Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போதும் போதைப்பொருள் வடக்குக்கு கொண்டுவரப்படுகிறது.....சி.வி. விக்கினேஸ்வரன்

Featured Replies

இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போதும் போதைப்பொருள் வடக்குக்கு கொண்டுவரப்படுகிறது

04MAIN05072018Page1Image0003-e7feca1150ffc0848bc87a57a8a56aaf477d130f.jpg

 

– ஓமந்தை நிருபர் – 

வவு­னியா கல்­நாட்­டி­ய­குளத்தில்  சுற்­று­லாத்­தலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை 

 

வட­மா­கா­ணத்தின் சுற்­று­லாத்­து­றையை விரி­வு­ப­டுத்தும் நோக்கில் இப் பகு­தி­களில் காணப்­ப­டு­கின்ற சுற்­றுலா மையங்­களை புன­ர­மைப்­ப­தற்கும் சுற்­று­லாப்­ப­ய­ணி­களை கவ­ரக்­கூ­டிய வகையில் அவற்றை அழ­கு ­ப­டுத்­து­வ­தற்­கு­மான பல வேலைத்­திட்­டங்கள் விரை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இத் துறையை விருத்தி செய்­வ­தற்­காக தனி­யாக ஒரு அல­காக சுற்­று­லாத்­துறை அதி­கா­ர­ச­பையை உரு­வாக்கி அவர்­களின் பரிந்­து­ரை­களின் கீழ் இச் சுற்­றுலா மையங்கள் புன­ர­மைக்­கப்­ப­டு­கின்­றன.

அதேநேரம் வட­மா­காண உள்ளூ­ராட்சி அமைச்சின் நேரடிக் கண்­கா­ணிப்பில் இது­வ­ரை­கா­லமும் இங்­கொன்றும் அங்­கொன்­று­மாக சுற்­றுலா மையங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் இன்று திறந்து வைக்­கப்­ப­டு­கின்ற கல்­நாட்­டி­ய­குளம் சுற்­றுலா மையமும் உள்ளூ­ராட்சி அமைச்­சினால் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திக்­கொடை நிதியின் கீழ் சுமார் 8 மில்­லியன் ரூபா செலவில் புன­ர­மைக்­கப்­பட்டு இன்று திறந்து வைக்­கப்­ப­டு­கின்­றது.

வட­மா­கா­ணத்தின் எல்­லைப்­புறக் கிரா­மங்­க­ளாக காணப்­ப­டு­கின்ற கிரா­மங்­களில் கல்­நாட்­டி­ன­கு­ளமும் ஒன்­றாகும். தமிழ் மக்­களும் சிங்­கள மக்­களும் வாழு­கின்ற இப் பிர­தே­சத்தில் ஏறக்­கு­றைய 1000 குடும்­பங்கள் வாழ்­கின்­றன என தெரி­விக்­கப்­பட்­டது.

இப் பகுதி இயற்­கை­யா­கவே குன்­று­களும் மரங்­களும் குளங்­களும் வயல்­களும் அமை­யப்­பெற்ற இயற்கை எழில் கொஞ்­சு­கின்ற ஓர் பிர­தே­ச­மாகும். இப் பகு­தியை அண்­மித்த பகு­தியில் பழனி முருகன் திருத்­தலம், கல்­வாரி ஆலயம் ஆகி­யன அமைந்­தி­ருப்­பது இப் பகு­திக்கு மேலும் மெரு­கூட்­டு­வ­தாக அமை­கின்றது.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை விருத்தி செய்­வ­தற்கும் உள்ளூர் உற்­பத்­தி­க­ளுக்கு நல்ல சந்தை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும் சுற்­று­லாத்­துறை பெரிதும் உத­வு­வன. இப் பகு­தி­களில் இடம்­பெற்ற நீண்­ட­கால யுத்­தத்தின் விளை­வாக இப் பகு­தி­க­ளுக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை மிகக் குறைந்­தி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் தற்­போது சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரித்­துள்­ளமை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இந் நிலையில் சுற்­றுலாப் பய­ணி­களை கவ­ரக்­கூ­டிய இயற்கை எழில் மிகுந்த பல சுற்­றுலா மையங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும் அவற்றின் புன­ர­மைப்புப் பணிகள் விரைந்து நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு வட­மா­காண சபையின் நிதி வளப் பற்­றாக்­குறை ஒரு மூல கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. எனினும் இத் துறைகள் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு ஏற்ற சூழ்­நி­லை­களை உரு­வாக்க வேண்­டி­யது எமது கடப்­பா­டாகும்.

இன்று திறந்து வைக்­கப்­ப­டு­கின்ற இந்த சுற்­றுலா மையம் இயற்கை எழி­லுடன் கூடிய அழ­குறு மைய­மாக காணப்­ப­டு­வதால் இங்கு சுற்­றுலாப் பய­ணிகள் வரு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் கூடு­த­லாகக் காணப்­ப­டு­கின்­றது. உள்­நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் இருந்தும் வெளிநா­டு­களில் இருந்தும் வரும் சுற்­றுலாப் பய­ணிகள் இந்த நீர் நிலை­களை அண்­டிய பகு­தியில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த சுற்­றுலா மையத்தில் அமர்ந்­தி­ருந்து இப் பகு­தி­களில் காணப்­ப­டக்­கூ­டிய பறவை இனங்­களைக் கண்டு களிப்­ப­தற்கும் மலைப்­பாங்­கான குன்­று­களும் மண்­மே­டு­களும் உள்ள இப் பகு­தி­களில் காலாற நடந்து செல்­வ­தற்கும் உடற்­ப­யிற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் ஏற்­ற­வாறு நாம் அவற்றை அமைத்­துள்ளோம். சிறு குழந்­தைகள் மகிழ்ந்­தி­ருப்­ப­தற்­கான பூங்கா அமைப்­புக்­களும் உடை­ய­தாக இப் பகுதி விளங்­கு­கின்­றது. சுற்­றுலா பய­ணத்தில் ஈடு­ப­டு­கின்ற அனைத்­துத்­தர மக்­க­ளுக்கும் இவ்­விடம் ஏற்­பு­டை­ய­தாக இருக்கும் என எண்­ணு­கின்றேன்.

சுற்­று­லாத்­துறை விருத்தி செய்­யப்­படும் அதே நேரத்தில் எமது பாரம்­ப­ரி­யங்­களும் கலை பண்­பாட்டு விழு­மி­யங்­களும் ஒழுக்கக் கட்­டுப்­பா­டு­களும் பேணப்­பட்டு வரும் வகையில் எமது அபி­வி­ருத்திப் பணிகள் அமைய வேண்டும். தற்­கால சூழ்­நி­லையில் மேலைத்­தேய நாக­ரிகம் எமது மக்­களை கவர்ந்­துள்ள நிலையில் எமது நடை உடை பாவனை அனைத்தும் இங்கு பறி போகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மேலைத்­தேய கலா­சா­ரங்கள் அப்­ப­கு­தி­களில் வாழும் மக்­க­ளுக்கும் அங்கு காணப்­படும் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ப உரு­வாக்­கப்­பட்ட ஒரு கலா­சா­ர­மாகும். அதனை பிரதி பண்ணி எமது பகு­தி­களில் நடை­மு­றைப்­ப­டுத்த முயல்­வது கலா­சார பிறழ்­வு­க­ளுக்கு வழி­ச­மைப்­ப­ன­வாக அமையும். உதா­ர­ணத்­திற்குக் குளிர்ப்பிர­தே­சங்­களில் காலணி அவ­சியம். அவர்கள் அங்கு காலணி அணிந்தே சேர்ச் செல்­கின்­றார்கள். நாம் செருப்­புடன் கோயில் செல்­ல­லாமா? ஆகவே எமது தனித்­துவம் எப்­போதும் பேணப்­பட வேண்டும்.

மகாத்மா காந்தி ஒரு முறை பிரித்­தா­னிய அர­சரை சந்­திக்கச் சென்­றி­ருந்த போது மேலங்­கிகள் எது­வு­மின்றி வெறும் கதர் வேட்­டி­யுடன் வந்­தி­ருந்­ததைப் பார்த்து அங்­குள்ள பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நீங்கள் பிரித்­தா­னிய அர­சரை சந்­திப்­ப­தற்கு வந்­தி­ருக்­கி­றீர்கள். மேலங்­கிகள் எது­வு­மின்றி வந்­தி­ருப்­பது அவரை அவ­ம­திப்­ப­தாக இருக்கும் எனக் கூறி­னார்­களாம்.

அதற்கு காந்தி நான் வெறும் காந்­தி­யாக பிரித்­தா­னிய அர­சரை சந்­திக்க வர­வில்லை. ஒட்­டு­மொத்த இந்­தியப் பிர­ஜை­களின் பிர­தி­நி­தி­யாக அவர்­களின் உடை, பண்­பாடு, கலா­சாரம் ஆகி­ய­வற்றை பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு­வ­ராக பிரித்­தா­னிய அர­சரை சந்­திக்க வந்­தி­ருக்­கின்றேன் என்று பெரு­மை­யாகக் கூறி­னாராம். அதா­வது எச் சந்­தர்ப்­ப­த்திலும் எமது தனித்­துவம் எமது பகு­தியில் காணப்­ப­டு­கின்ற பாரம்­ப­ரி­யங்கள், பண்­பாட்டு விழு­மி­யங்கள் ஆகி­யன தொடர்ந்து பாது­காக்­கப்­பட்டு வந்து எதிர்­கால சந்­த­திக்கும் அவற்றை வழங்க வேண்டும் என்­பதே எமது அவா. சிலர் பணம் கிடைத்தால் எதுவுஞ் சரி என்ற எண்­ணத்தில் வாழ்­கின்­றார்கள். பணத்தை எதிர்­பார்த்து நாம் எமது பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பண்­பா­டு­க­ளையும் இழந்து விட வேண்­டுமா என்ற கேள்­விக்கு நீங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருமே பதில் கூற வேண்டும்.

மேலைத்­தே­யத்­த­வர்கள் இப்­போது பல­வி­த­மான சீர்­தி­ருத்த வாழ்க்கை முறை­களை பின்­பற்ற முயன்­று­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு தமது மேலைத்­தேய வைத்­திய முறை­களை விட கீழைத்­தேய வைத்­திய முறை­களில் நாட்டம் ஏற்­பட்­டுள்­ளது. உடை பண்­பா­டு­களில் கூட எமது பகு­தி­க­ளுக்கு வரு­கின்ற போது இப் பகுதி மக்­களின் உடை அலங்­கா­ரங்­களைப் பின்­பற்ற விழை­கின்­றனர். உல­கி­லேயே தாமே முத­லா­ன­வர்கள், பணம் படைத்­த­வர்கள் பண்­பா­டு­டை­ய­வர்கள் என்ற ஆணவத் தன்­மையில் ஐந்து நட்­சத்­திர ஹொட்­டேல்­களில் தங்கி விலை உயர்ந்த சொகுசு வண்­டி­களில் பயணம் செய்­வதும், விலை உயர்ந்த உணவு வகை­களை உட்­கொண்டு வந்­த­தையும் புறக்­க­ணித்து எளி­மை­யான வாழ்க்கை முறைக்கு அவர்­களுள் பலர் மாறி வரு­வதை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. மக்­க­ளோடு மக்­க­ளாக வாழ்ந்­தால்த்தான் அவர்­களின் மகத்­து­வத்தைப் புரிந்து கொள்­ளலாம் என்ற எண்ணம் பணம் படைத்த மேலைத்­தே­யத்­த­வரைக் கூட ஆட்கொண்­டுள்­ளது. வெளிநா­டு­களில் நல்ல வச­தி­யாக வாழ்ந்து வரும் மேலைத்­தே­யத்­த­வர்கள் பலர் உள்ளூர் ஆடை அணிந்து மிகவும் எளி­மை­யாக வலம் வரு­வதை நான் கண்­கூ­டாகப் பார்த்­தி­ருக்­கின்றேன்.

எனவே இவ்­வா­றான சுற்­றுலா மையங்­க­ளுக்கு அண்­மித்­துள்ள பகு­தி­களில் தனிப்­பட்­ட­வர்கள் தமது பிரத்­தி­யேக நிலங்­களில் சிறி­ய­ள­வி­லான சுற்­றுலா குடில்­க­ளையும் மற்றும் தங்­கு­மிட வச­திகள், உணவு விற்­பனை நிலை­யங்கள், உள்ளூர் உற்­பத்தி விற்­பனை நிலை­யங்கள் என்­ப­ன­வற்றை ஆரம்­பிப்­பதன் மூலம் இப் பகு­தி­க­ளுக்கு வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் வந்து செல்ல உத­வியாய் இருக்கும். எமது உள்ளூர் தயா­ரிப்­புக்­களின் விற்­ப­னை­களை மேம்­படச் செய்­வ­தற்கும் இப் பகு­தியில் வாழும் உணவு உற்­பத்­தி­யா­ளர்கள், கைத்­தொழில் உற்­பத்­தி­யா­ளர்கள் மற்றும் அலங்­காரப் பொருட் தயா­ரிப்­பா­ளர்கள் என அனைத்­துத்­தர தயா­ரிப்­பா­ளர்­களின் தயா­ரிப்­புக்­க­ளுக்கும் நல்ல சந்தை வாய்ப்­புக்கள் கிடைப்­ப­தற்கும் இது வழி­ச­மைக்கும்.

சுற்­றுலாத் தலங்கள் புன­ர­மைக்­கப்­படும் அதே சமயம் அவற்றின் பாது­காப்­புக்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். உள்ளூர் மக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டாமல் இவ் அமை­வி­டங்­களைப் பாது­காத்தல் அவ­சியம். விசே­ட­மாக பெண்கள், சிறு குழந்­தை­களின் பாது­காப்பு ஆகி­ய­வற்றில் கூடிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும். பாது­காப்புக் கட­மை­களில் ஈடு­படும் பொலி­ஸாரின் உத­விகள் இன்­றி­ய­மை­யா­தன. இப் பகு­தியை மது­போ­தை­யற்ற, போதைப் பொருள் பாவ­னை­யற்ற ஒரு பிர­தே­ச­மாக மாற்­று­வ­தற்­கான அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இவ்­வா­றான பல இயற்கை அழ­கு­டைய சுற்­றுலாத் தலங்கள் மதுப்­பி­ரி­யர்­களின் கைகளில் சிக்கி அவர்கள் மட்டும் ஆட்சி செய்­கின்ற பிர­தே­ச­மாக மாற்­றப்­பட்­டி­ருப்­பது கவலை அளிக்­கின்­றது.

மது­பா­வனை, போதைப் பொருள் பாவனை ஆகி­ய­வற்றால் சிக்கிச் சீர­ழி­கின்ற ஒரு வகு­தி­யினர் வன்­மு­றை­க­ளிலும் சண்டை சச்­ச­ர­வு­க­ளிலும் களவு நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­டி­ருப்­பது மிகவும் வருத்­தத்­திற்­கு­ரி­யது. இவர்­களை இவ்­வாறு உரு­வாக்­கு­வ­தற்கு ஏதா­வது தீய சக்­திகள் முனை­கின்­ற­னவா அல்­லது உல­க­ளா­விய ரீதியில் போதைப்­பொருள் விற்­ப­னையில் ஈடு­ப­டு­கின்ற கும்­பல்­களின் பிர­தி­நி­தி­க­ளாக இவர்கள் இங்கு செயற்­ப­டு­கின்­றார்­களா என்­பது பற்றி எதுவும் தீர்க்­க­மாக கூற­மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. எனினும் வட பகு­தியில் பல்­லா­யிரக் கணக்­கான இரா­ணு­வத்­தி­னரும் பொலி­சாரும் பாது­காப்புக் கட­மை­களில் ஈடு­ப­டு­கின்ற போதிலும் தினமும் போதைப் பொருட்கள் வடமாகாணத்திற்குள் கொண்டுவரப்படுவதும் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்­படுவதும் அதிர்ச்சியூட்டுவனவாக காணப்படுகின்றது.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா என்று ஆய்ந்தறிவது அவசியம். தேவை இருந்தால் அவற்றை விரைந்து களைய வேண்டும். நிலைமைகளைக் கட்டுப்­ேபாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். எமது எதிர்காலத்தின் தலைவர்களாகவும், நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் விளங்க வேண்டிய இளைஞர்கள் பலர் அநியாயமாக துர்நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது உடல் வலுக்களை இழப்பதுடன் விபத்துக்களில் சிக்கி இன்னுயிர்களை மாய்த்துக் கொள்வதும் எமக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றது.

எனவே சூழல்கள் மேம்பட வேண்டும். குற்றங்கள் இருப்பின் களையப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் இணைந்துகொண்டு பாடுபடவேண்டும் எனத் தெரிவித்து இன்றைய இந்த நிகழ்வு சிறப்புற நடை

பெற வாழ்த்தி இச் சுற்றுலாத்தலம் புகழ்பூத்த ஒரு சுற்றுலாத்தலமாக மாற்ற­மடைவதற்கு இறையருள் வேண்டி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-06#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.