Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.சபை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.சபை அறிக்கை

- பண்டார வன்னியன் Friday, 30 March 2007 12:48

இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் மீண்டும் மோதல்கள்

ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 3,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையை மேற்கோள் காட்டி ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் இதுவரை 215,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ‘சட்டத்திட்டங்களை மதித்து நடப்பதற்கு இதேவே தருணம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் படையினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கின்ற போதும் பனிப்போர் ஒன்று இடம்பெற்று வருவதையே தற்போதைய களநிலவரம் எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை நிலைமைகள் 2006ஆம் ஆண்டு முதல் மோசமடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் அந்த அறிக்கை, நீதிக்குப் புறம்பான படுகொலைகள், சிறுவர்களைப் படையில் சேர்த்தல், காணாமல் போதல்கள், கடத்தல்கள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கைது செய்யப்படுபவர்கள் குறித்து விபரங்களை பாதுகாப்புத் தரப்பினர் 48 மணித்தியாலங்களுக்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டுமென கடந்த 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் காவலில் இருக்கும் போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 2005ஆம் ஆண்டு அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் அவர் 3 முதல் 18 மாதங்களுக்குத் தடுத்துவைப்பதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுத்துள்ளது. என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறுகிறது.

அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள் பற்றிய விசாரணைகளை சர்வதேச சுதந்திர ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என மன்னிப்புச்சபை கோரிக்கை முன்வைத்துள்ளது. என அந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

சங்கதி

சும்மா இப்படியே அறிக்கைகளை வெளிவிட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தான்!

ஐ.நா சபை என்று கூறாமல் நைனா சபை என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்!

:lol::icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ!!!!! No!!! சபை..

ஏன் டோன்ட் நோ சபை என்று வைக்க முடியாதா?

Don't Know Sapai :lol:

Edited by மாப்பிளை

இலங்கை செய்யிறதை செய்யுதுகொண்டு இருக்கிருக்கும். எந்த வெளினாட்டுக்கொம்பனாலும் நிற்பாட்ட முடியாது, முக்கிய

வல்லரசுகளை கையுக்குள் வைத்து செல்லப்பிள்ளை நாடாக இருக்கிறார். விடுதலைப்புலிகளிடம் மட்டுமே துட்டனை அடக்கும் திறமை இருக்கிறது. ஒரு நேரத்தில் உலக நாடுகள் விடுதலைப்புலிகளிடம் இலங்கையின் கொடுமைகளை சகிக்கேலாமல் அடக்கச்சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை.....

எத்தனை காலம் தான் எமாற்றுவாய் இவ்வுலகினை........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.