­சாங்­கத்­தை­விட விடு­தலைப் புலிகள் அமைப்பு சிறந்­தது எனக்­கு­றிப்­பிடும் அள­வுக்கு நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே வர­லாற்றில் இவ்­வா­றான சூழ்­நி­லையில் பயங்­க­ர­வாத அமைப்­புகள் உரு­வா­கி­யுள்­ளதை உலக நாடு­களில் காண­மு­டி­கி­றது. ஆகவே இந்த சமிக்­ஞையை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

வடக்­கைப்போல் தற்­போது தெற்­கிலும் அபி­வி­ருத்­திட்­டங்கள் தடைப்­பட்­டுள்­ளன. அபி­வி­ருத்தி தடைப்­பட்­டுள்­ள­மை­யா­னது சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ள­தையே எடுத்­துக்­காட்­டு­கி­றது. அதேபால் நாட்டில் பாதாள உலக்க குழுக்­களின் செயற்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. கொலை கொள்ளை மலிந்­துள்­ள­தன. கடன் செலுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. தொழில்­வாய்ப்­பில்லை. ஆகவே இளை­ஞர்கள் ஆயு­தங்­களை கையில் எடுக்­கின்­றனர். வர்த்­தக நிலையம் மற்றும் வங்­கி­களை கொள்­ளை­ய­டிக்­கின்­றனர். எனவே விஜ­ய­க­லாவின் கருத்­துக்கு எதிர்ப்­பினைத் தெரி­விப்­ப­துடன் அதில் பொதிந்­தி­ருக்கும் விட­யத்தில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

விஜ­ய­கலா மகேஸ்­வரன் இரா­ஜி­னாமா செய்­தி­ருப்­பது தற்­கா­லிக நடை­மு­றை­யாகும். இதனை அர­சாங்கம் கடந்த காலங்­க­ளிலும் மேற்­கொண்­டுள்­ளது. எவன்காட் விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு திலக் மாறப்­பண அமைச்சை இரா­ஜி­னாமாச் செய்தார். ஆனால் அவர் தற்­போது வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பதவி வகிக்­கிறார். மேலும் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு மீண்டும் அமைச்சு வழங்­கு­வ­தற்கு கவனம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது. எனவே விஜ­ய­கலா விவ­கா­ரமும் அவ்­வா­றுதான் உள்­ளது. எனவே இரா­ஜி­னாமாச் செய்­வது பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யப்­போ­வ­தில்லை. இரா­ஜி­னாமாச் செய்­வதன் மூலம் குறித்த கருத்தின் தன்மை இல்­லா­மல்­போ­வ­தில்லை. மேலும் இது­வ­ரையில் விஜ­ய­கலா தனது அறிக்­கையை வாபஸ் பெற­வு­மில்லை.

விஜ­ய­க­லாவின் கருத்­தா­னது புலம்­பெயர் விடு­தலைப் புலிகள் அமைப்­பு­க­ளுக்கு நெருப்புக் கிடங்கில் பெற்றோல் ஊற்­றி­ய­தைப்­போன்ற விட­ய­மாகும். தமது ஈழக் கோரிக்கை வடக்கில் இன்னும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவே அவர்கள் கருதுவர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் விஜயகலா மகேஸ்வரன் “ தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக்” குறிப்பிட்டார். ஆனால் தற்போது அவர் ஈழக் கோரிக்கையுடையவராக மாறியுள்ளார். எனவே அதற்கான காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையாக இருக்கலாம். எவ்வாறெனினும் அரசாங்கத்திலிருந்துகொண்டு பயங்கரவாதத்தை வளர்ப்பவர்கள் நாட்டில் உள்ளதாகவே சர்வதேசத்திற்கு தகவல் சென்றடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-1

  • தொடங்கியவர்

விஜயகலா பதவி விலகவேண்டியதில்லை : மன்னிப்பு கேட்டால் போதுமானது

City-news-01-colorPage1Image0007-f39ce1faf1cc5246deda65767a3cc4a2c4f71ef6.jpg

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

விஜயகலா பதவி விலகவேண்டும் என்று இல்லை. அவர் செய்த தவறுக்கு முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோரினால் போதும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரி வித்தார்.  

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதாக நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம். அதனால் விஜயகலா மகேஷ்வரன் ஆவேசப்பட்டோ எப்படியோ அரசியலமைப்புக்கு முரணான வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அவர் புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானதாகும். இதனை நாங்கள் ஒருபோதும் அங்கிகரிக்கமாட்டோம்.

அத்துடன் விஜயகலா மகேஷ்வரன் தான் தெரிவித்த வார்த்தைகள் நாட்டின் அரசியல் யாப்புக்கு முரண் என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். அதனால் அவர் தான் செய்த தவறுக்கு முழு நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் அது போதுமாகும் என்றே நான் நினைக்கின்றேன். அவ்வாறில்லாமல் இந்த விடயத்தை வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நிலைப்பாட்டில் நான் இல்லை.

அத்துடன் இவ்வாறான கருத்துக்களுக்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. இதனை வெறுமனே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்கள் அதிகரிக்கும். அதுவே மீண்டும் 83போன்ற கலவரங்கள் ஏற்பட காரணமாக அமையலாம். அதனால் பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய, அதற்கு துணைபோகக்கூடிய எந்த விடயத்துக்கும் ஆதரவளிக்க இடமளிக்க முடியாது.

விஜயகலா மகேஷ்வரனுக்கு அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்களுக்கு எதிரான கட்சியினை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நிலைமையும் இருக்கின்றது. அதுதொடர்பாகவும் நாங்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-1

  • தொடங்கியவர்

பத­வி­யி­லி­ருந்து வில­கி­னாலும் விஜ­ய­க­லா­வுக்கு எதி­ரான பொலிஸ் நட­வ­டிக்கை தொடரும்

City-news-01-colorPage1Image0008-d89fdaaa2f4dbb4d7b19cfb32f009ad4b62daa33.jpg

 

(எம்.எப்.எம். பஸீர்)

அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார கூறுகின்றார்

சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அவ­ரது அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலோ அல்­லது அவ­ரா­கவே வில­கி­னாலோ கூட அவ­ருக்கு எதி­ரான பொலிஸ் விசா­ர­ணைகள் நிறுத்­தப்­ப­டாது எனவும் அவர் தொடர்பில்  பொலிஸ் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் அரச நிர்­வாக, முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.  

அதன்­படி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னிடம் விரைவில் அவர் வெளி­யிட்ட கருத்­துக்கள் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்­படும் எனவும் அவர் தெரி­வித்தார்.

அரச நிரு­வாக, முகா­மைத்து அமைச்சில் நேற்று முற்­பகல் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

தமி­ழீழ விடு­தலை புலி­களை மீண்டும் உரு­வாக்க வேண்டும் என்­பதே தமது முக்­கிய நோக்கம் என்று இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் யாழில் நிகழ்­வொன்றில் உரை­யாற்­றும்­போது தெரி­வித்­தி­ருந்தார். இந்த கருத்தை தாம் முற்­றாக எதிர்ப்­ப­தா­கவும் வடக்­கிலோ தெற்­கிலோ எந்த பயங்­க­ர­வா­தத்­திற்கும் இட­ம­ளிக்க போவ­தில்லை எனவும் அமைச்சர் ரஞ்­சித்த மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

இந்­நி­லையில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பத­வி­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தாக கூறி­யி­ருக்­கி­றாரே என ஊடக விய­லா­ளர்கள் அமைச்­ச­ரிடம் சுட்­டிக்­காட்­டினர். இத­னை­ய­டுத்து அது தொடர்பில் கருத்து கூறிய அமைச்சர் மத்­தும பண்­டார

'நானும் கேள்­வி­யுற்றேன். அவரின் சர்ச்­சைக்­கு­ரிய கூற்று தொடர்பில் பிர­தமர் சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­ணையை கோரி­யுள்ளார். அதன்­படி அவர் நட­வ­டிக்­கை­களை எடுப்பார். எனினும் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள முறை­பா­டுகள் தொடர்பில் தனி­யான விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விஜயகலா பதவி விலகினாலும் விலகாவிட்டாலும் அவ்விசாரணைகள் தொடரும். விரைவில் அவரிடம் வாக்கு மூலம் பெற நடவடி;ககை எடுக்கப்படும்" என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.