Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

124 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் மீட்பு : இருவர் கைது; இவ்­வ­ரு­டத்தில் கைப்­பற்­றப்­பட்ட மிக அதி­க­ள­வான போதைப்­பொருள்

Featured Replies

124 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் மீட்பு : இருவர் கைது; இவ்­வ­ரு­டத்தில் கைப்­பற்­றப்­பட்ட மிக அதி­க­ள­வான போதைப்­பொருள்

01-af57765dfd049944deca321dac7dda839685ee81.jpg

 

(எம்.ஆர்.எம்.வஸீம், இரோஷா வேலு)

மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லி­ருக்கும் கைதியின் கடத்தல் முயற்சி முறியடிப்பு

களு­போ­வில மற்றும் பத்­த­ர­முல்ல பகு­தியில் 1248 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோ­யி­னுடன் இருவர் பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வி­னரால் நேற்று முன்­தினம் இரவு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு கைப்பற்றப்பட்ட103 கிலோ 948 கிராம் ஹெரோயின் போதைப்­பொ­ரு­ளா­னது இந்த வரு­டத்தில் கைப்­பற்­றப்­பட்ட மிகப்­பா­ரிய போதைப்­பொருள் தொகை­யாகும் என பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ளரும் பொலிஸ் அத்­தி­யட்­சக­ரு­மான ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வி­னரால் சனிக்­கி­ழமை இரவு கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயின் போதைப்­பொருள் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருக்கும் நபர் ஒரு­வரின் வழி நடத்­தலில் மேற்­கொள்­ளப்­பட்ட பாரிய ஹெரோயின் போதைப்­பொருள் கடத்தல் பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­லைப்பின் மூலம் 1248 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோ­யி­னுடன் இருவர் நேற்று முன்­தினம் இரவு கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் 1973 ஆம் ஆண்டு பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரிவு அமைக்­கப்­பட்­டதன் பின்னர் தரை மார்க்­க­மாக கைப்­பற்­றப்­படும் பாரிய போதைப்­பொருள் இது­வாகும்.

வெள்ளை நிற அதி­சொ­குசு கார் ஒன்றில் ஹெரோயின் கொண்­டு­செல்­லப்­ப­டு­வ­தாக பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தகவல் ஒன்றின் பிர­காரம் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை இரவு 8.15 மணி­ய­ளவில் களு­போ­வில, பிர­தி­பிம்மா மாவத்­தையில் வைத்து குறித்த வாக­னத்தை நிறுத்தி சோக­னை­யிட்­டுள்­ளனர்.

இதன்­போது வாக­னத்­துக்குள் பாரிய பிர­யா­ணப்­பொதி ஒன்­றுக்குள் மறைத்து வைத்­தி­ருந்த 33 கிலோ 374 கிராம் நிறை­யு­டைய 30 ஹெரோயின் பொதி­களை போதை ஒழிப்பு பிரிவு அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர் வாக­னத்தை செலுத்­தி­வந்த சாரதி மற்றும் வேறு ஒரு­ந­ப­ரையும் அதி­கா­ரிகள் கைது­செய்­துள்­ளனர்.

இவ்­வாறு கைத்­து­செய்­யப்­பட்­ட­வர்கள் தெஹி­வளை ரொபட் வீதி­யைச்­சேர்ந்த மொஹமட் உவைஸ் மொஹமட் பாஹிம்(29வயது) மற்றும் தெஹி­வளை, களு­போ­வில பிர­தே­சத்­தைச்­சேர்ந்த சதுர ஜய­சான்த்த (40வயது) ஆகி­ய­வர்­க­ளாவர். கைது­செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளின்­போது, பத்­த­ர­முல்ல சுபு­தி­புர, ரோஹண மாவத்­தையில் இருக்கும் இரண்­டு­மாடி வீடு தொடர்­பாக தகவல் கசிந்­துள்­ளது. இதன்­போது பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரிவு அதி­கா­ரிகள் குறித்த வீட்டை சுற்­றி­வ­லைத்து சோத­னை­யிட்­ட­போது, வீட்­டுக்குள் இருந்து 70கிலோ 574கிராம் நிறை­யு­டைய ஹெரோயின் போதைப்­பொருள் 66பொதிகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் குறித்த வீட்டில் இருந்து முச்­சக்­கர வண்டி ஒன்று, கைய­டக்க தொலை­பேசி 3,இலத்­தி­ர­னியல் தராசி - 2 மற்றும் ஹெரோய்ன் போதைப்­பொருள் கடத்­து­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­ட­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் பாரிய கேஸ் சிலிண்டர் 2 ஆகி­ய­வற்­றையும் அதி­கா­ரிகள் கண்­டெ­டுத்­துள்­ளனர். குறித்த சிலிண்­டர்­களின் மேற்­ப­குதி வெட்­டப்­பட்­ட­டி­ருந்­தது. அத்­துடன் சந்­தேக நபர்கள் குறித்த வீட்டை 75ஆயிரம் ரூபா மாத வாடகை என்ற அடிப்­ப­டையில் கடந்த ஜன­வரி மாதம் முதல் பெற்­றுக்­கொண்டு போதைப்­பொருள் கடத்தல் வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

 கைது­செய்­யப்­பட்ட மொஹமட் சுவைஸ் என்­பவர், மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு வெலிக்­கடை சிறையில் இருக்கும் போதைப்­பொருள் கடத்தல் கார­ரான தர்­ம­ராசா சுசேந்­திரன் அல்­லது சூசை என்­ப­வரின் உத­வி­யாளர் என்­பதும் தகவல் வெளிப்­பட்­டுள்­ளது.

2013. 02. 13 ஆம் திகதி பம்­ப­லப்­பிட்­டடி ஹோட்டல் ஒன்றில் இருந்து 2கிலோ 250 கிராம் ஹெரோய்­னுடன் சூசை என்­ப­வரை பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வினர் கைது­செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதற்­கான தண்­ட­னை­யாக 2017. 03.30 ஆம் திகதி உயர்­நீ­தி­மன்றம் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. சிறைச்­சா­லையில் இருந்­து­கொண்டு தொலை­பேசி ஊடாக இவர் இந்த போதைப்­பொ­ருட்­களை வெளி­நாட்டில் இருந்து இலங்­கைக்கு கொண்­டு­வந்து விநி­யோகம் செய்­யும்­வரை பாரி­ய­ளவில் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

அத்­துடன் கைப்பற்றப்பட்டிருக்கும் கார் கிருளப்பனையில் வாகனங்கள் வாடகைக்கு வழங்கும் நிலையமொன்றிலிருந்து ஒரு இலட்சத்தி 50ஆயிரம் ரூபா என்ற மாதவாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.கைத்துசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது 7நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.