Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள்.

Featured Replies

500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள்.

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன.

நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. மறுநாள் காலையில் நாம் தாக்குதல் செய்தியை அறிந்தோம் என தெரிவித்தனர். அவர்களின் வாக்குமூலங்கள் கட்டுநாயக்க தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் குழுவினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

நான் ஞாயிறு நள்ளிரவின் பின்னர் வீடு திரும்பிய போது சிறிய ரக உழவூர்தி போன்ற சிறிய உழவு இயந்திரத்தின் ஓசை போன்ற பெரும் சத்தத்தை செவிமடுத்தேன். நான் வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்த போது இரு சிறிய ரக வானூர்திகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன என மரக்கறி வியாபாரியான சரத் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நான் தொலைக்காட்சியில் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது பாரிய சத்தத்தை கேட்டேன். வெளியில் வந்து பார்த்தபோது இரு விமானங்கள் மிகவும் தாழ்வாக பறந்து சென்றன. ரி-56 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் உயரத்தில் பறக்கின்றன என நான் அப்போது நினைத்தேன் என மற்றுமொரு கிராம வாசியான கல்பிடி காமினி தெரிவித்துள்ளார்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

எம்மை ஒருநாள் நேரே கூடிச்சென்று அடுத்த நாள் தனிய செல்லுமாறு சொன்னால் நாம் அந்த ஊரையே சிலவேளை சுத்திப்பார்க்க நேரிடும். அப்படியிருக்க புலிகள் அதிலும் இரவில் வந்து பரீட்சயமான இடம் போல் குறிதவறாமல் புகுந்து விளயாடியிருக்கின்றனர். சிங்கள வான்படையுடன் தயவு செய்து தமிழீழ வான்படையை ஒப்பிட்டு தமிழீழ வான்படையின் தரத்தை குறைத்து விடாதீர்கள்.

அதுதானுங்க தமிழர் இஸ்ரேல் மக்களைப்போல மூளைசாலிகள் என்று 1984 ல் ஈழநாட்டில அப்ப ஒரு கட்டுரை ஒன்று வந்தது. அப்ப கணித்து எழுதிய ஒரு வெளிநாட்டு பத்திரிகை ஆசிரியர் என்ன சும்மாவா சொன்னார். தீர்க தரிசி. தமிழன் தனிநாடு கிடைத்த கையோட துரித கதியில எல்லோரையும் ரெக்னோலொஜில் சப்பித்துப்பிப்போட்டு கொடி பறக்க விட்டுவிட்டு பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி பட்ட தமிழனின் ஒரு சிறு துளிதானுங்க இது.

நீங்க இஸ்ரேலியர் பற்றிச் சொல்லும்போது தான் எனக்கு ஒருவிஷயம் நினைவுக்கு வருது. எனது பாடசாலை நாட்களிலை இதுபோலவே ஒரு சம்பாசணை. நான் சொன்னேன் தழிழர் இஸ்ரேலியர் போலை இல்லை அவங்கதான் தான் எங்களைப் போலை இருக்காங்க என்று.

ஸ் கொஞ்சம் மெதுவாக கதைப்பம்...காதைக்குடும். எனக்கு உது தெரியும். ஆனா நாங்க இப்ப பெரியாளு என்று சொன்னா ஒருத்தரும் எங்களை எழும்பவிட சப்போர்ட்தர மாட்டீனம். ஏன் தங்களுக்கே உலைவைச்சு முன்னேறிவிடுவார்கள் தமிழர்கள் என்று. ஆக்வே சும்மா இப்போதைக்கு சொல்லுவம் அண்ண நீங்க தான் பெரியாள் என்று. பேந்து சந்தர்ப்பம் வர கொடுப்பம் சம்மட்டி அடி!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ் கொஞ்சம் மெதுவாக கதைப்பம்...காதைக்குடும். எனக்கு உது தெரியும். ஆனா நாங்க இப்ப பெரியாளு என்று சொன்னா ஒருத்தரும் எங்களை எழும்பவிட சப்போர்ட்தர மாட்டீனம். ஏன் தங்களுக்கே உலைவைச்சு முன்னேறிவிடுவார்கள் தமிழர்கள் என்று. ஆக்வே சும்மா இப்போதைக்கு சொல்லுவம் அண்ண நீங்க தான் பெரியாள் என்று. பேந்து சந்தர்ப்பம் வர கொடுப்பம் சம்மட்டி அடி!! :D

:huh::rolleyes:

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர்.

post-2540-1175434021_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நல்லா தான் இருக்கு: ம்ம்ம்................

எல்லாரும் காசு குடுத்தாச்சா..............

எhவுகனை ஒன்டு வாங்கலாம்..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் போன பிறகு தான் சொல்லுவாங்க. இரவு 1மணிக்கு வயலுக்கு அறுவடைக்குச் சென்றவங்க தானாம் பார்த்துச சொன்னாங்க இந்தக் கதையை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.