Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடு­த­லைப் புலி­க­ளின் மீளு­ரு­வாக்­கம் தரு­ணத்­துக்­கேற்ற அர­சி­யல் பூச்­சாண்டியே

Featured Replies

விடு­த­லைப் புலி­க­ளின் மீளு­ரு­வாக்­கம் தரு­ணத்­துக்­கேற்ற அர­சி­யல் பூச்­சாண்டியே

 

 

maithiri-maithiri.jpg

 
 
 
 

வட­ப­குதி தமிழ் மக்­கள் மத்­தி­யில் நில­வும் விடு­த­லைப் புலி­க­ளின் ஆத­ரவு மன­நிலை குறித்து ஆய்ந்­த­றிந்து அதற்­கான நட­வ­டிக்கை தொடர்­பாக தீர்­மா­னிப்­ப­தற்­காக சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் பிரதி அமைச்­சர் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோர் அண்­மை­யில் வட­ப­கு­திக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தே­சங்­க­ளில் மட்­டு­மல்­லா­மல் நாட்­டின் ஏனைய பிர­தே­சங்­க­ளில் வாழும் தமிழ் மக்­கள் மத்­தி­யி­லும் விடு­த­லைப் புலி­கள் மீதான ஆத­ரவு மன­நிலை நில­வு­வ­ தொன்­றும் புதி­தல்ல. சிங்­கள மற்­றும் முஸ்­லிம் மக்­கள் மத்­தி­யில் விடு­த­லைப் புலி­கள் மீதான விரோத மனப்­பான்மை நில­வு­வ­து­போன்று தமிழ் மக்­க­ளில் பெரும்­பா­லானோர் மத்­தி­யில் விடு­த­லைப் புலி­கள் மீதான ஆத­ரவு மனப்­பாங்கு நிலவி வரு­வது இர­க­சி­ய­மா­ன­தொன்­றல்ல.

இந்த நிலை­யில் நாட்­டின் பாது­காப்பு விட­யத்­து­டன் தொடர்­பு­டைய அர­சின் உயர் மட்­டத்­தைச் சேர்ந்த மூவர், விடு­த­லைப் புலி­கள் மீதான ஆத­ரவு அலை குறித்து ஆராய்­வ­தற்­காக வட­ப­கு­திக்கு வந்­தி­ருந்­தமை விடு­த­லைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான போக்கு தமிழ் மக்­கள் மனங்­க­ளில் தற்­போது உயர்வு கண்­டி­ருப்­ப­தாக அரச தரப்­பி­னர் உணர்­வ­த­னால் தான்போலும்.

 

சிறப்­பாக விடு­த­லைப் புலி­க­ளது மீளு­ரு­வாக்­கம் குறித்து தமிழ் மக்­கள் அக்­கறை கொண்­டி­ருப்­ப­தாக முன்­னாள் சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கடந்த 4ஆம் திக­தி­யன்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து கருத்து வெளி­யிட்­ட­தன் பின்­னரே அர­சின் இந்த உயர்­மட்­டக் குழு­வி­னர் யாழ்ப்­பா­ணத்­துக்­கான தமது பய­ணம் குறித்து முடி­வு­செய்­தி­ருக்­கக்­கூ­டும்.

விடு­த­லைப் புலி­க­ளுக்­கான ஆத­ரவு
அண்மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­துள்­ளதா

அண்­மைக் கால­மாக அடிக்­கடி விடு­த­லைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான போக்கு, மற்­றும் கருத்து வெளிப்­பாடு தொடர்­பான செய்­தி­கள் வெளி­வ­ரு­வ­தால் வட­ப­கு­தி­யில் அத்­த­கைய நிலைப்­பாடு பொது­மக்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்து வரு­கி­றது என கணிப்­பி­டு­வது நியா­ய­மா­னதே. ஆனா­லும் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளின் பொது­மக்­கள் விடு­த­லைப்­பு­லி­க­ளின் அமைப்­புத் தொடர்­பாக அனு­ப­வங்­கள் கார­ண­மான புதிய நிலைப்­பாட்­டில் இருப்­ப­தால் தீடி­ரென இத்­த­கைய கருத்து நிலைப்­பா­டொன்று உரு­வா­கி­யி­ருக்­கக்­கூ­டும் என எண்ண இய­லாது.

தற்­போது யதார்த்த நிலை என்­ன­வெ­னில், போர் ஒரு பயங்­க­ர­மான சூழ­லில் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட நோக்­கத்­தால் கடும் அச்ச வசப்­பட்ட தமிழ் மக்­கள் கடந்த சில ஆண்­டு­க­ளாக விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வான தமது மன உணர்­வு­களை மன­துக்­குள் அடக்கி வைத்­தி­ருந்­த­னர். தற்­போது அந்த அச்ச உணர்வு வில­கிப்­போ­யுள்­ள­தால் விடு­த­லைப்­பு­லி­கள் தொடர்­பாக அவர்­க­ளது ஆத­ரவு உணர்வு மீண்­டும் வெளிக்­கி­ளம்­பி­யுள்­ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாளன்று அரச படை­யி­ன­ருக்­கும், விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இடை­யே­யான போர்­மு­டி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து தமிழ்­மக்­கள் விடு­த­லைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான கருத்­தெ­த­னை­யும் வெளிப்­ப­டுத்­தாது மௌனம்­காத்த கால­கட்­ட­மொன்று இருந்­தது.

தனிப்­பட்ட ரீதி­யில் ஒரு தரப்­பி­னர் தம் மத்­தி­யில் விடு­த­லைப்­பு­லி­கள் தொடர்­பாக அனு­தா­பக் கருத்­துக்­களை இர­க­சி­ய­மான விதத்­தில் வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருப்­பி­னும் போரில் உயி­ரி­ழந்த விடு­த­லைப் புலி­கள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுக்­கான நினைவு நிகழ்­வு­களை நடத்­து­வது குறித்து அந்­தக் கால­கட்­டத்­தில் எவ­ரா­லும் சிந்­தித்­துப்­பார்க்­கக்­கூட இய­லாது போயி­ருந்­தது.

கடந்த அர­சின் தலை­வர்­க­ளது கருத்­தின்­படி அரச தமிழ்­மக்­கள் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பைப் புறக்­க­ணித்­த­தாலோ அல்­லது மகிந்த அர­சின் செயற்­பா­டு­க­ளைத் தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொண்­ட­தாலோ ஏற்­பட்ட நிலமை அல்ல. அரச இயந்­தி­ரத்­தின் மீதான அச்­சம் மற்­றும் குழப்­பம் கார­ண­மாக ஏற்­பட்ட நிலைப்­பாடே அது­வா­கும்.

ஆனால் காலப்­போக்­கில் இத்­த­கைய நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டது. இன்று வடக்கு மற்­றும் கிழக்­குப் பிர­தே­சங்­க­ளில் வெளிப்­ப­டை­யா­கவே விடு­த­லைப் புலி­க­ளது மாவீ­ரர் தின நினைவு நிகழ்வு மற்­றும் கரும்­பு­லி­கள் தின நினைவு நிகழ்வு என்­ப­வற்­றைக் கடைப்­பி­டிக்­கும் அள­வுக்கு நிலமை மாற்­றம் கண்­டுள்­ளது. பிரி­வி­னை­வா­தத்தை ஆத­ரிக்­க­மாட்­டோ­மென சத்­தி­யப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்டு பத­வி­யேற்ற நாடா­ளு­மன்ற மாகாண சபை மற்­றும் உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரி­வான உறுப்­பி­னர்­கள் கூட இத்­த­கைய விடு­த­லைப் புலி­கள் நினை­வேந்­தல் நிகழ்­வு­க­ளில் பங்­கேற்று வரு­கின்­ற­னர்.

வெளிப்­ப­டை­யாக நினை­வு­கூ­ரப்­ப­டும்
விடு­த­லைப் புலி­க­ளின் நினை­வலை

போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர், அண்­மைக் கா­லம்­வரை வடக்கு -– கிழக்குப் பகு­தி­க­ளில் போரில் உயி­ரி­ழந்த விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­னர்­கள் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளால் போரில் உயி­ரி­ழந்த தமது உற­வி­னர்­களை நினைவு கூர்­கி­றோம் என்ற போர்­வை­யி­லேயே நினைவு கூரப்­பட்டு வந்­த­னர்.

உற­வி­னர்­களை நினைவு கூர்­வது சட்­டப்­படி தவ­றல்ல என்ற போதி­லும், அவர்­கள் அவ்­வி­தம் தமது உற­வி­னர்­களை நினைவு கூர்­வ­தா­கக் கூறிக்­கொண்டு நினைவு கூர்ந்த நாள்­க­ளெல்­லாம் விடு­த­லைப் புலி­கள் அமைப்­புக்கு முக்­கிய நினை­வு­கூ­ரல் தினங்­க­ளாக அமைந்த நாள்­க­ளி­லேயே ஆகும். அவற்­றில் ஒன்று நவம்­பர் 27ஆம் திக­தி­யா­கிய மாவீ­ரர் தின­மா­கும். மற்­றை­யது போரின் முடி­வின் போது விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்த தின­மெ­னப் பல­ரும் கரு­தும் மே மாதம் 19ஆம் திக­தி­யா­கும்.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பால் பல ஆண்­டு­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக நினை­வு­கூ­ரப்­பட்டு வந்த கரும்­பு­லி­கள் தினம் போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் இவ்­வாண்­டின் கடந்த ஜூலை 5ஆம் திக­தி­வரை வெளிப்­ப­டை­யாக எந்த இடத்­தி­லும் கடைக்­கொள்­ளப்­பட்­ட­தில்லை. ஆனா­லும் அது இந்த ஆண்­டில் பகி­ரங்­க­மாக தமிழ் மக்­க­ளால் கடைக் கொள்­ளப்­பட்­டது.

அதே­போன்று பிரி­வி­னை­வா­தத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­க­மாட்­டோ­மென சத்­தி­யப் பிர­மா­ணம் செய்து பத­வி­யேற்ற யாழ்ப்­பாண மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­கள் கடந்த மாதத்­தில் இரு விடு­த­லைப் புலி­கள் இயக்க உறுப்­பி­னர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் உரு­வாக்­கப்­பட்ட உரு­வச்­சி­லை­களை புன­ர­மைப்­ப­தற்­கான மாந­க­சபை அமர்­வின்­போது பிரே­ர­ணை­யொன்றை முன்­வைத்து நிறை­வேற்­றிக் கொண்­டுள்­ள­னர்.

அவற்­றில் ஒன்று 1987ஆம் ஆண்­டில் இந்­திய அமை­திப் படை­யி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­யொன்றை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கந்­த­சாமி கோவில் வீதி­யில் 12 நாள்­க­ளாக உணவை ஒறுத்­துப் போராடி உயிர்­நீத்த அவ்­வே­ளைய யாழ்ப்­பாண மாவட்ட விடு­த­லைப் புலி­க­ளது மாவட்­டத் தலை­வன் திலீ­ப­னது உரு­வச்­சி­லை­யா­கும். அவற்­றில் இரண்­டா­வது உரு­வச்­சிலை யாழ். மாவட்ட விடு­த­லைப் புலி­க­ளது பொறுப்­பா­ள­ரா­க­வி­ருந்த கிட்டு என்ற இயக்­கப் பெயர் கொண்­டி­ருந்த சதா­சி­வம் கிருஷ்­ண­கு­மா­ரது உரு­வச்­சி­லை­யா­கும்.

அந்த வகை­யில் தமிழ் மக்­கள் மத்­தி­யில் மீண்­டும் தலை­யெ­டுத்து வரும் விடு­த­லைப் புலி­கள் ஆத­ரவு மனப்­பாங்கு அண்­மை­யில் முன்­னாள் சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னால் பொது நிகழ்­வொன்­றில் வைத்து வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த நாட்­டின் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மேற்­கு­றித்த விடு­த­லைப் புலி­கள் ஆத­ரவு மனப்­பாங்கை சூட்­சு­ம­மான விதத்­தில் முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­போ­தி­லும் தற்­போது விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளிப்­ப­டை­யாக அதனை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். ஆயி­னும் அதன் பின்­ன­ணி­யில் மறை­மு­க­மாக வேறு பல­ரும் உள்­ள­தா­க­வும் கரு­த­மு­டி­கி­றது.

விஜ­ய­க­லா­வின் கருத்­தும்
ஆத­ர­வும் எதிர்ப்ப­லை­யும்

விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு செயற்­பட்ட காலத்­தில் நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்­குப் பகு­தி­க­ளில் பெண்­க­ள­தும், சிறு­வர்­க­ள­தும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வதே தமது நோக்­க­மாக இருந்­த­தாக விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் பின்­னர் விளக்­கம் தெரி­வித்­தி­ருந்­தார்.

அதன் பிர­கா­ரம் அவர் விடு­த­லைப் புலி­களை பாராட்டி முத­லில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த கருத்து வார்த்தைப் பயன்பாடு தவறாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும். தென் பகு­தி­யில் அவ­ரது அந்­தக் கருத்­துக்கு கடும் விரோ­தம் பாராட்­டப்­பட்­ட­போ­தி­லும், தமி­ழர் தரப்பு அர­சி­யல்­வா­தி­க­ளில் சிலர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னது நிலைப்­பாட்­டுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்­டும் இருந்­த­னர். எப்­போ­துமே தென்­ப­கு­தித் தரப்­பி­னர்­களை விமர்­சித்து வரும் வட­மா­கா­ண­சபை முதல்­வர் க.வி.விக்­னேஸ்­வ­ரன், மற்­றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அனந்தி சசி­த­ரன் ஆகி­யோர் இவர்­க­ளில் குறிப்­பி­டத்­தக்­க­வர்­க­ளா­வர்.

குறித்த இந்த விடு­த­லைப்­பு­லி­கள் ஆத­ரவு நிலைப்­பாடு ஒரு புதிய விட­யமே என அரசு விளக்­க­ம­ளிக்க முயல்­வ­தா­கத் தோன்­று­கி­றது. ஆனால் இது முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்­த­வுக்­கும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் தேன்­போன்று சுவை­ய­ளிக்­கும் ஒரு விட­ய­மாக இருக்­கக்­கூ­டும். ஏனெ­னில் தற்­போ­தைய கூட்­டாட்சி அர­சின் நிர்­வா­கத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு மீண்­டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளனர் எனக் குற்­றஞ்­சாட்ட இது அவர்­க­ளுக்­கோர் நல்­வாய்ப்­பாக அமை­கி­றது.

ஆனால் உண்­மை­யான நிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புத் தொடர்­பாக நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தேச தமிழ்­மக்­கள் தமது ஆத­ரவு மன­நி­லையை குறிப்­பிட்­ட­தொரு சிறி­ய­கால இடை­வெ­ளிக்கு மட்­டுமே தமது மனங்­க­ளில் ஒரு மூலை­யில் ஒதுக்கி மறைத்து வைத்­தி­ருந்­த­னர்.
பின்­னர் வட­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் விடு­த­லைப்­பு­லி­கள் குறித்த ஆத­ரவு மன­நி­லையை முத­லில் வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­த­னர். ஆனால் காலப்­போக்­கில் அந்த உணர்வு மெல்ல மெல்ல வெளிப்­பட்­டா­லும் இன்­று­போல முற்­று­மு­ழு­தான விதத்­தில் கருத்து வெளிப்­பா­டாக வெளி­வ­ர­வில்லை.

கடந்த அர­சின் காலத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பை மீண்­டும் முன்­னி­லைக்­குக் கொண்­டு­ வ­ரும் விதத்­தி­லான மூன்று முக்­கிய முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆயி­னும் அவை­கு­றித்து அரசு அவ­தா­னத்­து­டன் செயற்­பட்­ட­தன் கார­ண­மாக அத்­த­கைய முயற்­சி­கள் எது­வும் சாத­க­மான பயனை நல்­க­வில்லை.
போர் முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­பி­ருந்தே விடு­த­ லைப்­பு­லி­கள் அமைப்பு தமிழ் மக்­க­ளது மனங்­க­ளில் முக்­கிய இடம்­பி­டித்­தி­ருந்­தது.
விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பெருந்­தொகை பணத்தை வரி­க­ளாக அற­விட்­ட­போ­தி­லும் தமிழ் மக்­க­ளது சிறு பிள்­ளை­க­ளைக்­கூட தமது அமைப்­பில் இணை­யச்­செய்து போரா­ளி­க­ளாக உரு­வாக்­கிய போதி­லும் தமிழ் மக்­கள் அர­சுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை. போரொன்­றின்­போது தமக்­குப் பாது­காப்­பா­கச் செயற்­ப­டும் தரப்­புக்கு பொது­மக்­க­ளது ஆத­ரவு கிட்­டு­வது இயற்­கை­யா­ன­தொன்றே.

போரின் இறு­தி­யில் தாம் சந்­திக்க நேர்ந்த பயங்­கர அனு­ப­வங்­கள் கார­ண­மாக தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­புக்­கு­றித்து பேசிக்­கொள்­வ­தற்­குக்­கூட அஞ்­சி­னர். அதே வேளை போரின் இறுதி வேளை­யில் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு செயற்­பட்ட விதம் குறித்­தும் பொது­மக்­கள் மத்­தி­யில் குழப்­ப­மும் கவ­லை­யும் நில­வின. போர் முடி­வுக்கு வந்து இத்­தனை ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யி­லும் நாட்­டில் அமை­தி­யும் சமா­தா­ன­மும் உரு­வா­காத ஒரு சிக்­க­லான சூழ்­நிலை நில­வு­வது கவ­லைக்கு உரி­ய­தொன்றே. அர­சி­யல் கருத்து வேறு­பா­டு­க­ளால் நாடே குழம்­பிப்­போ­யுள்­ளது எனக் கூறு­வ­தில் தவறு எது­வு­மில்லை.

http://newuthayan.com/story/09/விடு­த­லைப்-புலி­க­ளின்-மீளு­ரு­வாக்­கம்-தரு­ணத்­துக்­கேற்ற-அர­சி­யல்-பூச்­சாண்டியே.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.