Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன?

Featured Replies

மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன?

S-02Page1Image0001-866ae401db828e667506ebcc46d64c0e6cbc61c9.jpg

 

தூத்­துக்­கு­டியில் இயங்கி வந்த வேதாந்தா குழு­மத்தின் ஸ்டெர்லைட் தொழிற்­சாலை போராட்­டங்­களால் மூடப்­பட்­டுள்ள நிலையில், அதை மீண்டும் திறந்து இயங்கச் செய்­ய­வேண்­டு­மென்று, போராட்­டங்கள் நடத்­தி­ய­வர்­க­ளா­லேயே கோரிக்கை விடுக்கும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதால், தொழிலை இழந்த தொழி­லா­ளர்கள் வரு­மானம் எது­வு­மில்­லாமல், உண­வுக்கு வழி­யின்றி தடு­மாறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே மூடப்­பட்­டுள்ள தொழிற்­சா­லையைத் திறந்து மீண்டும் இயங்கச் செய்­வதால், தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான வரு­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கு­மென்று அவர்கள் நினைக்­கின்­றார்கள்.

தொழிற்­சா­லையை மீண்டும் திறக்க வேண்­டு­மென கோரி சிலர் மாவட்ட கலெக்­ட­ரிடம் மகஜர் ஒன்றை கைய­ளித்து, வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தூத்­துக்­குடி ஸ்டெர்லைட் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வெளி­ய­கற்­றப்­படும் கழி­வு­களால் சுற்­றாடல் மாச­டை­வ­துடன் அதனை அண்­மித்­துள்ள பகு­தி­களில் வாழும் மக்கள் புற்­றுநோய் உட்­பட பல்­வேறு நோய்த்­தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­வ­தாக தெரி­வித்து, நீண்ட நாட்­க­ளாக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்டு வந்­தன. ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் தொழிற்­சாலையை மூட வேண்டும் என்று வலி­யு­றுத்தி வந்­த­துடன், இதன் ஒரு முக்­கிய கட்­ட­மாக கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தூத்­துக்­குடி மாவட்ட கலெக்டர் அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிடும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதன் போது அங்கு இடம் பெற்ற வன்­மு­றையைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்­திய துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் 13 பேர் உயி­ரி­ழந்­தனர். நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர். பலர் கைது செய்­யப்­பட்­டனர். தூத்­துக்­கு­டியே அல்­லோல கல்­லோ­லப்­பட்­டது. பொது­மக்கள் அச்சம், பயம் என்­ப­வற்­றுக்கு மத்­தியில் வீடு­க­ளுக்­குள்­ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்­பட்­டது.

இத­னை­ய­டுத்து ஸ்டெர்லைட் தொழிற்­சாலை தமி­ழக அர­சினால் சீல் வைத்து மூடப்­பட்­டது. அத்­துடன் இனி எப்­போதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டது.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதால் ஏற்­பட்­டுள்ள எதிர்­வி­ளை­வுகள் பற்­றிய தக­வல்கள் தற்­போது வெளி­வ­ரு­வ­துடன், அங்கு வேலை செய்த தொழி­லா­ளர்கள் எவ்­வித வரு­மா­னமும் இன்றி, வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கு பெரும் இன்­னல்­களைக் கொண்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இந்தத் தொழிற்­சாலை மூடப்­பட்டு சுமார் ஒன்­றரை மாத­மா­கின்­றது. எனவே, இந்தத் தொழிற்­சா­லையின் தொழி­லா­ளர்கள் மட்­டு­மன்றி, இத­னுடன் தொடர்­பு­டைய தொழில்­து­றையைச் சேர்ந்­த­வர்­களும் பாதிப்படைந்­துள்­ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையில் சுமார் 1100 பேர் நேர­டி­யாக தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுள்­ள­துடன், 5000 மேற்­பட்டோர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­க­ளா­கவும் பணி­யாற்­று­கின்­றனர். இது­த­விர ஸ்டெர்லைட் தொழிற்­சாலை உற்­பத்­தி­க­ளுடன் தொடர்­பு­டைய சேவை­யா­ளர்கள், குறிப்­பாக, விநி­யோ­கஸ்­தர்கள், லொறி உரி­மை­யா­ளர்கள், சார­திகள், உத­வி­யா­ளர்கள் என சுமார் 19,000 க்கும் மேற்­பட்டோர் தொழில் வாய்ப்­புக்­களை பெற்­று­வந்­த­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

தொழிற்­சாலை பகு­தியில் ஹோட்டல், கடைகள், சிற்­றூண்டிச் சாலைகள், பொது வர்த்­தக நிலை­யங்கள் நடத்தி வந்­த­வர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடி­வி­ட­வேண்டும் என்ற தீர்­மா­னத்­துக்கு வந்­த­வர்கள் ஏறக்­கு­றைய 25 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் தமது தொழில், வரு­மானம் என்­ப­வற்றை இழக்­கப்­போ­கி­றார்கள் என்­ப­தையும், எனவே, அவர்­க­ளுக்­கான மாற்­றுத்­தொழில், வரு­மானம் என்­ப­வற்றை எவ்­வாறு பெற்­றுக்­கொ­டுப்­பது என்­பது பற்­றியும் சிந்­தித்­தி­ருக்­க­வில்லை. குறித்த 25 ஆயிரம் பேரும் தொழில் மற்றும் வரு­மா­னத்தை இழப்­பதால் அவர்­களில் தங்­கி­வாழும் பெற்­றோர்கள், உடன்­பி­றப்­புக்கள், மனைவி, பிள்­ளைகள் போன்­றோரும் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­து ­பற்றி யோசிக்­கா­ம­லேயே, தொழிற்­சா­லையை மூட­வேண்டும் என்று போராட்டம் நடத்தி மூடப்­பட்­டதை எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றே சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

தொழிற்­சா­லையை மூட­வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்­த­வர்கள் போராட்டம் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­த­வர்கள் எவரும், தற்­போது தொழிலை இழந்து வரு­மா­னத்­துக்கு தவிர்த்துக் கொண்­டி­ருக்கும் தொழி­லா­ளர்­க­ளையோ, ஊழி­யர்­க­ளையோ சந்­தித்துப் பேசு­வது இல்­லை­யென்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடி­வி­ட­வேண்டும் என்று ஒட்­டு­மொத்த தூத்­துக்­குடி மக்­களும் குரல் எழுப்­ப­வில்லை. மூடக்­கூ­டாது என்று குரல் கொடுத்­த­வர்­களும், அமைப்­புக்­களும் கூட இருக்­கின்­றன. துறை­முக ஊழி­யர்கள் சங்கம், லொறி ஓட்­டு­நர்கள் சங்கம் போன்ற சில அமைப்­புக்கள் ஏற்­க­னவே தொழிற்­சா­லையை மூடக்­கூ­டாது என்று தெரி­வித்து வந்தன.

எவ்­வா­றெ­னினும், ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடி­வி­ட­வேண்டும் என்று ‘மக்கள் அதி­காரம்’, ‘புரட்­சி­கர இளைஞர் முன்­னணி’, ‘நாம் தமிழர்’ போன்ற அமைப்­புக்­களே மக்­களைத் தூண்­டி­விட்­ட­தாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அதில் எந்­த­வித உண்­மையும் இல்லை. மக்கள் சுய­மா­கவே கிளர்ந்­தெ­ழுந்து தொழிற்­சா­லையை மூட­வேண்டும் என்று போராட்டம் நடத்தி­ய­தாக, குறித்த அமைப்­புக்­களின் சார்­பா­ன­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை 1996 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இங்கு தூத்­துக்­குடி மற்றும் திரு­நெல்­வேலி ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­களே அதி­க­ளவில் வேலை செய்­கின்­றனர். இந்த நிலையில் பெரும்­பா­லான ஊழி­யர்கள் தொழிற்­சா­லையில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் திருப்­தி­க­ர­மாக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். தொழிற்­சாலை கழி­வுகள் அனைத்தும் சிறந்த முறையில் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும், நோய்கள் பர­வு­வ­தற்­கான சூழல் எது­வு­மில்­லை­யென்றும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

ஆனாலும் கூட, கடந்த காலங்­களில் 82 தட­வைகள் மேற்­படி தொழிற்­சா­லையில் விஷ­வாயுக் கசி­வுகள் ஏற்­பட்­ட­தாக தமி­ழக அரசு குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­த­துடன், அதனால், தொழிற்­சா­லையை அண்­மித்த பகு­தியில் வசித்த மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­ன­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் ஆட்­சிக்­கா­லத்தில் (30/03/2013) மாதக் கட்­டுப்­பாட்டு வாரிய அதி­கா­ரிகள் இந்தத் தொழிற்­சாலை செயற்­பாட்டை நிறுத்தி சீல் வைக்கும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­ட­தாக அந்தத் தகவல் மேலும் தெரி­விக்­கின்­றது.

எனினும் இந்­திய பிர­த­ம­ராக இருந்த மன்­மோகன் சிங் ஆட்­சிக்­கா­லத்தில், இந்­திய உச்ச நீதி­மன்றம் இந்த தொழிற்­சாலை மீண்டும் இயங்­கு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தது.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையில் செம்­புக்­கம்பி, உலோகப் பொருட்கள் மற்றும் கந்­தக அமிலம், பொஸ்­பரிக் அமிலம் உள்­ளிட்ட பல பொருட்கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­துடன் உள்­நாட்டின் ஏனைய தொழிற் ­துறை­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­துடன், வெளி­நா­டு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. இந்­தி­யா­வுக்கு வரு­மா­னத்தை ஈட்­டித்­தரும் நிறு­வ­னங்­களில் ஒன்­றாக ஸ்டெர்லைட் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்டெர்லைட் நிறு­வனம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பல­வ­கை­யான தாதுப் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் அதே­வேளை, அதன் பல உற்­பத்­தி­க­ளையும் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கி­றது. இதற்கு தூத்­துக்­கு­டி­யி­லுள்ள வ.உ.சிதம்­ப­ரனார் துறை­முகம் பெரும் உத­வி­யாக இருக்­கி­றது.

   (10 ஆம் பக்கம் பார்க்க)

மூடப்பட்டுள்ள...

(2ஆம் பக்கத் தொடர்ச்சி)

துறை­மு­கத்­துக்கு பெரும் வரு­மானம் கிடைப்­ப­துடன், தொழில் வாய்ப்­புக்­களும் கிடைத்து வரு­கின்­ற­தென துறை­முகத் தொழி­லாளர் சங்கம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தது.

தொழிற்­சாலை மூடப்­பட்டால் அதனை நம்பி இருக்கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்கள் மற்றும் ஊழி­யர்கள், குடும்­பங்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளாகும் அபாயம் இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடு­வ­தற்கு, தமிழ் நாடு மாசு கட்­டுப்­பாட்டு (வாரியம் சபை மேற்­கொண்ட முடி­வுக்கு எதி­ராக, டெல்­லி­யி­லுள்ள தேசிய பசுமை தீர்ப்­பா­யத்தில் வேதாந்­தா–ஸ்­டெர்லைட் நிர்­வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்­தி­ருந்­தது. தமிழ் நாடு மாசு கட்­டுப்­பாட்டுச் சபை­யினால் ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் உலகத் தரத்­தி­லான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொழிற்­சா­லையில் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், அங்கு தீங்கை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான மாசு வெளி­யா­வ­தில்­லை­யெ­னவும், எனவே, தொழிற்­சா­லையை மீண்டும் இயங்கச் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஏப்ரல் மாதம் மாசு கட்­டுப்­பாட்டுச் சபை, மேற்­படி தொழிற்­சாலை இயங்­கு­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­திரம் (2018–2020 காலப்­ப­குதி) வழங்க மறுப்புத் தெரி­வித்­தி­ருந்­தது. இதற்கு எதி­ராக மேற்­படி நிறு­வனம் இந்த மனுவை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

இத­னி­டையே, ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதை எதிர்த்து, வேதாந்த குழுமம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்­பா­யத்தில் தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கு கடந்த வியா­ழ­னன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

தொழிற்­சா­லையை பரா­ம­ரிப்­ப­தற்­காக அனு­மதி வழங்­க­வேண்டும் என்ற அடிப்­ப­டையில், இடைக்­கால நிவா­ரணம் வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறு­வனம் மனு­வி­னூ­டாக கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. எனினும் அந்தக் கோரிக்கை தீர்ப்­பா­யத்தால் ஏற்­றுக்­கொள்­ளப் ­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே, சென்னை உயர் நீதி­மன்­றத்தில் ஸ்டெர்லைட் தொழிற்­சாலை தொடர்­பான வழக்கு விசா­ரணை எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், தற்­போது தேசிய பசுமை தீர்ப்­பா­யத்­திலும் இவ்­வி­டயம் குறித்து அணு­கி­யுள்­ளதன் மூலம், ஒன்­றுக்கும் மேலான சட்ட நிறு­வ­னங்­களை, ஒரே நேரத்தில் அணு­கு­வ­த­னூ­டாக சட்­டத்தை மேற்­படி நிறு­வனம் முறை­கே­டாகப் பயன்­ப­டுத்­து­வ­தாக, தமி­ழக அரசு சார்பில் வாதி­டப்­பட்­டது.

அத்­துடன் தமி­ழக அரசு முன்­ன­றி­விப்­புகள் எது­வு­மின்றி, தொழிற்­சா­லையை மூடி­யுள்­ள­துடன், மின்­சாரம், நீர் விநி­யோகம் என்­ப­வற்றை துண்­டித்­ததன் கார­ண­மாக தொழிற்­சா­லையை பரா­ம­ரிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக ஸ்டெர்லைட் தொழிற்­சாலை தரப்பு வழக்­க­றிஞர் அங்கு சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தொழிற்­சா­லையை பரா­ம­ரிப்­ப­தற்கு மட்டும் இடைக்­கால அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று தீர்ப்­பா­யத்­திடம் வேண்­டுகோள் விடுத்­த­போதும், அது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இது­தொ­டர்பில் பதில் வழங்­கு­வ­தற்கு 10 நாட்கள் அவ­காசம், தமி­ழக அர­சுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ந்து வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 18 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. வழக்கு விசா­ரணை எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது என்­பது பற்றி அறிந்து கொள்­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கள் மட்­டு­மன்றி, முழு தமி­ழ­கமும் காத்­தி­ருக்­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் இவ்­வி­ட­யத்தில் சகல தரப்­பி­னரும் இணைந்து தீவி­ர­மாக ஆராய்ந்து, நல்­ல­தொரு முடி­வினை எடுக்­க­வேண்டும். தூத்­துக்­குடி மக்கள் நடத்­திய போராட்­டத்தின் உண்­மை­த்தன்மை, அதன் பின்­ன­ணி ­பற்றி ஆரா­யப்­ப­ட­வேண்டும்.

13 பேர் உயி­ரி­ழந்­ததைத் தொடர்ந்து தமி­ழக அர­சினால் மூடப்­பட்டு, சீல் வைக்­கப்­பட்ட ஸ்டெர்லைட் தொழிற்­சாலை நிரந்­த­ர­மாக மூடப்­படப் போகின்­றதா?

அப்­ப­டி­யானால் தொழிற்­சா­லையில் பணி­பு­ரிந்த ஊழி­யர்கள், தொழி­லா­ளர்கள் போன்றோர் நிரந்­த­ர­மாகத் தொழிலை இழக்கவேண்டுமா? அவர்களுக்கு தமிழக அரசு தொழில் வழங்குமா? நிவாரணங்கள் வழங்குமா? அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்குக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கப்போகிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

தொழிற்சாலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னர், இதுபோன்ற பின்னணிகளை ஆராய்ந்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதாவது சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும்.

தூத்துக்குடியில்தான் கூடங்குளம் அணுசக்தி நிலையமும் அமைந்திருக்கிறது. சாதாரண இரும்பு– உருக்குத் தொழிற்சாலையில் வெளியாகும் மாசுக்களை விட, மிகவும் வீரியம் கொண்ட அதிபயங்கரமான ஆபத்துக்களை விளைவிக்கும் மாசுக்கள் அணுசக்தி நிலையத்திலிருந்து வெளியாகும் தன்மை காணப்படுகிறது. ஆனால், அங்குகூட அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.

எனவே, இரும்பு, செம்பு, உருக்கு தொழிற்­சா­லை­களில் அதி­ந­வீன பாது­காப்பு முறை­மை­களை ஏற்­ப­டுத்தி பொது­மக்­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கா­த­படி தகுந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வது அவ­சியம்.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை நிர்­வா­கத்­துக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தை­விட, அந்தத் தொழிற்­சாலை மூடப்­பட்­டுள்­ளதால் அங்கு தொழில்­பு­ரிந்த ஊழி­யர்­களின் தொழில், குடும்பம், வாழ்­வா­தாரம் என்­ப­வற்றை சிந்­தித்துப் பார்த்து அவர்­க­ளுக்கு நல்லதொரு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-08#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.