Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது

Featured Replies

போலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது

 

 

இலங்கையர்களை இந்தியர் போன்று போலி கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைகத்த சந்தேக நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை பெண் சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று விசா முடிந்த பின்னரும் அங்கிருந்தநிலையில்; போலி கடவுச்சீட்டை பெறுவதற்காக முகவர் ஒருவரின் உதவியை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பெண்ணின் பெயரில் போலி ஆதார் அட்டையும் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் சென்னையில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் புழல் மத்திய சிறையில் அடை க்கப்பட்டுள்ளனர்.
77 இந்திய கடவுச்சீட்டுக்கள், 12 இலங்கை கடவுச்சீடுக்கள், கடவுச்சீட்டை தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 85 ஆயிரம் ரூபா பணம் ஆகியனவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே போலிக்கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் கைது செய்யப்பட்ட பயண முகவர் உட்பட 11 பேர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து தகவல்களைப் பெற்று அதனை அடிப்படையாக கொண்டு இவ்வாறு போலி இந்திய கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/87792/

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

 

 
 

இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரும் இலங்கையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும் - ஆதரவாளர்களும் எவ்வாறு தப்பித்து வெளிநாடுகளுக்கு சென்றார்கள் என்ற விபரங்களை இந்திய புலனாய்வு பிரிவினர் திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

2009 மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்திடம் இருந்து தப்பிய தமிழிழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் விமான நிலையம் ஊடாகவும், கடல் மார்க்கமாகவும் இந்தியாவிற்கு தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரை மேற்கொள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த செயற்பாடுகள் இப்போதும் நடைபெறுவதாக இந்தியாவில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் இருவர் இந்திய காவல்துறையினருக்கு உறுதிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் போலி விமான கடவுச்சீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை இந்தியர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும், இதற்காக இந்திய கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு இலங்கையில் இருந்து வந்தவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நடைமுறை இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் அதிகரிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்கள் இருவரும், அந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இவ்வாறே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி சென்றதாகவும் பொலீசார் கூறியதாக இந்திய ஊடகங்களின் செய்திகளில்

இது தொடர்பில் 11 சந்தேகநபர்கள் ஏற்கனவே இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டு இலங்கையர்களை தமிழ்நாட்டு பொலீசார் கைது செய்துள்ளனர்.

10 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு இலங்கையர்களும் சுற்றுலா வீசா மூலம் தமிழ் நாட்டுக்கு வருகைத் தந்து, வெளிநாடு செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகள் கிடைக்கும் வரை வீடொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு இலங்கையிலுள்ள சிலர் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ள பொலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது, இந்திய கடவுச்சீட்டுகள் 77 இலங்கை கடவுச்சீட்டுகள் 12 மற்றும் இவற்றைத் தயாரிப்பதற்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் கையாளப்பட்ட இந்த நடைமுறையை தற்போது ஆள்கடத்தல் காரர்களே அதிகம் பின்பற்றுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.ibctamil.com/crime/80/103365?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.