Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா – மஹிந்த கடன் பொறி

Featured Replies

சீனா – மஹிந்த கடன் பொறி

ngf-e1ab5f740b5428b85d0a7b539a063da8f8975745.jpg

 

சீனா­விடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் நிதி, என்­பது மிகவும் மோச­மான அர­சியல் நடத்­தை­யா­கவே பார்க்­கப்­படும். இதற்கு எதி­ராக, பொலிஸில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்ட விசா­ர­ணை­களும்  ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விவ­காரம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில்  முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக மாற்­றப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன.  

இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவ­கா­ரத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாமல் திண்­டா­டு­கி­றது

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா எவ்­வாறு பெற்றுக் கொண்­டது? என்­பதை விவ­ரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளி­யிட்ட கட்­டுரை தான் அர­சி­யலில் இப்­போது பெரும் புயலைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

இந்தப் புயல், உள்­நாட்டு அர­சி­ய­லையும் கடந்து சர்­வ­தேச அர­சி­ய­லிலும் கூட தாக்கம் செலுத்­து­கி­றது.

ஏனென்றால், இந்தக் கட்­டு­ரையின் உள்­ள­டக்கம் உள்­நாட்டு அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷவையும், சர்­வ­தேச அர­சி­யலில் சீனா­வையும் குறி­வைப்­ப­தாக – அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

சீனா எவ்­வாறு கடன்­பொ­றியின் மூலம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை தன்­வ­சப்­ப­டுத்­தி­யது என்­பது இந்தக் கட்­டு­ரையின் சர்­வ­தேச முகம்.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷவை உள்­நாட்டு அர­சி­யலில் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக, அவரை வெற்­றி­பெற வைப்­ப­தற்­காக சீனா­வினால் என்­னென்ன உத­விகள் வழங்­கப்­பட்­டன என்ற விவ­காரம் இதன் உள்­நாட்டு முகம்.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது, 7.6 மில்­லியன் டொலர் நிதியை மஹிந்த ராஜபக் ஷவுக்கு, சீன நிறு­வனம் வழங்­கி­யது என்ற மிகப்­பெ­ரிய குண்டை நியூயோர்க் டைம்ஸ் போட்­டது. இந்த நிதி பரி­மா­றப்­பட்­டது தொடர்­பான சில விப­ரங்­களும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

எனினும் உட­ன­டி­யா­கவே மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்தக் குற்­றச்­சாட்டை மறுத்­தது. தாம் அவ்­வாறு எந்த நிதி­யையும் பெற்றுக் கொள்­ள­வில்லை என்றும் அவ்­வாறு பெற்­றதை நிரூ­பித்தால், தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர் துறக்கத் தயார் என்றும் கூறி­யி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

இது திட்­ட­மிட்ட அர­சியல் நோக்­கத்­துடன் செய்­யப்­படும் பிர­சாரம் என்றும் நிரூ­பிக்க அவர்கள் முற்­ப­டு­கின்­றனர்.

அதே­வேளை, நியூயோர்க் டைம்­ஸுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூறிய மஹிந்த தரப்பு தற்­போது அந்த முயற்­சியில் இருந்து பின்­வாங்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இந்தக் கட்­டு­ரைக்­கான உள்­ள­டக்­கங்­களை வழங்கி உத­விய இரண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அச்­சு­றுத்தும் வகையில் நடந்து கொண்­டனர் என்ற இன்­னொரு குற்­றச்­சாட்டு நியூயோர்க் டைம்­ஸினால் கூறப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­து­வதை விட்டு விட்டு தேவைப்­பட்டால், எம்­முடன் தொடர்பு கொள்­ளுங்கள், என்று நியூயோர்க் டைம்ஸ் ஆசி­ரியர் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கிறார். இவை­யெல்லாம் மஹிந்த தரப்­புக்கு கடு­மை­யான எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. சீனா­விடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் நிதி, என்­பது மிகவும் மோச­மான அர­சியல் நடத்­தை­யா­கவே பார்க்­கப்­படும். இதற்கு எதி­ராக, பொலிஸில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்ட விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விவ­காரம் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக மாற்­றப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவ­கா­ரத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாமல் திண்­டா­டு­கி­றது.

உள்­நாட்டு அர­சி­யலில், நியூயோர்க் டைம்ஸ் செய்தி, ஒரு பெரும் கொந்­த­ளிப்­பையே உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது,

அதே­போன்று தான், சர்­வ­தேச அர­சி­ய­லிலும், நெருப்­புக்குள் கையை விட்­டவர் அலறிக் கொண்டு ஓடித் திரி­வது போன்று சீனாவும் ஓடு­கி­றது.

சீனா கடன் பொறியின் மூலம், மூன்றாம் உலக நாடு­களை தனது பாது­காப்பு நலன்­க­ளுக்­காக பலிக்­கடா ஆக்­கு­கி­றது என்ற விமர்­சனம் அண்­மைக்­கா­லங்­க­ளா­கவே வலுப்­பெற்று வரு­கி­றது.

ஆபி­ரிக்க நாடுகள் பல சீனாவின் கடன்­பொ­றியில் சிக்­கி­யுள்­ளன. இதற்கு மாற்­றீ­டாக சில கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளையும் அந்த நாடுகள் இழந்­தி­ருக்­கின்­றன.

அண்­மைக்­கா­ல­மாக, சர்­வ­தேச ஊட­கங்கள் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை கடன் பொறியின் மூலம், சீனா அப­க­ரித்துக் கொண்­டது என்ற குற்­றச்­சாட்டை சுமத்தி வரு­கின்­றன. இது சீனா­வுக்கு கடும் எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அண்­மையில் பிலிப்­பைன்­ஸுக்கு சீனா ஒரு திட்­டத்­துக்­காக பெரு­ம­ளவு நிதியைக் கொடுக்க முனைந்த போது, அது இலங்­கையைப் போன்று கடன் பொறியில் தள்ளி விடும் என்று அந்த நாட்டு எதிர்க்­கட்­சிகள் குரல் எழுப்­பின. ஊட­கங்­களும் அதே­போன்று தான், குற்­றம்­சாட்­டின.

இது­போன்று பல நாடு­க­ளுக்கு சீனா நிதி உத­வித்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் போது கடன் பொறிக் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகி வரு­கி­றது.

நியூயோர்க் டைம்ஸின் குற்­றச்­சாட்டு சீனாவைப் பெரிதும் பாதித்­தி­ருக்­கி­றது. அதனால் தான், கொழும்­பிலும், பீஜிங்­கிலும் உள்ள சீன அதி­கா­ரிகள் மாறி மாறி இதனை நிரா­க­ரித்து வரு­கி­றார்கள்.

பொது­வா­கவே சீனா இது­போன்ற குற்­றச்­சாட்­டு­களை பெரி­தாக எடுத்துக் கொள்­வ­தில்லை. ஆனால், சீன வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சா­ளர்கள், இரண்டு முறை வலு­வான மறுப்பை வெளி­யிட்­டார்கள்.

கொழும்பில் உள்ள சீனத் தூத­ர­கமும் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பை நடத்தி மறுப்பை வெளி­யிட்­டது. ஆனாலும் இந்தக் குற்­றச்­சாட்­டுகள் மாத்­திரம் ஓய­வில்லை.

பொது­வா­கவே, சீன வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சா­ளர்கள், அதி­கா­ரி­க­ளிடம், ஒரு கேள்­வியைக் கேட்டால், அந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையே குழம்ப வைப்­பார்கள். நேர­டி­யாகப் பதி­ல­ளிக்­காமல் சுற்றி வளைத்து பதில் கூறி, கேள்வி கேட்­ட­வ­ரையே என்ன கேள்வி எழுப்­பினேன் என்று தெரி­யாத நிலைக்கு உள்­ளாக்­கு­வார்கள்.

நிலை­மையை தமக்குச் சாத­க­மாக வைத்­தி­ருப்­ப­தற்­காக கையா­ளப்­படும் உத்தி இது.

கொழும்பில் உள்ள சீனத் தூத­ரகம், செய்­தி­யாளர் சந்­திப்­புக்கு குறிப்­பிட்ட சில ஊட­க­வி­ய­லா­ளர்­களை மாத்­திரம் தெரிவு செய்து அழைப்பு விடுத்­த­மைக்கும் அது தான் காரணம்.

இந்த விட­யத்­திலும் அவ்­வாறு தான், எங்­கெங்கோ சென்று பதில்கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன. இல­குவில் புரிந்து கொள்ள முடி­யா­த­படி, தத்­து­வார்த்­த­மான விளக்­கங்­களும் கூறப்­ப­டு­கின்­றன.

எது­வா­யினும், ஒற்றை வரியில் கூறக்­கூ­டிய பதில், கடன் பொறி குற்­றச்­சாட்டை சீனா ஏற்கத் தயா­ரில்லை. அதனை முற்­றா­கவே மறுக்­கி­றது.

இரு­த­ரப்பு நலன்­களை உள்­ள­டக்­கிய திட்­டங்­க­ளா­கவே அதனை அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கி­றது சீனா.

நியூயோர்க் டைம்ஸ் செய்­திக்குப் பின்னர் சீனா­வு­ட­னான உற­வு­களில் பாதிப்பு ஏற்­ப­ட­வில்­லையா என்று கடந்­த­வாரம் நடந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஒரு கேள்வி அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விடம் கேட்­கப்­பட்­டது.

அதற்கு அவர் அளித்த பதிலும், சீன வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் லூ காங் கூறி­யுள்ள விட­யமும் நேர்­மா­றா­ன­வை­யாக இருக்­கின்­றன.

“நியூயோர்க் டைம்ஸ் இலஞ்சக் குற்­றச்­சாட்டைச் சுமத்­தி­யி­ருப்­பது சீன நிறு­வனம் ஒன்றின் மீதே தவிர, சீன அர­சாங்­கத்தின் மீது அல்ல. இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் வலு­வா­கவே இருக்­கின்­றன” என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருந்தார்.

ஆனால், பீஜிங்கில் நடந்த செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய சீன வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் லூ காங், “ வணிக கொள்­கைகள் மற்றும் சமத்­துவ அடிப்­ப­டையில், அம்­பாந்­தோட்டை துறை­முக பணி­களில் ஈடு­ப­டு­மாறு, சீன நிறு­வ­னங்­க­ளுக்கு சீன அர­சாங்கம் வேண்­டுகோள் விடுத்­தது. இலங்­கையின் தேவைக்கு ஏற்ப சீன நிதி நிறு­வ­னங்கள் நிதி வழங்­கின. என்று கூறி­யி­ருக்­கிறார்.

அதா­வது, சீன அரசின் உத்­த­ரவின் பேரில் தான், சீன நிறு­வ­னங்கள், அம்­பாந்­தோட்டை துறை­முகத் திட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளன என்று அவர் உறுதி செய்­தி­ருக்­கிறார்.

இந்த இடத்தில், ஒரு முக்­கி­ய­மான விடயம், இலங்­கையில் முத­லீ­டு­களைச் செய்­துள்ள அத்­தனை சீன நிறு­வ­னங்­க­ளுமே, சீன அர­சுக்குச் சொந்­த­மா­னவை தான்.

சீன அர­சாங்கம் தான் இந்த நிறு­வ­னங்­களின் ஊடாக, திட்­டங்­களை முன்­னெ­டுக்­கி­றது. இது ஒன்றும் இர­க­சி­ய­மான விட­ய­மல்ல.

சீன அர­சுத்­துறை நிறு­வ­னங்கள், மேற்­கொள்ளும் திட்­டங்கள் சீன அரசின் நேர­டி­யான திட்­டங்­க­ளாகத் தான் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும். ஆனால், அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, சீன நிறு­வனம் மீது தான் இலஞ்சக் குற்­றச்­சாட்டு கூறப்­பட்­டுள்­ளதே தவிர, சீன அர­சாங்­கத்தின் மீது அல்ல என்று கூறி­யி­ருக்­கிறார்.

சீன அரசுத் துறை நிறு­வனம் ஒன்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த நட­வ­டிக்­கைக்கு குறித்த நிறு­வனம் மாத்­தி­ர­மன்றி சீன அர­சாங்­கமும் பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டது தான்.

ஆனால், சீன நிறு­வ­னத்­திடம் மஹிந்த தேர்தல் நிதி வாங்­கினார் என்­பதை பூதா­கா­ரப்­ப­டுத்த விரும்­பு­கின்ற அர­சாங்கத் தரப்பும் கூட, அதனை சீன அரசு தான் வழங்­கி­யது என்ற கோணத்தில் குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்த தயா­ராக இல்லை.

ஏனென்றால், சீனாவின் ஒத்துழைப்பும் உதவியும் இப்போதைய அரசாங்கத்துக்கும் தேவைப்படுகிறது.

சீனாவைப் பகைத்துக் கொண்டால், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை முன்னெடுக்குமாறு தாமே, சீன நிறுவனங்களிடம் கூறியதாக சீன அரசாங்கம் கூறியிருக்கிறது. எனினும், தாம் கடன் பொறியை உருவாக்கவில்லை என்றும் மறுக்கிறது.

கடன் பொறி என்ற குற்றச்சாட்டு தனக்கெதிராக சர்வதேச அளவில் உருவாகி வருவதை சீனா விரும்பவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளை நியூயோர்க் டைம்ஸின் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், அரசியல் சதி என்றும் நிரூபிக்க சீனாவும், ராஜபக் ஷ தரப்பும் முனைகின்றன.

ஆனாலும், இந்த விடயத்தில் அவ்வளவு இலகுவாக யாரையும் நம்ப வைக்க முடியாது என்பதே உண்மை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.