Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத் தாக்குதலும் கட்சி அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[31 - Mஅர்ச் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நலன்களுக்கேற்ற வகையில் காய் நகர்த்த முற்பட்டிருப்பதையே காண முடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் தமது விமானப் படையைப் பலப்படுத்தினார்கள் என்ற கருத்தே அரச தரப்பிலிருந்து வெளிப்படுகின்றது. வான் புலிகளின் பிரவேசம் இராணுவச் சமநிலையில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்துக்கான பொறுப்பை முன்னைய ஆட்சியாளர்களின் தலையில் சுமத்திவிடும் உத்திதான் இது. மறுபுறத்தில் ஐ.தே.க. வும் இதே போன்றதொரு உபாயத்தைத்தான் கையாள்வதற்கு முற்பட்டிருக்கின்றது. அதாவது மகிந்த- புலிகள் உடன்பாடு தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டைப் பலப்படுத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை ஐ.தே.க. பயன்படுத்த முற்பட்டிருக்கின்றது. அதாவது ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கையின்படி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய நிதியே தமது விமானப் படையைப் பலப்படுத்த புலிகளுக்குத் துணைபுரிந்துள்ளது என்ற குற்றச்சாட்டைஐ.தே.க. தலைமை முன்வைத்திருக்கின்றது.

இரண்டு பிரதான கட்சிகளுமே வான் புலிகள் கள நிலவரத்தில் ஏற்படுத்தியிருக்கும் புதிய பரிமாணத்தை புரிந்துகொண்டு அதற்கிசைவான முறையில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக தமது கட்சி அரசியலை மையப்படுத்திய உபாயங்களையே வகுத்து வருகின்றார்கள் என்பதைத்தான் இந்தச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இது பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்வதற்கோ அல்லது தீர்வுக்கான பாதையில் செல்வதற்கோ உதவப் போவதில்லை என்பதுடன் நிலைமைகளை மேலும் மோசமாக்குவதாகவே அமைந்திருக்கும்.

பிரதான எதிர்க்கட்சிகள் இவ்விதம் அரசியல் நோக்கத்துடன் காய் நகர்த்தலை மேற்கொண்டுள்ள அதேவேளையில் இனவாதக் கட்சிகளும் யுத்த முழக்கத்தையே வெளிப்படுத்திவருகின்றன. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி இவ்விடயத்தில் வெளிப்படுத்தியுள்ள அறிவிப்பு முக்கியமானதாகும். "கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப் புலிகள், நாளை அலரிமாளிகை மீதும் தாக்குதலை நடத்தலாம்" எனத் தெரிவித்திருக்கும் தேசிய முன்னணி "அதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழிக்கும் யுத்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. `விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லக்கூடாது' என்ற கோரிக்கைக்கும் இவ்வமைப்பு அழுத்தம் கொடுத்திருக்கின்றது.

கட்டுநாயக்கா தாக்குதல் தொடர்பாக சர்வதேச சமூகம் எடுத்த நிலைப்பாட்டையும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடுமையாகச் சாடியிருக்கின்றது. "புலிகளின் விமானத் தாக்குதலை இதுவரையில் எந்த நாடும் கடுமையாகக் கண்டிக்கவில்லை. ஐ.நா. செயலாளர் நாயகமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறே கூறியிருக்கின்றார். சர்வதேச சமூகமும் புலிகளுக்குச் சார்பாகவே செயற்படுகின்றது என்பதை இது புலனாக்குகின்றது" எனவும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி குறிப்பிட்டிருக்கின்றது. கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீதான தாக்குதலைக் கண்டிக்காததும் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறுவதையும் பிரிவினைக்கு ஆதரவான செயற்பாடாக இம்முன்னணியினர் கருதும் நிலையில், கருத்தொருமைப்பாட்டுடன் கூடிய தீர்வொன்றை இந்நாட்டில் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

கட்டுநாயக்கா தாக்குதல் தொடர்பாக சர்வதேச சமூகம் எடுத்த நிலைப்பாடு இனவாத அமைப்புகளால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட

[31 - Mஅர்ச் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

இரண்டு பிரதான கட்சிகளுமே வான் புலிகள் கள நிலவரத்தில் ஏற்படுத்தியிருக்கும் புதிய பரிமாணத்தை புரிந்துகொண்டு அதற்கிசைவான முறையில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக தமது கட்சி அரசியலை மையப்படுத்திய உபாயங்களையே வகுத்து வருகின்றார்கள் என்பதைத்தான் இந்தச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இது பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்வதற்கோ அல்லது தீர்வுக்கான பாதையில் செல்வதற்கோ உதவப் போவதில்லை என்பதுடன் நிலைமைகளை மேலும் மோசமாக்குவதாகவே அமைந்திருக்கும்.

http://www.thinakkural.com/news/2007/3/31/...l_page24327.htm

இந்த இருபத்தைந்து வருடகாலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் எப்போது உண்மையான காரணத்தைக் கண்டறிந்த அதற்கேற்றாற் போல் செயற்பட்டிருக்கின்றார்கள்?. தமது அரசில் இலாபங்களுக்காய் அபிலாசைகளுக்காய் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி ஆட்சியிலிருக்கும் வரை யுத்தத்தில் குளிர்காய்ந்து விட்டு சென்றதைத்தவிர. இவர்களின் இந்த நிலைப்பாடே இன்றைய தமிழ்ப் படையின் பெருவளர்ச்சி. இந்தப் போக்கு தொடரும் வரை அது தமிழருக்கு அழிவைத் தந்தாலும்.கடைசியில் தமிழரின் இலட்சியத்திற்கு இந்த அரசியல் அசமந்தப் போக்கே வழிசமைக்கப் போகின்றது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் தரப்பு இப் போக்கை சரியான விதத்தில் கையாள்கின்றது என்றே துணிந்து கூறவேண்டும். .இந்தப் பேரினக் கோமளிகளால் உலகம் எல்லை சுருங்கிய ஓரு சிரிலங்காவை விரைவில் காணப் போகின்றது.. அதன்பின் சிங்களத்திற்கு காலம் கடந்த ஞானோதயம் தோன்றலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.